திங்கள், 23 மே, 2022

மாதா கெஞ்சுசொல், கொஞ்சுசொல்.

 மாதா  என்ற சொல்லை முன்பு விளக்கியுள்ளோம்.

அதில் ஒன்றை ஈண்டுக் காண்க. 

https://sivamaalaa.blogspot.com/2018/06/blog-post_14.html

அம்மா என்பதில்  மா என்பதும்  தாய் என்பதன் தலையெழுத்தும் இணங்கி அம்மாவுக்கு இன்னொரு சொல் அமைந்திருப்பது முற்றிலும் பொருத்தமே.

நாம் உலக அம்மாவாகிய அம்மனிடம் அல்லது நம் பெற்றதாயிடமே இவ்வாறு சொல்லடுக்குகள் செய்து, வருணனை மேற்கொண்டு கெஞ்சுவோம். இல்லாவிட்டால் ஒருவகையில் அதைக் கூறியதுகூறலான சொல் என்று தாழ்த்திவிடலாம். 

அம்மா!+  தாயே!  கடைக்கண் பாரம்மா,  எனது இன்னல் தவிர எனை ஆட்கொள்வாய்  என்று பாடி வேண்டுவது  அம்மனிடம்தான்.

கடவுள் என்பது பால்பாகுபாடு அற்று இயல்வதொன்று.  எனினும் உலகைப் பிறப்பித்தமையினாலும்,  பிறப்பித்தலென்பது  அம்மாவின் அன்பு என்பதனாலும்,  உலகை உண்டாக்கியது இவ்வன்பு போன்றது என்பதனாலும் ஒப்புமையால் உவமைத்தன்மையால் உலகப்   படைப்பருளுடையது இவ்வாறு குறிக்கப்பெறுகிறது.

இவ்வாறு கெஞ்சுதன்மையால் உண்டான சொல்  மாதா என்பது.

சங்கதம் கடவுட்புகழுரை மொழியாதலின்,  சொல் மொழிக்கு ஒத்துவருகிறது.

கெஞ்சுமொழியிலும் கொஞ்சுமொழியிலும் கூறியதுகூறல் இயல்பு.

இதை "மீமிசைப் பகவொட்டு"  என்பர்.  A repetitive portmanteau.

தமிழருள் சொல் விளையாட்டில் ஈடுபட்ட மொழியறிஞர்,  இதுபோல் சொற்களைப் படைத்துப் பேசிக்கொண்டு மகிழ்வாயிருந்தனர் என்பதை நாம் உணர்ந்துகொள்கிறோம். ஒருவர் மொழியறிஞரா அல்லரா என்பதற்கு  விளம்பரம் ஒரு காரணமாகாது என்பதையும் உணர்க.  

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்பு.

கருத்துகள் இல்லை: