புதன், 13 பிப்ரவரி, 2019

உருளை என்ற சொல்லில் சிந்தனை.

உருளை என்பதைச் சுருக்கமாக:

உருள்+ ஐ =  உருளை என்று அமைத்துச் சொல்லலாம்.

உருளை என்ற சொல்லை அமைத்து முதல்முதலாக வழங்கிய தமிழன் புலவனா அல்லது சிற்றூரானா என்று யாரும் அறிந்தவரில்லை.

எம் ஆய்வில்  :

சக்கரத்தை அமைத்தபின் அதை:

உருள்வளை என்று பெயரிட்டுப் பின் அது:

உருளை என்று குறைந்திருக்கலாம்.

அப்படியானால் இலக்கணப்படி அது:

இடைக்குறை எனப்படும்.

உருளும் வளையம்

உருள்வளை   >  உரு(ள்வ)ளை  >  உருளை.

இரண்டு எழுத்துக்கள் மறைந்தன.

மக்கள் விரைவாகப் பேசவேண்டி நேர்ந்தால் சொற்கள் பல்வேறு சுருக்கங்களை அடைந்துவிடும்.

சறுக்கு அரு அம்:  சறுக்கி அருகில் செல்லும் உதவிப்பொருள்.

சறுக்கரம் >  ச(று)க்கரம் >  சக்கரம்.

சறுக்குவதற்கு அமைந்த அரைவளையம் பின் முழு வளையம் ஆனபோது அதுவும் சக்கரம் என்றே சொல்லப்பட்டது.   மரப்பட்டை சீரை என்று சொல்லப்பட்டு,  அதன்பின் வந்த சீலையும் அதிலிருந்தே திரிந்து பெயர் பெற்றது அறிக.

சீரை > சீலை > சேலை.

சீரை > சாரி  (   அயல் திரிபு).

சீரை = பட்டை.

மரப்பட்டையைக் கோத்து இடுப்பில் அணிந்துகொண்ட காலத்தில் வழங்கியது
எம் தமிழ். இன்று நேற்றல்ல.

கருத்துகள் இல்லை: