ஞாயிறு, 17 ஜூலை, 2022

காலை வணக்கம் ( பண்டிகை, விழா வேறுபாடு)

 இந்நாளே பொன்னாள்.  

நலமாகும்  நன்னாள். 

இனிதாகும் கனவில். 

விடிந்தாலும் நினைவில். 

பனிபோலும் தண்மை. 

மனத்துக்குள் உண்மை . 

வினைதீர்க்கும் காலை 

விழைகின்ற வணக்கம்.



விழைதல் - விரும்புதல்.

விழை என்ற வினைச்சொல்லிலிருந்தே விழா என்ற சொல் வந்தது.

விரும்பிக் கூடி ஆடுதல், பாடுதல் உண்ணுதல் என்று எதுவேனும் ஆகும்.

பண்டிகை என்பது முன்பே உள்ள நாள்.  பண்டு என்பது அடிச்சொல்.

பண்டு. இகத்தல். ஐ.

இகத்தல் - நெருங்குதல், கடத்தல்.  something you have to pass through.  These may have been imposed or prescribed  by the norms of society or previous monarchs who are no longer alive and therefore are hardened by social adherence.

இகத்தல் = இயத்தல்.   பண்டு+ இக + ஐ.

இக என்பதன் ஈற்று அகரம் கெட்டு, ஐ விகுதி ஏற்றது.

பண்டிருந்து உம்மை நெருங்கிவந்து, நீர் கடந்து செல்ல வேண்டிய நாள். அதை மகிழ்வாய்க் கடந்து செல்லுதல் விரும்பப்படுவது ,  வழக்கம்.  

அடிக்கடி அரசைக் குறைசொல்வது மனிதனின் வழக்கம்.  இதை மாற்றுவது எப்படி?  எதாவது கூடி மகிழும் நிகழ்வுகள் வேண்டும்.  எடுத்துக்காட்டு: இந்திராவிழா,[ பூம்புகார் (பழைய நகரம்) என்ற நகரில் கொண்டாடினர்.]  வாழிபாட்டு முறைகளின் கட்டமைப்பு மூலமாகக் கூடி மகிழச்செய்வது.  எ-டு: தீபாவளி.  வேளாண்மை விளைச்சல் அமைப்புகளில் மூலமாக மகிழ்ச்சி யூட்டுவது. எ-டு:  பொங்கல்.  There are many other ways too.

In ancient societies, there were "social engineers"  who helped the monarchs to organize each society.

Separate them into different organisations.  Senior Officers. Junior Officers.  separate organisations for each category.

உலக சரித்திரத்தில் எப்போதுm இவற்றை அமைத்துக்கொண் டிருந்திருக்கிறார்கள்.  சாதி அமைப்புகளும் இவ்வாறு நடப்புக்கு வந்தவைதாம்.

Preservation of existing social order is important. You see the point?   Art of ruling the masses.

சாப்பாடும் கொடுக்கவேண்டும்.  அப்போதுதான் மனிதன் சும்மா இருப்பான்.

மனிதன் எதை நம்புகிறான் என்பது முக்கியமன்று. அதை அவனவனும் தீர்மானித்துக்கொள்ளலாம்.  அரசுக்கு அதன் ஆட்சி ,  முறையாக நடைபெறுவது முதன்மையாகும்.

முடிந்தால் அரச குடும்பங்களுக்குள் புகுந்து குத்தியும் விடுவான் மனிதன்!! ஆகையால் விழாக்கள், பண்டிகைகள் பயனுள்ளவை. 

பிள்ளைகட்கு வீட்டுச் சூழலில் அக்கறை ஏற்பட வேண்டுமானால் வீட்டில் சில கட்டமைப்புகள் இருக்கவேண்டும்.  தீபாவளி,  பலகாரம் இருக்கவேண்டும். பிறந்தநாள் இறந்தாள் ஆடின நாள் பாடினநாள் இருக்கவேண்டும். பாரம்பரிய உணர்வு வேண்டும்.  அதற்குப் பழைய இசைமுறைகள் உதவும். நடனம் கூட உதவலாம்.   பிற இனங்களுடன் இணக்கப்போக்கு வேண்டும்.  பிற மொழிகளை அறியவேண்டும்.  உம் மொழியோடு பிறமொழி எப்படி இணங்குகிறது என்று கண்டறியவும் வேண்டும்.

நன்றி வணக்கம்.

மேலும் வாசிக்க:

https://sivamaalaa.blogspot.com/2020/11/blog-post_18.html


அறிக மகிழ்க.

மெய்ப்பு (edit)   பின்


1 கருத்து:

Aradhya சொன்னது…


அருமையான பதிவு!! Good Morning in Tamil .