செவ்வாய், 11 ஆகஸ்ட், 2015

விமரிசை

விம்முதல் என்பதற்கு ஒலித்தல் என்றும் பொருள் உள்ளது. மேலும்  மகிழ்வுறுதல்  பருத்தல் அல்லது பெரிதாதல் என்பனவும் உள.

விம்மு+ அரு+ இசை  >  விம்+ அர் + இசை =  விமரிசை .

விம்மு என்பதில் அடிச்சொல் விம் என்பதே. அள் >  அள்ளு,   எண் ,  எண்ணு  என்பவற்றில் போல்  உ என்பது வினைச்சொல் இறுதி .

அர் என்பதும் ஒரு சொல்லிறுதி   இதை  இடக்கர்  மம்மர் முதலிய சொற்களை ஆய்ந்து  அறிக 

அர்  என்பது  அரு என்பதன் அடி. இங்கு இடை நிலையாய் நின்றது/  இது ஆரென்று திரிதலும் உண்டு    அரு+ உயிர் =  ஆருயிர்.     அரு > ஆர்.     பின்  ஆர்+ உயிர் =  ஆருயிர் எனினும் ஆம்.

விம்    அகிற் புகையின்  மேவி (சீவக. 2667).  விம் =நிறை(தல்.)

விம்: விம்மர் :  விமர் என்ற சொற்கள் தனியாய்க் கிடைக்கவில்லை. தமிழ்போலுமொரு பண்டை மொழியில் வழக்கிறந்தன பல.  


எனவே விமரிசை என்பது மிகுந்தொலிக்கும் இசை;  பேரிசை   மகிழிசை  எனவே கோலாகலம் என்று பொருள் தருதல் அறிக

குறிப்பு:    மரிச   அல்லது மரீச  என்பது பாலென்று பொருள்படும்  சமஸ்கிருத மொழியில்.   வி என்பது பொருத்தமென்று பொருள்படுவது,   ஆகவே  விமரிசையாக  நடைபெற்றது  என்பதை  பொருந்திய பாலாக இருந்தது  என்று  சொல்லலாம் என்றாலும்  பொருந்தவில்லை .  விமரிச  என்ற முழுச்சொல் கிடைக்கவில்லை.  நிங்கள் சங்கத நூல்களில் தேடிப்பாருங்கள்..

இயைதல்   -    இசைதல்        இது  ய  . >  ச  திரிபு.   இயைதலாவது  மிகுந்த பொருத்தமுடையது ஆதல்.   விம் அர்  இசை  எனற்  பாலது   மிகுந்த அரிய  பொருத்தம் உடையது என்றும்  பொருள் கூறலாம்.  தமிழிற்  சிறந்த பொருள் தருகிறது   அறிக   


கருத்துகள் இல்லை: