புதன், 6 பிப்ரவரி, 2019

சுவையான தகவல்கள். சிங்கப்பூரில் முதல் தமிழ்ப் பள்ளி. இன்னும் பல

சிங்கப்பூரில் முதல் தமிழ்ப் பள்ளி:

1834ம்  ஆண்டு சிங்கப்பூரில் முதன்முதலாகத் தமிழ் வகுப்பு  சிங்கப்பூர் ஃபிரீ ஸ்கூல் எனப்பட்ட  சிங்கை இலவசப் பள்ளியில் துவங்கப்பட்டதென்று கூறுவர்.  இதை ஆராய்ந்து கண்டுபிடித்த தமிழன்பர் யாரென்று தெரியாவிட்டாலும் அவர்க்கு நாம் நன்றி சொல்வோம்.


பாரதியார் பலகலைக் கழகப் பேராசிரியர் பதவி -  ரூ. 30  இலக்கம்.

இப்படிக் காசு கைமாறியதாக ஒரு புகார் உள்ளது.  ஆனால் காவல்துறை விசாரணையில்  இது தொங்கிக்கொண்டு இருப்பதாக பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் இராமதாசு தெரிவித்திருந்தார்.  மற்ற விவரங்கள் தெரியவில்லை.
30 இலக்கம் (  லட்சம் ) தானே!.  பேசாமல் கொடுத்துவிட்டு  அப்  பதவியில் அமர்ந்துவிடலாம் என்று மற்றவர்களிடையிலும் பேச்சு அடிபடுகிறதாம்.

உயரமான கொடிக்கம்பம்:

இந்தியாவிலே மிக்க உயரமான கொடிக்கம்பம்  தி.மு.க வுக்குத் தான் உள்ளதாம். இதன் உயரம் 144 அடியாகும்.   இது அண்ணா அறிவாலயம் என்ற தலைமை நிலையத்தில் உள்ளது.  கொடியை மேலே ஏற்றுவதற்கு ஒரு  மின்பொறி  உள்ளது.  கொடிக்கம்பம் நாட்டிய தேதி:  16.12.2018.

கருத்துகள் இல்லை: