செவ்வாய், 3 மே, 2022

நீர்க்குழாய் ஆலோசனைகள்

 நீரலைக்கும்போது  பாதிச் சீரலைப்பே போதும்

நீரிருப்பைச் சேமிக்க இந்தளவே  ஆகும்!


தோய்க்கும்துணி  கூடுவதால் நீர்ச்செலவோ குன்றிக்

குறைவான அளவுநீர் சலவைக்குப் பற்றும்.


சவர்க்காரம்  இடுங்காலை குழாய்நீர்  அடைப்பின்

எவர்க்கெனினும் நீர்ச்செலவு குறைந்திடவே செய்யும்.


பல்துலக்கும் அப்போது அடைத்திடுக குழாய்நீர்

நில்லாமல் ஓடுவதால் நட்டமொன்றே  காண்பீர்.


இவை அரசாங்க ஆலோசனைகள்.  பலர் சொல்வனவும்  இவையே.

பாடலாக்கியுள்ளோம்.  சிவமாலா.


கருத்துகள் இல்லை: