செவ்வாய், 15 டிசம்பர், 2020

தார்மீகம் தமிழ்த்திரிபு ஒப்புமை

 தார்மீகம் என்பது வடசொல் என்று சொல்வர்.

இச்சொல்லில் யாம் சுட்டிக்காட்ட விழைவது என்னவெனில், இச்சொல்லின் கையாளப்பட்ட திரிபு, தமிழ்த் திரிபு விதிகளைப் பின்பற்றியதே.

இவற்றைப் பாருங்கள்:

கரு + மழை -   >   கார்மழை.

கரு + திகை >  கார் + திகை >  கார்த்திகை

( திகை என்பதே பின் திசை என்று திரிந்தது. இது கிழக்கு, இது மேற்கு என்று திகைக்கப்பட்டதே  திசை   தீர்மானப்பட்டது திகை> திசை )

கார்த்திகை > கார்த்திக்.

பரு > பார் > பார்வதி.  மலைமகள்.

மரு >  மார் > மார்பு.  ( உடலை மருவி நிற்கும் உறுப்பு).

வரு என்பது வார் என்று திரியும்.   வாராய் விளி.

தரும இ(க்)கு  அம் என்பது இதன்படியே தார்மீகம் என்று திரிந்தது.

இக்கு என்பது ஒரு சாரியை.  இகு என்று குறைந்து இடைநிலையாய் நின்றது.

இகு அம் > ஈகம் என்று சாரியையின் முதல் நீண்டது எனினும் ஆம்.

ஈதல் என்ற சொல்லே  கு என்ற சாரியையுடன் ஈகம் என்று வந்து  பின் தார்ம ஈகு அம் = தார்மீகம் என்றாயது எனினுமாம்.

தருமத்தால் ஈயப்படுவது அல்லது அதிலிருந்து வரப்பெறுவது.

மரை ஈசன் என்ற புணர்ப்பு மாரீசன் என்று முதல்நீண்டதும் காண்க.


தமிழ்த்திரிபு முறையையே இச்சொல் பின்பற்றியது, பிற சொற்களும் இவ்வாறே.


அறிக மகிழ்க.


மெய்ப்பு பின்.






கருத்துகள் இல்லை: