வெள்ளி, 15 பிப்ரவரி, 2019

தந்தது சந்ததி.

சந்ததிகள் என்போர் யாரென்று ஒரு கேள்வியைக் கேட்டுக்கொள்ளுங்கள்.

தமக்குத் தாமே தந்துகொண்ட பின்னோரே சந்ததிகள் ஆவர்.

தம் >  சம்.
தந்த > சந்த
தி  என்பது விகுதி.

சந்ததிகள் என்பவர்கள் தாம் தமக்குத் தந்தவர்களே.

இப்போது சொல்லை அமைப்போம்.

தம்மின் திரிபாகிய சம் என்பதை எடுத்துக்கொள்வோம்.  ( சம் ).

தந்த என்பதில் இறுதி  ~த வை எடுத்துக்கொள்ளுவோம். (  ~ த  ).

இனி,  தி விகுதி சேர்க்கவும்.

சம் + த + தி =  சந்ததி  ஆயிற்று.

தந்த என்பதில் ஏன்   தந்  என்பதை விட்டுவிட்டோம்.  அதை விடாவிட்டால்


தம்தந்ததி   >  சம்சந்ததி  என்று வரும்.  அது சரியில்லை.

தம்சந்ததி  என்றாலும் ஒரு சொல்லாகாமல் வாக்கியமாகவே உள்ளது.  தம் என்பதை வைத்துக்கொண்டால் பிறர்சந்ததி என்பதற்கு  ஒலித்தடை மனத்தடை எல்லாம் ஏற்படுகின்றன.  ஆகவே தம் தந்  என்பவற்றில்   ( தம் தம் இரட்டிப்பு ) ஒரு தம் வைத்துக்கொள்வதே ஒலிச்சிறப்பு ஆகும்.

தகரம் சகரமாகும் என்பதை முன் இடுகைகளில் கண்டிருக்கிறீர்கள்.  மறத்தலாகாது.  வச்சுக்கோ என்பதில் வைத்துக்கொள் என்பதன் தகரச்  சகரத்  திரிபுகளை   அறிந்துகொள்வீர்.  இன்னொரு சொல்:

சனி < தனி.  ( தனி ஆற்றலுள்ள "கிரகம்"  ).

The equivalent English word is usually defined as:  a person considered as descended from some ancestor or race. But the great learned persons who coined the term சந்ததி  ( santhathi) have cleverly avoided starting to think of a descendant as someone issuing from a remote ancestor. Their short answer was: if  I or you did not participate neither I nor you will have any descendant.  They had coined the word from that premise. I am amazed at their wit of discovery of a suitable conceptual commencement. If you do not include yourself in finding out how many are missing from your group in an expedition,  your answer turns out to be wrong.

மகிழ்க.

பிழை புகின் இனித் திருத்தம்.
Reviewed and some errors rectified: 17.2.2019


கருத்துகள் இல்லை: