வியாழன், 6 ஏப்ரல், 2017

பூமி நேரானதன்று ..கோணி.......

நாம் வாழும் பூமி நேரானதன்று. பல கோணல் நெறிகளைக் கொண்டிருக்கிறது. நாம் கவனத்துடன் செல்லாவிடின், கோணுதலும்
குறிக்கோள் தவறுதலும் நிற்சையம்.( 1 )

கோணிச் செல்வதற்குப் பலவழிகளையும் வலைபோல் விரித்து வைத்திருக்கும் இந்தப் பூமி, ஒரு கோணியே  அன்றோ?  நடப்பதில் கூட‌
இடையில் மேடு, பள்ளம், ஆறு, குளம், கடல், மலை, கட்டை, விட்டை என்று எண்ணிலடங்காதன, குறுக்கிட்டு, நம்மைக் கோணிச்செல்ல, விபத்தைத்2 தவிர்க்கப் பணிக்கின்றன .

இத்தகைய பல கோணல்களையும் உள்ளடக்கிய பூமிக்குக் கோணி என்றுதான் பெயர்வைக்கவேண்டியுள்ளது.

நாம் இனி வைக்கவேண்டாம். முன்னரே வைத்துத் தமிழில் அது
இன்னொளி வீசிக்கொண்டிருக்கிறது.  கோணி என்றால் அதன்
பொருள்களில் பூமியும் ஒன்றுதான்.

இயற்கையால், இறைவனால் வைக்கப்பட்டதனால், வையம், வையகம்;
தோன்றியதனால்:  பூமி. (பூத்தல் = தோன்றுதல் ). நிலைகொண்டிருத்தலால்: நிலம்.  உருண்டையானதால் : உலகு, உலகம்.  (உல் = உருண்டை, கு: விகுதி. ).  உணவு தருவதனாலும் நீர் தருவதனாலும் தரை. (தரு+ஐ = தரை). இங்ஙனம் சொற்கள் பல. அவற்றுள் கோணிக் கோணிப் போகவேண்டியிருப்பதால் அது
கோணியும் ஆகும்.


அடிக்குறிப்புகள்.

1.  நில் > நிற்சை (நில் + சை + அம் ):  நிற்சையம்   நிற்பது , நிலைபெற்றது, மாறாமை உடையது.  சை, அம் என்பன விகுதிகள்.
புளி  > புளிச்சை  (கீரை ).  சை  விகுதி.   அன் >  அனிச்சை .  அல் > அன் . (மோப்பம் .பிடிக்க அல்லாதது ).  இ > இச்சை :  இங்கு மோப்பம் பிடித்து வருவது : இகரச்  சுட்டு, இங்கு என்பது பெண்மை இடக்கர்  அடக்கல் .
இத்தகு சொற்கள் இப்போது பொதுப் பொருளிலே  வருகின்றன.

2.  விபத்து . இதன் முன் வடிவு: விழு பற்று.  ழுகரத்தை
எடுத்துவிட்டுப் பற்று என்பதை சிற்றூர்ப் பேச்சின்படி
பத்து என்றாக்கினால்,  விபத்து கிடைக்கிறது. இது
அப்படி அமைந்த சொல். பற்றுதல் : ஒரு தொல்லை
உங்களைப் பிடித்துக்கொள்ளுதல்; தொடர்தல், நடத்தல்.
விழுதலே பண்டை நாட்களில் விபத்து. இப்போது
விபத்துகளும் காரணங்களும் முன்னேறிவிட்டாலும்
நாம் இவற்றுக்குப் புதிய சொற்களைத் தேடவேண்டாமே. 

கருத்துகள் இல்லை: