வியாழன், 24 செப்டம்பர், 2015

Spicy food very good



மிளகாய் மிளகுநச்  சீரகம்  மல்லி 
அழகாம் உடலுக்கே ஆமே ----  இளகா 
உரத்தோ டுலவ  உலகில்நூ  றெட்ட
நரத்துக்கு வேறில்லை நாடு,  



அழகாம் உடலுக்கு  --அழகு வேண்டும் உடம்புக்கு;
ஆமே  -  வேண்டியவை  நடக்கும்  
நரம் =  மனிதர் . நாடு =  தெரிந்துகொள் 






http://www.ba-bamail.com/content.aspx?emailid=16793

செவ்வாய், 22 செப்டம்பர், 2015

முக்காடு,

விகடம் என்ற பதத்தை  முன் இடுகையில் கூறியவாறு வடமொழி வழியாகக் காட்டாமல் தமிழிலேயே காட்டுவோம்:

விழு+ கடம் :  விழுகடம்>  விகடம்.

இதில் ஒரு ழு மறைந்துள்ளது.  விழு என்ற சொல்லை வி என்ற முன்னொட்டாகக் காட்டி கடம் என்று கொண்டு சேர்த்தாலும் அதன் உள்ளீடு தமிழ் என்பதை மறைக்கமுடியவில்லை

விழுகடம் என்பதில் ழு மறைவது ஓர் இடைக்குறை.

இயல்பு கடந்து விழுமியதாக நிற்பது என்று பொருள்.  வழக்கில் இது நகைச்சுவையைக் குறிக்கிறதன்றோ?

வேங்கடம்  என்ற சொல்லிலும் கடம் உள்ளது,  கடத்தல் அரிய வெம்மையான  இடம் என்பது பொருள்  கட  அம்  கடமாயிற்று,

இப்படி இடை ழுகரம் மறைந்த சொற்கள் உள ;   இன்னொன்றைப் பார்ப்போம்.

ஆடு >  ஆடை;  இங்கு ஆடை என்பது விகுதி பெற்ற தொழிற்பெயர்,

ஆடு என்பது  மட்டுமே நின்று பெயரானால் அது முதனிலைத் தொழிற்பெயர் எனப்படும் /

முழுக்கு  ஆடு :  முழுக்காடு >  முக்காடு,  அதாவது தலை முழுவதும் மூடிய  ஆடை;   தலை முழுக்காடை.   முக்காடு என்ற சொல்லுக்கு  இறுதி  ஐ விகுதி 
தேவைப்பட வில்லை;  ஆடு என்ற தனிச்சொல் மட்டும்  ஆடையைக் குறிக்கவருமானால் பொருள் தெளிவின்றிப் போமிடங்களும்  தோன்றுதற்கு வாய்ப்பு  உண்டு . முக்காடு என்பதில் அவ இடையூறில்லை/

பிற பின் 

விகட

வடமொழி  எனப்படும் சங்கதத்தில் முன்னொட்டுக்களாம் துணைச்சொற்கள்    பல . சில முன் கண்டோம்.  

இன்னும் ஒன்று காண்போம் .

விழு-  என்னும் சொல் சிறப்பு குறிக்கும்.   விழுமியது என்றால் சிறப்பானது என்பதாம். இச்சொல்லின் முதலெழுத்து மட்டும் எடுத்துக்கொள்ளப்பட்டது.

விகட  :   exceeding the usual measure.  (and other meanings).

வி :  சிறப்பு.

கட  என்பது  கடந்த நிலையைக் குறிக்கிறது.

எனவே  விகட என்றது  சிறப்பாகக் கடந்தது என்று பொருள் .

இன்று காட்டப்பெற்ற சொல்லின் இரு கூறுகளும் தமிழிலிருந்து  எடுக்கப்பட்டு அமைந்தவை. ஆகும் .

இங்ஙகனம்  பல உள . 



ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

source of prefixes



தமிழில் பின்னால் கொண்டு ஒட்டப்பெறும் விகுதிகள் அல்லது பின்னொட்டுக்களே மிகுதி என்பது உங்கட்குத் தெரிந்ததே. தமிழிலும் முன்னொட்டுக்கள் உள்ளன எனினும் அவை
மிகக் குறைவே. ஏனைப் பிற்கால மொழிகளில் அவை பல்கிப் பெருகின. முன்னொட்டுக்கள்  பிற்காலப் புனைவுகள் என்று கொள்வதே சரியென்று தெரிகிறது.

கிராமம் என்ற சொல், சிற்றூர் என்று பொருள்படுவது. சிறிய ஊரைக் குறிப்பதற்குத்  தமிழில் பல சொற்கள் உள. (   ஊர்ப் பெயர்களை ஆராய்ந்தால் இது புரியும்.)  அவ்வசதி இல்லாத அல்லது குறைந்த  மொழியில் அதனை ஏற்படுத்தவே வேண்டும். எப்படி?

குறு” என்பது குறுமை அல்லது சிறியது எபதைக் குறிக்கும் சொல். இதை இன்னும் குறுக்கி. கு- என்று வைத்துன்க்கொள்ளுங்கள் .

கு + கிராமம் > குக்கிராமம்.

இதில் கு என்பது தமிழ்; கிராமம் என்பது அயல்.

அல் என்பது "அல்லாதது" என்று பொருள் படும். அல்ல, அன்று, அல்லன், அல்லள், அல்லை என்ற பல இதை அடியாகக் கொண்டவை.

இது:

அல் +திணை = அஃறிணை;
அல் + வழி = அல்வழி.

என்று முன்னொட்டாக நின்றது.

இது லகர ஒற்றை இழந்து பின் "" என்று மட்டும் நின்றது. அந்த நிலையில்:

+ நியாயம் = அநியாயம்;
+ க்ரமம் = அக்கிரமம்;
+ நீதி = அநீதி.

எனப் பல சொற்களில் முன்சேரும். அது முன்னொட்டாகி விட்டது.

unforeseen  என்பதில் அது இல்லையா?  அல் >  un

அல் என்ற தமிழ்ச்சொல் உலகிற் பல மொழிகளில் சென்று சேர்ந்துள்ளது.

இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்தினரே இதை முழு மூச்சாகப் பலவேறு வகைகளில் கடன்கொண்டனர்


=====================================================================

for authorls   use

note vivaram


re-edited after the appearance of  certain errors not in the original.








வெள்ளி, 18 செப்டம்பர், 2015

முழுச்சொற்கள் புணர்ச்சியும் சொற்புனைவுத் திரிபுகளும்

இதைப்பற்றி  ஆங்காங்கு சொல்லமைப்புக்களை விரித்துரைக்கும்போது குறிப்பிட்டிருக்கிறோம்.  என்றாலும் இங்கு மீண்டும் விளக்குவதில் தவறில்லை என்று நினைக்கிறோம்.

இப்போது "மக்கள் "  என்ற  பழந்தமிழ்ச் சொல்லை எடுத்துக்கொள்வோம். இச்சொல் தமிழிற் பண்டை நூலாகத் திகழும் தொல்காப்பியத்திலும் இடம்பெற்றுள்ளது.

இச்சொல்லில்  பிரிக்குங்கால் முன் நிற்பது  மக என்ற அடிச்சொல்லே.  மக என்பது  தாய் தந்தையிலிருந்து  பிறந்தது என்று பொருள் தரும்.

மக என்பதனுடன் "கள்" என்ற  பன்மை விகுதியைக் கொண்டு சேர்க்கும் போது 

மக + கள் =  மகக்கள்  என்று வரவில்லை.

மக்கள்  என்றே வந்தது.

ஏன்  மகக்கள்  என  வந்திலது  என்று  கேட்க வேண்டும். 

கள் என்பது ஒரு விகுதியாக இல்லாமல் முழுச்சொல்லாய் இருந்தால், இரு முழுச்சொற்கள்  ( நிலைமொழியும்   வருமொழியும் ​)  புணரும் புணர்ச்சியாக  இருக்கும்.  அப்போது  "மகக்  கள் "  என்று வருவதே சரி . கள் என்பது ஒரு குடிபொருள் ஆதலின்  மகக் கள்  என்பது  பிள்ளைக்குரிய குடிக்கும் கள் என்று 
பொருள் போதரும்.

கள் என்பது விகுதியாதலின் மக​ + கள் =   மக்கள் என்றே சொல் அமைந்தது.

இதேபோல்  மக+ அன்  என்பது  மகவன் என்னாது  மகன்  என்றே வரும்.  மகவன் என்று வகர உடம்படு மெய் வராது, 
வந்தால் "மகவினை  உடையோன் "  என்று பொருள்தரும். வேறு சொல்.

இதேபோல் :

அறு +  அம் -=  அறம். (தருமம் )
அறு + அம்  =  அற்றம். (தருணம்)

விகுதிப் புணர்ச்சி நிலைமொழி வருமொழிகளின் புணர்வின் வேறுபட்டதென்று  உணர்க.




வியாழன், 17 செப்டம்பர், 2015

அட்டணம் "தளவாடம் "


அட்டணம்  இச்சொல்  தமிழில் வழக்கில் உள்ளதாகத் தெரியவில்லை, சங்கதத்தில் இது போர்க் கருவிகளைக் குறிக்கிறது.

அடு+ அணம்  =  அட்டணம்    ஆகும்,

அடுதல் -  பல பொருள் உள்ள சொல்.  சமைத்தல்,  நெருப்பில் இட்டுச்  சூடேற்றுதல்   என்பவை மட்டுமின்றி,    எதிரியை வெல்லுதலும்,  வருத்துதலும்  இதன் பொருள்.

போர்த் தளவாடங்கள்  வெல்லவும் வருத்தவும் உதவும் கருவிகள் ஆதலின் அட்டணம்  இப்பொருளைப் பெற்றது.

அடுதல்  வினைச்சொல்.  அணம்  என்பது தொழிற்பெயர் விகுதி

அடுதல்  என்ற வினை   முதனிலை  நீண்டு  ஆடு என்று தொழிற்பெயராகும்

தளவாடம் :.

தளத்தில்   வைக்கப்பட்டிருக்கும்  கருவிகள் அல்லது பொருட்களுக்கு  "தளவாடம் " என்பர்.

தளம் + ஆடு+ அம்  > தளவாடம் .     வகர உடம்படுமெய்  பெற்ற சொல். முதலில்  போர்க்கருவிகள் என்று பொருள்தந்த இத்தொடர்,  இப்போது பொதுப்பொருளில்  "உதவும் பொருட்கள் "  என்று  பொருள் விரிவு கண்டுள்ளது..


புதன், 16 செப்டம்பர், 2015

Protests in Malaysia

Suffix aNam அணம்

அணம் என்ற   தொழிற்பெயர் விகுதி தமிழில் பல சொற்களில் வருகிறது.
அவற்றுள் சிலவற்றைச் சிந்திப்போம்.  வினை அல்லாதனவும் இவ்விகுதி பெறுதல்  உ ண்டு. இவ்விகுதி பெற்ற சொற்கள் சில பிற மொழிகளிலும்  சென்று ஆட்சி பெற்றுள்ளன.

ப ட்டணம்
ஆரணம்
கட்டணம்
ஏரணம்
காரணம்
(சாரணம்)>   சாரணர்

தோரணம்
வாரணம்

என்று அவை பலவாம்.

இங்கு  அணம் என்ற விகுதியைமட்டும் ஆய்வு செய்வோம்.

அ என்பது சுட்டு. இச்சுட்டு அந்த அது , எனல் தொடக்கத்துப் பலவற்றின் மூலம்.   

அ >  அண்.

அண் என்ற அடிச்சொல் அடுத்திருத்தலையும் குறிக்கும்

அண் > அண்முதல்.  அண்மித்தல்.
அண் > அண்டை.
அண் > அண்மை.
அண்> அணிமை.
அண்> அணை.

அண் >  அணைத்தல்.
அண் >  அணை>    அணைக்கட்டு.
அண் > அணி >   அணிதல்.
உடலை அடுத்து நிற்பது ஒருவன் ஆடையும் அணிகலன்களுமே.

சேலை முதலியன உடலை அணைத்துக்கொண்டு நிற்பன.  சேலை இடையையும் கால்களையும்  அணைத்து நிற்பது. = >  >

கருவி  >   செய்தற்கு உதவும் பொருள்.
கரு    செய்தற்கருத்து உள்ள பழஞ்சொல்.

கரு+ அணம் =  கார்+ அணம் =  காரணம்.1
கரு+ இயம் > கார்+இயம் =  காரியம்.

வருமொழி முதல் உயிர்வர கரு கார் ஆனது.

செயலை அடுத்து நிற்பது அதன் காரணமே.

அணம்  -    அடுத்தற்கருத்து உள்ளமை காண்க.

அண்+ அம் =   அணம்.

இங்ஙனம்  அமைந்த்ததுவே  அணம் விகுதி.



--------------------------------------------------------------------------------------
1.  Expounded by Dr  G Devaneyap Pavanar.

திங்கள், 14 செப்டம்பர், 2015

Pak neither Nation nor State!!

This is a good book to read. It is written by  Sumit  Ganduly. You may wish to read and enjoy:


Pakistan :  Neither a State nor a Nation.


What is then the definition of a State or a Nation?  Any difference in meaning?

https://books.google.com.sg/books?id=UDi9e0F-zoIC&pg=PA95&lpg=PA95&dq=the+strength+of+pakistan+claim+on+kashmir&source=bl&ots=YqKpxAZTiL&sig=w8ZxSF1tB6oLZg1dv0jtxGM0v3o&hl=en&sa=X&ved=0CDwQ6AEwBWoVChMI17zilIj4xwIVUo6OCh0drQKz#v=onepage&q=the%20strength%20of%20pakistan%20claim%20on%20kashmir&f=false

ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

ANOTHER WORD FOR EXAMPLE காண்மானம்

காண்மானம் என்ற  சொல்  பேச்சு வழக்கில் இருந்த சொல்.   இது ஏறத்தாழ எடுத்துகாட்டு,  உதாரணம் என்பவை  போன்ற பொருளை உடைய சொல் ஆகும்.

மானம் என்பது ஒரு தொழிற்பெயர் விகுதி.  மான  என்பது ஓர் உவம உருபாகவும் இருக்கின்றது. மானுதல் என்பது ஒத்திருத்தல் என்னும் அடிப்படைப் பொருளை உடையதென்பதையும் கவனிக்கவேண்டும்.

மா என்ற மூலச்சொல்  அளவு என்றும் பொருள்தரும்.

வெப்பமானி  என்ற கருவியின் பெயரில்  "மானி":   அளவுக்கருத்து உள்ளது/

காண்மானமென்பது  காமானம் என்று பேச்சில் திரியும்.

ஆங்கில அறிவு படைத்தோரின் வழக்கில் இச்சொல் இல்லை என்னலாம்.

"மானம்"  விகுதி பெற்ற வேறு சொற்கள்
--------------------------------------------------------------
39. மானம்  3189)
(தேவா. 1200, 10).
மானம்
; தொறுப்பொருளில் வரும் இடைச்சொல். தினமானம் இது நடந்து வருகிறது.


 தீர்மானம்,  பிடிமானம்,  சாய்மானம் பெறுமானம்    எனப் பல உள.

சனி, 12 செப்டம்பர், 2015

ஜீரணம்

செரிமானம் என்ற சொல் பற்றி முன் யாம் எழுதியதுண்டு.  ஆனால் அதை இப்போது  மறுபார்வை செய்துகொள்ளவில்ல்லை.  இங்கோ அல்லது ஏதேனும் வலைத்தளத்திலோ அது காணப்படலாம்.  புதிய இடுகை  அதே சொல்பற்றி வெளிவந்தவுடன்,  யாம் முன்னாளில் எழுதியதை எமக்கு அனுப்பி உதவியவர்களும் உளர்.


உண்ட பின்பு   குடலிற் சென்று  உடலால்   ஏற்றுக் கொள்ளப்பட்டு மீண்டும் பசி வந்தால் முன் உண்டது செரித்துவிட்டது என்று பொருள்.  இதைச் செரிமானம் ஆகிவிட்டது என்பதும் உள்ளது .

இப்போது  இதை "ஜீரணம்"  என்பதுமுண்டு.    இதற்கு எதிர்ச்சொல் 'அஜீரணம் "என்பது.  இதுவும் வழக்கில் உண்டு

கற்றோரிடை  digest  என்றும் ஆங்கிலச்சொல் பயன்படுத்தப்படுகிறது;  அதுவே  "நாகரிகம்"  என்பாருமுண்டு. (Usage of people who are "civilised"  or  "townified".)

செரி  என்பதுடன்  "அணம்"  என்னும் விகுதியை இணைத்தால்,  "செ "
  நீண்டு விடுகிறது.  நீண்டு  "சேரணம் "  ஆகும்.  

அணம் என்ற விகுதியை  "கட்டணம்" என்ற சொல்லில் காணலாம். பல அணம்  விகுதிபெற்ற  சொற்கள் உள்ளன.

முதலெழுத்து நீண்டு பெயர்ச்சொல் ஆவதை  (சுடு) > சூடு  என்பதில்  காண்க.

சேரணம்  பின்  ஜீரணம் என்று மாற்றப்பட்டது.

இது ஜீரணம் சொல் அமைந்த கதை.

edited   1732 hrs  129.2015

Note:

Some intermediate  word forms have been lost in the language.

ஜீரணம்  is  a good example.  The intermediate form  "சேரணம்"   has been lost.

You may compare  this phenomenon with another word   :  பேசு  >  பேசை  >  பாசை   (மொழி ).    மற்ற வடிவங்கள்:  பாழை,  பாடை  பாஷை .
துவிபாஷி  >  துப்பாஷி   interpreter 


வெள்ளி, 11 செப்டம்பர், 2015

நானோர் நன்கொடை!

எங்கிருந்தோ வந்தேன் ----  நானோர்
நன்கொடை!
எங்குசென்றேன் அமர்ந்தேன்  -----   இன்றிது
வெளிப்படை!

சேர்விடத்தில் சுவரின்    --- முகட்டில்
ஒட்டடை!
கூர்படு பார்வையரின் ------ கண்களில்
தெற்றடை.

ஊரிலெங்கும் யார்க்கும் ----  பெரும்
தலைவலி
பார்முழுதும்  பரவிய  -------  செய்தியால்
ஒருநலி



Quorum reached at Malaysian Bar EGM discussing 1MDB, RM2.6b donation



https://sg.news.yahoo.com/quorum-reached-malaysian-bar-egm-discussing-1mdb-rm2-033400332.html.


-----------------------------------------------------------------------------------------------
ஓர்  -    ஓர்தல்  :   சிந்தித்தல்   .   ஒன்று என்றும் பொருள் . தெற்றடை -  குற்றம்  அடைதல்;
நலி  -   துன்பம்.

வியாழன், 10 செப்டம்பர், 2015

மகாதீர்மேல் காவல்துறை விசாரணை:


முன்னாள்   தலைமை அமைச்சர் மகாதீர்மேல்  காவல்துறை விசாரணை:


Ex-PM Mahathir to be questioned 'soon' over Bersih 4 comments: Malaysia police chief

http://www.channelnewsasia.com/news/asiapacific/ex-pm-mahathir-to-be/2097382.html?cx_tag=similar#cxrecs_s

what is paavam?

தமிழுக்கே சிறப்பாக உரியது  ழகரம் ஆகும்.  தமிழின் உடன்பிறப்பாகிய மலையாளத்திலும்  அது  தனித்தன்மை பெற்று இலங்குகிறது.  ஒரு தமிழன்  "மளெ "  வந்துவிட்டது என்பதைக் கேட்ட மலையாள நண்பன் "  என்ன மளை,, மழை என்று சொல்" என்று திருத்துமளவிற்கு அது மலையாளத்தில் "தனித்தன்மை" பெற்று இலங்குகிறது.

தமிழ்ப் பேச்சு மொழியில்  (colloquial )  வாழ்க்கைப் பட்டாள் என்பதை வாக்கப்பட்டாள்     என்றுதான் திரிக்கின்றனர். 
இதுபோலவே 

கீழ்க்கடை  >  கீக்கடை;
தாழ்க்கோல் >   தாக்கோல் 

என்பவும் (=என்பனவும்)   அத்தன்மை உடையனவாம்.

வாத்தியம் என்பது  வாழ்த்தியமே.  ழகர  ஒற்று மறைந்து வாத்தியம் ஆயிற்று. 
இதில் கிருதம் ஒன்றும் இல்லை.  மங்கல நாளில் வாழ்த்தி( இசை)  இசைக்கப்பட்டதால்  வாழ்த்தியம் எனும் சொல் அமைந்தது. 

வாழ்த்தியம் என்பதில் உள்ள இறுதி  "இயம்"  
இயம்>  இயங்கு;  இயம் > இயக்கு.:   வாழ்த்தியக் கருவிகள் இயக்கப்படுவன .
வாழ்த்தியம் என்பது எத்துணை அழகமைந்த சொல் !  இதை  அறிஞர்  ஆய்ந்து உரைத்துள்ளனர் . 

அறியாத் தமிழன் அயலெனில்  அது தமிழென்று புகட்டுவோம்.   

பாவம் என்ற சொல்லும் அப்படியே.   பாழ் + வு+  அம் = பாழ்வம்  > பாவம் .  இங்கு வு ,அம்  என்பன விகுதிகள். 

Do you know that when you do something bad or evil today, it takes away or nullifies the good deed you performed yesterday?  So  yesterday's good became பாழ் .  That then is the பாழ்வம் or  பாவம்  in it.   It tarnishes you  just as a black spot in a white fabric.   "The good .doth is interred with your bones!"  (to follow Shakespearean language to some extent.)

பாவம் என்பதன் சொல்லமைப்புப் பொருள் இதுவே. 











ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

நோட்டு and note

2008க்கு முன்பிருந்தே சொல் திரிபுகளை பல நோட்டுப் புத்தகங்களில் பதிவு செய்து வைத்திருக்கிறேன்.  ஆனால் இப்போது அங்கு நான் குறித்துவைத்துள்ளவற்றை எடுத்துப் பார்ப்பதில்லை. மேலட்டைகளை மட்டும் துடைத்து மீண்டும் அடுக்கி வைப்பதுண்டு.  அதுவும் வேறெதையும் தேடும்போது அதையும் செய்வேன்.   அதற்காக மெனக்கெட்டுச் செய்வதில்லை.

மேலே "நோட்டுப் புத்தகம்" என்ற தொடர் வருகிறது.  இங்கு "நோட்டு"  என்பது  ஆங்கிலம் அன்றோ?   என்று வினவுங்கள். அதைப் பற்றிப்  பேசுவோம்.

"நோடுதல் "என்பது  ஆய்தல் என்ற பொருள் உடைய சொல்.இந்தச் சொல் அப்பொருள்  உடையது என்பதை எளிதில் அறியலாம். எப்படி ?

நோடு >  நோட்டம் . (நோடு +  அம்  )

ஆடு > ஆட்டம் என்பதில்போல டகரம்  இரட்டித்தது.  அதாவது:  டு +அ  = ட்ட .

நோடு  >  நோட்டு >  நோட்டம்.

பாடு > பாட்டு  ( அதுபோல  நோடு >  நோட்டு )

நோடு என்பதை முதனிலைத் தொழிற்பெயராய்க் கொண்டு  நோடு+ புத்தகம் என்று புணர்த்தி  நோட்டுப் புத்தகம் என்று புணர்ச்சித் திரிபாகவும் காட்டலாம்.

நோட்டுப் புத்தகம் :   என் சொல் நோட்டங்களைக் கொண்ட காகிதக் கட்டு  அல்லது சுவடி. 

note book என்பது ஆங்கிலம் அன்றோ என்று நீங்கள்  எழுப்பும்  நாவோசை  என் செவிகளுக்கு எட்டுகிறது .( எண்டே  செவியிலு  எத்துன்னு  :  மலையாளம் )
ஆமாம்,  ஆங்கிலமும்தான் ,

நோட்டுப் புத்தகம் என்கையில் அது ஆங்கிலமாகவோ  தமிழாகவோ இருக்கலாம்.

எழுதியவர் , எழுதுபொருள்,   கட்டுரை எழுந்த சுற்றுச்சார்பு ,  எழுதினவர்  எண்ண ஓட்டம் முதலிய பல கொண்டு தீர்மானிக்கவேண்டியது.

note  என்பது nota  என்ற  இலத்தினிலிருந்து வருகிறது.   இதிலிருந்து உங்கள் 
ஆய்வு தொடங்கலாமே ., 

படுகொலை நிகழ்விடம் கோவிலாகிவிட்டது

ஏழு இந்தியர்கள் படுகொலை நிகழ்விடம் இப்போது  கோவிலாகிவிட்டது,

இதைப் பாருங்கள்:


https://sg.news.yahoo.com/murder-scene-now-temple-062519928.html


WHAT was formerly the scene of one of Johor’s most gruesome mass murder is now a Taoist temple, with a huge following.

read more by clicking the link


வெள்ளி, 4 செப்டம்பர், 2015

ழகர ஒற்று மறைந்த சொ/ற்கள் சில.

மகிதலம்


மகிழ் என்ற வினை.  உவகை கொள்ளுதலைக் குறிப்பது. இதிலிருந்து மகிழ்தல், மகிழ்நன் எனல்தொடக்கத்துப் பல சொற்கள் அமைகின்றன.

மகிழ்நன் என்பதில் உள்ள ழகர ஒற்று மறைந்து,  நகரம் ணகரமாகி பின்வருமாறு  அமைகிறது.

மகிழ்நன் >  மகிணன்.

மகிழ்நன் என்பது தமிழன்றோ?  அதிலிருந்து அமைந்த  மகிணனும் தமிழ்தான்.சொற்களை அடையாளம் கண்டுகொள்வதில்  சிறிது முயற்சியும் கவனமும் வேண்டும்.

மொழிபொருட் காரணம் விழிப்பத் தோன்றா என்று தொல்காப்பியனார் அழகாக அறிவுறுத்துகிறார். விழித்தவுடன்  (ஒரு சொல்லின்மேல் உங்கள் விழிகள் பட்டவுடன் ) தெரிந்துவிடாது,  கவனமாய் ஆராய்வேண்டும் என்பது அவர் அறிவுறுத்துவது ஆகும்.

நாம் வாழும் இப்பூவுலகு, ஒரு மகிழ்ந்து வாழும் உலகம் என்றனர் நம் முன்னோர். காட்டு விலங்குகளையும் ஏனை இடர்களையும் வெற்றிகண்டு நிலையாக ஓரிடத்தில் தங்கி வாழும் வசதி உண்டான பின், மனிதன் இப்புவி மகிழ்வுக்குரிய தலம் என்ற எண்ணத்திற்கு வந்துவிட்டிருப்பான். இதை எந்த ஆய்வாளனும் சொல்லித் தெரியவேண்டியதில்லை. துன்பம் மிக்க உலக்ம் என்று சொன்னவன்,  துன்பகாலத்தில் ஊன்றியவன் என்பதும் தெளிவு.

மகிழ்தலம் > மகிதலம்.

மகிதலம் என்பதற்கு இப்போதுள்ள பொருள் "பூமி"  என்பதாகும். இதன்  சொல்லமைப்புப்  பொருள் "மகிழ்தற்குரிய இடம்"என்பதாகும்.  அச்சிறப்புப் பொருளை இழந்து இப்போது இச்சொல் வெறும் நில உலகு என்ற பொருளில் மட்டும் வருகிறது.

ழகர ஒற்று மறைந்து திரிந்த சொற்கள் பல.  அவற்றைக் கண்டுபிடியுங்கள்.

சிறிய சிங்கை தன்னிலும் தேர்தலே!

மக்கள் ஆட்சி மலர்ந்த  நாடுகளில்
தக்க காலத்தில் தவிர்க்க இயலாத
தேர்தல் நிகழ்வோ ஆர்வம் தருவதே!
ஒபாமா  உலகின் உயரிருக் கைவரு
அவமில் நாளில் அனைவரும் களித்தனர்.
மன்னர் ஆட்சியில் இன்னதோர் புதுமை
மகிழ்தலம் மண்ணிதில் நடப்பது முண்டோ?
பெரியன  நாடுகள் தேர்தலைப் போலவே
சிறியது  சிங்கை தன்னிலும் தேர்தலே!
கட்சிகள் பலவாம்! கத்தல் பெருக்கிக்
கருவிகள் பொருத்திய கூட்டமும் பலவாம்.
வேடிக்கை காண விழைந்திடும் பலரும்
கூடி மகிழும் ஒருபெரும் தருணம்
தேர்தல் நிகழ்வுகள் வாழ்க
ஊர்தரும் மகிழ்வை யாரும் பெறுகவே, 

இது ஆசிரியப்பா.   ஆனால் சீர்களை வகையுளி செய்யவில்லை. அதாவது " மக்கள் ஆட்சி மலர்ந்த நா  -  டுகளில்:"  என்று பிரிக்கவில்லை. அது தேவையற்றதும் ஆகும். வெண்சீரும்
வந்து  ஒலி சிறக்கிறது

கத்தல்பெருக்கி :  ஒலிபெருக்கி.  கத்து   என்பதன் பொருள் ஒலி செய் என்பதே.
இதை முன் நான்  விளக்கியதுண்டு.

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

correction

Correction

A comment made 5 months ago.

In part,  it reads:

"......despair that has fallen up an elected leader......."

It should read:

"despair that has fallen upon an elected leader....."

We could not locate the comment.

If you come across the comment, please read as amended.  Apologies for this error.

அவன் என் காலில்:

விறலி:     அம்மணி , உங்கள் தலைவர்  அடிக்கடி "லீலை "  என்ற பரத்தையின் வீட்டுக்குப்  போய்வருகிறார்.

தலைவி:  அப்படியா .

விறலி:  "என்னை விட்டு எங்கே போனார்  எங்கே போனார் என்று   நீங்கள்தாம் அழுதுகொண்டும் புலம்பிக்கொண்டும் இருக்கிறீர்கள் .

தலைவி:  ஏன்  என்னிடம் முன்பே தெரியப்படுத்தவில்லை ? 

விறலி:  உங்களிடம் இரகசியமாய் தெரிவிக்க வேண்டுமென்றுதான்.  தருணம் பார்த்திருந்தேன்.

(விறலியிடம்  ஒரு பணமுடிப்பை வீசுகிறாள் தலைவி. அதை  விறலி  புன்முறுவலுடன் பற்றிக்கொள்கிறாள்.)

தலைவி:  அதை வைத்துக்கொள். உனக்கு வேறு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை.. உன்னை நான் மறக்கமாட்டேன்.!  போய்வா!"

இப்படித்  தலைவனை அம்பலப்படுத்தியது பரத்தை லீலைக்கு தெரிந்துவிடுகிறது.  லீலை விறலியை எதிர்கொள்கிறாள். 

"எங்கள் உறவை அம்பலப்படுத்தி நீ பரிசு பெற்று, ஊருக்குள்  விழா க்கொண்டாடி உன் கூட்டம் கள் குடித்து ஆடியது எனக்குத் தெரியாதென்றா  நினைத்துவிட்டாய்?  அடியே!  அவரை என்னிடமிருந்து எக்காலத்திலும் நீ பிரித்துவிட முடியாது.  அவர் மாலை எப்போதும் எனக்குத்தான் . வேண்டிய போதெல்லாம் அது என் கழுத்தில் வந்து விழும். உன்னால் என்னை அசைக்க முடியாது. "

என்று பரத்தை லீலை ஆர்ப்பரிக்கிறாள்.

புலவனின் பாடல் இப்படி அமைந்தால்,  அது பெருந்திணை,  பரத்தை கூறல் 
என்னும் துறை. பாடல் இதோ:

பலவுரைத்துக் கூத்தாடிப் பல்வயல்  ஊரன் 
நிலவுரைக்கும் பூணவர்  சேரிச் -----  செலவு உரைத்து 
வெங்கள்  களியால் விறலி விழாக்கொள்ளல் 
எங்கட்கு  அவன் தார்  எளிது !    (பு .வெ . மாலை.  பெருந்திணை . 31)

பல் வயல் ஊரன் :  நில  புலங்களை உடைய தலைவன்.
நிலவு உரைக்கும் பூண்+அவர் :  நிலவொளி பட்டு வீசும் நகைகளையும் மணிகளையும் பூண்ட  (அணிந்த)  பரத்தை.
சேரிச் செலவு:  பரத்தை வீட்டுக்குத் தலைவன் போதல்.
வெங்கள் :   வெம்மையான கள். 
களி :  மகிழ்ச்சி  ஆட்டம் 
விழாக் கொள்ளல் :  பரிசு பெற்ற   விறலி  தம் உறவினர் நட்பினருடன் கொண்டாடியதை  "அப்படிச் செய்யாதே!"  என்கிறாள்.
எங்கட்கு:  பரத்தையராகிய எங்கட்கு.
தார் =  மாலை.

அவன் என் காலில் கிடக்கிறான் என்னாமல் "அவன் மாலை எங்கட்கு  எளிதில் கிட்டும் " என்றது  அதையே சற்று நயத்துடன் பாடியதாகும்.


வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

eyes and flowers அவள் கண்கள்

மலர்காணின் மையாத்தி  நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கு மென்று

என்பதோர் அழகிய குறள்.

மலர் காணின் -   நீ மலரைப் பார்த்தால்;
மையாத்தி -    மயங்கி நிற்காதே!
நெஞ்சே  -  என் நெஞ்சமே!  (இப்போது காதலன் தன் நெஞ்சிடம் பேசிக்கொண்டிருக்கிறான்)

இவள்கண் -   என் காதலியாகிய இவள்  கண்கள்;
பலர் காணும் -  பலரும் கண்டு பார்வையால் சுவைக்கும்;
பூ ஒக்கும் என்று -  மலர்வனத்தில் உள்ள பூவிற்கு இணையானது என்று.

அவள் கண்கள் யாவரும் கண்டு களித்தற்கு உரியவை அல்ல!
அவனுக்கே உரியவை.  அவன்மட்டும் கண்டு சுவைப்பான்!  ஆகவே செடியிலுள்ள மலர்கள் அவள் கண்களுக்கு எப்படி இணையாக முடியும்.

ஆகவே ஒப்புமை சொல்லலாம்;  அது உருவொற்றுமை;  அதனின் மிக்க பொருத்தமொன்றுமில்லை.  இவள் கண்கள்  நாளை வாடிப் போவன அல்ல .

Divorce in a minute......

முகத்திரையை விலக்கியதும் 
மூண்டதுவே மருட்சி`!
அகத்தில் நான் கண்டு விரும்பியவள் 
நீ அல்ல;  நீ அல்ல!

முறியட்டும் இந்த மண உறவு !
அறியட்டும் இந்த உலகு!
நிமிடம் கழியுமுன் விலகு !


http://nymag.com/thecut/2014/11/saudi-man-divorces-wife-after-he-sees-her-face.html?mid=toolab_cut_feed_macro:Saudi+Man+Divorces+Wife+Minutes+After+He+Sees+Her+Face


பெண்ணுக்கு ஒரு மனம் உண்டு; 
என்ன பாடு படும்  அதுவென்று 
நினைத்துப் பார்க்கவும் இல்லையே!

பெண்  ஓர்  அழகுப் போகப் பொருள்தானா?








வியாழன், 27 ஆகஸ்ட், 2015

விரட்டினாலும் கேட்கவில்லை.

அடுத்த வீட்டு  நாய்தான்!  --- என்னுடன் 
அன்பும் பாசமும் உள்ள நாய்  ---  நான் 
 எடுத்து  வைத்த ஒவ்வோர்  அடியைபும் ---- அளவில் 
ஏறிய கவனத்துடன் கண்காணித்துக்கொண்டு ---- நடந்து 
தொடுத்த பாதையில் தொடர்ந்ததே!---- நான் 
துவளாமல் இரு கல் தொலைவு சென்று :


நீருக்கும் மின்சாரத்துக்கும் காசு கட்டி --- கொஞ்சம் 
நேரம் சென்றதும் நேராக வெளிவந்தேன் ;
யாருக்கும் தெரியாமல்,  வெளியில் நின்ற நாய் 
யாதோர்  ஒலியும் செய்யாமல் 

காணாமல் போனதுதான் கவலை 
காலையில் எழுந்து  
வேலைக்குச் செல்வோரைப் பார்த்துக் குலைக்க 
நாளைக்கு அந்த நாய்  இருக்காதோ!

வண்டி ஒட்டிக்கொண்டு போயிருந்தால் --  இத்தகைய 
வம்பொன்றும் வந்திருக்காதே!

ஒரு கல்லில் இரு மாங்காய்  என்றபடி 
உடற்பயிற்சியும் வேண்டும் ,
ஒரு வேலையும் நடக்கவேண்டும்  என்று நினைத்தால் 
பாவம் நாய் தொலைந்துவிட்டதே! 

என்னுடன் வராதே என்று விரட்டினாலும் 
கேட்கவில்லை......... என் செய்வது !

சாப்பாடு எங்கேயும் கிடைத்ததோ .என்னவோ.....

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

Deadlock notice

மட்டுறுத்தப் பட்ட குழும்புகளில் limited companies பங்கு தாரர்களிடையே  முரண்பாடுகள்  உண்டாகி  சிலவேளைகளில் யாது செய்வதென்பது  அறியாமல் திணறுதல் நிலை ஏற்படுவதுண்டு .  ஒரு பங்குதாரர்  ஆடு வாங்கலாம் என்றால் இன்னொருவர் முடியாது  குதிரைதான் வேண்டுமென்பார்   பிறகு ஆட்டு வியாபாரமும் நடவாது; குதிரை வியாபாரமும் நடவாது.

இத்தகைய நிலையில்  மேல்  தம் எண்ணத்தை செயல்படுத்த விழையும் பங்குதாரர்  ஓர்  அறிக்கை  வெளியிடுவார் , இந்த அறிக்கை  ஆங்கிலத்தில் deadklock notice அல்லது   முட்டுப்பாட்டு  அறிக்கை   ஆகும்  இவ்வளவு பணத்துக்கு நீங்கள் எம் பங்குகளை  இத்தனை  நாட்களுக்குள் எடுத்துக்கொள்ளலாம்.  இல்லையென்றால் யாம்  உங்கள் பங்குகளை வலிந்து மேற்கொள்வோம் என்பது போன்றிருக்கும் ,  வேறு முறைகளும் உள்ளன என்கிறார்கள்.

Deadlock notice என்பதை முட்டுப்பாடு அறிக்கை என்று மொழிபெயர்க்கலாம் என்பது எம் கருத்தாகும் 

White Skin: An Obsession

White Skin: A Chinese Obsession in China


Read this interesting discussion:

http://www.vagabondjourney.com/white-skin-a-chinese-obession/

சனி, 22 ஆகஸ்ட், 2015

புறங்காத்துக் கொள்வார்


பலமுறைகள் தலையமைச்சாய் இருந்து பட்ட
பல்வேறு பெற்றறிவும்   பைக்குள் பொங்க
நலமுறையும் வழிகாட்ட வந்த செம்மல்
நல்லவிக்கி ரமசிங்கர் பதவி ஏற்றார்
கொலைமுறையும் ஊழலுமே கூடி விஞ்சும்
குற்றதிபன் முன்னாள்பக் சேயின் பக்கம்
கலையரசின் இயல்நோக்கிக் கனிவு காட்டும்
காலம்தம் புறங்காத்துக் கொள்வார் காண்பீர்.


பட்ட :  இங்கு  இனிமையற்ற  அனுபவங்களைக் குறிக்க,  "பட்ட " என்ற சொல் வருகிறது. 
பெற்றறிவு:     பெற்ற  அறிவு.    அனுபவம்,   தமக்கு  துன்பமானவை  உள்ளிட்ட 
அனுபவங்கள்.

பைக்குள்   பொ ங்க  :  தாம் சேர்த்துவைத்தவற்றுள்   மிகுந்து நிற்க. 

நலமுறையும்:   நலம் உறையும் .     நன்மையே  உள்ளில்  காணப்படும் 

கூடி =  கலந்து. .

விஞ்சி  நிற்க :   மிகுந்து நிற்க.

குற்றதிபன் :   சிறுமை  உடைய    அரசுத் தலைவன் .

கலை அரசின் இயல்  =    அரசியற் கலையின்  இலக்கணம்    -   கலை அரசின்  என்பதை  கலையாகிய  அரசின்  ( இயல்)   என்று விரிக்க. .

நோக்கி :  கடைப்பிடித்து.

கனிவு காட்டும்:    (இப்போது  விக்கிரம சிங்கே இரக்கம்  காட்டுவதைக்  குறிக்கும்.)

காலம்:  இக்காலத்தில்.

புறம்  காத்து  (தம்)  முதுகைக் காத்து ........

என்றவாறு.
  

Marriage prayers answered..............

இது சுமங்கலிப் பூசை என்ற தலைப்பிட்ட இடுகையுடன் தொடர்பு 
உடையது . ஆனால் காணாமற்போய் இப்போது கிடைத்துள்ளது. படித்து மகிழுங்கள் .

ஆண்டுபல மன்றல் அணுகா திருந்தோரும்
வேண்டுதலில் துர்க்கைகால் வீழ்ந்துதொட-----கூண்டு
திறந்தன்ன வாழ்வாய்ப்புத்  தேடிவர  வானி ற்
பறந்தன்ன  கொண்டார் உவப்பு,

 மன்றல்  :   திருமணம்
திறந்தன்ன :  திறந்ததுபோல்
பறந்தன்ன   :  பறந்ததுபோல்

வியாழன், 20 ஆகஸ்ட், 2015

சிப்பந்தி. = வேலைக்காரர்

விருந்தினர், அல்லது முதன்மைச் சிறப்புடையோர் அமர்ந்து உண்டபின்பு,  அந்த விருந்தில் உதவியாகப் பணிபுரிந்தவ்ர்கள் சிலருக்குத் தனியாக ஓர் உணவு வரிசை  நடைபெறும்.

அது சிறுபந்தி ஆகும்.  

சிறு என்பதன் அடிச்சொல் சில் என்பது.

சில் > சிலர்.
சில் > சிறு.
சில்>  சில்லறை  (சில்+அறு+ ஐ)
சில்+ நாள் > சின்னாள்  ( சில நாட்கள்)

என்ற அமைப்புகள் ஆய்வுக்குரியன.

சிறுபந்தி > சிற்பந்தி > சிப்பந்தி.

பின் நடைபெறும் சிறிய பந்திகளில் பங்குபெறும் வேலைக்காரர்களை இது பின்னர் குறித்தது.

Where more people eat

முதலில் பந்தி  என்ற சொல்லை  அணுகிவிட்டுப் பின் தொடர்புடைய சொற்களி ல் ஒன்றிரண்டை  நோக்குவோம்.

பலர் இருந்து உண்ணும் நிலையையே  பந்தி  என்று அழகாகச் சொல்கிறோம்.

பல் என்ற சொல் பல  என்பதைக் குறிக்கும்.  பல பேர்களென்று பொருள்.

பல்+தி >  பன்+தி >   பந்தி என்று அமைந்தது.  பலருக்கு உணவு பரிமாறுவது  ஓர் அறமும்  நற்செய்கையும் ஆகும். அதற்கேற்பச்
சொல்லிலும் மெல்லொலி தோன்றியது  அறியத்தக்கது.  பற்றி என்று வரவில்லை. சொல்லைமைத்தோருக்கு நல்ல மூளை என்பதை இது காட்டுகிறது.  பற்றி எனின் வேறு பொருள்கொண்ட சொல்லுடன் குழப்பம் ஆவதுடன் பொருளிலும் மாறுபாடுஏற்பட வாய்ப்புண்டு.

பல் +  தி >  பன்+ தி > பன்றி.This "pal" here means "tooth".         
பல் + தி > பன்+ தி >   பந்தி  pal here means many..
பல் + தி > பற்றி    இது "பற்று " என்பதன் அடிச்சொல். உறவு என்று பொருள் தரும்  "பந்து"  என்பதன் அடிச்சொல்லும் ஆகும். பந்து என்பது வடசொல் என்பர் .  பற்றி என்பது பத்தி > பக்தி என்பதன்  முந்துவடிவமும் ஆம் . .

பல் என்ற வடிவமும் பல்வேறு பொருண்மைகள் உடையது.

பந்தி  என்பதில்  தி என்பது விகுதி.  தின்னற் கருத்துடைய தின் என்ற சொல்லுக்கும் முதலெழுத்தாவது கவனிக்க.

சொல் அமைத்தால் இப்படிப் பல்வேறு பொருத்தமும் கொண்டு அமையும்படி பார்த்துக்கொள்ளவேண்டியது புலவோர்தம் கடமை.

பல்தின்  > பன் தின்  > பந்தின்  >  பந்தி  (னகர  ஒற்று மறைவு )
cf:   தம்பின் >  தம்பி  ( னகர  ஒற்று மறைவு)

எனினும்  ஆகும் . 

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

Ranil wins in Lanka

Ranil Wickramasinghe won the Lanka election.\

http://adaderana.lk/general-election-2015/index.php




Sri Lanka's prime minister defeated the country's former strongman in parliamentary elections, according to results released Tuesday, blocking a key step of his bid to return to power seven months after he lost the presidency.


Read more here: http://www.macon.com/news/nation-world/article31270700.html#storylink=cpy


m

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2015

sumangali puja

சிங்கப்   பூர்  போத்   தோங் பசிர் ஆலயத்து,
இனிதே முடிந்தது சுமங்கலிப்  பூசை
இன்னமுது உண்டனர் ஏகினர் மக்கள்
கனிகளும் பூக்களும் கணக்கில் அடங்கா
சேலைகள் துணிமணி சால  அழகின
கணபதி துர்க்கை  தென்  திசை மூர்த்தி
சிவனெனும் தெய்வம்  போற்றித் துதித்தனர்
காலையில் தொடங்கி நண்பகல் காறும்
பத்தி செய்தனர் பரவயம் ஆயினர்
சங்கத மந்திரம் தமிழிசைப்பாடல்
தமிழர் தம்முடன் பிறரும் கலந்து
அமுத மழையில் நனைந்தது
அருஞ்சிறப்புற்ற  அழகிய நிகழ்வே

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

திருடராய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால்

கள்ளன் பெரியோனா
காப்பான் பெரியோனா என்றால்
கள்ளனே பெரியோன் என்றனர்
கருத்துடைய பலர்;

எத்தனை காவலர்கள்
சுற்றிவந்த போதிலுமே
அத்தனை கண்களையும் கட்டிவிட்டு
ஆவனவற்றை போவன ஆக்கிவிடுகிறார்கள் கள்ளர்.

திரை போற்றிய பெருங்கவிஞர்
பட்டுக்கோட்டையார் பாடவில்லையா?
திருடராய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால்
திருட்டை ஒழிக்க முடியாதென்று

இந்தத் திருட்டிலிருந்து நாம் தெரிந்துகொள்வது என்ன ?


SINGAPORE CAR REPORTED MISSING OUTSIDE JOHOR BARU SHOPPING MALL; SECOND CAR LOST IN 3 DAYS

http://www.stcars.sg/guides-articles/singapore-car-reported-missing-outside-johor-baru-shopping-mall-second-car-lost-in-3-days-146367#

http://www.straitstimes.com/singapore/courts-crime/singapore-car-reported-missing-outside-johor-baru-shopping-mall-second-car

வியாழன், 13 ஆகஸ்ட், 2015

சிங்கை வண்டிகள் மலேசியா சென்றிட

சிங்கை வண்டிகள்   மலேசியா சென்றிட
ரிங்கிட் இருபதைச் செலுத்தவேணும்==உங்கள்
பங்கை ஆற்றிடில் தங்கு தடையின்றி
எங்கும் பறந்தோட யார் மறுப்பார்?

முன்பே விதித்தனர் போக  வரக்காசு
முணுமுணுப் பென்னவோ கொடுத்திடுங்கள்----நாங்கள்
நண்பரே கணித்ததில் முப்பதைத் தாண்டுது
நலம்பெறப் பணம்தர நாணம் என்ன?

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2015

விமரிசை

விம்முதல் என்பதற்கு ஒலித்தல் என்றும் பொருள் உள்ளது. மேலும்  மகிழ்வுறுதல்  பருத்தல் அல்லது பெரிதாதல் என்பனவும் உள.

விம்மு+ அரு+ இசை  >  விம்+ அர் + இசை =  விமரிசை .

விம்மு என்பதில் அடிச்சொல் விம் என்பதே. அள் >  அள்ளு,   எண் ,  எண்ணு  என்பவற்றில் போல்  உ என்பது வினைச்சொல் இறுதி .

அர் என்பதும் ஒரு சொல்லிறுதி   இதை  இடக்கர்  மம்மர் முதலிய சொற்களை ஆய்ந்து  அறிக 

அர்  என்பது  அரு என்பதன் அடி. இங்கு இடை நிலையாய் நின்றது/  இது ஆரென்று திரிதலும் உண்டு    அரு+ உயிர் =  ஆருயிர்.     அரு > ஆர்.     பின்  ஆர்+ உயிர் =  ஆருயிர் எனினும் ஆம்.

விம்    அகிற் புகையின்  மேவி (சீவக. 2667).  விம் =நிறை(தல்.)

விம்: விம்மர் :  விமர் என்ற சொற்கள் தனியாய்க் கிடைக்கவில்லை. தமிழ்போலுமொரு பண்டை மொழியில் வழக்கிறந்தன பல.  


எனவே விமரிசை என்பது மிகுந்தொலிக்கும் இசை;  பேரிசை   மகிழிசை  எனவே கோலாகலம் என்று பொருள் தருதல் அறிக

குறிப்பு:    மரிச   அல்லது மரீச  என்பது பாலென்று பொருள்படும்  சமஸ்கிருத மொழியில்.   வி என்பது பொருத்தமென்று பொருள்படுவது,   ஆகவே  விமரிசையாக  நடைபெற்றது  என்பதை  பொருந்திய பாலாக இருந்தது  என்று  சொல்லலாம் என்றாலும்  பொருந்தவில்லை .  விமரிச  என்ற முழுச்சொல் கிடைக்கவில்லை.  நிங்கள் சங்கத நூல்களில் தேடிப்பாருங்கள்..

இயைதல்   -    இசைதல்        இது  ய  . >  ச  திரிபு.   இயைதலாவது  மிகுந்த பொருத்தமுடையது ஆதல்.   விம் அர்  இசை  எனற்  பாலது   மிகுந்த அரிய  பொருத்தம் உடையது என்றும்  பொருள் கூறலாம்.  தமிழிற்  சிறந்த பொருள் தருகிறது   அறிக