புதன், 6 மார்ச், 2019

Congress and BJP in India

The Pulwama terrorist attack (India)
The culprit who killed the forty odd men was a suicide bomber. He had killed himself and his body flew all over in many pieces at the site of explosion. If these people are seeking revenge then he is no more. Those killed or not killed at Balakot in Pakistan are not directly involved with this incident of explosion.

 What Modi has done is to attack their training ground or operating establishment in Pak which has been so identified by Indian or other intelligence . This is to prevent such future incidents. This act of Modi has some results.

Pakistan is now taking action to dismantle the terrorist camps and has made arrests too. It has offered to talk with India, and seems to be making amends. If no deaths at all and no damage at all occurred they (Pak) would not be sending their F16s across the border. One Pak F16 has been shot down. It is said that this was the only way now available to curb terrorist activities that might happen in future. Congress is seemingly inciting people to question the action by Govt.
Besides Modi others seemed to have  had no guts to take action against the enemy who is accused of  inciting people against India. If the bereaved families  want exact revenge, it is not available as the actual perpetrator died. Those in contact with such simpletons as the bereaved here should explain that congies failed to take preventive action such as the ones Modi has taken on sites in Pak and that was why attacks such as Pulwama had occurred. Congies had interacted with the Intelligence agencies in India and elsewhere for 70 years or so but  they failed to take the present government into confidence as to what they had learned from such interactions in the past. Also most of the Intelligence officers in India were congie appointees. BJP cannot change them for fear of congie objections. BJP would need time to repair the consequences of congie inaction.

congie  or Congie:  means the Congress Party.
Pulwama: a town in Kashmir.

குறடாவும் பிளாயரும்



 பிளாயர்.

இந்த இரு சொற்களும் வழக்கில் உள்ளவையாகும். இவற்றுள் பிளாயர் என்பது ஆங்கிலச் சொல்.

பிளாயருக்கு நண்டுக் கொடுக்குப் போல விரிந்து ஒரு பொருளைப் பிடித்து க்கொள்ளும் திறம் உள்ளது. விரிதல் என்பதும் பிளத்தல் என்பதும் ஒன்றுதான், நுட்ப வேறுபாடுகளைப் பொருண்மையில் உட்படுத்தாவிடில்.

இந்த ஆங்கிலச் சொல்லைத் தமிழ்க் கண்ணாடி கொண்டு நோக்கின், பிளத்தல்: பிள + ஆய் + அர் என்று பிரித்து அருத்தம் கூறிவிடலாம். (மனிதன் நாவொலிகட்கு இயற்கையில் எப்பொருளும் இல்லை. ஒலிக்குப் பொருள் உட்புகுத்தப்படுகிறது. அதனால் சொல்லுக்குப் பொருள் கண்டு கொள்கிறோம். உட்புகுத்தலாவது அருந்தும்படி செய்தல். அல்லது " அருத்துதல் " ( அருந்து என்பதன் பிறவினை ). எடுத்துக்காட்டு: பொருந்து > பொருத்து; அருந்து > அருத்து. ஆகவே பிள என்பது இணைந்து நிற்கும் ஒன்று பிரிதலைக் குறிக்கிறது. பிள என்பது பிரி என்பதும் ஓரடியினின்று வருவன. இதை இங்கு விளக்கவில்லை.

பிள : பிளத்தல் என்பதன் அடியாம் ஏவல் வினை.
ஆய் : வினை எச்சம்.
அர் : விகுதி. தமிழிலும் இது விகுதியாய் வருதல் உண்டு.
செக்கரில் தோன்ற" ( புறம்: 16) = சிவப்பாய்த் தோன்ற.
வழக்கு: செக்கர் வானம்.
இதில் அர் விகுதி இறுதிநிலை ஆதல் காண்க.
தக்கர் - தண்ணீர் கொள்கலம். தண்ணீர் தங்கவைக்கும் (ஊற்றிவைக்கும் ) பெரிய ஏனம்.
தங்கு + அர் = தக்கர் ( வலித்தல் விகாரம்).
தேர்தலில் அவர் தன் இடத்தைத் தக்க வைத்துக்கொண்டார். தக்க = தங்க.
இவற்றிலிருந்து அர் விகுதி பயன்பாடு அறிக.
பிளாயர் என்பது தமிழன்று. ஆனால் பல ஆங்கிலச் சொற்களுக்கும் தமிழ் மூலம் இருத்தல் காணலாம். ஏன் என்பதை நீங்கள் ஆராயலாம். தமிழ் உலக மொழியுமாம். அதன் மூலங்கள் எங்கும் சிதறிக் கிடக்கின்றன. ( மூலங்கள் எனின் மூலச் சொற்களும் சொல்லடிகளும் ).
மூல ஐரோப்பியத்தில் ப்லெக் என்பதிலிருந்து இது வருதலைக் கூறுவர். இலத்தீன் பிளக்காரே என்பதும் காட்டப்பெறுகிறது. தமிழ்- பிளத்தல் காட்டப்பெறவில்லை. இதுபோலும் பல சொற்களை ஆராய்ந்து ஒரு பத்து ஆண்டுகளின் முன் ஒருவர் இணையத்தில் வெளியிட்டிருந்தார். யாம் சேமித்து வைத்தவை அழிந்தன.
இத்தகு சொற்களை நீங்கள் ஆய்வு செய்யலாம்.

 குறடா:

இனி குறடா என்ற சொல்லுக்கு வருவோம். ( இது கட்சிக் குறடா அன்று.) குறடா என்`கின்ற ஓர் ஆயுதம். இது குறு குறுகு என்ற அடியினின்று போதருவதாகும்,

குறு ( குறுமை, குறுகுதல் அதாவது அகலம் குறைதல் ).
சில சொற்கள் காண்போம்.
குறு > குறள். ( ஈரடிப் பாவகை)
குறு > குறுவை ( குறுகிய காலத்தில் விளைச்சல் தரும் ஒரு நெல்வகை).
குறு > குறுக்கை ( சிலுவை) ( குறுக்கு நெடுக்கில் அடிக்கப்பட்டு இணைப்புடைய இரு சட்டங்கள் அல்லது கட்டைகள் .
குறு> குறுணி. ( குறுகிய அளவை, ஓர் அளவை ).
குறு > குறுகல் : அகலக் குறைவு
குறு > குறுக்கம் ( அகலம் குறைத்தல், அகலம் குறைவானது )
குறு> குறுங்கண் : சன்னல், சாளரம்.
குறு > குறுங்கண்ணி : ( கொண்டைமாலை)
குறு > குறுஞ்சிரி : புன்னகை
குறு> குறுணை ( குறு நொய் ) : உடைந்த அரிசி.
குறு >குறுநணி: அண்மையில்.
குறு > குறுமுனி: அகத்தியனார்.
இங்கு தரப்பட்டவை குறு என்பதனடிப் பிறந்த சில சொற்கள். இன்னும் பல உள. பொருளும் முழுமையாகத் தரவில்லை. இவை வெறும் மாதிரிகளே.
இப்போது குறடாவுக்கு வருவோம்.

குறு > குறடா.
குறு + அடு + .
இதில் ஆ விகுதி. நிலா என்பதில்போல.
குறுக்கப்பட்டு கொடுக்குகள் போல் அடுத்துப் (பிடிக்கும்) ஒரு பிடிகருவி. ஆகவே " பிளாயர்" ஆகும்.
பிளாயர் என்ற ஆங்கிலத்தைப் பேசாமல் குறடா என்`.
அறிந்து மகிழ்வீர்.
பிழைகள் புகின் திருத்தம் பின்.







செவ்வாய், 5 மார்ச், 2019

பூக்களில் ஈக்கள்போல்...

இந்த நாலுவரிக் கவியை ஒரு புகைப்படவிளக்கமாக எழுதினேம்.  அந்தப்  புகைப்படம் எங்கிருக்கிறதென்று தெரியவில்லை.  கண்டுபிடிக்க முடிய வில்லை.  அதைக் கண்டெடுத்தால் பதிவேற்றம் செய்வேம்.  இப்போது கவிதையை மட்டும் வெளியிடுவேம்.

பூசைஒவ் வொன்றிலும் மாசறு மக்கள்
பூக்களில் ஈக்கள்போல் ஏக்கறு தக்கோர்
ஆசைகள் யாவையும் ஓசுறு தெய்வம்
அகம்கனிந்  துண்மையில் நிறைவுறச் செய்யும்.


மாசறு - குற்றமற்ற
தக்கோர் - நல்லோர்
ஏக்கறு  -  தாழ்மையுடன்
ஓசுறு -  கீர்த்தி மிகுந்த.
அகம் - மனம்

ஈக்கள்  என்றது: தேனீக்களை.   தேன் என்ற சொல் தொக்கது.
ஆசை :  ஒன்றன் பால்  மனம் அசைவது.  அசை -  ஆசை ,   முதனிலை
நீண்டு  திரிந்த தொழிற் பெயர் .  சுடு >  சூடு என்பது போல.

உரை:

ஒவ்வொரு பூசையின் போதும்  மிகுந்த பணிவுடன் மாசில்லாத மக்கள் பூக்களில் ஈக்களைப்போல தக்க வாறு கூடி விடுகின்றனர்.   அவர்கள் தெரிவிக்கின்ற  எல்லா ஆசைகளையும்  கீர்த்தி வாய்ந்த தெய்வமானது  மனம் கனிந்து  நிறைவு  ஏற்படச் செய்கின்றது.

திங்கள், 4 மார்ச், 2019

தலைமாற்றும் மாற்றாமையும் : சொற்புனைவு.

வாக்கியங்களில் வரும் ஆற்றொழுக்கினைப் பின்பற்றாமல் மறுதலையாகச் சொற்களைப் போட்டுச் சொல்லமைப்பை மேற்கொள்ளுவது ஒன்றும்  புதிய உத்தி அன்று.

அல்+ திணை =  அஃறிணை என்பதிலே திணை அல்லாதது என்ற வாக்கியத்தில் வரும் சொற்களைத் தலைமாற்றிப் போட்டுப் புனைந்திருத்தலைக் காணலாம். பிற்காலத்தில் இந்த உத்தியை மேலும் மேலும் கையாண்டனர் என்பதே உண்மையாகும்.  எடுத்துக்காட்டு:

கருத்து வாக்கியம் :  தாய்க்குப் பின் தந்தை
இதைத் தலைமாற்றி:
பின் + தாய்  >   பிதா

பின் என்பதில் உள்ள  0னகர ஒற்று விலக்கப்பட்டது:  எடுத்துக்கொண்டது: பி என்ற முதலெழுத்து மட்டுமே.

பின் > பி.   ( கடைக்குறை).
தாய் > தா  (  கடைக்குறை ).

அஃறிணை என்ற மறுதலை அமைப்பைப் போல இன்னொரு சொல்லமைப்பு:

கருத்து வாக்கியம்:   தாரம் தப்புதல்.  ( வாழ்க்கைத் துணையை இழத்தல் )
இதைத் தலைமாற்றி:
தப்புதல் தாரம்.
தப்பு + தாரம் =  தப்புத்தாரம்
மெய்யெழுத்துக் களைதல்:
தபுதாரம்.
இறுதி மகர ஒற்று களையப்படவில்லை.
இதைத் தொல்காப்பியனார் பயன்படுத்தியுள்ளார்.   அவரே புனைந்ததா என்று தெரியவில்லை.

கருத்து வாக்கியம்:  அது அம்மா (  பணிவினால் அஃறிணைப் பயன்பாடு)
மா +  (அ)து  >  மாது.  ( அம்மையார்).


இன்னும் சில: (தலைமாற்று இல்லாதவை).

அகத்திலே இருக்கவேண்டியது:   இரு+ அக(ம்) + சி + அம்=  இரகசியம்.
அவிழ்க்கும் இரு கைகள் உடைய மேலணி:    இரு + அவிழ் + கை > இரவிக்கை.
ழகர ஒற்று நீக்கம். இரு அவிழும் கைகள் உள்ள உடை.

கருத்து:  விழுமிய புலம்.  இதைப் பார்ப்போம்.
சுருக்கினால்  விழுபுலம்.
இதில் தலைதிருப்பு உத்தி எதுவும் கையாளாமல்:

விபுலம்.

புலம் என்பது நிலம் காட்சி என்ற பல்பொருளொரு சொல்.

விபுலம் என்பது அதன்படியே பல பொருள் தரும்.

விழுமிய புலம் -  சிறந்த காட்சி என்றும் பொருள்படும்.


கெட்டுப் புன்மையாகியாகிவிட்ட நிலைமைக்கு ஒரு சொல்.
சொல்:  நபுஞ்சகம்.

நலிபு உச்சு  அகம்.

நலிபு  :>   நபு.  (  இடைக்குறை )  அல்லது நவு(தல்) > நபு  வகர பகர மாற்றீடு.
உச்சு  >  உஞ்சு   ( மெலித்தல் ).   இலக்குக்குச் செல்லுதல்.  வினை: உச்சுதல்.
அகம் :  உள்ளதாதல் குறிப்பு.

நபு உஞ்சு அகம் >  நபுஞ்சகம்.(  பேடித்தன்மை)

இவ்வமைப்பில்  சொற்கள் தலைமாற்று  ஏற்படவில்லை.

நண்பர் >  நபர்.  இடைக்குறை. இந்த இடைக்குறை மூலமாக நட்புக்குறிப்பு
விலகிற்று.

திருத்தம் பின்

ஞாயிறு, 3 மார்ச், 2019

சொல்: ஜீவாதாரம்.

இது ஒரு பழைய பாடல்::

செல்வமே சுக ஜீவாதாரம்
திருமகள் அவதாரம்

உள்ளபடி செல்வம் இல்லாதவரே
உலகினிலே வாழ்வதும் தவறே.

கல்லா ரெனினும் காசுள் ளவரைக்
காட்சிப் பொருளாய்க் காணார் எவரே?

இது நல்ல எதுகை மோனைகளுடனும் இயைபுகளுடனும் பாடப்பெற்றுள்ளது. கருத்துகள் தமிழ் நூல்களிலும் அடிக்கடி வாழ்க்கை நிகழ்வுகளிலும் நாமறிந்துகொள்வனதாம்.

இன்னொரு பாடலும்:

நம் ஜீவாதாரமே
செல்வம் ஆகுமே

என்று வருகிறது.

இன்று ஜீவாதாரம் என்ற சொல்லைப் பார்ப்போம்.

ஜீவன் அல்லது ஜீவ் என்பது உயிர் என்று பொருள்படும்.  ஜீவ +  ஆதாரம் = ஜீவாதாரம்.

இலங்கைத் தமிழ் அறிஞர் முன் கூறிய ஆய்வுரையில்

உயிர்  >   யிர் >  ஜிவ்  > ஜீவ் > ஜீவன் 1

என்று விளைந்தமை கூறுவார்.      ஜிவ் என்ற அயல் திரிபை  அன் விகுதி கொடுத்து ஜீவன் என்பது கலவை அமைப்பு. (hybrid).  அன் தமிழ்க்குரியது.


யகர வருக்கம் ஜகர வருக்கமாவது பல மொழிகளில் உளது.  ஜூலியஸ் > யூலியஸ்;  யாக்கோப் > ஜேக்கப்  என்பன எளிதில் காணத்தக்கவை. மற்றவை வேறு விடயங்களை ஆய்கையில் தானே அறியலாம்.

சீரான வாழ்வுக்கு ஆதாரம் செல்வமே.

சீர் + வாழ்வு > சீர்வாழ்வாதாரம் >  சீவாதாரம்  > ஜீவாதாரம்.

ரகர ஒற்றும் தொலைவதே.  சேர்> சேர்மி >  சேமி > சேமித்தல்.

ழகர ஒற்று இடைக்குறைதல் மிகுதி:

வாழ்த்து + இயம் =  வாழ்த்தியம் > வாத்தியம்.
பாழ்+ வு + அம் =  பாழ்வம் >  பாவம்.

ஜீவிப்பதற்கு  ஆதாரம் ஜீவாதாரம்.  ஜீவனுக்குச் செல்வம் நேரடி ஆதாரம் அன்று.  அதற்கு மூச்சு முதலியன அடிப்படை ஆதாரங்கள்.  ஆனால் சீரான
வாழ்க்கைக்குச் செல்வம் வேண்டும்.

இப்படிச் சீர் வாழ்வு என்பதும் ஜீவி என்பதும் ஆன இரண்டும் பொருந்துவன.


--------------------------------------------

அடிக்குறிப்புகள்:

1  இலங்கை ஞானப் பிரகாச அடிகள்.

திருத்தம் பின்.


வெள்ளி, 1 மார்ச், 2019

யோசனை ஆலோசனை

ஓர்தலும் ஓய்தலும்


ஓர்தலும் ஓய்தலும் ஆய்வுக்குரிய சொற்கள். இவற்றின் தொடர்பினைச் சிறிது ஆய்வோம்.

ஓர்தல் எனின் யோசித்தல். இந்தச் சொல் இப்போது இலக்கிய வழக்கில் மட்டுமே தமிழில் உள்ளது. தமிழில் பண்புப் பெயர் விகுதியாகிய மைகாரம் ஏற்றப்பட்ட " ஓர்மை" என்பது மலையாள மொழியில் உள்ளது. அஃது ஆங்கு நினைவு அல்லது ஞாபகம் என்னும் பொருளில் நிலவுகின்றது.

ஓய்தல் என்பது இதே பொருள் உடைய சொல். ஆயின் இப்பொருள் அகரவரிசைகளில் கிட்டிற்றிலது. இது முற்றிலும் வழக்கிறந்ததுடன் இச்சொல் இப்பொருளில் பயன்பட்ட நூல்கள் எவையும் அகப்படாதொழிந்தன. தமிழ் மொழியின் நீண்ட வரலாற்றில் இவ்வாறு அகப்படாதொழிந்தவையும் அழிந்தவையும் மிகப்பலவே என்றறிக.

ஓய்தல் என்பதற்கு அழிதல், இளைப்பாறுதல், சோர்தல், சாய்தல், தளருதல், முடிதல், நீங்குதல் மற்றும் மாறுதல் என்பன இன்று கிடைக்கும் பொருள் ஆகும்.


யோசி யோசனை என்ற சொற்கள் தமிழ்ப் பேச்சில் அன்றாட வழக்கில் உள்ளனவாகும். அகர வருக்கச் சொற்கள் யகர வருக்கமாகவும் திரிவன என்ற சொல்லியல் விதிகொண்டு நோக்கின் இவை முற்காலத்து ஓசி, ஓசனை என்றிருந்திருத்தல் தெளிவு. கல்வி அறிவில்லாத மக்களின் பேச்சில் இவை எங்கேனும் இருத்தல் கூடும். அவற்றைக் கேட்டோரும் அவை தவறாக ஒலிக்கப்பட்டன என்று கோடலும் எதிர்பார்த்தற்குரியதே.

ஓய்> ஓயி > ஓசி > ஓசனை > யோசனை;


இனி:

ஆனை > யானை
ஆண்டு > யாண்டு
ஆய் > யாய்
ஆறு > யாறு
உத்தி > யுக்தி
எமன் > யமன்

என வழங்கும் சொற்களினால் அ-ய மற்றும் வருக்கமும் அடங்கிய  இவ்விதியை நன் கு உணரலாம்.

ஆகவே யோசனை என்பதன் முன்வடிவம் ஓசனை என்பது எனல் எளிதின் உணரப்படும்.

ஆலமரத்தடியில் அமர்ந்து பழங்காலத்தில் ஆலோசனைகள் நடைபெற்றன.
ஆலமரத்தடியில் அமைக்கப்பட்ட அல்லது தொழப்பட்ட கடவுளும் ஆலமர் கடவுள் எனப்பட்டார். இனி ஆலோசனை என்ற சொல்லை ஆய்ந்தால்:

ஆல் + ஓசனை என்பது கிடைக்கிறது.

ஆலோசனை என்ற இருபெயரொட்டுச் சொல்லில் ஓசனை என்ற முந்தை  வடிவம் இன்னும் வாழ்கிறது என்பதறியலாம்.

இதை ஆய்ந்து ஓய்ந்து பார்த்துச் செய்ய வேண்டும் என்ற தொடர்மொழியில் ஓய்தல் என்ற வினை வருகின்றது. ஆய்தல் என்பதும் ஓய்தல் என்பதும் ஆராய்தல் யோசித்தல் என்பனவே ஆகும்.

இதை இன்னொரு நாள் வேறொரு கோணத்தில் தொடர்வோம்.

பிழை புகின் பின் திருத்தம்



வியாழன், 28 பிப்ரவரி, 2019

இறைப்பற்று மிக்குடையார் பெண்களே

இறைப்பற்று மிக்குடையார் பெண்களே---  இறைவர்
ஒருவரையே காணுமிவர் கண்களே;
முறைப்படி முடித்திடுவர்  பூசையை --- அன்பர்
முன்னேற வேண்டிடுமோர்   ஆசையில் .


பொருள்:

இறைப்பற்று -  பக்தி  அல்லது பத்தி.
இறைவர் ஒருவரையே---  கடவுளை மட்டுமே; 
காணும் :  மற்ற மனிதர்களைப் பார்க்கமாட்டார்கள், கண்ணாலும் மனத்தாலும்
என்பது.
இவர் கண்களே -  இவர்கள் குமுகத்துக்குக் கண்களே.
அன்பர் : கணவன்மார்.

புதன், 27 பிப்ரவரி, 2019

மூத்தோர்பால் அன்பு



தாத்தாவின் தாடிமீசை எப்படி ---அவர்
தருகின்ற அன்பினால் நான் இப்படி!
மூத்தோரும் இளையோரும் இப்படிச் ---சேர்வோம்
மூதறி வாளர்தம்  சொற்படி.


சனி, 23 பிப்ரவரி, 2019

தனம் தானியம் தனவந்தன்



இன்று தனம் தானியம் என்பன பற்றிக் கொஞ்சம் அிவோம்.

ஒரு தகப்பன் தன் இரு மக்களுக்குத் தன்‌ சொத்துக்களைப் பாகப் பிரிவினை செய்கிறான். பிரிந்த ஒவ்வொரு   பகுதியும்ஃ
ஒவ்வொரு மகனும் தனது என்று சொல்லக்கூடியது ஆகும். ஒருவனுக்குப் புதையல் கிட்டுகிறது, அது அவன் தனது என்று சொல்லிக்கொள்ளக் கூடிய செல்வமாகும். எம்மனிதற்கும்  தனதாக வந்து சேர்ந்த செல்வமே தனம் ஆகும், அடுத்தவன் வைத்திருக்கும் செல்வம் அடுத்தவனின் தனம்.

ஒரு குகையிலோ அல்லது காட்டிலோ மனிதர்கள் கூட்டமாக வைகிய ஞான்று அவர்கள் பயன்பாட்டுக்குரிய பல பொருள்கள் பொதுவுடைமையாய் இருந்தன. மனிதர்கள் பிரிந்து வாழத் தலைப்பட்ட போது  செல்வங்கள் சிலவற்றைச் சிலர் தனது - தமது என்றனர்.
து என்பது இலக்கணப்படி ஒருமைப் பொருள் தருவதால் ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்களை  தன, தம என்று அகர விகுதி இட்டுத்தான் சொல்வது இலக்கணப்படி சரியாக இருக்கும். தன் பொருட்களைப் பன்மையில் எடுத்துக்கூறவே தன என்ற சொல் பிறந்ததுதனியுரிமை க் கோட்பாடு தோன்றவே இதை விதியாகக் கொண்டு பிறழ்வோரைத் திருடர் என்று சொல்லவேண்டி  ஏற்பட்டது.
திருடு என்ற சொல் திரிபு என்ற சொல்லுடன் தொடர்பு உள்ளது சொற்பிறப்பு முறையிலேதிர் > திரி > திரிபுதிர் > திரு > திருடு, இது இயல்பினின்றும் பிறழ்வு என்னும் கருத்து.

தனம் என்பது இன்று பணம் நகைகள் என்று விரிந்தாலும் பண்டைக் காலத்தில பண்டமாற்று என்பதே வழக்கமாக இருந்ததால் தனம் - பொருள்களின் தொகுதி என்றே கொள்ளுதல் வேண்டும்.

தன் > தன (பொருட்தொகுதி ) பன்மை வடிவம்.
தன > தனம்.

தனது மாடு. ( மாடு - ஒருமை; தனது - ஒருமை )
தன மாடுகள் ( இரண்டு சொற்களும் பன்மை ).
தன் மாடு,மாடுகள் ( இரண்டிலும் பொருந்தும் ).

இவ்வாறு தனம் என்ற சொல்லின் தமிழ் மூலமறிக.

ஆனால் தானம் என்பது தா என்பதனடிப் பிறந்த சொல். தா என்பது கொடு என்பதுபோலும் வினைச்சொல். ஒப்புடையோன்பால் ஏவலாகும்.

தனம் என்பது தன் என்பதனடிப் பிறக்க, தானியம் என்பது தான் என்பதனடித் தோன்றியது ஆகும். இறையாகச் செலுத்தியது போக ,தான் வைத்துக்கொள்ளும் கூலமே தானியம் ஆகும். இது முன் விளக்கம் பெற்றுள்ளது. முன் இடுகைகள் காண்க.

தன   வந்தன்

ஒருவனுக்குத் தனம் கிட்டிவிடுமாயின் அவன் " தனம் வந்தவன்" ஆகிறான். இந்தப் பேச்சு வழக்கு வாக்கியமே " தனவந்தன் " என்று ஒரு சொன்னீர்மைப் பட்டுச் சுருங்கிற்று. தனம் வந்த அவன்> தனம் வந்த அன் > தனவந்தன். இதில் வந்துள்ள மாற்றங்களை அறிந்துகொள்க.

இவற்றுள் அயன்மை யாதுமில்லை.





வெள்ளி, 22 பிப்ரவரி, 2019

தான்வந்தர முனிவர்

இன்று தான்வந்தரம் என்ற சொல்லைப் பார்ப்போம்,

தான்வந்தரம் தைலம் என்று ஒரு தேய்த்துக்கொள்ளும் எண்ணெய் உள்ளது.  இது நாட்டுவைத்தியம் செய்வோரிடையிலும் செய்துகொள்வோரிடையிலும் மிக்கப் புகழ் எய்திய ஓர் எண்ணெய் ஆகும். தலைக்குத் தான்வந்தரம் தைலமும் உடம்புக்குச் சீரபலாத் தைலமும் தேய்த்துக் குளித்தால் சில உபாதைகள் நீங்குவதாகக் கூறுவர்.  நரம்புத் தளர்ச்சியை விலக்குவன இவை என்பர்.  தான்வந்தர முக்கூட்டு என்றொரு தைலமும் கேரளத்தாரால் பயன்படுத்தப்படுகிறது. இவை யாம் சில ஆண்டுகட்கு முன் கேள்விப்பட்டவை ஆதலால் சரியாக ஒப்பிக்கிறேமா என்று ஐயப்பாடு உள்ளது,  நீங்கள் ஆய்வு செய்துகொள்ளுங்கள்.

தான்வந்திரி ( தான்வந்தரி ) என்பது ஒரு முனிவரின்  பெயராம். இவர்தாம் தம் நூலில் இத்தைலம் ( தான்வந்தரம்)  பற்றிக் கூறியுள்ளார் என்ப.

தான்வந்தரி ஒரு பெரிய மருத்துவ நூலார்.  இவர்பற்றிச் செய்திகள் இப்போது கிட்டிட வில்லை.

எங்கிருந்து வந்தார் என்று தெரியவில்லை. தானே வந்த அரிய முனிவர் என்ற பொருள்படும் இவர் பெயர் ஒரு காரணப்பெயரே ஆகும்.

தான் :  தானேயாக.
வந்து :  தோன்றிய
அரு :   அரிய
இ:  விகுதி.

தானே வந்து மக்களிடம் தோன்றிய அரிய முனிவர்
தான்வந்தர முனிவர்

அரு> அரி என்பதற்குப் பதில் தான்+வந்து + இரி என்பதே சொல்லின் வடிவமாகவும் இருத்தல் கூடும்.  இரு என்ற வினை இரி  என்று கேரள நாட்டில் வழங்கும்.அவ்வாறாயின்  அரிய முனிவரென்பதற்குப் பதிலாக வந்து இருந்த முனிவர் என்று பொருள்கொள்ளுதல் வேண்டும்.  இதில் சிறப்பில்லை. அரிய முனிவர் என்பதே அவர்க்குப் பெருமை சேர்ப்பது. செயற்கு அரிய செய்த அருமுனி அவரென்பதனால் என்று கொள்க.  மேலும் இஃது அவர்க்கு வழங்கிய சிறப்புப் பெயர்.  அவர்தம் இயற்பெயர் எமக்குக் கிட்டவில்லை,  செயற்கரிய செய்த பெரியவரே இவர்.

நோய் தீர்க்கத் தைலம் தந்த இம்முனிவரைப் பாராட்டுவோமாக.

இவர்பற்றிய அரிய செய்திகள் உங்கட்குக் கிட்டுமாயின்  அல்லது  நீங்கள் அறிந்திருப்பின் இங்குப் பின்னூட்டமிட்டுப் பகிர்ந்து கொள்ள வருக.

வியாழன், 21 பிப்ரவரி, 2019

எதைத்தான்

எதைத்தான் பாடுவதோ என்றெண்ணும் போது,
விதைத்தாள் பக்க த் தில்
இருந்தென்றன் அம்மை,
அதைத்தான் கொண்டேனென்(று)
அண்முகின்ற காலை,
சிதைத்தால்    அலைபேசி
செய்வதுவும் தகுமோ?

பல ஆண்டுகளாக கைப்பேசிகளைப் பயன்படுத்தி வந்துள்ளேன், ஆனால் பல கோளாறுகளாலும் சிறந்தமைவுகளாலும் இவற்றையும் இவற்றிலும் அடிக்கடி மாற்றங்கள் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டு விடுகிறது. இன்றுகாலை ஒரு சோனி தொலைபேசியிலிருந்து ஒரு பாடல் புனைய முனைந்தேன். ஆனால் இக்கைப்பேசியில் தமிழ் எழுத்துப்பெயர்ப்பு சரியாக வரவில்லை;  இருந்தேன் என்பது இருன் -தேன் என்று வந்தது.  நகர எழுத்துவரவில்லை.  அதற்கான ஓட்டுமெல்லி ( டிரைவர் )  இல்லை என்று அறிந்துகொண்டேன். அப்புறம் கைப்பேசியையும் விண்டோஸ் என்னும் இயக்கமைப்பையும்  இணைத்து அந்தச் சிறு கவிதையை எழுதி முடித்தேன். ஒரு விதையைப் பற்றி எழுதப்போய் அது இயலாமல் கைப்பேசி கொடுத்த எழுத்துத் தொல்லையைப் பற்றியே என் கவிதை அமைந்துவிட்டது.  சில வரிகள் தாம். படித்து மகிழுங்கள்.

சிறந்தமைவுகள் - இம்புரூவ்மென்ட்ஸ் என்னும் மேம்படுத்துதல்கள்.
கைப்பேசி =  அலைபேசி.

இயக்கமைப்பு: "விண்டோஸ்" போன்றவை. மென்பொருள் இயக்கமைப்பு.

பாகிகள் : ( பேரகிராஃப் ) சரியாக வரவில்லை. இதைச்சரியாக அமைக்க முடியவில்லை. வேறொரு கணினியிலிருந்து பின்னொரு நாள் செய்யலாம் என்றெண்ணுகிறேன்.

கவிதையின் ஒரு வரிக்கு ( அடிக்கு ) ஒரு  புள்ளி  ( , ) இடப்பெற்றுள்ளது.

நன்றி.


புதன், 20 பிப்ரவரி, 2019

வேவு வேசி தாசி தாசன்

ஒற்றர்களை அனுப்பி அவர்கள் மறைவாக இருந்து நடப்பவைகளை அறிந்துவருவது அரசின் செயல்களில் ஒன்றாகும்,  சில வேளைகளில் இவ் வொற்றர்கள் மாறுவேடத்தில் செல்வர்.

இவ்வேடத்திற்கு அவர்கள்  ஆடை அணிகலன் முகமாவு முதலியவற்றால் தங்களை வேய்ந்துகொள்ளவேண்டும்.  வேய்தல் என்றால் மேல் அணிந்துகொள்ளுதல்.

அவன் பெண்ணுடைகளை வேய்ந்துகொண்டான்.
ஒரு சேவகனின் உடையை வேய்ந்துகொண்டான்

என்றெல்லாம் கூறலாம்.

இந்த வேய் என்ற சொல் தொழிற்பெயராகும் போது வேய்வு ஆகிறது.  வேய்வு என்பதில் யகர ஒற்று கெடும்போது அச்சொல் வேவு என்று திரிந்துவிடும்.

இதிலிருந்து வேவு பார்த்தல் என்ற சொல்வழக்கு ஏற்பட்டது.


யகர ஒற்று இல்லாமற் போன சொற்கள் பல.

எனக்குப் பிடித்த ஒரு திரிபு: வேய்வு >  வேவு போன்றது இது.

வாய் > வாய்த்தி:> வாத்தி >  வாத்தியார். ( பணிவு அல்லது மரியாதைப் பன்மை).

உபா த்ியாயர் என்பது வேறு சொல்.

பண்டைக் காலத்தில் எல்லாம் வாய்ப்பாடமாகத் தான் கற்றனர்.  வாய்ப்பாடம் சொல்லிக் கொடுத்தவர் வாய்த்தியார் > வாத்தியார்.

உய்த்துணர்தல் குறிக்கும் உய்த்தி என்ற சொல்லும் உத்தி ஆனது அறிக.

உத்தி என்பது பின் யுக்தி ஆனது மெருகு.

கண்ணுக்கு இனிய ஆடைகளையும் செம்பஞ்சுக் குழம்பு போலும் அழகுபடுத்தும் துணைப்பொருள்களையும் ேய் ந் து கொண்ட வள் வேய் > வேயி ஆனாள்.  யிகரம் சிகரம் ஆகுமாதலால் இது பின் வேசி என்று திரிந்தது மட்டுமின்றி, பொருளும் பொல்லாமை பூண்டு விலைமகள் என்று உணரப்படலாயிற்று.

தன்னுடல் தந்தவள் தா > தாசி எனப்பட்டாள்.   சி என்பது ஒரு விகுதி.   தாச்சி என்று வல்லெழுத்து மிகாமல் தாசி என்றே மென்மை பெற்றுச் சொல் அமைந்தது. அன்றியும் இடைக்குறை என்று விளக்கினும் ஏற்றற்குரித்தே.
உடலுழைப்புக்குத் தன்னைத் தருவோன் தாசன் எனப்பட்டான்.  இவை தா என்ற சொல்லினின்றும் அமைந்தவை.  சில மேலை வரலாற்றாசிரியர் இதன் அமைப்பு அறியமுடியவில்லை என்றனர். அது தமிழ் வினைச்சொல்லான தா என்பது அறியாமையே  ஆகும். அயற்றிரிபு தாஸ்யு என்பதாகும்.

தாசி என்பது பண்டை நாட்களில் வேலைக்காரிகளைக் குறித்திருக்கக்கூடும்.  வேலைக்காரிகள் ஆண்டைகளால் பயன்படுத்திக் கொள்ளப்பட்டமையால் அவர்கள் பின் விலைமாதர் நிலைக்குத் தள்ளப்பட்டிருத்தல் கூடுமென்பதை ஊகிக்கக் கடினமொன்றுமில்லை என்பதறிக.


திருத்தம் வேண்டின் பின். Some new errors not in original noted. Will correct..

வெள்ளி, 15 பிப்ரவரி, 2019

தந்தது சந்ததி.

சந்ததிகள் என்போர் யாரென்று ஒரு கேள்வியைக் கேட்டுக்கொள்ளுங்கள்.

தமக்குத் தாமே தந்துகொண்ட பின்னோரே சந்ததிகள் ஆவர்.

தம் >  சம்.
தந்த > சந்த
தி  என்பது விகுதி.

சந்ததிகள் என்பவர்கள் தாம் தமக்குத் தந்தவர்களே.

இப்போது சொல்லை அமைப்போம்.

தம்மின் திரிபாகிய சம் என்பதை எடுத்துக்கொள்வோம்.  ( சம் ).

தந்த என்பதில் இறுதி  ~த வை எடுத்துக்கொள்ளுவோம். (  ~ த  ).

இனி,  தி விகுதி சேர்க்கவும்.

சம் + த + தி =  சந்ததி  ஆயிற்று.

தந்த என்பதில் ஏன்   தந்  என்பதை விட்டுவிட்டோம்.  அதை விடாவிட்டால்


தம்தந்ததி   >  சம்சந்ததி  என்று வரும்.  அது சரியில்லை.

தம்சந்ததி  என்றாலும் ஒரு சொல்லாகாமல் வாக்கியமாகவே உள்ளது.  தம் என்பதை வைத்துக்கொண்டால் பிறர்சந்ததி என்பதற்கு  ஒலித்தடை மனத்தடை எல்லாம் ஏற்படுகின்றன.  ஆகவே தம் தந்  என்பவற்றில்   ( தம் தம் இரட்டிப்பு ) ஒரு தம் வைத்துக்கொள்வதே ஒலிச்சிறப்பு ஆகும்.

தகரம் சகரமாகும் என்பதை முன் இடுகைகளில் கண்டிருக்கிறீர்கள்.  மறத்தலாகாது.  வச்சுக்கோ என்பதில் வைத்துக்கொள் என்பதன் தகரச்  சகரத்  திரிபுகளை   அறிந்துகொள்வீர்.  இன்னொரு சொல்:

சனி < தனி.  ( தனி ஆற்றலுள்ள "கிரகம்"  ).

The equivalent English word is usually defined as:  a person considered as descended from some ancestor or race. But the great learned persons who coined the term சந்ததி  ( santhathi) have cleverly avoided starting to think of a descendant as someone issuing from a remote ancestor. Their short answer was: if  I or you did not participate neither I nor you will have any descendant.  They had coined the word from that premise. I am amazed at their wit of discovery of a suitable conceptual commencement. If you do not include yourself in finding out how many are missing from your group in an expedition,  your answer turns out to be wrong.

மகிழ்க.

பிழை புகின் இனித் திருத்தம்.
Reviewed and some errors rectified: 17.2.2019


காசுமீரில் வெடிவைத்த தீவிர வாதிகள்.

மகன்மாரை  இழந்துவிட்ட தாய்மார் கூட்டம்
காண்பேனோ எனக்கலங்கும்  தந்தைக்  கூட்டம்
இகத்திளவல் இல்லையெனும் அக்காள் கூட்டம்
என்று காண்பேன் என்றொழியும் நண்பர் கூட்டம்
நகத்திலினிச்  செம்மையிடா நங்கைக்  கூட்டம்
நாடெங்கும் உய்த்ததலால் கூடும் நன்மை
முகத்துணித்தீ விரவாதி வெடித்த குண்டால்
மூள்வதுவும் உளதாமோ முயன்று சொல்வீர

ஒழிகதீ  விரவாதி உலகின்  மீ தே
ஒரு நான்கு பதின்மரையே உயிர் குடித்தார்
பழி முதிர் முறைகளினால் பெறுமோர் நன்மை
பண்பன்பாம் என்பவற்றால் பெறுதல் இன்றேல்
குழிபுகும் சாவினிலே ஒழிதல் நன்றே
குளிர்காசு  மீரமதில் கொலைகள் செய்தார்
வழிபுகும் மறவர்தமை வலைவி ரித்து
வதைப்புறுத்து வதனால்வெல் வாய்ப்பும் உண்டோ?.

பொருள்:

இகத்து :   இவ்வுலகில்
இளவல் :  தம்பி
செம்மை :  நகச்சாயம்
உய்த்தது அலால் :  ஏற்படுத்தியதன்றி
முகத்துணி :  மறைந்து செல்வோர் குறிக்கிறது
மூள்வது : உண்டாவது

நான் கு பதின்மர் :  நாற்பது பேர்
பழிமுதிர் : பழி கூடின
வழி புகும் :  தம் இருப்பிடம் போம் வழி செல்லும்
வலை விரித்து:   அகப்படுத்தி அல்லது மறைவாகத் தடுத்து

மறுபார்வை இட்ட தேதி : 19.2.2019 

     

வியாழன், 14 பிப்ரவரி, 2019

எண்ணுதலும் தொடர்புடைய திரிபுகளும்.

ஓர் இடுகை வரைந்துகொண்டிருக்கையில் இரு உதடுகள் என்று எழுத நேர்ந்தது.  இதை உண்மையில் ஈர் உதடுகள் அல்லது ஈருதடுகள் என்றுதான் பதியவேண்டும்.  வாக்கியத்தில் சில இடங்களில் ஈர் ஆடு என்று எழுதினால் இலக்கணப்படி சரியானதாக இருந்தாலும் மனநிறைவாக இருப்பதில்லை. இரு ஆடு என்றே எழுதி முடித்தேம்.

ஆனால் ஒரு உதடு என்று எழுதுவதில்லை.   ஓர் உதடு என்றே எழுத வேண்டும் என்பதெம் கொள்கை.

ஆருயிர் என்ற தொடரைக் கவனிப்போம்.

இது:

அ ருமை + உயிர் =  அரு+ உயிர் =   ஆர் + உயிர் =   ஆருயிர் 

ஆகும்.

அரு என்ற அடிச்சொல் ஆர் என்று உயிர் வரத் திரியுமெனினும்   அவ்வாறு உயிர் அல்லதது வரினும் திரியுமென்பது காண்க.

ஆர்  + தல் = ஆர்தல்.

அரு என்பது தனித்தே ஆர் என்று திரிந்து இன்னொரு சொல்லான பின் தல் என்னும் தொழிற்பெயர் விகுதி வருதல் மேவியதால் இதன் இலக்கணம் வேறுபடுகிறது.

ஒரு என்பதிலிருந்து ஓர் என்பதும் அவ்வாறே திரிந்தது.  ஒரு மனிதன் ஒன்றையே நினைத்துக்கொண்டே அல்லது சிந்தித்துக்கொண்டே இருந்தால்  அது ஓர்தல் ஆகும். இதன் அடிப்படைக் கருந்து ஒன்றையே எண்ணுதல் ஆதலின்  ஒன்று என்பதன் அடிப்படையில் ஓர்தல் ( எண்ணுதல்) என்ற சொல் அமைந்துள்ளது.

ஒரு மனிதன் எண்ணுவதெல்லாம் வெளியிற் சிந்துவதில்லை.  தேவையானதையும் அல்லது அறிவுக்குப் பொருந்தியதை மட்டுமே வெளிக்கொணர்கிறான்.  அவனுடைய எண்ணத் தொகுதியில் இருந்து ஒன்றிரண்டே வெளிவருகின்றது.  அறிவுக்கும் பொருந்தாதன எண்ணினும் யாவும் வெளிப்படுவதில்லை.  சில மறதியின் வாய்ப்பட்டு வெளிவருமுன் அழிந்துவிடுகின்றன.  அவற்றை அவனேகூட மீட்டெடுக்க முடிவதில்லை.
சில வெளி  வருகின்றன.  சிந்துவது வேறு.   கொட்டுவது வேறு.  பொருத்தமானது சிறிது வரின் அது  சிந்து > சிந்தி > சிந்திப்பது ஆகும்.

சில் > சில.  இதில் அகரம் பன்மைப் பொருளது.
சிலது  சிலதுகள் என்பன ஒருமை பன்மை தவறாகக் கலந்த பிழைச் சொற்கள்
.

சில் என்ற அடியினின்றே சிறுமை குறிக்கும் சொற்களும் தோன்றின.

சில்> சிறு.

சில் என்பது சின் என்றும் திரியும்.  ஒ.நோ:  திறல் > திறன்.  லகரனகரப் போலி.

சின் > சின்னவன்,  சின்னப்பையன்.
சின் >  சின்னம் ( ஒன்றைப்போல் சிறிதாகக் காட்டப்பட்ட அல்லது வரையப் பட்ட உருவமுடையது ).
இது பின் பெரிதாய் அமைந்த போலுருவுக்கும் பொருள்விரிந்தது.

சில் என்பதில் சிற்றுருவக் கருத்தும் எண்ணிக்கையிற் குறைவுக் கருத்தும் அடங்கியுள்ளமை புலப்படும்.

எனவே சிந்தித்தல் என்பது:  1. கொஞ்சம் கொஞ்சமாக எண்ணுதல். 2.  சில கருத்துகளை வெளியிடுதல்.  3  விரிவாகவன்றி  எண்ணுதல்.

இப்பொருள் மறைந்து,  பொதுவாக எண்ணுதலை இப்போது சிந்தித்தல் என்பது குறித்தது.

சின்+ தி =  சிந்தி.
சின் + து = சிந்து  ( சிறிதான கவி அல்லது இசை.  அளவடி அல்லாதது.)
சிந்து நதி :  அகலம் குறைவான நதி.  சிந்து என்பது ஒரு சிறுவகை நூல் குறித்ததென்பதும் அந்நூல் அங்கு விற்பனை செய்யப்பட்டது என்றும் அதனால் ஆறு அப்பெயர் பெற்றது என்றும் வரலாற்றாசிரியர் சீனிவாச ஐயங்கார் கூறுவார்.
சிந்தன்:  சராசரி உயரத்துக்குக் குறைவான மனிதன்.

எண்ணுதல்: ஒன்றன்பின் ஒன்றாக மனத்துள் உருவாகுதல்.
சிந்தித்தல் :  சிறிது சிறிதாக எண்ணுதல்.  அவ்வாறு வெளிப்பட்டவை சிந்தனை.
ஓர்தல் : ஒன்றையே எண்ணுதல்.

ஓர்மை:  நினைவு என்று மலையாளத்திலும் பொருள்தரும்.

நினைவு: முன் நிகழ்வை இப்போது எண்ணுதல்.      பொதுவாக எண்ணி அதை மனத்துள் வைத்திருத்தல்.

பிழைபுகின் திருத்தம் பின்

எமது வலைப்பூ - Google Plus

இப்போது  கூகிள் ப்ளஸ் என்பது நமது வலைப் பூவுடன் இணைத்து வைக்கப்படவில்லை.  ஆதலால் நீங்கள் நல்லபடி தேடித்தான் இவ் வலைப்பூவைக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கும். எமது வலைப்பூ அடையாளம்:

Blogger Sivamala:
blogID=7941642520803533372  என்பதாகும்.

குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.


புதன், 13 பிப்ரவரி, 2019

பாட்டிகள் கையிலும் அலைபேசி



கவிதை  படம்

பாட்டிகள் கையிலும் அலைபேசி
பரமன் அளித்ததோர் நல்லாசி
கணினிக்  கலைதனை  நீ நேசி
காண்பவை நல்லவை நீ வாசி .

உருளை என்ற சொல்லில் சிந்தனை.

உருளை என்பதைச் சுருக்கமாக:

உருள்+ ஐ =  உருளை என்று அமைத்துச் சொல்லலாம்.

உருளை என்ற சொல்லை அமைத்து முதல்முதலாக வழங்கிய தமிழன் புலவனா அல்லது சிற்றூரானா என்று யாரும் அறிந்தவரில்லை.

எம் ஆய்வில்  :

சக்கரத்தை அமைத்தபின் அதை:

உருள்வளை என்று பெயரிட்டுப் பின் அது:

உருளை என்று குறைந்திருக்கலாம்.

அப்படியானால் இலக்கணப்படி அது:

இடைக்குறை எனப்படும்.

உருளும் வளையம்

உருள்வளை   >  உரு(ள்வ)ளை  >  உருளை.

இரண்டு எழுத்துக்கள் மறைந்தன.

மக்கள் விரைவாகப் பேசவேண்டி நேர்ந்தால் சொற்கள் பல்வேறு சுருக்கங்களை அடைந்துவிடும்.

சறுக்கு அரு அம்:  சறுக்கி அருகில் செல்லும் உதவிப்பொருள்.

சறுக்கரம் >  ச(று)க்கரம் >  சக்கரம்.

சறுக்குவதற்கு அமைந்த அரைவளையம் பின் முழு வளையம் ஆனபோது அதுவும் சக்கரம் என்றே சொல்லப்பட்டது.   மரப்பட்டை சீரை என்று சொல்லப்பட்டு,  அதன்பின் வந்த சீலையும் அதிலிருந்தே திரிந்து பெயர் பெற்றது அறிக.

சீரை > சீலை > சேலை.

சீரை > சாரி  (   அயல் திரிபு).

சீரை = பட்டை.

மரப்பட்டையைக் கோத்து இடுப்பில் அணிந்துகொண்ட காலத்தில் வழங்கியது
எம் தமிழ். இன்று நேற்றல்ல.

பொருளால் தாழ்ந்துவிட்ட சொற்கள்.

ஆள் என்பது முதற்கண் ஆட்சி குறித்த சொல்லன்பது கூறபட்டது. இச்சொல் இன்றும் இப்பொருளில் நன்றாகவே வழங்குகிறது.  இது வினைப் பகுதியாகவே நிற்கின்றது.

அருள் என்ற சொல்லும்  தெய்வக்கொடையைக் குறித்த சொல் என்பது நல்லபடியாகத் தெரிகிறது
இதுபோன்று வினைப்பகுதி உருவில் நின்று பணிவன்புடன் விழைதலைக் குறித்தது.  இதனைக் கருத்தில் கொள்ளுங்கள்:

வந்தருள் என்று உரைப்பாய் -  என் பாங்கி
வந்தருள் என்று உரைப்பாய்.

தெய்வ நிலையில் உள்ளோரை வந்தருள் என்பதுபோலவே  ஆட்சி நிலையில் உள்ள ஒரு மானிடப் பிறவியை " வந்தாள்.  வந்தாள்" என்று கூறினர்.  இவற்றில் உள்ள வழக்கொற்றுமை கண்டுகொள்க.   இன்றுகாறும் இது பெண்பாலாருக்கே உரித்தாய் வழங்கி வருதலால் தொடக்கத்திலும் வந்தாள் என்பது பெண்பாலாருக்கே வழங்கிற்று என்பது உணரத்தக்கது.

ஆள் என்ற ஆட்சிச் சொல் பெண்பாலார் இவ்வழக்குத் தொடங்கிய காலத்து ஆட்சிநிலையில் இருந்தமையைக் குறிப்பதறிக.  நம் குமுகம் ஒரு மாதராட்சி போற்றிய குமுகமாகும். இது ஆங்கிலத்தில் மாந்தவியலில் matrilineal society எனப்படும்.  மாந்தவியல்:  anthropology.

வந்தாள் சென்றாள் கண்டாள் என்பவை உயர் ஆட்சி நிலை குறித்து நிற்க, அந்நிலை எவ்வாறு இழிபுற்றது  என்பது ஆய்வுக்குரியது ஆகும்.  இப்படி உயர்நிலையில் இருந்து இழிபு கண்ட சொற்கள் பல.

நாற்றம்:  பண்டைப் பொருள்:  மணம்.  இற்றைப் பொருள்: தீய வீச்சம்.

தேவரடியாள்:  பண்டைப்பொருள்:  தெய்வத்தொண்டு செய்யும் பெண். இற்றைப் பொருள்:  விலைமாதர்.

வந்தாள் சென்றாள் முதலிய சொல்வடிவங்கள் இவ்வாறே  ஆட்சிநிலை குறிக்காமல் தம் பொருளிழந்தன.  ஒரு மதிப்புக்குரிய மாதை (  அரசகுமாரி என்று வைத்துக்கொள்ளுங்கள் ) வந்தாள் என்று குறிப்பிட்டால் பணிவுக்குறைவு,  (மரியாதைத் தேய்வு)  என்று உணரப்படுகிறது.    அதனால் இவ்வழக்கும் ஒரு பொருளிழிபே  ஆகுமென்பதை உணர்க.  இதை ஈடுகட்ட வந்தார் சென்றார் என்று எழுதவும் சொல்லவும் வேண்டிய நிலை உருவாகிவிட்டது. ஆர் என்பதோ உயர்வு குறிக்கும் சொல்.  அதுவும் பின் ஒரு விகுதியாயிற்று.

ஆர் என்ற அடிச்சொல்லின் பொருள் இன்று உயர்வையே குறித்ததுடன்,  ஆரியன் என்ற தமிழ்ச்சொல்லும் இன்றும் உயர்ந்தோன் என்றே பொருள்தரும்.  ஆரியன் என்ற தமிழ்ச்சொல் ஓர் இனப்பெயர் அன்று.  அது ஆதியில் ஒழுக்கத்தாலும் அறிவினாலும் உயர்ந்தோன் என்று பொருள்பட்டது.  பின்னரே இழிபு அடைந்து ஒரு கூட்டத்தினனைக் குறிக்க வழங்கிற்று, இதுவும் பொருளிழிபே  ஆகும்.   குமுகத்திற் பலவும் இழிபு அடைந்தபோது இப்பொருள் இழிபு விளைந்தது காண்க.

ஆர் :  வினைப்பகுதி.
ஆர்தல் -  தொழிற்பெயர்.
ஆர் + இய + அன் =  ஆரியன்.  (  அல்லது:  ஆர்+ இயன் ).    இயல்> இயன். லகரனகரப் போலி.  ஒ.நோ:  திறல் > திறன்.
பொருளாக்கம்:  உயர்வில் அல்லது உயர்வினால் இயன்றோன்.

இதை விளக்க அயல் வழக்குகள் தேவையில்லை  யாதலறிக.

மேலையர் ஆய்விலும் ஆரியன் என்பது சங்கதத்திலும் இனப்பெயர் அன்றென  சொல்லப்படுவதை இதற்கு ஆதரவான கருத்தாகவே கொள்ளவேண்டும்.

ஆள் என்பதும் விகுதியாகிற்று.
ஆர் என்பதும் விகுதியாயிற்று.

ஆதியில் ஆன் விகுதியிலும் இதுபோலவே  பொருளிழிபு நிகழ்ந்துள்ளது..  முருகன் வந்தான் என்று தெய்வத்தைக் குறிக்க வழங்கும் போது பணிவில் குறைவாக எண்ணப்படுவதில்லை ஆதலால் இதுவும் இத்தகைய வரலாற்றுக்கு உட்பட்டதே ஆகும். மனிதனைக் குறிக்கும் போது மட்டும் மரியாதைக் குறைவு என்று எண்ணப்படுகிறது.

சேரலத்தில் ( கேரளத்தில் ) வழங்கிய பேச்சில் இத்தகைய மாறுபாடுகள் நிகழாமலும் எச்சங்களே முற்றுக்களாக நிற்றலும் கண்டு ஒப்பீடு செய்துகொள்க.

வந்தாள் -   மலையாளம்:  வந்நு   ( = வந்து :  எச்சவினை)
வந்தார் -  மலையாளம் :   வந்நு  (  = மேற்படி)
வந்தான் - மலையாளம்:  வந்நு  ( = மேற்படி ).

வந்தான்,  வந்தாள் :   முற்றுவினைகள்.
வந்து ( தமிழ்) :  எச்சவினை.
வந்நு ( மலையாளம் ) - முற்றும் எச்சமும் ஆகும்.

வந்து நிற்பவள் ஆணா பெண்ணா என்று கண்ணுக்குத் தெரியும்போது அதற்கு ஒரு விகுதி எதற்கு என்று இத்தகைய விகுதிகள் வழங்காத மொழியினர் கேட்பர்.  மொழி கடுமையாகிவிட்டது.  சீனம் முதலிய மொழிகளில் இல்லை.

சுசீலா பாடினார். (தமிழ்)
சுசீலா பாடி ( மலையா.)

சுசீலா பெண் என்பது தெரிய விகுதி எதற்கு? பெயரிலும் காட்சியிலும் கண்கூடு அன்றோ?

டிய டாத்தாங்க,   இய டாத்தாங்   ( மலாய்).   விகுதிகள் இல்லாமலே இந்தோவிலும் மலேசியாவிலும் சக்கைபோடு போடுகிறார்கள்.  தகலோக் மொழியைக் கூர்ந்து கவனித்துப் பின்னூட்டமிடுங்கள். 

ஆகவே மொழியை வேண்டுமென்றே யாரும் கடினப்படுத்துவதில்லை. இவை வரலாற்றுச் செலவில் ஏற்பட்டவை ஆகும்.

தமிழ்போல சங்கதமும் கடினமொழியே.  பிற்காலத்து இந்தோ ஆரிய மொழிகளை ஒப்பிடுக.

எச்சவினையே முற்றுவினையாகவும் நிற்றல் ஒப்பத்தக்கதே ஆயினும் இவ்விகுதிகள் தேவையில்லாமல் மொழியில் புகுந்தன என்று கொள்ளல் அறிவுடைமையாகது.  பெண்ணாட்சி இருந்து பின் அது பிறழ்வு அடைந்ததே காரணம் என்பது உணர்க.

சிந்தித்து மகிழ்க!

பிழைபுகின் திருத்தம் பெறும்.
எமது இலத்தீன் ஆசிரியர்  அமரர் REV BRO VALAERIAN அவர்களுக்குத் தாழ்ந்து பண்வினைத் தெரிவித்துக்கொள்கிறேம்.




ஞாயிறு, 10 பிப்ரவரி, 2019

விசுவாசம்

விசுவாசம் என்பதனை இப்போது யாங்ஙனம் அமைந்த சொல்லென்று உணர்ந் தின்புறுவோம்.

விசு என்பது விரிவு குறிக்கும் ஒரு திரிமூலம் ஆகும்.

விர் > விய் > விய்+ உ + வியு  >  விசு.

விர் என்ற அடியினின்று இத் திரிபுகள் உருப்பெறும் என்பதைப் பழைய இடுகைகளினின்று ஈண்டு அறிதல் கூடும்.

பண்டை மனிதன் மரம் என்பது பெரிதும் உணர்ச்சியற்ற ஒன்று என நினைத்தான். அது ஈரமுள்ள மரமானாலும் காய்ந்துவிட்ட மரமானாலும் அவன் வேறுபடுத்தி அறிய அவனுக்கு காலம் பிடித்தது. உணர்ச்சியும் உயிரும் அற்றது மரம் என்ற கருத்திலிருந்து அவனது மூலங்கள் எப்படித் திரிந்தன என்பதை இங்கு நோக்கி அறிக:

மர் > மரம்
மர் >  மய் > மாய் >  மாய்தல்
மர் > மரி > மரித்தல்.

பாகத மொழிகளில் :

மர் > மார் > மாரோ.
(  இறப்பு )

மர் > மரணம்;  அதாவது:  மரி + அணம் = மரணம்.

மாள் > மார் அல்லது  மார் > மாள்.  ளகர ரகரப் போலி.

மனமே இல்லாதான் மரம் போன்றவன்; குறிப்பறிய மாட்டாதவன் நன்மரம்; அவன் தொட்டும் அவள் அவள் மரக்கட்டைபோல் கிடந்தாள் என்ற வரணனைகளிலிருந்து மர் என்ற அடிச்சொல்லின் திறமுணர்தல் கூடும்.
ஒன்றறிவதாவது உற்றறிவதுதான் என்று தொல்காப்பியனார் வகுத்துள்ளதால் மரத்திற்கு அது வெட்டிக் காயுமுன் உணர்வுள்ளதாம் என்பதை அறியலாம்.  வெட்டியவுடன் நீர் வடிந்து காய்கிறது:  காய் >  காயம்.
சகதீச சந்திரபோஸ் முதலியவர்கள் மரங்கட்கும் உயிரும் உணர்வும் உள்ளமையை உணர்த்தியுள்ளனர்.

இங்கு கண்டவற்றுள் யாம் உங்கட்குத் தெரிவிக்க விழைந்தது:  விர்> விய் என்பதுபோன்றதே  மர் > மய் என்ற திரிபுமாகும்.

மேற்குறித்தபடி விய் உ என்பது, முன் விரிதல் என்பது  ஆம்.  உ என்பது முன்.

ஆக விசு என்பது விரிவு  அல்லது  முன்விரிவு என்பது ஆகும்.

இனி வாசம் என்பது இருத்தல் என்பது நீங்கள் அறிந்ததே. இங்கு அதற்கு மணம் அல்லது நறுமணம் என்பது பொருளனறு.

விசுவாசமின்மை ஒரு குறுக்கம்.  விசுவாசம் என்பது ஒரு விரிவு.  தன்மேல் ஒருவன் பற்றுள்ளோன்.   பிறன்மேலும் பற்றுள்ளோன் ஆவதே விசுவாசம் என்பதைச் சுருக்கமாக அறியலாம். நடபடிக்கைளில் எதிர்பார்ப்புக்கு மாறாமை போற்றுதலே விசுவாசம் ஆம்.  தொடர்பறாமை கடைப்பிடித்தல் என்பதும் அதுவாம்.  இதனைப் பற்றன்பு என்று முன் ஓரிடுகையில் குறித்தேம்.  பற்று என்பதும் ஓரிடத்தது  இன்னோர் இடத்துச் சென்று பிடிகொள்ளுதல் ஆகும்.  விசுவாசம் என்பதும் அதுவேயாம் என்பதை ஒப்பிட்டு அறிந்துகொள்க.  வாசம் என்பது முன் விளக்கப்பட்டுள்ளதாக நினைவுள்ளது. இலதாயின் பின் விளக்கம் பெறும்.

பிழைபுகின் பின் திருத்தம்பெறும்.