செவ்வாய், 8 டிசம்பர், 2020

கோரோசனை அல்லது ஆமணத்தி மாத்திரைகள்.

 இன்று ஆமணத்தி என்ற சொல்லைப் புரிந்துகொள்வோம்.

ஆமணத்தி என்பது  கோ உறு ஓச்சனை அல்லது கோரோசனை என்னும் வாசனைப் பொருள். ஓச்சுதலாவது,  வீசுவது அல்லது பிறர் பட்டுமோக்கும்படி எறிவது.  மோ> மோத்தல்.  மோக்கும் - மோந்தறியும்.  

ஓச்சுதல் :  ஓச்சு+ அன் + ஐ > ஓச்சனை>  ஓசனை..

ஆவிலிருந்து வருவதும் மணத்தை உடையதுமான ஒரு பொருளே  ஆ+ மணம்+ அத்து + இ =  ஆமணத்தி:  அதாவது ஆவின் மணப்பொருள்.

கோரோசனை என்பதில்  கோ உறு ஓசனை >  ( இதில் ) று + ஓ > றோ > ரோ என்று திரிந்துவிட்டது.

ஆமணத்தி, கோரோசனை  என்பவை  ஒருபொருளன.

சித்த வைத்தியத்தில் கோரோசனையிலிருந்து மாத்திரை அல்லது மருந்து செய்வர். இதைச் சித்த வைத்தியர்பால் அறிக. இதை இங்கு விரித்து வரிக்கவில்லை  (வி-வரிக்கவில்லை).

கோ = ஆ.  ( பசுமாடு).

உறு -  தோன்று(ம்). உண்டாகும்..


அறிக மகிழ்க.

மெய்ப்பு - பின்.


கருத்துகள் இல்லை: