வெள்ளி, 27 மே, 2022

தென்றல் வந்த இனிமை.

 கீழைத் தென் கடல் வெம்மையில் வானேறி

ஆழ நீர்ப்பரப்பு  அத்தனையும் மேல்தாண்டி

சூழும்  பச்சையில்  தானடைந்த தண்மையில்

தாழத் தென்றலாய்த்  தந்தனைநீ இன்னருளே.


சிங்கைத் தீவிற்கு தென்றல்  வந்தது.  இது தென்சீனக் கடலில் உருவாகி  (கீழைத் தென் கடல்)    இடையில் இந்தோனேசியாவின் தீவுகளுக்கிடையில் உள்ள நீர்ப்பாரப்புகளையும் மேலாகக் கடந்து   ஊர்ந்து   பச்சைக் காடுகளைத் தாண்டுகையில் தண்மை பெற்றுக் கீழிறங்கித் தென்றலாகி,   நமக்கு அருள் புரிகிறது. 

இது எம் கற்பனை.  நிலநூல் கற்ற நம் வருகையாளர் ஒப்புரையோ எதிருரையோ கருத்தாக எழுதுங்கள்.  You may comment if it pleases you. Thank you.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.


கருத்துகள் இல்லை: