வியாழன், 10 அக்டோபர், 2024

இரத்தன் தாத்தா என்றும் நம்முடன் இருப்பவர். ( இரங்கல்)

 இரங்குக தெருநாய்  அணுகிடில் என்றவர்

உறங்கிடம் தருவாய் எனவே பணித்தவர்

மறந்திட இயல்வதோ இரத்தன் தாத்தனை

இறந்தவர் அவரலர்  இருப்பவர் என்றுமே


பெரும்பணம் உறுநிலை வருதக  வெனினுமே

இரும்பென நெஞ்சுறாத்  தரும்பண் புடையவர்

கரும்பெனக் கனிவுடன் காத்தவர் பிறர்தமை

அருங்குணத் தவரவர் இருப்பவர் என்றுமே.



ஏழையர் எனினுமே  ஏறிநல் லுந்தினில்

ஊழினை வெல்வராய்ச் செல்கென நினைத்தவர்

ஆழுறு  கடல்புரை அகல்மனம் படைத்தவர்

வீழிறப் பிலாதவூழ் வெல்பவர் என்றுமே.


இரத்தன் தாத்தா அவர்களுக்கு இப்பாடல் இரங்கல்.

அவர் என்றும் மக்கள் மனத்தினில் இருப்பவர்.

இறந்தாலும் இறவாப் புகழுடையார்.


தகவு -  தகுதி சான்ற பெரும்பண்பு
கடல்புரை -  கடல்போல்
நெஞ்சுறா -  உள்ளத்தில் ஏறாத
வீழிறப்பு  -  இறந்து வீழ்தல்
ஊழ் - விதி
ஆழுறு -  ஆழமான

கருத்துகள் இல்லை: