வெள்ளி, 1 ஜூலை, 2022

இலக்கணம் அறிந்த ஐரோப்பியர்கள்

 இலக்கணப் பெரும்புலவரான பவணந்தி முனிவர்  நன்னூல் என்று ஒரு நூலை இயற்றினார். பிற்காலத்தில்  தமிழ்நாட்டுக்கு  வந்த ஐரோப்பியர்கள் சிலர் தமிழ் கற்று  இலக்கணம் அறிந்துகொண்டனர். நன்னூலின் உள்ளுறைவைக் கண்டு அவர்கள் வியந்துபோயினர். அதைச் சில ஐரோப்பிய  மொழிகளில் மொழிபெயர்த்துக்கொண்டு,  அந்த அறிவினால் தம் மொழிகளுக்கும் இலக்கணங்களை அமைத்துக்கொண்டனர். ஐரோப்பியமும் எழுச்சி பெற்றது.

கீழை நாடுகளில் போய் வல்லாதிக்கம் செய்தது மட்டுமின்றி  அவர்களும் மொழியறிஞர்கள் ஆயினர்.

சீனாவுக்குப் போன ஐரோப்பியர்கள் அங்கிருந்து வெடிமருந்துகள் பற்றிய அறிவு அடையப்பெற்றனர். சீனப் பெருநாளில் பேய் ஓட்டுவதற்குச் செய்த வெடிகளிலிருந்து இப்போது அணுகுண்டு வரையிலும் அதற்கு மேலும் போய்விட்டது. இதுபோல அது. அதுவரை அப்போதையச் சீனர்களுக்குப் பேய் எப்படி இருக்கும் என்ற புரிதலோ காட்சியோ இல்லை.  வெள்ளைக்காரன் வந்துபோனபின் பேய் எது என்று கண்டுகொண்டனராம்.

ஆய்வும் அறிவும் பெற்று அவ்வறிவும் மறைந்துவிடாமல் இருக்கப் பதிவுகளும் முதன்மையானவை என்பதை அவர்கள் கீழை நாட்டாருக்கு உணர்த்தினர். வாழ்க.  இனிச் சதுரத்துக்கு இன்னொரு விளக்கத்தை அடுத்த இடுகையில் காண்போம்.


கருத்துகள் இல்லை: