ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2015

sumangali puja

சிங்கப்   பூர்  போத்   தோங் பசிர் ஆலயத்து,
இனிதே முடிந்தது சுமங்கலிப்  பூசை
இன்னமுது உண்டனர் ஏகினர் மக்கள்
கனிகளும் பூக்களும் கணக்கில் அடங்கா
சேலைகள் துணிமணி சால  அழகின
கணபதி துர்க்கை  தென்  திசை மூர்த்தி
சிவனெனும் தெய்வம்  போற்றித் துதித்தனர்
காலையில் தொடங்கி நண்பகல் காறும்
பத்தி செய்தனர் பரவயம் ஆயினர்
சங்கத மந்திரம் தமிழிசைப்பாடல்
தமிழர் தம்முடன் பிறரும் கலந்து
அமுத மழையில் நனைந்தது
அருஞ்சிறப்புற்ற  அழகிய நிகழ்வே

கருத்துகள் இல்லை: