வியாழன், 21 பிப்ரவரி, 2019

எதைத்தான்

எதைத்தான் பாடுவதோ என்றெண்ணும் போது,
விதைத்தாள் பக்க த் தில்
இருந்தென்றன் அம்மை,
அதைத்தான் கொண்டேனென்(று)
அண்முகின்ற காலை,
சிதைத்தால்    அலைபேசி
செய்வதுவும் தகுமோ?

பல ஆண்டுகளாக கைப்பேசிகளைப் பயன்படுத்தி வந்துள்ளேன், ஆனால் பல கோளாறுகளாலும் சிறந்தமைவுகளாலும் இவற்றையும் இவற்றிலும் அடிக்கடி மாற்றங்கள் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டு விடுகிறது. இன்றுகாலை ஒரு சோனி தொலைபேசியிலிருந்து ஒரு பாடல் புனைய முனைந்தேன். ஆனால் இக்கைப்பேசியில் தமிழ் எழுத்துப்பெயர்ப்பு சரியாக வரவில்லை;  இருந்தேன் என்பது இருன் -தேன் என்று வந்தது.  நகர எழுத்துவரவில்லை.  அதற்கான ஓட்டுமெல்லி ( டிரைவர் )  இல்லை என்று அறிந்துகொண்டேன். அப்புறம் கைப்பேசியையும் விண்டோஸ் என்னும் இயக்கமைப்பையும்  இணைத்து அந்தச் சிறு கவிதையை எழுதி முடித்தேன். ஒரு விதையைப் பற்றி எழுதப்போய் அது இயலாமல் கைப்பேசி கொடுத்த எழுத்துத் தொல்லையைப் பற்றியே என் கவிதை அமைந்துவிட்டது.  சில வரிகள் தாம். படித்து மகிழுங்கள்.

சிறந்தமைவுகள் - இம்புரூவ்மென்ட்ஸ் என்னும் மேம்படுத்துதல்கள்.
கைப்பேசி =  அலைபேசி.

இயக்கமைப்பு: "விண்டோஸ்" போன்றவை. மென்பொருள் இயக்கமைப்பு.

பாகிகள் : ( பேரகிராஃப் ) சரியாக வரவில்லை. இதைச்சரியாக அமைக்க முடியவில்லை. வேறொரு கணினியிலிருந்து பின்னொரு நாள் செய்யலாம் என்றெண்ணுகிறேன்.

கவிதையின் ஒரு வரிக்கு ( அடிக்கு ) ஒரு  புள்ளி  ( , ) இடப்பெற்றுள்ளது.

நன்றி.


கருத்துகள் இல்லை: