வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

eyes and flowers அவள் கண்கள்

மலர்காணின் மையாத்தி  நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கு மென்று

என்பதோர் அழகிய குறள்.

மலர் காணின் -   நீ மலரைப் பார்த்தால்;
மையாத்தி -    மயங்கி நிற்காதே!
நெஞ்சே  -  என் நெஞ்சமே!  (இப்போது காதலன் தன் நெஞ்சிடம் பேசிக்கொண்டிருக்கிறான்)

இவள்கண் -   என் காதலியாகிய இவள்  கண்கள்;
பலர் காணும் -  பலரும் கண்டு பார்வையால் சுவைக்கும்;
பூ ஒக்கும் என்று -  மலர்வனத்தில் உள்ள பூவிற்கு இணையானது என்று.

அவள் கண்கள் யாவரும் கண்டு களித்தற்கு உரியவை அல்ல!
அவனுக்கே உரியவை.  அவன்மட்டும் கண்டு சுவைப்பான்!  ஆகவே செடியிலுள்ள மலர்கள் அவள் கண்களுக்கு எப்படி இணையாக முடியும்.

ஆகவே ஒப்புமை சொல்லலாம்;  அது உருவொற்றுமை;  அதனின் மிக்க பொருத்தமொன்றுமில்லை.  இவள் கண்கள்  நாளை வாடிப் போவன அல்ல .

கருத்துகள் இல்லை: