ஞாயிறு, 12 ஜூலை, 2020

மரபுத் தொடர்: " எந்த மூலை?"

நாம் வழங்கும் சொற்றொடர்களில் சில ஒவ்வொரு
துறையைச் சார்ந்தவையாய் இருக்கும்.  எடுத்துக்
காட்டாக, " என்ன இவர் செய்து சாய்த்துவிட்டார்? 
இப்போது இங்கு வந்து பீத்திக்கொண் டிருக்கிறார்" 
என்பது காட்டில் மரங்களை வெட்டிச் சாய்த்துக்
கொண்டுவந்து அறுத்தெடுத்துப் பலகைகளாக்கும்
தச்சுத் தொழில் சார்ந்த வேலைக்காரர்கள்
பயன்படுத்தி வந்த சொற்றொடராகும்.  இதே
போலும் ஆங்கிலத்திலும் உண்டு. "Are you fighting
 your case or taking a certain course?" என்ற கேள்வியில்  
taking a certain course என்பது  கடலோடிகளின்
பேச்சுவழக்கில் தவழ்ந்து வளர்ந்து மிகுந்து மக்கள்
பிறரிடமும் பரவிவிட்ட சொற்றொடரென்று அறிஞர்
கூறுப. இவற்றைச் சுருக்கமாகத் துறைத்தொடர்கள்
என்று சுட்டலாகும்."taking a certain course" எனற்
பாலதை   ஆங்கில மொழிநூலறிஞர்  natutical term
என்பர்.

தச்சுத் தொழிலில் அறுத்துக் கொணர்ந்த மரம் அல்லது
மரங்கள் அளவிலோ எண்ணிக்கையிலோ குறைந்துவிட்டால்
"இது எந்த மூலை?" என்ற கேள்வி எழும். நான்கு மூலைக்கும்
நான்கு தூண்கள் நிறுத்தவேண்டுமே.  மூன்று தூண்களுக்கே
மரங்கள் உள்ளனவென்றால் பற்றாக்குறையை உணர்த்துவதற்கு
இவை எந்த மூலை என்பர்.  இதற்குப் போதவில்லை என்பதே
பொருளாகும். இப்போதைய வழக்கில் " எந்த மூலை" என்பது
கவலைக்குரிய பற்றாக்குறையைச் சுட்டவே வெளிப்படும்
சொற்றொடராக உள்ளது.

சாய்த்துவிட்டாயோ என்று வரும் மரபு வழக்கினின்று சில
சொற்கள் அமைந்துள்ளன.

செய்து முடிக்க இயன்றதை  சாத்தியம் என்பர்.  இது சாய்த்து+
இயம் என்ற இரு உள்ளுறுப்புச் சொற்களை உடையது.  இயம்
என்பது இ+ அம்  என்ற பகுவிகுதிகளின் இணைப்பு.  இ = இங்கு.
அம் - அமைதல் உணர்த்தும் விகுதி..  சாய்க்க இயன்றது, அதாவது
செய்தற்கியன்ற நிலை என்பதே சாய்த்தியம் > சாத்தியம்
ஆயிற்று.  யகர ஒற்று (ய்)  கெட்டது (௳றைந்தது).    வாய்ப்பாடம்
சொல்லிக்கொடுப்பவர், வாய்த்தியார் > வாத்தியார் ஆனார்'
அதுபோலவே சாய்த்தியம் > சாத்தியம் ஆயிற்று.  சாதித்தல்
என்பதும் சாய்தல் அடியினதே.  சாய் > சாய்தி > சாதித்தல்
என்பது யகர ஒற்று இழந்தது. சாதித்தல் என்பதில் வரும் சாதி
என்பது ஜாதி ( மக்கட்பிரிவு) குறிக்காது.  இது தன்வினை
பிறவினை வடிவங்கள் இரண்டிலும் சாதித்தல் என்றே
இயல்வதாகும்.

இவ்வாறு அறிந்து மகிழ்க..


மெய்ப்பு - பின்னர்.

திங்கள், 6 ஜூலை, 2020

அபிப்பிராயம் பின் வரும்கருத்து.


யாமோர் இடுகையை எழுதி முடித்தவுடன் அதற்கு ஒரு தலைப்புக் கொடுக்க முனைந்தேம். அவ்விடுகை சமீபம் என்ற சொல்லைப்பற்றியது. “சமீபம் என்ற அழகான சொல்" என்ற தலைப்பினை அதற்கு இட்டேம். இதைப் படிப்பவர் எவரும் என்ன அழகான சொல் என்று கேட்க மாட்டாரென்பதே எமது துணிபாகும். அந்தச் சொல்லில் என்ன அழகு கண்டீர் என்று எம்மிடம் யாரும் சண்டை பிடிக்க வரமாட்டார் என்பது யாமறிவேம். அழகோ அழகில்லையோ பலர் அவ்விடுகையின் உள்ளுறைவிலேதான் ( substance or content ) கவனம் செலுத்தியிருப்பர் என்பதும் யாம் பட்டறிவுகொண்டு அறிந்து வைத்துள்ளதாகும்.

ஒன்று அழகாக இருக்கிறதோ இல்லையோ, இது ஆளுக்கு ஆள் வேறுபடும். ஒருத்தி அழகு என்றால் இன்னொருத்தி அழகு இல்லை என்பாள். இதனைக் கருத்து அல்லது அபிப்பிராயம் என்று குறிப்பிடுவர். பேச்சு வழக்கில் இதை "நினைப்பு" என்றும் இதற்கு எதிராக உண்மைநிகழ்வை "நடப்பு" என்றும் வேறுபடுத்தி உரைப்பர். நடப்புக்கு நினைப்பு ஒரு முரணிகழ்வு ஆகும். நினைப்பு பிழைப்பைக் கெடுத்துவிடுமென்பதற்கு என்ன பொருள்?

சட்டத்துறையில் கருத்துக்கும் நடப்புக்கும் வேறுபாடு கண்டுகொள்ளுமாறு பல விளக்கங்கள் கூறப்படுவதும் வரையறவுகள் வழங்கப்படுவதும் உண்டு.

அபிப்பிராயம் என்ற சொல்லுக்கு வேறுவிதங்களில் அமைப்பு காணப்படுவதுண்டு. இப்போது இச்சொல்லை ஆய்வுசெய்வோம்.

அபி என்பது ஒரு சங்கத முன்னொட்டு. ஆனால் அது உண்மையில் " அதன் பின் " என்ற தொடரிலிருந்து சுருக்குண்டதாகும். அபிவிருத்தி என்ற சொல்லில் அதன் பின் செய்யப்படும் விருத்தி என்று விளக்குக. முன்னாளில் கட்டிய ஒரு வீட்டுக்கு அபிவிருத்தி மேற்கொள்ளுதல் என்பது வழக்கில் கூறப்படுவதாகும். இங்கு வழக்கு என்பது உலகவழக்கு. விருத்தி என்பதோ விரி > விரித்தி என்பதன் திரிபு.

உலகில் ஆதியில் ஏற்பட்ட அபிப்பிராயம், ஒன்றைப் பார்த்து அது அழகியது, நல்லது என்பனபோலும் பாராட்டுக்களே. அடுத்தவன் அதை ஏற்கமறுப்பதாகிய ஒரு புகழ்ச்சி. இது அழகு என்றால் இதனினும் அது அழகு என்று பதில்வரும். ஆகவே அபி+ பர + ஆயம் > அபிப்பிராயம் என்று திரிந்த சொல். அதன் பின் புகழ்தலாவது கண்ட அல்லது கேட்ட பின் புகழ்தல், முதலியவை. பின்னர் இச்சொல் பொதுப்பொருள் எய்தியது. "பொதுவாகக் கருதப்படுவது" என்ற பொருளை அடைந்தது. அகரத் தொடக்கம் இகரமாதல் அதழ் > இதழ் என்பதனால் அறிக.

இவற்றையும் நோக்குக:

பரமன் > பிரமன் > ப்ரம்மன்  ( ப> பி > ப் )   அ > இ திரிபுவகை.

பரமன் - எங்கும் பரந்திருப்பவன்,  கடவுள். பிரமனும் கடவுள் தான்.

தெய்வப்பெயர்கள் ஒரு நடுவண் கருத்தினின்றே உருவெடுத்துப் பல்கியவை. சொல்லாய்வில் இவற்றை ஏற்புழி ஒன்றெனவும் பலவெனவும் கருதி அறிக. தெய்வப்பன்மை மீண்டும் ஒருமையாகிவிடும். இவற்றை விரிக்கும் நூல்களின்வாய் உணர்க. யாமதற்குள் செலவுமேற்கொள்ளவில்லை.



இவ்வாறாகப் பர என்பது பிர என்றானது. பரத்தல், புகழ்தல் , பரவுதலும் இப்பொருளில் வரும். “ அயோத்தியர் கோமானைப் பாடிப்பர" என்று வாக்கியத்தில் வருதல் காண்க.
அபிப்பிராயம் என்பது ஒன்றைக் கண்டபின் அல்லது நிகழ்த்தியபின் வரும் கருத்து. சுருக்கமாகப் "பின்னுரை" என்னலாம் எனினும் பின்னுரைகள் கருத்துமட்டுமேயன்றிப் பிற உள்ளுறைவுகளையும் 'உள்ளடக்கும்'.

பிராயம் என்பது வேறு. அது பிற ஆயம் என்பது ஆகும். ஆய்+அம் = ஆயம். ( ஆனது, ஆவது முதலியவை. )  பிறந்தபின்னரே வயது ஓடத்தொடங்கும். பிறந்தபின் ஆவதுதான் வயது/ அகவை. பிற ஆய அம் > பிராயம். றகரத்துக்கு ரகரம் மாற்றீடு. ௳. ரகர றகர வேறுபாடின்றி இயலும் சொற்கள் பல உள. எழுத்தியலில் றகரம் என்பது இரு ரகரங்களின் இணைப்பு.  ரர>ற.  மலையாளமொழியில் இவற்றின் எழுத்தமைப்புகளைக் கருத்தில் கொள்க. புரிந்துகொள்ளலாம்.
.

இவ்வாறு அறிந்து மகிழ்க.

மெய்ப்பு - பின்பு.

சனி, 4 ஜூலை, 2020

சமீபமும் ஈதலும்

ஈதல், தருதல், கொடுத்தல் என்பவற்றின் பருப்பொருள் 
ஒன்றே ஆயினும் அவை நுண்பொருள் வேறுபாடுடையவை.
தன்னினும் குறைவான தகுதி உடையா னொருவனிடத்து
ஒரு பொருளைச் சேர்ப்பிப்பது ஈதலாம். இவ்வாறு தகுதி 
குறைந்தோனுக்குப் பொருளைத் தருவதனால் ஏற்படும் 
புகழை " இசை" என்று சொல்கின்றன தமிழ் நூல்கள். 
இதனை ஈதலற மென்றும் ஈத லிசைபட வாழ்தல் என்றும்
தமிழனின் பண்பாடு கோடிட்டுக் காட்டுகின்றது. \
(மற்ற சொற்களை ஈண்டு விளக்கவில்லை.)


இன்று நாம் சமீபம் என்ற சொல்லை அணுகி ஆய்வோம்.


சமீபம் என்பது அயற்சொல் என்று முன்னர் கூறப்பட்ட
தெனினும் அது தமிழில் வழங்குவதாகும். அஃது எத்திறத்த
தாயினும் ஆய்வதே இவண் நோக்கமாகும்.


தாம் எங்கு இருக்கின்றோமோ, அங்கு தமக்கு ஒன்று 
கைக்கு எட்டும் தொலைவிலோ அல்லது வந்து சேரும் 
தொலைவிலோ இருந்தால் அதுவே சமீபம் ஆகும். நெடுந் 
தொலைவில் இருந்து தம்மை வந்து சேர்வதில் தடையோ 
தாமதமோ ஏற்படக்கூடுமாயின் அது சமீபத்தில் இருப்பதாக
யாரும் கூறார். ஒரு வாழைமரம் தமக்குப் பழந்தரும் 
படியாகப் பக்கமிருப்பதே சமீபத்திலிருக்கிறது என்று 
சொல்லற்குரியது ஆகும். இங்கு ஏன் சேர்தல், வருதல், 
தருதல் என்ற கருத்துகளையெல்லாம் புகுத்தி இந்த 
இயல்பான விடயங்களைச் சொல்கிறோமென்பது சிறிது
நேரத்திற் புரிந்துவிடும்.


சமீபம் என்பதில் சம், ஈ (ஈதல் ), பு (இடைநிலைவிகுதி).
அம் (இறுதிநிலை அல்லது விகுதி ) என்ற உள்ளுறுப்புகள்
உள்ளன.


சம் என்பது தம் என்பதிலிருந்து பிறந்த சொல். இரண்டு
 “தன்”கள் சேர்ந்தால் தம் ஆகிறது. ஆகவே சம் என்பது 
கூட்டு அல்லது சேர்க்கை.


தம் என்பதே சம் ஆனது. தகரத் தொடக்கம் சகரத் தொடக்க
மாகும். எடுத்துக்காட்டு இன்னொன்று: தனி > சனி. ( சில 
தனி இயல்புகள் உடைய ஒரு கோள். ) இது சொல்லிடையிலும் 
வருந்திரிபாம். எ-டு: அப்பன் <> அச்சன்> <அத்தன். 
இத்திரிபில் எது அடி, எது முடி என்று ஆயாமல், ஒன்று
 இன்னொன்றாய்த் திரியுமென்பதையே நோக்குக.


ஈதல் : ஈ என்பது சேர்ப்பிப்பது உணர்த்தும். வெகு
தொலைவில் ஒன்றிருப்பதும் சரிதான், அது இல்லாமல்
போவதும் சரிதான்.  அதன் பயன் நம்மை எட்டுவதில்லை.
ஆகவே பயன் கருதி வாழ் மனிதன் தொலைவு கருதியது -
எதுவும் கிட்டுமா இல்லையா என்பதை மனத்துக்கண்
கொண்டுதான் என்பதறிக. ஆகவே ஈதல் அல்லது ஈ 
என்ற சொல் இவண் பொருண்மை உடையதாகிறது.


தம் + ஈ + பு + அம் > சம் ஈ பு அம் > சமீபம் ஆகும்.


பு என்ற இடைநிலை மிக்க அருமை. புடை = பக்கம் இருப்பது. 
புடைசூழ என்ற தொடரின் பொருள் தெரியுமானால் இதை 
உணர்ந்து போற்றுதல் எளிதே. ஆகவே பொருத்தமாகப் 
புனைந்துள்ளனர் இச்சொல்லை. முதலெழுத்து மட்டும் 
இடைநிலையாய் நிற்கிறது.


இதை வாக்கியமாக்கிப் பார்க்கவேண்டுமானால் இப்படிக்
கருத்துகளை கோவை செய்யுங்கள்:


தமக்கு ஈயும் புடைமையில் இருப்பது. அதுவே சமீபம்.
 இப்போது வாழைப்பழம் பற்றி மேற்கூறியதையும்
மீண்டும் வாசிக்கவும்.

அறிக மகிழ்க.


குறிப்புகள்

சமீப்யம் - ஒரு குருவானவர் தமக்கு அருகிலே இருந்து வழிகாட்டுவது. இது ஒரு பேறு என்று இறைப்பற்று மார்க்கத்தில் சொல்லப்படுகிறது.



பருப்பொருள் -  பரும்பொருள் என்று மாறிக்கொள்கிறது.  இது திருத்தம் பெற்றுள்ளது. 5.05  05072020





மெய்ப்பு - பின்னர்.








திங்கள், 29 ஜூன், 2020

உள்ளங்கள் நடுங்கும் உலகப்போர் வருமோ?

மூளுமோ  மூன்றுறழ்  உலகக்  கொடும்போர்
 முனைகள்   பலவாக
ஆளுமோ  எந்தவல்  லரசும்      அதனில்             
பெருவெற்   றிகள்பெற்றே     
நீளுமோ  நுண்மியாம் முடிமுகி விளைத்த 
 இடர்கள்          துயர்யாவும்
நாளுமே  மக்களும் தெளிவில்  நிலையில்
 உளங்கள்  நடுக்குற்றவே..


மூன்றுறழ் - மூன்றாவது.
முடிமுகி = கொரனா
நுண்மி -  நோய்க்கிருமி
நடுக்குற்றவே -  நடுக்கம் உற்றனவே.

சனி, 27 ஜூன், 2020

இலிகிதம் (கடிதம்)

இலிகிதம் என்னும் சொல் இப்போது வழக்கில் அருகிவிட்டது. அதற்கு ஈடான சொற்கள் சில வழக்குக்கு வந்துள்ளன. அவற்றுள் மடல் என்பதொன்று.


கடிதம் என்பது ஒரு கடினப் பொருளில் பதிவுசெய்யப்பட்ட செய்தி என்னும் கருத்தை நமக்கு அறிவிக்கிறது. இச்சொல்லமைப்பில் இடைநிலையாக வருவது இது என்ற சுட்டுப்பெயராகும். அது இது என்பவனவெல்லாம் இவ்வாறு இடைநிலையாகப் போதரும் சொற்கள் பிற்காலத்தில் தமிழர்களால் அமைக்கப்பட்டன. இப்புதியவை படிப்போரைக் கவர்ச்சி செய்தமையால் வழக்கில் இருந்தன. ஓர் எடுத்துக்காட்டு: ( இடைநிலை: அது)


பரு + அது + அம் = பருவதம். வகர உடம்படு மெய் புணர்க்கப்பட்ட சொல் இது. வினைப்பகுதி பரு (பருத்தல் ) என்பது. பருவதம் என்பது மலையைக் குறிக்கிறது. மலை பருத்ததன்று என்று நீங்கள் எண்ணினாலும் அது பரியது என்பதை ஒப்புவீர். என்ன வேறுபாடு? ஏதுமிருப்பினும் இருக்கட்டுமே.


இதைப்போலவே இது ( இடைநிலை ) வந்த சொற்களும் பல. ஆயிடை

கடிதமென்பதும் ஒன்றாகும்.


கடு + இது + அம் = கடிதம்.


சொல்லால் தெரிவிப்பது, கடிதம் ஆகாது. இதற்குக் காரணம் சொல்லில் கடிய அல்லது கடினமான பொருள் ஏதுமில்லை. அது வெறும் காற்று. கேட்போன் செவிடனானால் அவன் சொல்லை அறியமாட்டான். ஏதாவது செவிக்கருவி வேண்டும். ஆனால் எழுதிக் கொடுத்துவிட்டால் அது கடினப் பொருளில் எழுதப்பட்டிருப்பதனால் கடு (கடுமை) + இது (இடைநிலை) + அம் (அமைந்தது காட்டும் விகுதி) --- ஆகின்றது. அதாவது "ஹார்டு காப்பி" ஆகிவிடுகிறது.


நாம் தெரிந்துகொள்ள முனைந்தது இலிகிதம். இந்தச்சொல், எதன்மேல் பதிவுபெற்றுள்ளது என்பதைப் பற்றிச் சொல்லாமல், எவ்வாறு பதிவுபெற்றுள்ளது என்பதை அறிவிக்கும் சொல்லாகின்றது. அது எப்படி என்பதைச் சொல்கிறோம்.


பழம் என்ற சொல் பலம் என்றும் வரும். ல் - ழ் போலி அல்லது திரிபு. தமிழ் என்பது தமில் என்பதினின்று திரிந்தது என்பார் கமில் சுவலெபெல். விழிப்ப நின்று இவைபோலும் மாற்றுக்கள் வருங்கால் குறித்துக்கொண்டு அறிக. இவ்வாறுதான்:


இழு > இலு என்பதும் அமைந்தது. இழு என்றாலும் இலு என்றாலும் கோடிழுப்பது. கோடிழுப்பதுதான் எழுதுவது.


பிற ஆசிரியர்கள் கூறியபடி:


இழு > இழுது > எழுது.


இழு > இலு:


இலு > இலுக்கு > இலக்கு ( எழுதிக் குறிக்கப்பட்டது).

இலக்கு > இலக்கியம் ( எழுத்தல் இயன்றது / அமைந்தது).

இலக்கு > இலக்கணம் ( எழுத்தால் இயன்றவற்றை அணவி எழுந்தது.)

அணம் விகுதி. (சார்ந்து எழுவதை குறிக்கப் பொருத்தப்படும் விகுதி.)


இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பல் என்பர்.


இனி இலிகிதம்.


இலு + இகு +இ து + அம்.


இலு> இழு என்பது எழுது என்னும் கருத்து.

இகு என்பது இங்கு என்பதன் இடைக்குறை.

( இதை எல்லாம் பலவழிகளில் விளக்கலாம். இகு என்பதிலிருந்து தான் இங்கு என்ற சொல் மெலித்துப் பிறந்தது எனினுமது ).

= இகரச் சுட்டு. கு = சேர்விடம் குறிக்கும் இடைச்சொல்.)

இங்கிருந்து (அங்கு) இழுப்பதுதான் கோடு, எழுத்து எல்லாம்.


இவற்றுள்:


இலு என்பதன் உகர ஈறும் இகு இது எனற்பால இவற்றின் உகர ஈறுகளும் விலக்குக.



இல் + இக் + இத் + அம்


இலிகிதம் ஆகிவிடும்.


மறுபார்வை பின்.








வியாழன், 25 ஜூன், 2020

வாலிபன்

வாலிபன் என்ற சொல்லின் மூலங்களைக் 
காண்போம். இதனடிச் சொல் வல் என்பது
இதிலிருந்து கிளைத்த உங்களுக்குத் தெரிந்த
 சில சொற்கள் இங்கு தரப்படுகின்றன.

வல் - வலிமை;
வல் - வல்லவன்.
வல் - வாறு ( பொருள்: வலிமை).
(வல் > வால் > வால்+து > வாறு. இது வாற்று என்று வலி மிக்கு வரினும் பின் இடைக்குறைந்து வாறு என்றாம். சொற்கள் நீடலும் குன்றலும் தமிழியல்பு. பழைய இடுகைகளிற் கண்டு
குறிப்பெடுத்துக் கற்றுக்கொள்க).

-டு:

நல் > நறு > நாறு > நாற்றம்.

நாற்றம் என்றால் நன்மணம். இது பின் பொருள் இழிபு கொண்டது.

வல் > வாலரி > வாளரி

வலிமையுடன் பிற விலங்குகளை அடித்துக் கடித்துக் கொல்லும் சிங்கம். அரிமா என்பதும் அப்பொருள் பகுதிபொருந்துவதே.

வல் > வால் > வாலுகம். மணல்.
கட்டிட வேலைகளில் வலிமைக்காகக் காரையுடன் ( சிமென்ட்)
கலக்கப்படுவதாகிய மணல்.

வல் > வால் (வலிமைக்காக)
உக > உக+ அம் > உகம் ( உகக்கப்படுவது).

வல் > வால் > வால் + உகு + அம் > வாலூகம்

இது நஞ்சு. உண்டால் வலிமையை உகுத்து ( எடுத்துக்) கொன்றுவிடவும் செய்யக்கூடியது. உகு+ அம் = ஊகம், இது முதனிலை நீண்டு திரிந்த தொழிற்பெயராய் வல் என்பதனுடன் ஒட்டிச் சொல் அமைந்துள்ளது.

வால் என்பது மிகுதியும் குறிக்கும். வலிமை என்பது உடல் தெம்பு மிகுதி.

ஒரு மனிதன் அல்லது விலங்குக்கு வலிமை மிக்கிருக்கும் காலமெனின் அது இளம் பருவமே. ஆகவே வலிமைக் கருத்து இளமைக் கருத்துக்குத் தாவிற்று.

வல் > வால் > வால் > வாலை (வாலைப்பருவம்)
வல் > வள் > வாளார் ( இளங்கொம்பு).
வள் என்ற அடிக்குப் பல பொருள்: அவை, கூர்மை, படுக்கை, பெருமை, வலிமை - தொடக்கத்துப் பலவாகும்.
வல் > வால் > வால்+ பு + அன் = வாலிபன், இங்கு இகரம் சாரியையாய் வந்து சொல்லுக்கு இனிமை பயந்தது.




புதன், 24 ஜூன், 2020

இலடாக்கு (Ladakh)


இங்குள்ள தாளிகை வலைத்தளத்துக்குச் சென்று, அதில் உள்ள படத்தைப் பார்த்தபின் கவிதையையும் பிறவற்றையும் வாசிக்கவும்:

https://www.hindustantimes.com/india-news/india-china-hold-diplomatic-meeting-on-border-stand-off-in-ladakh/story-wrnl1LQZ1UTOdItWRJrMvL.html?utm_source=browser_notifications&utm_medium=Browser&utm_campaign=notification


நிலவின் படமென உலவுமென்  கண்கள்;
கண்களை உறுத்தும் கருமுகப் பாறை;
பாறையின் பாங்கினில் பயிர்களோ இலவே;
இலர்சிலர் உளர்; இல்  அடாஆக்கு மலையே.


அந்தாதிப் பாடல்.

உரை:

என் கண்கள் இது நிலவின் படமோ என்று
அப்படத்தில் மேல் உலாவுகின்றன;
அந்தக் கருமுகம் காட்டும் பாறைகள் கண்களை
உறுத்துகின்றன.
எந்தப் பயிரும் அங்கு முளைக்கவில்லை;
சில ஏழைகள் பக்கத்தில் உள்ளனர்.

இது இலாடாக்கு மலை.

இல் = வீடுகள்' (வீடுகளுக்கு)*
அடா = அடுத்துக்கூட வர இயலாமல்;
( கொடிதானமுறையில் )*
ஆக்கு = இயற்கை ஆக்கிய; 
மலை.

*இப்படி உரைப்பினும் ஆகும்.

இல்+ அடா+ஆக்கு = இலாடாக்கு!!.
(பயன்பாடற்ற நிலப்பகுதி
என்பது.)

எ-டு:

அடு > அடி. (தொழிற்பெயர்).  அடுத்துவரலால் அடி என்ப.

மெய்ப்பு பின்.

திங்கள், 22 ஜூன், 2020

இன்றைய கொரனா நிலைமை


கொரனாக் கொல்நோய்,  பரவும் முடிமுகி!
வருவார் வாய்ப்புகள்  கருதுக குன்றுதல் ;
தெருவிற் பனையும் அருகிய நிலையே!
முருகிழந் ததுவே முதுபே ருலகே.


உரை:


கொரனாக் கொல்நோய்  -  கொரனா என்னும்
உயிர்க்கொல்லி நோய்;

பரவும் முடிமுகி! -  இது தொற்றிப் பலரையும்
பீடிக்கும்,  மணிமுடி வடிவில் தெரிவதாம் நோய்
நுண்மி;

வருவார் வாய்ப்புகள்  கருதுக குன்றுதல்  - 
கடைகள் பொதுமக்கள் வருமிடங்கள் எல்லா
வற்றிலும் வரத்துக் குறைந்துவிட்டது; தொழில்
வாய்ப்புகளும் குறைந்துவிட்டன;


தெரு   விற்பனையும் அருகிய நிலையே! - 
தெருவில் இருக்கும் கடைகள் கூட மிகக்
குறைந்துவிட்டன, இதுவே நிலை.

தெரு விற்பனை;  தெருவிற்  பனை என்று
ஓசைப்பொருட்டு வகையுளி.
தெருவில் வளர் பனைமரத்தைக் குறித்திலது.


முருகிழந் ததுவே முதுபே ருலகே. - இவ்வாறு
இவ் வயதாகிவிட்ட பெரிய  உலகம் தன் அழகை
இழந்துவிட்டதே!

என்றவாறு.





முடி - மணிமுடி,  முகி - முக உருவம். (கொரனா)
முருகு - அழகு. இதை வேறு பாடல்களில் மகுடமுகி
என்றும் குறித்துள்ளேம்.


நிலைமை விளக்கும் கவிதை.

திருத்தங்கள்:
இதில் கொரனா என்னும் முடிமுகி நோயினால்
என்பதை "கொரனாக் கொல்நோய்,  பரவும் முடிமுகி!"
என்றும்  "வருவார் குன்றினர் வாய்ப்புகள் குன்றின"
 என்பதை வருவார் வாய்ப்புகள் கருதுக  குன்றுதல் 
என்றும் மாற்றியுள்ளோம். 

பரவும் முடிமுகியையே கொரனா கொல்நோய் என்று
உலகம் சொல்கிறது என்பது முதல்வரி..


எதுகைகள்:

கொர,  பர,  வரு,  கரு,
தெரு,  அரு,  முரு.

மோனைகள்

கொரனாக் கொல்நோய்!
வருவார் வாய்ப்புகள்  
முருகிழந் ...முதுபே 

என்பவற்றில் மோனைகளைக் கண்டுகொள்க.

மெய்ப்பு பின்.


அதிகாரம் (நூற்பிரிவு)

அதிகாரம் என்ற சொல்லைச் சிந்திப்போம்.
இங்கு நாம் கவனிப்பது நூலதிகாரம். அதாவது நூலில்
பிரிவுகளாக வரும் அதிகாரங்கள். முன் இதை 
அதி + காரம் என்று பிரித்துப் பொருள்கூறுவதுண்டு.


அத்தியாயம் என்ற சொல்லுக்கு இங்குப் பழைய 
இடுகைகள் தந்துள்ள பொருளைச் சார்ந்தே இதை
விளக்கப் புகுவோம்.


அற்று > அத்து. இது பேச்சு வழக்கிலும் இயல்பான
திரிபாகும்.


இகு இது இங்கு என்பதன் ஙகர ஒற்று நீங்கிய
இடைக்குறைச் சொல்.  எடுத்துக்
காட்டு  இன்னொன்று: 

ஓங்கு > ஓகு > ஓகம் என்பது போலுமே.

ஆரம் : இது ஆர்தல் என்னும் வினையில் அம் 
சேர்ந்த தொழிற்பெயர். நிறைவு என்பது 
இச்சொல்லின் பொருள். இச்சொல்லுக்கு
வேறு பொருட்களும் உள. சூழ்தல் அல்லது
சுற்றி இருத்தலும்  ஆகும்.


அத்து = முடிந்து,
இகு = இதே இடத்தில் அல்லது நூலில்
ஆரம் = நிறைவாகுவது.


அத்தியாயம் ஒவ்வொன்றும் முடிந்து முடிந்து 
தொடங்கித் தொடங்கி  நிறைவாகுவதுதான். ஆதலால் 
பொருள் பொருத்தமாக உள்ளது.


அத்து இகு ஆரம் > அத்திகாரம் , மீண்டும்
இடைக்குறைந்து அதிகாரம் ஆகிறது.

தமிழ்மொழி முழுவதும் இவ்வாறு சொற்களைத்
தொகுத்தலும் குறைத்தலும் மிகுதி. விழிப்ப
நோக்கின் விரியும் அறிவு; புரியும் நிலைமை.

என்னில் -  எனில்,  தன்னில் - தனில்;
முக்கண்ணா போற்றி -  முக்கணா போற்றி.


அத்தியாயம் என்பதில் த் என்ற ஒற்று
வீழவில்லை. இதில் வீழ்ந்துள்ளது. இது
சொற்சுருக்குக்கும் இனிமைக்கும் ஆகும்.


சிற்றம்பலம் > சித்தம்பரம் > சிதம்பரம்
என்பதில் த் என்னும் ஒற்று வீழ்ந்துள்ளது. 
லகரம் ரகரம் ஆயிற்று. இவை பல 
சொற்களில் காண்புறும் நடைமுறைகளே.


தட்டச்சு:  சரிபார்க்கப்பட்டது. 23062020

பெருமானும் பிராமணரும்

[Re-posted after Edit.]


ஒரு பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் சில இணையதளங்களில் பிராமணர் என்ற சொல்லின்  தோற்றம் பற்றிய ஆய்வுகளும் உரையாடல்களும் 
நடைபெற்றன. அதில் பலர் பெருமான் என்ற சொல்லினின்றுதான் இச்சொல் முகிழ்த்தது என்று கருத்துத்தெரிவித்திருந்தனர்.

இந்தச் சொல் நீண்டகாலமாகவே ஆய்வு செய்யப்பட்டுப் பல்வேறு முடிபுகள் முன்வைக்கப்பட்ட சொல்லாகும்.

ஆபி ட்யூபா என்ற பிரஞ்சு அறிஞர் தம் ஆய்வில் இது " ஏப்ரகாம் " என்ற சொல்லினின்று திரிந்துற்றது என்று கூறினார்.

இப் பிராமணர் என்ற சொல்பற்றிப் பிறர் கருத்துக்களை யெல்லாம் இவண் தொகுத்துரைப்பதென்றால் இடுகை நீண்டு படிப்போருக்கு உறக்கமே வந்துவிடுமாதலால்
அவையெல்லாம் ஒருபுறமிருக்க, நாம் நேரடியாகவே நம் ஆய்வினைத் தொடங்கிவிடுவோம்.

பெருமான் என்ற சொல் பிரான் என்றும் பெருமாட்டி என்ற சொல் பிராட்டி என்றும் திரியும். பெரு - பிரா என்ற முதலசைத் திரிபுகளைக் கவனிக்கவேண்டும். இவ்வாறே பெருமான் - பிராமான் > பிராமனன் என்று இச்சொல் திரிந்துவிட்டது. இதில் 0னகரம் என்ற எழுத்தே வந்திருக்கவேண்டும். ணகரத்துக்கு வேலையில்லை. ஏனென்றால் பெருமான் என்ற மூலத்தில் ணகர ஒற்று இல்லை. இன்றைய நிலையில் பிராமணர் என்றே தமிழில் எழுதப்பட்டும் பேசப்பட்டும் வருதலால், இந்த மரபினை நாம் போற்றவேண்டியுள்ளது. ஆனால் இந்த மாற்றீடுதான் ஆய்வாளர்களைத் திசைதிருப்பி விட்டதென்பதை உணர்க.

------என்று முடிக்கவே, பிரம்மன் என்ற சொல்லும் பெருமான் பிரம்மன்(திரிபு) என்பதையும் அறிந்துகொள்ளவேண்டும்.

பெருமான் என்பதும் திரிசொல்லே. அது பெருமகனென்பதன் திரிபே என்று உணர்க.

ஞாயிறு, 21 ஜூன், 2020

தொற்று நோய் நீங்கிச் சிங்கப்பூர் மேலெழும்



நளியிரு முந்நீர் தாண்டி

நம்சிங்கை வந்த நோயோ




வெளிநாட்டு வேலை யோரை

விதப்புறப் பற்றிக் கொண்டு




களிநடம் ஆர்த்த தன்றே.

காலத்தில் நீங்கி வீழும்




ஒளியுறும் மீண்டும் நாடே

உங்களுக் கையம் வேண்டாம்.







பொருள்:-

நளியிரு முந்நீர் - நடுக்கடல்.

வேலையோர் - ஊழியர்

களிநடம் - மகிழ்ச்சி நடனம்

ஆர்த்ததன்றே - செய்ததல்லவோ

விதப்புற - பெரிதும், தனியாக.

காலத்தில் - நாட்கள் செல்லச்செல்ல





சனி, 20 ஜூன், 2020

ஆடு மேய்களம் இலடாக்கு.



ஆடுகளை அமைதியொடு மேய்க்கின்ற இல்லார் வாழும் இடமே
ஆடுவன இலடாக்கிலே  ஆடுகளே  அல்லால் இல்லை திடமே
ஆடுகொடு மனத்தராய் அரசுகளில் வல்லோர் ஊன்று கடமே
ஆடுதலை நிறுத்துவரோ அமைதியுடன் செல்லார் எனில் மடமே.


பொருள் 

1.ஆடுகளை அமைதியொடு மேய்க்கின்ற இல்லார்
 வாழும் இடமே - அமைதியாக ஏழைகள் ஆடுமேய்த்து 
வாழ்க்கை நடத்தும்  இடமாகும்; 
 ( இல்லார் - ஏழைகள்)

2.ஆடுவன இலடாக்கிலே  ஆடுகளே  அல்லால் இல்லை  - 
இலாடாக்கு என்னும் இந்நிலப் பரப்பில் ஆடவேண்டியவை 
ஆடுகளே; 
 ( அதுதான்இறைவன் அமைத்தவழி என்பது).

3. திடமே   ஆடு   கொடு மனத்தராய் அரசுகளில்
 வல்லோர் ஊன்று கடமே - ( இப்போது)  அவ்விடம் 
வளைந்த  மனத்திடம் வாய்ந்த வல்லரசுகள் 
அசையாமல் நிற்கும் மலைப்பகுதி  ஆகிவிட்டது!!

(ஊன்றுதல் - நிலையாக நிற்றல் .
 கடம் - மலைப் பகுதி. 
 எ-டு: வேங்கடம் - வெப்பமுள்ள மலைப்பகுதி) 

திடமே  ஆடு(ம்) கொடு மனத்தர் -  மிகுந்த மன 
அழுத்தமுடன்  செயல்படும் கொடிய நெஞ்சினர்.
  (  போரினை விரும்புவதால் ).


4.  ஆடுதலை நிறுத்துவரோ அமைதியுடன் 
செல்லார் எனில் மடமே. -   இந்த வல்லரசுப்
படையினர் அங்கிருந்து செல்லாவிட்டால் 
அது மடமையாய் முடியும்.  
( அழிவை உண்டாக்குவது மடமை என்பது 
கருத்து. மடம் - மடமை)


இக்கவிதையை நுகர்ந்து இன்புறுவீர்.

மெய்ப்பு - பின்
Edited 5.31 am 22.06.2020


வெள்ளி, 19 ஜூன், 2020

விகாசித்தல் - விரிவடைதல்.

எந்தச் சொல்லையும் அது எப்படிக் காதுகளில் வந்து ஒலிக்கிறது
என்பதை மட்டும் வைத்து  அதன் தோற்றுவாயை முடிவு செய்துவிடமுடியாது.பல அளவைகளால் அவற்றை முடிவு செய்வதுதான் சொல்லாய்வு என்பது. இதற்கு ஓர் உண்மையான எடுத்துக்காட்டினை
யாம் எம் நண்பர்களிடம் கூறுவதுண்டு.

பெரியசாமி என்ற ஒரு தமிழர் ஓர் அமெரிக்கன் குழும்பில் வேலைக்குச் சேர்ந்தார். அவர் பெயர் சற்று நீட்டமாக இருக்கிறது என்று அழைக்க இடருற்ற அவருடைய  அலுவல் தோழர்கள் அவரைப் பெரி என்று அழைத்தார்கள். ஆகவே பெரியசாமி மிஸ்டர் பெரி ஆகிவிட்டார்.  மிஸ்டர் பெரி என்ற நிலையில் இந்தத் தமிழர் தம் சக அலுவலரிடையே மிகவும் விரும்பப் படுபவர் ஆனார்.  அதற்கு அவர் பெயரும் ஒரு காரணியாகிவிட்டது.பெரிதும் ஓரசைச் சொற்களால் ஆன மொழியுடையார் நா ன் கு  ஐந்து அசைச் சொற்களைப் பெயராகக் கொண்ட தமிழரையும் ஏனை இந்திய வழியினரையும் விளிப்பதில் சிரமம் அடைவது உண்மை. மிஸ்டர் பெரி ஒரு வெள்ளைக்காரன் என்று அவரைத் தெரியாதவர்கள் நினைத்தனர்.

தமிழ்ச் சொற்கள் இன்னொரு மொழிக்குப் பரவினால் எவ்வாற்றானும்  இடர்ப்பட்டு மாறி ஒலிக்குமென்று உணரவேண்டும்.

அதனால்தான் ஏறத்தாழ ஐயாயிரம் ஆண்டுகளின் முன்னரே தொல்காப்பியனார் " திரிசொல்" என்றொரு சொல்வகையைக் கூறினார். திரிசொல், ஒலித்திரிபு மட்டும் கொண்டதன்று. இதைப் பின்னர் ஓர் இடுகையில் விளக்குவோம். எம் பழைய இடுகைகளிலும் ஆங்காங்கு விளக்கம் காண்க

இன்று விகாசித்தல் என்ற சொல்லை விளக்குவோம். இதன் அடிச்சொற்கள் (அதாவது: வினைச்சொல் அடிகள் தொடங்கி  ) மிகு(தல்),  ஆ(சு){ ஆதல்} ,  வினையாக்க விகுதியான இகரம் முதலியவை.

மிகுதல்::  மிகு என்பது விகு என்று திரியும். இது  மிஞ்சு > விஞ்சு என்ற திரிபு போலுமே ஆகும்.

ஆசு என்பது பற்றுக்கோடு என்று பொருள்படும் சொல்.  பற்றுக்கோடென்பது பற்றிக்கொள்ளுதல்.

ஆசு என்பது ஆசிரியர் என்ற சொல்லிலும் உள்ளது. ஆசான் என்பதும் அது.  ஆசிடையிட்ட எதுகை என்ற யாப்பிலக்கணக் குறியீட்டிலும் உள்ளது. இவற்றை இங்கு விளக்கவில்லை. பழைய இடுகைகளிற் காண்க. தமிழ்ப்புலவராகிய எம் குரு அப்பாத்துரைச் செட்டியார்,  தமிழ் ஆசான் என்ற என்ற இதழின் ஆசிரியரும் ஆவார். இவர் அலுவலகம் சிங்கையில் பழைய ஆரிய சமாஜ் அலுவலகத்தில் கீழ்மாடியில் இருந்தது.  ஆதனால் ஆசான் என்ற சொல் எமக்கும் பிடித்ததுதான்.   ஆசு+ஆன்:  ஆன் என்பது ஆண்பால் ஒருமை விகுதி.

மிகு > விகு.
ஆசு.
இ - வினையாக்க விகுதி.
விகாசித்தல் : இதன் பொருள் விரிவு அடைதல். பூத்தல்.

விகாசித்தல் என்ற தமிழ்ச்சொல், முயற்சித்தல் என்பதுபோல்  ஒரு தொழிற்பெயராகிய ஈற்று ஆசு என்பதிலிருந்து  முகிழ்த்துள்ளது. விகாசித்தல் என்பதன் நிலையுறுப்பு:  விகு ( திரிசொல்).  வருவுறுப்பு: ஆசு ( இயற்சொல்). விகுதி:  இ ( இகரம் ).

அறிக, மகிழ்க.


மெய்ப்பு:  பின்பு. 19.6.2020
தட்டச்சு பிறழ்வு:  5.42 மாலை 20.6.2020 சரிபார்க்கப்பட்டது.

















குறிப்புகள்:

அக ஊழியர் -  சக ஊழியர் (திரிபு). இன்னொரு எடுத்துக்காட்டு:  அமணர்- சமணர்.

புதன், 17 ஜூன், 2020

இரங்கல்



போரில் இறந்தவர்  நோயிற் பிரிந்தோர் எனப்பலராம்

யாரா யினுஞ்செலும் யாவருக்  கும்நெஞ் சுருகியதே
நேரும் துயர்தனை   நீக்கி   நிலைகொள் திறம்பெறுகென்
றாரருள் தேவ னடிதமில் வீழ்ந்தேம் வணங்கிநின்றே


உரை:

போரில் இறந்தவர்  நோயிற் பிரிந்தோர் எனப்பலராம் -
இந்தக் கடினமான காலத்தில் பலர் போரில் இறந்தனர், பலர்
நோயினால் சென்றுவிட்டனர்;

யாரா யினுஞ்செலும் யாவருக்  கும்நெஞ் சுருகியதே - 
இத்திறத்தார் அனைவருக்கும் நம் நெஞ்சுருக்கம் உரித்தாகுக.

நேரும் துயர்தனை   நீக்கி   நிலைகொள் திறம்பெறுகென்
று  -  ( இவர்கள் உறவினர் நட்பினர் முதலானோர்)  அதனால்
அடைந்த துக்கத்தினின்று மீண்டு நிலையான மனத்திடத்தினைப்
பெறவேண்டுமென்று; 

ஆரருள் தேவ னடிதமில் வீழ்ந்தேம் வணங்கிநின்றே
-  அருள் நிறைந்த இறைவன் அடிகளின் முன் நின்று வணங்கி
( இறைஞ்சிக்கொண்டு) விழுந்தேம் யாம்

என்றவாறு.

ஆர் அருள் - வினைத்தொகை.






செவ்வாய், 16 ஜூன், 2020

நலமே வாழ்வீர் ஆய்வன்பர்களே

ஆய்வு மனத்தால் அகிலம் அணிசெயும் அன்பர்கள்நாம்
காய்தல் உவத்தல் எதுவுமே இன்றிக் கணித்தறிந்தோம்
தேய்வென யாதும் பிணியாத் திறனுடன் தேன்சொரிந்தோம்
நோய்த்தொற் றிலாது நலமாய் உலவி நனிவாழ்வமே 




பொருள்
ஆய்வு மனம் - ஆராய்ச்சி மனப்பான்மை.
உண்மை காணும் நெஞ்சம். தம்கருத்துக்களைத் திணியாமை.
கணித்தறிதல் - அடிப்படைகளுடன் கூடிய துருவியறிதல்
தேய்வு பிணியா -  குறைகள் பீடிக்காத
தேன்சொரிந்தோம் - இனிமையாகப் பண்ணும் ஆராய்ச்சியும் விளைத்தோம்.
பண் - பாடல். இங்குப் பண்ணான அல்லது நல்ல ஆய்வு.
நனி -  இன்னல்கள் இல்லாத

காய்தல் - வெறுப்பு
உவத்தல் - விருப்பு
(அதாவது எப்போதும் நடுநிலையுடன்)

உடல்நலம் காத்துக்கொள்ளுங்கள்.
இது கடினமான காலம்.

திங்கள், 15 ஜூன், 2020

இக்கட்டு

இக்கட்டு என்ற பேச்சு வழக்குச் சொல்லைப் பார்ப்போம்.

இது ஓர் இடைக்குறைச் சொல்.

இடுக்கண் என்பதில் இடு+ கண் என்று இரு உறுப்புச்சொற்கள் உள்ளன.
கண் =  ஏதேனும் ஒரு நிலையில் அல்லது இடத்தில்;   இடு = இடப்பட்டது, அல்லது எவ்வாறோ வந்து நிற்பது என்று பொருள் கூறலாம்.  அதுபோலவே, இடுக்கட்டு என்ற சொல்லே டுகரம் குன்றி, இக்கட்டு என்று வந்துள்ளது.

கட்டப்பட்டதுபோல் வந்துற்ற ஒரு நிலையே இடுக்கட்டு. இடையில் உள்ள டுகர வீழ்ச்சி. இதுபோல் டுகரம் வீழ்ந்தவை:

கேடு+ து >  கேது  ( ஒரு நிழற்கோள்).

பீடு + மன் > பீமன் > வீமன்.  ( பெயர் ).

இங்கனம் வல்லினம் வீழ்ந்த இடைக்குறைகளை எம் பழைய இடுகைகளிற் காணலாம்.

கண்+ து = கட்டு என்று வல்லெழுத்து வருதல் உண்டு.  என்றாலும் இடுக்கண்+து > இடுக்கட்டு > இக்கட்டு என்று இடைக்குறை வரவே செய்யும்.

அறிக. மகிழ்க.

முகக் கவசம் அணிக. இடைவெளி போற்றுக.

மெய்ப்பு பின்