வியாழன், 17 அக்டோபர், 2024

திரு சிங்கப்பூர் சிவாஜி அவர்கள் மறைவு இரங்கல்

 






"சிங்கப்பூர் சிவாஜி"யாகச்    சீரி  னோடு

சிங்கைதனில் தங்குபுகழ்ச் சொந்தக் காரர்!

பெண்கள்- ஆ  டவர்பிள்ளை எப்பா லார்க்கும்

பண்களிலே இலயம்தந்தே அமிழ்ப்பா ராவார்

கண்கள்நீர் சொரிந்திடவும் பாடும்  வல்லார்

தண்தமிழால் மகிழ்வந்தும் பாடிச் செல்வார்!

அண்மையிலே அவர்நம்மைப் பிரிந்து போக

ஆனதற்கே இரங்குகிறோம் என்றே காண்போம்.


மாரடைப்பு என் கின்ற நோயைப் போல

மனிதர்க்குத் தீங்கிழைத்த நோயும் இல்லை.

ஓரடைப்பும் இல்லாத திறந்த உள்ளத்

துயர்ந்தோரைக் காப்பதற்கும் இல்லா நெஞ்சம்

சீருயர்ந்த கூர் இயற்கை தேர்ந்த தென்றோ?

செயலிழந்து கவலையிலே மனிதர் யாரும்.

பாரிலிச் சி   வாஜிபாடும் வாரி  வீச்சும்

ஓர்நாளே இனிவருமோ என்றோ காண்போம் ?


---- சிவமாலா.


கவிதையில் ஒரு என்று வருமிடத்தில் ஓர் வரலாம்.


காணொளி; திரு. P. முருகையன். 

நன்றி




கருத்துகள் இல்லை: