சனி, 5 நவம்பர், 2016

அரிதாரம் பூச்சு

இன்று "அரிதாரம்"  என்ற சொல்லினை ஆய்வு செய்வோம்.  இந்தச் சொல்லிலிருந்து ஒரு வரலாற்று உண்மை வெளிப்படக்கூடும்.
சீரை என்ற சொல்லிலிருந்து  சேலை வந்தமை நீங்கள் அறிந்திருந்தால்
இதுவும் அதுபோன்ற ஒரு பின்னணி கொண்ட சொல் என்பதை அறிந்து
மகிழலாம்,

அரி என்பது அரிசி.  இதில் சி என்பது விகுதி.  அரி என்பதே பகுதியாகும்,
பழங்காலத்தில் நடித்தவர்கள் அரிசி மாவினை முகத்தில் பூசிக்கொண்டனர். இது முகத்தைப் பார்க்கும் மக்கட்கு விளக்கமாகக் காட்டுவதற்குப் பயன்பட்டது. நாளடைவில் மருந்துச் சரக்குகள் சேர்த்து அரிதாரம் செய்யப்பட்டு மேற்பூச்சாகப் பயன்பட்டது.  இந்தப் புதுமைக் காலத்தில் இன்னும் நல்ல பூச்சுக்கள் பயன்படுத்தப் படுகின்றன. தாரம் என்பது  தருதல் எனற்பொருட்டு.  தரு+ அம் ‍=  தாரம்.  தருதலாவது
இங்குப் பூசுதல் என்று பொருள் தரும்.

வெள்ளை  மஞ்சள்  நிற மக்களும் பூச்சுகள் பயன்படுத்தியே நாடக மேடையில்
தோன்றுகின்றனர்.  இயற்கை நிறம் நாடகங்களுக்குப் போதுமானவை  அல்ல .

ஒப்பனை  (மேக் அப் ) இப்போது  மிகப் பெரிய  கலை யாகிவிட்டது.  அரிதாரம் என்ற சொல்  இப்போது பெரிதும்  வழக்கில் இருப்பதாகத் தெரியவில்லை .





 ‍

கருத்துகள் இல்லை: