புதன், 6 ஜூலை, 2022

சென்ற இருபது ஆண்டுகளில் உலகத் தலைவர்கள்.

 இருபது நீளாண்டுகள்  --- தம்பீ

இருந்தவர் மறைந்தவர் பற்பலரே,

தருபுதுக்  கருத்துகளால்--- அன்று இத்

தரணியை மலைப்புறச் செய்தனர்காண்!

வருபதி  யாயிருந்தோர்---- நமை

வருந்துமிந்  நோய்நுண்மி பரந்தழிக்க,

ஒருபழி செய்திலரே--- உலகு

ஒன்றித் தழைத்திடச் செய்ததன்றி.


சென்ற இருபது முப்பது ஆண்டுகளில் இருந்த அரசியல் தலைவர்கள் நோய்நுண்மிப் போர் எதையும் செய்யவில்லை.  உலகு தழைக்கப் பல செய்தனர்.  அவர்களைப் பழிசொல்ல ஒன்றுமில்லை. இதைக் கூறுவது இக்கவி.

வருபதி ....  - வந்த  அரசியல் தலைவர்கள்.

கோவிட் பரப்பியதுபோல பழிச்செயல்கள் எதையும் செய்யவில்லை.  ஆகவே இப்போது நிலை  மாறிவிட்டது.



கருத்துகள் இல்லை: