திங்கள், 9 மே, 2022

திருடுபவரைக் பிடிக்க




 தாமாய்  மனந்திருந்தி  தாரணி போற்றிடவே

தீமை யகல்  வாழ்வு  மேற்கொண்டு  ----- தாமுயர்ந்த

மேதக்க நல்லோரும் பல்லோர்  உளர்காண்பாய்

நாதக்க வாறுயர்த்து வாய்.


வீட்டில் நயம்பேசி நண்பாகி க்   காணாமல்

கூட்டில் புகுநாகம் போல்முட்டை -----ஓட்டுடைப்பில்

உள்ளவை  உண்பாரைக்  காண்பிடி  ஓர்படம்

உள்ளதைக் காட்டி விடும்.

உரை:

தாமாய் -  யாரும் சொல்லாமலே;  தாரணி -  உலகம்,  தாரணி என்றால் வாழ்வுக்கு அனைத்தும் தரும் அழகினை உடையதாகிய உலகம்.   தீமை அகல் வாழ்வு -  கெடுதல் இல்லாத வாழ்வு;  தாம் உயர்ந்த -   உலகில் தாம் மேன்மை கண்ட ( நல்லவர்கள் ). பல்லோர் உளர் - பலர் உள்ளனர்.  காண்பார் -  அறிந்துகொள்வார்கள்;   நா - நாவினால்;  தக்கவாறு -  பொருந்தும்படி;  உயர்த்துவாய் -  போற்றுவாய்.

நயன்  -  நல்லபடி;   நண்பாகி  -  கூட்டாளியாகி;  காணாமல் -  பிறர் அறியாமல்;   கூட்டில் புகுநாகம் -  பறவைக்கூட்டில் உள் புகுந்த நாகம்.    போல -  ஒக்க; 

முட்டை ஓட்டுடைப்பில் உள்ளவை உண்பார் -  உடைத்து முட்டையில் உள்ளதை உண்பார்,   காண் பிடி ஓர் படம் -  கண்டுவிட்டால் ஒரு படம் பிடித்து விடுங்கள். உள்ளதைக் காட்டிவிடும் -  உண்மையைக் காட்டிவிடும்,
  

கருத்துகள் இல்லை: