புதன், 11 பிப்ரவரி, 2015

NAratha in Ural mountains!!!


1927 வாக்கில், ஒரு மண்ணியல் ஆய்வறிஞர் குழு, ஊரல் மலைத்தொடரில் உள்ள மிக்க உயர்ந்த மலையுச்சியைக் கண்டுபிடித்தனர்.  அவ்விடத்துக்கு அருகில் வாழ்ந்த மக்கள் அம்மலையை நாரதா என்று குறித்தனர். நாரதா என்ற பெயர் நமது தொன்மங்களில் (புராணங்களில்) உள்ள ஒரு கதைப்பாத்திரம், ஒரு முனிவர் என்பது நீங்கள் அறிந்ததே.  இம்முனிவர் பெயருடன் ஒலியொப்புமை உடைய ஒரு சொல்லை அவர்கள் அம்மலைக்கு அல்லது மலையுச்சிக்கு இட்டிருப்பது நாம் அறிந்து மகிழத்தக்கதே ஆகும்.  நாரத என்ற சொல், நமதாகவுமிருக்கலாம்; அல்லது நமது  சொல்லுடன் ஒத்த, வேறு பொருளுடைய பிறமொழிச் சொல்லாகவும் இருக்கலாம். இதுவா அதுவா என்று உறுதியுரை தருவது, கடின வேலைதான்.  காரணம் அம்மக்கள்  நமது தொன்மங்களை அறிந்திருக்கவில்லை. நமது நாரதரையும் அறிந்தவர்கள் அல்லர்.

நமது நாரதர் வடக்கே ஒரு மலையில் வாழ்ந்தவர் என்று நம் தொன்ம‌
அறிவில் படுவதால், அம்மலை இமயம் அன்று, ஊரல் மலைதான் என்று ஒரு கருத்தை முன்னிடுகை செய்யலாம். அது நம் வாத எல்லைக்கு உட்பட்டதாகவு மிருக்கலாம்.

இந்தியர்கள் இவ்வாறு சொல்வதை அறிந்தோ அறியாமலோ,  உருசிய‌
அரசு இதை ஆயத் தொடங்கியது. நாரத என்ற மலைப்பெயரை உண்மையில் மக்கள் என்று பொருள்படும் நாரோட்னோய் என்று மாற்றிவிட்டு அதை மக்கள் புரட்சிக் கொண்டாட்டங்களின்போது அறிவித்துவிட்டனர்.   அதாவது  நாரத = மக்கள்;   நாரோட்னோய் =  மக்கள்.    word form updated.

  நரன் என்ற தமிழ்ச்சொல், மனிதன் என்று பொருட்படும், இது நருள் என்ற மக்கள்பெருக்கம் குறிக்கும் சொல்லுடன் தொடர்புடையது,

நர் > நரு> நருள்.     
நர் > நரு > நரு+ அன் = நரன் (மனிதன்).
நர் > நரு > நார்+ அது+ அன் = நாரதன். (< நாரத).  நாரதன் என்றால் பொருள் மனிதன்; இது முனிவருக்கு இடப்பட்ட பெயர். இது ஏன் இடப்பட்டது என்ற ஆய்வு இருக்கட்டும். கேட்டால் சொல்வோம்.

(ஒப்பு நோக்குக: பரு+ அது+ அம் = பருவதம்.  பரு> பார்> பார்வதி.  வதம்> வதி.  (வதம்:  வ்+ அது+ அம்). வ்,  உடம்படு மெய்.
இப்படி நீண்டு திரியும் சொற்கள் பல.)

நாரத,   நாரட்னோய் என்பனவும், மக்கள்  என்றே பொருள்படுவதால்,
நாரத என்ற உருசிய மொழிச் சொல்லின் பொருள், தமிழில்போல, மக்கள் என்பதே.

முனிவருக்குப் பெயர்தந்த தமிழ்.
மலைக்கும் பெயர்தந்த தமிழ்.

குறிப்பு:  யூரல் /  ஊரல்  மலை,   ஊறல்  ( ஊறுதல்)  மலையாகவும் இருக்கலாம். நீர் ஊறும் மலை.  தமிழென்பது  புழக்கத்தில் உலக மொழி அன்றெனினும்  அதன் தொடக்கத்தில் உலகம்  அளாவிய மொழியே.  இல்லையென்றால், இதை யெல்லாம் சொல்ல,   சொல்லில் வசதி இருக்காது.
ரஷ்யரின் ஆய்வு முடிவும் சரியானதே.

இது  அவ்வட்டாரத்து  அல்லது  பக்கத்து  நிலப்பகுதிகளில் வழங்கும்  துருக்கிய இனமொழிகளில் ஒன்றிலிருந்து ( Turgic or Ob-urgic ) வந்திருக்கலாம் என்று எண்ணுவர்.  தன்னை ஈகை செய்துகொண்ட இளைஞன் ஒருவனின் பெயராக இருக்கலாம் என்று வேறு சிலர் எண்ணினர்.  இந்த ஆய்வாளர் தமிழை அறியாதவர்கள்.


சிறிசேனாவைக் கவிழ்க்க நினைக்கும் பக்சே

தேர்தலில் வென்றுவிட்டால் 
நாற்காலியில் அமர்ந்துவிட்டால் 
கவிழாமல் நிலைத்துவிட்டதாய் 
கணித்துவிடலாமோ ?  ஆட்சிப் பொறுப்பின் 
அவிழாத முடிச்சு ஆமோ அது?

எதிரி பூச்சிபோல் இழைந்துகொண்டிருக்கிறான் 
ஆட்சி வேரை அரி த்துவிட்டு --- தன் 
மீட்சியைக் காட்சியாக்கிவிடுவானே !

அதிபர் சிறிசேநா பற்றிய இந்தக் கட்டுரை நன்று/


https://www.colombotelegraph.com/index.php/mr-president-hang-him-or-he-will-hang-you/

அகிலம்

அகிலம் என்னும் சொல் அமைந்த விதம் காண்போம்.
இது பன்மடித் திரிபுச் சொல் ஆகும்.

உலகம் என்பது அலகம் என்று திரிவது முதல்மடி.
இதற்கு வேறு எடுத்துக்காட்டு.

அம்மா   >உம்மா   > உமா.   ( அ‍‍ > உ; உ> அ ). ஒன்று மற்றொன்றாகத் திரிய வல்லது.

சில மொழிகளில் உகரம் அகரமாகவும் திரியும், ஆங்கில உ (u) எழுத்து அ என்றும் ஒலிக்குமிடம் காண்க.

அம்மா என்பது சில மொழிகளில் உம்மா என்றும் சிலவிடத்து உமா என்றும் வழங்குவதை அறிக.  மலபாரில் உம்மா..
இதன்படி உலகம்  ( அலகம்) ஆனது.

இரண்டாம் மடித் திரிபு:

அலகம் > அகலம் என்று எழுத்து முறைமாறுதல். இந்த அகலம் வேறு; அகல் என்ற சொல்லில் இருந்து அம் விகுதி பெற்ற அகலம் என்பது  வேறு.
 வேறு உதாரணங்கள்:

விசிறி  >  சிவிறி.
மருதை> மதுரை.

அகலம் என்பது பின் அகிலம் என்று திரிந்தது.

உலகம் > அகலம் > அகிலம்;

இங்ஙனமன்றி அகலம் விரிவு என்று பொருள்படுவதே அகிலம் என்று திரிந்தது என்று கூறுவர்/

இது தமிழ்ச் சொல்லே ஆகும்.

அகிலம் என்பது சமஸ்கிருத வடிவமன்று, இதை அம்மொழி அகர வரிசையில் தேடிப்பாருங்கள். சமஸ்கிருத  "ஆகல்பம்" என்பது ஆ ​+ கல்பம் எனப் பிரிந்து  பொருள் உணர்த்தும் என்பர். 
Akalpam t the end of the world (lit. of a Kalpa,  ). 
ஆ - அந்த.






செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

தைப்பூச மேளம் தலைவலி தந்தது

வேண்டாம் என்பதை விட்டு விட்டால் என்ன?
தைப்பூச மேளம் தலைவலி தந்தது. .....................

http://theindependent.sg/blog/2015/02/08/thaipusam-incident-statement-from-mohan/


கோயில் அதிகாரிகள்
வாயில் வந்ததைச் சொல்லார்;
தெரிந்துதான் சொல்வர்;
புரிந்துகொண்டு புரிக செயல்.

உறுமி மேளம் :

http://en.wikipedia.org/wiki/Urumee

எதிர்க்கட்சித் தலைவர் ஐந்தாண்டுச் சிறைத் தண்டனை

http://www.abc.net.au/news/2015-02-10/malaysias-anwar-ibrahim-sentenced-to-five-years-jail-sodomy/6082574

எதிர்க்கட்சித் தலைவர் ஐந்தாண்டுச்  சிறைத் தண்டனை பெற்றார். அரசியல்  உள்நோக்கம் கொண்ட வழக்கு என்று  குற்றச் சாட்டு.

Click the above link to read more.

திங்கள், 9 பிப்ரவரி, 2015

Judgement excerpt in Rajapaksa's case

Per Amarasinghe J :  I am left with the definite and firm conviction that there was no violation of the petitioner's freedom of speech and expression: I cannot conclude that the petitioner was unable to explain his case fully for lack of the apprehended material when it has not been established that he spoke at all. Moreover, having regard to what was demanded and expected of him, it has not been established that the material was necessary for discharging his duties as a speaker at the Geneva meeting. The petitioner has failed to show that it was even receivable. In fact, the evidence points to the probability that the material given up by him was irrelevant to the purposes of the meeting and were not admissible and publishable at all at that meeting. The subsequent release of the material enabled the petitioner, and left him free, to publish the material, at a time and in a manner he was expected to do so, by those with whom he wished to communicate.

http://www1.umn.edu/humanrts/research/srilanka/caselaw/Arrest/Mahinda_Rajapakshe_v_Kudahetti_&_Others.htm


SUPREME COURT
BANDARANAYAKE, J.
AMERASINGHE J. AND
DHEERARATNE, J.
18 AND 19 JUNE, 1992.

You may enjoy reading this case judgement for your pleasure.

Will Rajapakse stand against PM Wikramasinghe?




நாடாளுமன்றத் தேர்தலில் இராஜபக்சேயை  தலைமை அமைச்சர் விக்ரமசிங்கேவுக்கு எதிராக நிறுத்தினால்,  விக்ரமாவைத் தோற்கடித்துவிடலா ம்  என்று  அரசியல்வாதிகள் சிலர் திட்டமிடுகின்றனர்.

என்ன நடக்கும் என்பதைக் கூறமுடியாது.

இந்தச் செய்தி:

http://www.dailymirror.lk/63149/mr-in-the-ring-against-rw

http://www.dailymirror.lk/63149/mr-in-the-ring-against-rw


ஞாயிறு, 8 பிப்ரவரி, 2015

காந்தாரத்தில் மும்முகத்துச் சிவன்

இது காந்தாரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மும்முகத்துச்  சிவன்  சிலை.  இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இப்போது எங்கிருக்கிறது என்று தெரியவில்லை. 


மலேசிய இந்தியர் போட்டாபோட்டிகள்

மலேசிய இந்தியர் காங்கிரஸ் உள்கட்சி போட்டாபோட்டிகள்

தாங்க‌ரும் துயர்பல தாங்கி நின்றே  இந்தத்
தாரணி வியந்தொன்று  கூற யாரும் புகழ்
காங்கிரஸ் இந்திய மலேசியர்கள் தமைக்
காத்திடக் கொண்டதிந்  நாட்டினில் தோற்றமே.

கூட்டினிற் குருவிகள் போட்டிகள் போட்டிடில்
ஈட்டு திறமைபல இனியவி ளைவுகள்,
ஆட்டிப்ப டகுதனை ஆழ்கடல் மூழ்காமல்
கூட்டுமவ் வெல்லையில் போட்டியும் நிற்கணும்!

http://english.astroawani.com/malaysia-news/analysis-mic-crisis-53394

சந்தம் இப்படி:


தாங்க‌ரும் துயர்பல தாங்கிநின்   றே இந்தத்
தாரணி வியந்தொன்று  கூறயா  ரும்புகழ்
காங்கிரஸ் இந்திய மலேசியர்    கள்தமைக்
காத்திடக் கொண்டதிந்  நாட்டினில் தோற்றமே.

கூட்டினிற் குருவிகள் போட்டிகள் போட்டிடில்
ஈட்டுதி  றமைபல இனியவி ளைவுகள்,
ஆட்டிப்ப   டகுதனை ஆழ்கடல் மூழ்காமல்
கூட்டுமவ் வெல்லையில் போட்டியும் நிற்கணும்!




அக்காள், அம்மாள், தங்காள்.

தொல்காப்பியத்தைப் படித்துவிட்டு, அதற்கப்புறம்  பவணந்தியின் நன்னூல் முதலிய பொன்னேடுகளையும் கரைத்துக் குடித்துவிட்டு, யானோர் இலக்கணப்புலி என்ற எண்ணக் கடலிலே நீந்திக்கொண்டிருப்போனுக்கு அக்காள், அம்மாள், தங்காள் என்ற சொல் வடிவங்களைக் காணும்போது ஒரே எரிச்சலாக வரும். ஏ தமிழா, இது தமிழா என்று கேட்டுப் பாயத் தோன்றும்.

இவற்றின் செந்தமிழ் வடிவங்கள் எவை?

அக்காள் ‍ : அக்கை.
அம்மாள் :  அம்மை.
தங்காள்  :  தங்கை.

கூப்பிடும்போது,

அக்கை |>  அக்கா!
அம்மை >   அம்மா
தங்கை  >  தங்காய்.

என்றல்லவா வரவேண்டும். இவற்றை விளிவடிவம் என்கிறோம். விளி எனில் அழைத்தல். ( நெலவிளி (  நிலைவிளி ) நிறுத்தாமல் கூப்பிட்டுக் கொண்டிருப்பது. மலையாளத்தில் இது வீட்டுப் பயன்பாட்டில் உள்ள சொல்).

அம்மை அம்மா, அக்கை அக்கா,  இந்த ஆள் இறுதி எங்கிருந்து வந்தது?

இதில் எவை எவை வேற்றுமை உருபு ஏற்கின்றன?

அக்கை >அக்கைக்கு;  ( அ(ந்த)க் கைக்கு ( கரத்துக்கு)ச்  சூடு வை என்ற வாக்கியம் கவனிக்கவும். இது அக்காவுக்கு என்றும், குறித்த கைக்கு என்றும் இருபொருளில் வரும்.)

அம்மை > அம்மைக்கு; "அம் மைக்கு விலை குறைவு. தரமும் குறைவு. இட்டால் அரிப்பு ஏற்படுகிறது". இதுவும் இருபொருளில் வரும்.

தங்கை > தங்கைக்கு;  இது தம்+ கைக்கு என்றும் பிரியும்.

அக்காளுக்கு, அம்மாளுக்கு என்பவற்றில் "காளுக்கு"  ."மாளுக்கு" என்பன பொருளற்றவை.

தங்காள் என்ற வடிவம், நல்லதங்காள் என்ற பெயரின் இறுதிப்பாதியாய் வரும். தனித்து நிற்புழிக் காண்க.

காள்,மாள் என்று வரும் கடைப்பாதிகளெல்லாம், புணர்ச்சியினால் போந்த வடிவங்கள். இவற்றிறுதி ஆள் என்பதே.

அம்மை + ஆள் = அம்மாள்.
அக்கை + ஆள் =  அக்காள்
தங்கை + ஆள் = ~தங்காள்.
உமை + ஆள் =  உமையாள்.

அம்மை என்றால் இப்போது ஒரு நோயைக் குறிக்கிறது. தாயைக் குறிக்கும் இந்த நல்ல தமிழ்ச்சொல் அந்த வடிவில் வழங்கவில்லை. மலையாளக் கரையோரம் சென்றால் இந்தச் செந்தமிழ் வடிவைச் செவிகுளிரக் கேட்டின்புறலாம். உயர்வு குறிக்க வழங்கும் போது மட்டும் அம்மையார் என்ற வடிவம் வரும். எ‍‍-டு:  இந்திரா காந்தி அம்மையார்; ஙூயன் வான் தியூ அம்மையார். மார்கரட் தாட்சர் அம்மையார்.

ஆள்  என்ற சொல்  பெண்பால் விகுதியாக, பெண் என்று காட்டும், முழுச்சொல்லாக ஆள் (ஒரு பெண் அல்லது ஆண் ), ஆளுதல் (ஆட்சி) என்றெல்லாம் பொருள்சுமந்து வருகிறது. நமது மன்பதை ஒரு காலத்தில் பெண்வழி நிறுவமாய் நின்றிருந்ததை இது தெளிவுறுத்த வல்லது,
matrilineal,  matriarchal society,







   

சனி, 7 பிப்ரவரி, 2015

Russian word for worship

போச்சிதனிய என்று உருசிய மொழியில் சொன்னால் அது இறைவனைத் தொழுதல் என்று பொருள். பூவும் நீரும் வைத்து வணங்கும் முறை   தென்னாட்டினது ஆகும்.    பூசை என்ற சொல்லும் பூ செய் என்பதினின்று விளைந்ததே ஆகும்.

உருசிய மொழியில் இது போச்சி ஆகிறது. தண்ணீர் என்பது தணிய ஆகிறது.  ஆக பூ செய் தண்ணீர் என்பது போச்சிதனிய ஆயிற்று.

இந்தோ ஐரோப்பிய மொழிகளில் பல தமிழ் மூலங்கள் உள்ளன என்பதை முன்பே ஆய்வாளர் எடுத்துக்காட்டியுள்ளனர். செமித்திய மொழிகளிலும் பல சொற்கள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.  எடுத்துக்காட்டாக தோகை என்பது இப்ரூ அல்லது எபிரேய மொழியில் இருப்பதை அறிஞர் கால்டுவெல் எடுத்துக்காட்டியுள்ளார்.  சுமேரியாவில் தமிழர் இருந்ததை மறைமலை அடிகள் ஆய்ந்து கூறியுள்ளதை நினைவு கூர்க

Russian word for worship, Tamil connection

போச்சிதனிய என்று உருசிய மொழியில் சொன்னால் அது இறைவனைத் தொழுதல் என்று பொருள்படும் . பூவும் நீரும் வைத்து வணங்கும் முறை   தென்னாட்டினது ஆகும்.    பூசை என்ற சொல்லும் பூ செய் என்பதினின்று விளைந்ததே ஆகும்.

பூ  செய்  > பூசை  > பூஜை
பூ செய்  > பூச்செய் >  போச்சி  அல்லது போசி 

தண்ணீர்  > தண்ணி >  தனிய 

உருசிய மொழியில் இது  (பூசெய் அல்லது  பூச்செய் )  போச்சி ஆகிறது. தண்ணீர் என்பது தணிய ஆகிறது.  ஆக பூ செய் தண்ணீர் என்பது போச்சிதனிய ஆயிற்று.

இந்தோ ஐரோப்பிய மொழிகளில் பல தமிழ் மூலங்கள் உள்ளன என்பதை முன்பே ஆய்வாளர் எடுத்துக்காட்டியுள்ளனர். செமித்திய மொழிகளிலும் பல சொற்கள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.  எடுத்துக்காட்டாக தோகை என்பது இப்ரூ அல்லது எபிரேய மொழியில் இருப்பதை அறிஞர் எடுத்துக்காட்டியுள்ளன‌ர். 1 சுமேரியாவில் தமிழர் இருந்ததை மறைமலை 
அடிகள் ஆய்ந்து கூறியுள்ளதை நினைவு கூர்க


1 அறிஞர்  கால்டுவெல்.

How did Vodka get its name?

ஊற்று நீர் ஓடுமிடம் ஊற்றுக்கால் எனப்படும். பேச்சுத் தமிழில் 
ஊத்துக்கா என்றும் ஊத்துக்காலு என்றும் வரும்.  றகர ஒற்று முதலியவை  தகர ஒற்றாகத் திரிதல் யாண்டும் காணப்படுவதே.

இது பிறமொழி சென்று உ‍‍‍‍-த-கா என்று திரியும்,  இதன் திரிபுகள் பிற இந்தோ ஐரோப்பிய மொழிகளிலும் சென்றுள்ளன.

உ என்று தொடங்கும் சொல், ரஷ்ய மொழிக்குச் சென்று வோ என்று திரிவதாய் ஆய்வறிஞர் கூறுவர்.

உ த கா ( ஊத்துக்கா)  அங்கு வோட்கா என்று திரிந்து மதுவின் பெயராகிறது.

இதில் ஒன்றும் வியப்பில்லை. சிக்கன் என்னும் கோழிக்குஞ்சின் பெயர் 
பெயர் இப்போது கறிக்கோழிக்குப் பயன்படுத்தப்படுகிறதல்லவா? 
இது பொருள் திரிபில்லையா?   "தண்ணி"  குடிவகையைக் குறிக்கவில்லை?   இப்படிப் பல .

வெள்ளி, 6 பிப்ரவரி, 2015

(ஊட்டி.) உதகமண்டலம்.

உதைத்தல் என்ற தமிழ்ச்சொல்லுக்குப் பல பொருள் உண்டு. அதில்  குளிரால் நடுங்குதலும் ஒன்றாகும்.

 1. to kick; 2. to spurn, reject, as advice; 3. to discharge, as an arrow; 4. to beat, strike; 1. to tremble with fear, shiver with cold, used impers; 2. to be inconsistent

உதை+கை > உதகை > ~~+ மண்டலம் = உதகமண்டலம்.
ஊட்டி.

குளிரால் கைகால் உதறுதல் என்ற வழக்கும் நோக்குக.  உதை , உத(று )  -
இவை தொடர்புடைய உகரச் சுட்டடிச் சொற்கள்.
இனிமைசேர் தென்றலாய் வீசினும் வீசும்,
பனிவரை நீங்கிப் பயில்குளிராய் நீடும்;
முனிவுடன் பாய்ந்துவன்  மோதல்வான் ஊர்தி
தனித்துன்பில் வீழ்த்தினும் ஆம்.

உதைத்தல் என்ற தமிழ்ச்சொல்லுக்குப் பல பொருள் உண்டு. அதில்  குளிரால் நடுங்குதலும் ஒன்றாகும்.

 1. to kick; 2. to spurn, reject, as advice; 3. to discharge, as an arrow; 4. to beat, strike; 1. to tremble with fear, shiver with cold, used impers; 2. to be inconsistent

உதை+கை > உதகை > ~~+ மண்டலம் = உதகமண்டலம்.
ஊட்டி.
இந்த இடப்பெயர் கை விகுதி பெற்றதும் பொருத்தமே.  "கை " உதறும் 
குளிர் உள்ள இடமேன்பதும் குறிப்பு.  மேலும் உதறுதல் என்ற சொல்லையும் கவனியுங்கள்.


Change back to Hinduism.

இந்து சமயத்திலிருந்து
மாறிய நிகழ்வுகள் பல!
இந்து சமயத்திற்குள்
மாறிவந்த நடப்புகள்  புதுமை.


எந்தச் சாதிக்குள் நுழைவது என்பது.
உம்தம் கேள்வியாமோ?
கலப்பு மணம் வாயிலாக,
மணக்கும் இந்துவின் சாதிக்குள்
இணக்கும் அடைவு பெறலாம்.
இல்லையென்றால் தொல்லையில்லை.
மாற்றுவோரே காட்டுவார் வழி!


http://articles.economictimes.indiatimes.com/2015-02-02/news/58711375_1_hindu-mahasabha-chandra-prakash-kaushik-love-jihad

வியாழன், 5 பிப்ரவரி, 2015

Tamil and Russian

வெகு தொலைவில் நிலவும் மொழிகளிலும்  தமிழ்ச் சொற்கள் உள்ளன , ஆனாலும் இதை ஒப்புக்கொண்டால் தமிழர்கட்கு மொழியுணர்வு மிகுந்து அதனால் அவ்வந்  நாடுகளில்  ஒற்றுமை இன்மையும் கேடுகள் பிறவும் விளையலாம் என்று அஞ்சுவோருமுண்டு.  அதனால் எளிதில் ஒப்புவதில்லை. தமிழுணர்வு மிகுந்தால் அதனால் நன்மையா தீமையா என்ற ஆய்வில் யாம் ஈடுபடவில்லை .

உருசிய மொழியிலும் சில தமிழ்ச் சொற்கள் உள்ளன, ஒன்றிரண்டை இப்போது காண்போம்.

வல்கு  .....................  வழக்கு      வழக்கம்  இயல்பானது; simple
வஜ ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,   வல            வலிமை
கல ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, கள               கருப்பு, cf  களங்கம் கள்ளர் காளி 
ஸர ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,சாறு  
இர .............................. ஈர                நீர் -  (குடிப்பது)
கோவோரித்..............கூவுரைத்(தல்)     கூவி உரை           

இவை  மேலும் ஆய்தற் குரியவை.

புதன், 4 பிப்ரவரி, 2015

தைவானிய வானூர்தி விபத்து.

வானூர்தி விழுந்து 48 பேர் கொல்லப்பட்டனர் , மேலும் இத்தொகை உயரக்கூடும் என்று சொல்லப்படுகிறது.

http://edition.cnn.com/2014/07/23/world/asia/taiwan-plane-crash/index.html.


At least 48 people were killed when a twin-engine turboprop plane crashed Wednesday while attempting to land in Taiwan's Penghu Islands, according to Taiwan's Civil Aeronautics Administration.............

..இனிமைசேர் தென்றலாய் வீசினும் வீசும்,
பனிவரை நீங்கிப் பயில்குளிராய் நீடும்;
முனிவுடன் பாய்ந்துவன்  மோதல்வான் ஊர்தி
தனித்துன்பில் வீழ்த்தினும் ஆம். 


பால் வேற்றுமை வளர்ப்பினால்

ஆடவர் பெண்கள்  இருவரும் ஒப்புடை மாந்தருண்மை;
ஆடவர் வல்லமை   சொல்லிடு வார்களன்   வெற்றுணர்வாம்;
கூடும் குமுகத்துக் கொள்நடப் பால்விளைந் துள்ளதன்றோ?
நாடும் அறிஞர்கள் நன்கோர்  முடிபுரை தந்தனரே.

வளர்த்த விதமெனும் வாய்மொழி முற்றும் சரிஅறிவீர்;
தளர்த்தி விடுதலை தானது தந்திடில் பின்புரியும்;
குளத்துத் தவளை எனவளர்க் கின்றபெண் பின்னடைவு
நிலத்தில் இயற்கை எனச்சொல் லினர் பொய்ப் புகற்சியதே  

Read on Gender  Roles etc.



Gender roles: Men and women are not so different after allAn Iowa State professor says we tend to focus on the extremes when looking at differences between genders, but men and women are really quite similar. Credit:digitalart@...
Gender is a large part of our identity that is often defined by our psychological differences as men and women. Not surprisingly, those differences are reflected in many gender stereotypes - men rarely share their feelings, while women are more emotional - but an Iowa State University researcher says in reality men and women are more alike than we may think.
Gender stereotypes can influence beliefs and create the impression that the differences are large, said Zlatan Krizan, an associate professor of psychology at ISU. To separate fact from fiction, Krizan and colleagues Ethan Zell, an assistant professor at the University of North Carolina at Greensboro, and Sabrina Teeter, a graduate student at Western Carolina University, conducted a meta-synthesis of more than 100 meta-analyses ofgender differences. Combined, the studies they aggregated included more than 12 million people.
Their report, published in American Psychologist, found an almost 80 percent overlap for more than 75 percent of the psychological characteristics, such as risk taking, occupational stress and morality. Simply put, our differences are not so profound.
"This is important because it suggests that when it comes to most psychological attributes, we are relatively similar to one another as men and women," Krizan said. "This was true regardless of whether we looked at cognitive domains, such as intelligence; social personality domains, such as personality traits; or at well-being, such as satisfaction with life."
The similarities were also consistent regardless of age and over time. However, researchers don't dispute that men and women have their differences. They identified 10 attributes in which there was a significant gap between genders. Some of these characteristics fell in line with stereotypes. For example, men were more aggressive and masculine, while women had a closer attachment to peers and were more sensitive to pain.
If we're so similar, why do we think we're different?
The purpose of the meta-synthesis was not to identify why men and women are different, but measure by how much. The results contradict what many people think, and Krizan has a few explanations as to why. One reason is the difference in extremes. The evidence researchers aggregated focuses on a typical range of characteristics, but on the far end of the spectrum the differences are often exaggerated, Krizan said.
"People tend to overestimate the differences because they notice the extremes," Krizan said.
He used aggression as one example. "If you look at incarceration rates to compare the aggressiveness of men and women, the fact that men constitute the vast majority of the prison population supports the idea that men are extremely more aggressive. However, it's a misleading estimate of how much typical men and women differ on aggressiveness, if that's the only thing you look at for comparison," he said.
Additionally, people notice multiple differences simultaneously, which can give the impression of a larger effect. Researchers looked at the average for each trait individually rather than a combination of differences.
"The difference on any one trait is pretty small," Krizan said. "When there are several smaller differences, people might think there's a big difference because the whole configuration has a different flavor. I think they make a mistake assuming that any given trait is very different from typical men to women."
Researchers also point out that they did not try to determine to what extent these differences reflect real, physical or biological differences between genders. For example, do men tolerate more pain because they believe that is what they should do as a man? Krizan says some behavioral differences may be learned through social roles. Although men may be said to come from Mars and women from Venus, these findings remind us that we all come from Earth after all, he added.
More information: American Psychologist, psycnet.apa.org/journals/amp/70/1/10/
Provided by Iowa State University
"Gender roles: Men and women are not so different after all." January 29th, 2015. http://medicalxpress.com/news/2015-01-gender-roles-men-women.html

http://medicalxpress.com/news/2015-01-gender-roles-men-women.html


செவ்வாய், 3 பிப்ரவரி, 2015

சிங்கப்பூரில் ஒரு மும்பை!

டான் என்னும் சிங்கப்பூரர் இனச்சீனர்.  இவர் ஒரு நாள் ஒரு பேருந்தில் ஏறி அது ஜாலான் புசார் என்னும் சாலையின் வழியாய்ச் சென்றது.பேருந்துக்குள் நோக்கின போது அது மும்பையில் ஓடிக்கொண்டிருப்பதைப் போன்ற உணர்வு அவருக்கு ஏற்பட்டதாம். காரணம் வேறு ஒன்றுமில்லை. அதன் பயணிகளில் பெரும்பாலோர்  இந்தியாவிலிருந்து  வந்த இந்தியர்களாய் இருந்ததுதான். வெளி நாட்டு ஊழியர்கள் சிங்கப்பூரில் அதிகம், சில இடங்களில் பிலிப்பினோ பணிப்பெண்கள் கூட்டம்; சில இடங்களில் இந்தோனேசியர் கூட்டம்; வேறு தலங்களில் சீனா தேசத்தினர் கூட்டம்.

சிங்கப்பூர்க் காரர்கள் சில இடங்களில் குறைவாகவே காணப்படுகின்றனர். மேலும் இவர்கள் இப்படிக்கூட்டமாகச் செல்வதில்லை என்பதும் ஓரு காரணமாகும்.

திரு டான் என்பவர் சிங்கப்பூரில் அதிபர் பதவித் தேர்தலில் நின்றவர்.


Some online citizens don't see the big deal in Tan Kin Lian's "Mumbai" post

முழுச் செய்தி இங்குக் காண்க:


சிங்கப்பூர்  என்பது  பூந்தோட்டம்  -- காண்பவை 
செவ்வந்தி  முல்லை  கனகாம்பரம் ;
பங்கமில் மல்லிகை  பன்மலரே  --- நாவும் 
பயின்றது சொலலின்     மனம்தீம்பறும் 



தீம்பறும் - குற்றமற்றதாகும்..




திங்கள், 2 பிப்ரவரி, 2015

No His Excellency for me....

மாண்பு மிகு என்று பொருள்படும்  His Excellency ..... என்ற உயர்மதிப்புத் தொடரைத் தம் பெயருக்குமுன் பயன்படுத்தலாகாது என்று இலங்கைக் குடியரசுத் தலைவர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார். அதேபோல் தம் மனைவிக்கும் எந்தப் பட்டப்பெயரும் கொண்டு முன்பொருத்தலாகாது என்றும் பணித்துள்ளார்.


பெருமைக்கண்  பணிதல் 
மேலும்   பெருமை  சேர்த்தது.

an unusual creature in Borneo

அடர்காட்டின்  எல்கரடி அங்கிருந்து வெளியேறித் தோப்புக்குள் ஒளிந்தே
முடிகொட்டித் தோல்தெரியத்  தளர்வுற்ற நடைபோட்ட நிலைகண்ட இருவர் 
தடிகொண்டு தாக்கியதில் நினைவற்று வீழ்ந்தபினே பிடிபட்டுக் கிடக்கத் ,
துடிவந்து நகர்ந்ததினால் கொடுபோனார் கானகத்துள் மறுவாழ்வு பெறவே.


எல்கரடி -  sunbear ( a type living in Borneo)
துடி : வலிமை , பலம், துடிப்பு.  கொடு = கொண்டு.
பினே =  பின்னே 


https://sg.news.yahoo.com/blogs/what-is-buzzing/unusual-creature-in-sarawak-oil-palm-plantation-scares-workers-074116782.html


Unusual creature in Sarawak oil palm plantation scares workers

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

Modi: Let my luck benefit people

மோடிப் பெருமக‌னார் முன்னுரைத்தார் தேர்தலுக்குக்
கூடி இருந்தநன் மக்களிடை=== நாடுங்கள்
ஆகூழ் அமைந்தவன் நானென்றால் நாட்டினுக்கே
ஆகட்டும் ஆகூழ் அது.

ஆகூழ் =  அதிருட்டம்;
முன்னுரைத்தார்:  delivered a key address, or lead speech.

Read more:
http://www.ndtv.com/video/player/news/if-my-luck-can-benefit-the-country-why-elect-someone-unlucky-says-pm-modi/355057

கல்லெண்ணெய் (petrol) விலை இந்தியாவில் குறைந்துவிட்டது,  இதன் பயன் மக்களையும் சுற்றுப் பயணம் செல்வோரையும் சென்றடையுமோ? பொறுத்திருந்துதான்  பார்க்கவேண்டும். மோடி அதிருஷ்டசாலி என்கின்றன 
எதிர்கட்சிகள். அதற்குமோடி கூறிய பதிலே மேற்கண்ட பாடல். இந்தப்பதில் ஒரு திறமையான  வாதத்தை உள்பொதிந்துள்ளது என்று நான் நினைக்கின்றேன்.

சனி, 31 ஜனவரி, 2015

பரதவரும் பாரதமும்

பண்டை உலக நாடுகளில் பல் வேறு  குமுகாய (சமுதாய)  முறைகள் நடப்பில் இருந்தன என்பதை வரலாறு உணர்த்துகிறது,  இந்த முறைகளைச்    செயல் படுத்தியவர்கள் அவ்வந்  நாட்டின் ஆட்சிப் பொறுப்பில் இருந்தோரே ஆவர்,

 ஜப்பானில் படைஞருக்கு உயர்ந்த இடம் இருந்தது. இவர்கள் நிலக்கிழார்களுக்கு வேலை செய்ததனால் அவர்களைஆளும் பொறுப்பு
நிலக்கிழார்களுடையதே. படைஞர் உ யர்ந்தோரே  தவிர அவர்களுக்கான ஆணைகள் நிலக்கிழார்களிட மிருந்தே வந்தன,  இது  எப்படி இருக்கிறது  என்றால் இந்தியாவில் அந்தணர்க்கும் அரசர்க்கும் இருந்ததுபோன்ற நிலை.  t


இந்தியா என்பது நீண்ட கடற்கரையை உடைய நாடு. கடலோரங்களில் வாழ்ந்தோர், கடல் தந்த உணவுகளையும் பேரளவில் பெற்று வாழ்ந்தனர் என்பது உண்மை. இவர்கள் பரதவர். இந்தியா பரதகண்டம். பரதம்> பாரத நாடு.பரவை என்றால் தமிழில் கடல்.  கடல்வண்ணன், மேகவண்ணன் பரதவர் தெய்வம்.  அவனே மீனாகவும் தோற்றரவு (அவதாரம்) எடுக்கிறான், (மச்சாவதாரம்). இந்தியா கடல் நாகரிகமும் உடைய நாடு என்பதையே இது காட்டுகிறது. பாரதக் கதை உண்மையில் மீனவர் வழித்தோன்றல்களுக்கும் இடையர் வழித்தோன்றல்களுக்கும் இடையே நடைபெற்ற போராட்டக் கதையாகும். எழுதிய புலவரும் மீனவப் புலவரே.

இந்திய நாகரிகத்தில் கடலுக்குப் பெரும்பங்கு உள்ளது.  மீனின் பங்கும் பெரிது ஆகும். கடல் நீலம்; கண்ணனும் நீலம். மழை பொழியும் முகில் ஊர்கின்ற வானவெளி நீலம்.  இதற்குள் மீனவ (பரதவ) வாழ்க்கை அமைந்து கிடந்தது;கிடக்கின்றது.  பண்டை மீனவர் தாம் மேற்கொண்ட புதிய தொழிலுக்கேற்ப குலம் மாறினதையே பின் நடப்புகள் பல காட்டுகின்றன.  தொழில் அடிப்படையிலான சாதி ( சார்தி = சார்பு) தொழில் மாற்றத்திற்கேற்ப மாறும் தன்மை உடையதாய் இருந்தது.

தமிழ் நாட்டிலும் பாண்டியன் மீன்கொடியைக்  கொண்டிருந்தான். காரணம் யாது?   வேந்தருள்ளும் பாண்டியனே பழையவன் என்பர். இவர்கள் கடலாலும் மீனாலும் வாழ்வு பெற்றோர்.  தம் பழம் வரலாற்றைக் குறிப்பால் உணர்த்தினர். அவர்களிலிருந்து பிரிந்த சேரரும் சோழரும் வில்லையும் புலியையும் கொண்டு தம் போர் முரண்மையை வெளிப்படுத்தினர்.

will edit and continue here or in another post. stay "tuned" .


வியாழன், 29 ஜனவரி, 2015

the beauty of suffixes kar, kari, karan etc

குருவி ஒன்று வாங்கவேண்டும், இதற்கு (குருவிக்கு) யாரைப்பிடித்தால் அது கிடைக்கும்?
சீரங்கம் போகவேண்டும், வண்டி வேண்டும்,  அதற்கு யாரைக்  கொண்டுவந்தால் காரியம் நிறைவேறும்?

குருவிக்கு அவர்.
வண்டிக்கு அவர்.

அவர் என்பது உண்மையில் அ+ அர் ஆகும். இடையில் வகர உடம்படு மெய்  தோன்றியது. வகர உடம்படு மெய் இல்லாமல் நோக்கினால், அஃது அ+அர் >ஆர் ஆகும்.

குருவிக்கு அவர் > குருவிக்கு அஅர் > குருவிக்கார்.
வண்டிக்கு அவர் > வண்டிக்கு அஅர் > வண்டிக்கார்.

அவர், ஆர் என்பவை பலர் பால். சேவை புரிந்த இவர்களை முதலில்  மரியாதையுடன் தான் நடத்தினர் என்று தெரிகிறது. நாளடைவில் மரியாதையும் குறைந்து, சேவையைப் பெற்ற நன்றியும் தேய்ந்து,  சொல்லில் உள்ள விகுதி பலர்பால் என்பதும்  மறந்து, அன் விகுதி சேர்ந்துகொண்டது.

குருவிக்கார்.+அன் = குருவிக்காரன்.
வண்டிக்கார்+அன் = வண்டிக்காரன்.

என்ற வழக்குகள்  உருவாயின.

அப்புறம் சிலர் இவற்றை ஆய்ந்தனர். சொற்களை இவ்வாறு பிரித்தனர்.

வண்டி+ காரன்.
குருவி+ காரன்

நமக்கு "காரன்" என்ற புதிய பின்னொட்டுக் கிடைத்தது. பெண்பால்  காரி என்றானது. மரியாதை வேண்டினபடியால்,  காரர் வந்தது.

குருவிக்காரி என்றது போதுமான பெண்மை காட்டவில்லை !!  குருவிக்காரிச்சி என்றும் புதுமை புகுந்தது.

என்ன ஆனந்தம்!
will edit later.

புதன், 28 ஜனவரி, 2015

நறவம்

நறவம் என்பதற்குப் பல பொருள் கூறப்படும் எனினும், தேன் என்பது அதன் முன்மைப் பொருள் என்று தோன்றுகிறது.  மற்றும் கள்,  பால்,  நறுமணம் ,  மயிற் கொண்டை , பொருள்கட்கு நிறம் ஏற்றும் ஒருவகை நீர்ப்பொருள், செஞ்சாந்து, ஒரு கொடி,  மஞ்சள் பூ உடைய ஒரு மூலிகை   முதலியவற்றையும் குறிப்பது இச்சொல்.

இது நறு என்ற அடியில் இருந்து பிறந்த சொல்.

நறு + வு (விகுதி) =  நறவு.
நறவு + அம்  =   நறவம்.

நறு  என்பது "நல் " என்பதனடிப் பிறந்த சொல்.  நல் =  நன்மை. 


செவ்வாய், 27 ஜனவரி, 2015

நற்றமும் குற்றமும்.


குற்றம் என்ற தமிழ்ச் சொல் இப்போதெல்லாம்,  சட்டத்திற்கு முரண்பட்ட, தண்டனைக்கு உட்பட்ட ஒரு செயலைக் குறிப்பதாகப் பெரிதும்  வழங்கி வருகிறது.  குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்ற பழமொழி, சட்டப்படியான குற்றம் மட்டுமேயன்றிப் பிற தகாதனவற்றையும்  உட்படுத்துவதாத் தெரிகிறது.

குற்றமின்மை என்பதை innocence என்ற சொல்லுக்கு ஈடாக வழங்கலாம்.  ஆனால் எந்த நீதி மன்றமும் ஒருவனைக் "குற்றம் அற்றவன்" என்று கூறுவதில்லை; சுமத்தப்பட்ட குற்றம் நிறுவ (அல்லது "நிறுவிக்க" > நிரூபிக்கப்) படவில்லை என்றே கூறி விடுப்பதாகத் தெரிகின்றது. இவ்விரு முடிவுமொழிதலும் வெவ்வேறானவை என்பது எளிதில் புரிந்துகொள்ளத் தக்கனவே.

நிரபராதி என்ற சொல்வழக்கும் உள்ளது. இது நிர்+ அபராதி என்று பிரியும்.  நிரபராதி என்றால் அபராதம் விதித்தற்கு உரியனல்லன் என்பது பொருள். அபராதி என்பதன் முன்னதான அபராதம், குற்றத்தையும் தண்டத்தையும் ஒருங்கே குறிப்பதால்  பண்டு இவை ஒன்றாகவே கருதப்பட்டன என்று தோன்றுகிறது. எனினும்  அபராதம் "குற்றம்" என்னும் பொருள் உடையதாய் இருப்பதால் இக்கருத்து   இலக்கிய வழக்கன்று.

அபராதபஜ்ஜின என்பது சிவனின் பெயர்களில் ஒன்று. நேர்ந்துகொண்டபடி செலுத்தாத காணிக்கை பின் செலுத்தப்படும்போது அதற்கு அபராத காணிக்கை என்பர்.

குற்றமும் நற்றமும் என்பது சொற்கள் இணையாக நிற்கும் தொடர்

நற்றம் என்ற தமிழ்ச்சொல் இப்போது பெரிதும் வழக்கிலில்லை. அது குற்றமற்ற தன்மையைக் குறிக்கிறது. இப்போது மறக்கப்பட்டுள்ளது. தகுந்தபடி மீண்டும் பயன்படுத்த எளிமையானது.

வெள்ளப் பெருக்கினை.........

வெள்ளப் பெருக்கினைப்போல் == மூளை
வேலை செயத் தொடங்கி
நள்ளி  ரவுகழிந்தும் == எண்ணம்
நயமாய்க் குவிந்ததடி!

நுள்ளி விரல்களிலே --- வெல்லம்
நுகரக் கிடைத்ததுபோல்
கள்ளம் இலாததடி --- சுவை
காணப் பொருந்துவதே ,

கொழுந்துச்  சுடுநீ ரை   === அருந்தவிக்
கோலம் விளைந்ததுவோ?
எழுந்த கருத்துகளும் -=== கவியின்
விருந்தாய்  இனித்திடவே

கொழுந்துச் சுடு நீர் -  hot tea.




திங்கள், 26 ஜனவரி, 2015

காசு கப்பி

தமிழ் மொழியில் இணைச் சொல்  தொடர்கள்  பல  வழங்கி வருகின்றன. "கையில் காசு கப்பி  இல்லாமல் கட்டப் படுகின்றான் " என்று பேசுவது காதில் விழுகிறது. 
கப்பி  என்பதென்ன?
இது பல பொருள் உடைய சொல்லாகும்.

1.  அரை குறையாய் அரைத்த மாவு. அல்லது தானியங்கள் பிற.  2 சாலை செப்பனிடுதலில் பயன்படும் சிறுசிறு கற்களின் குவியல், சீமைக்காரையும் கல்தூள் முதலியவையும் கலந்தது. அகழ்த்துபாரத்தில் கலக்கப்படுவது. 3. கயிறு இழுப்பதற்குரிய தொங்குருளை . 4 தறி உருளை.  5. பொய், உண்மைக் கலப்பு ஏதுமில்லாச்   செய்தி.  

தோசைக்குக் கப்பி  காய்ச்சி ஊற்றினால் மென்மை பெறுமென்பர்.

காசு கப்பி என்ற தொடரில் அகரவரிசைப் பொருள்கள் ஏதும் பொருந்துவதாகத் தெரியவில்லை.

கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் என்றான் கம்ப நாடன். கடன் வாங்கினவன் உள்ளத்தைக் கவலை கப்பிக்  கொள்ளும். கடன் என்பது பொருள். கப்பி  என்பது கடன்பெற்றதன் (அப்பொருளின்)  விளைவு. விளைவானது பொருளுக்கு ஆகுபெயராய் காசில்லாத காரணத்தால் பெற்ற கடனைக் குறிக்கும்.

தொடருக்குக்  "காசும் இல்லை; கடன்பெற வழியும் இல்லை; அப்படிக் கட்டப்படுகிறான்" என்று பொருள்.




  

சனி, 24 ஜனவரி, 2015

அகவாசம் - சகவாசம்

ஓரிடத்துப்  பதிவாய் இருத்தலே  அவ்விடத்து வதிதலாகும்.  பதிதல் > வதிதல்.
தகரம் கொண்ட சொற்கள்  சகரமாய்த் திரிதல் உடையன.   வதி > வசி  ஆகும்.  (கொது > கொசு ).
அதுபின் முதனிலை நீண்டு அம்  விகுதி பெற்று வாசம் ஆகும்.

அகரம் மற்றும் அதன் வருக்க எழுத்துக்கள் முதலாகியவை  பின்னர் சகர முதலாகவோ சகர வருக்கங்கள் முதலாகவோ திரிந்துவிட்டன என்பது முன் என் இடுகைகளில் விளக்கப்பட்டுள்ளன. அங்குக் காணவும்.  உதாரணத்துக்காக 1   ஒன்று மட்டும் நோக்குவாம் .

அட்டி >  சட்டி ;  (அடுதல் = சுடுதல் ;  அடு+ இ = அட்டி)

இங்ஙனமே அகவாசம் என்பதும் சகவாசம்  ஆகிற்று.  அ > ச.  பின்  சகம் தனியாகப் பிரித்தெடுக்கப்பட்டுத்  தனிச் சொல்லாகிவிட்டது. சகக்  களத்தி  என்பவள் உண்மையில் அகக் களத்தி தான்.   முதலில் வீட்டுக்குள்ளேயே இரண்டாவதாக நிற்பவளைக் குறித்தது,  பின் வெளியில் இரண்டாவதானவளையும் சுட்டியது.   இது அகம் என்பதன் பொருள் விரிதலே யன்றி வேறில்லை.

அகக் களத்தி > சகக் களத்தி (பின் சக்களத்தி > சக்கா ளேத்தி )

சகரத்தை அடுத்த க ச ட த ப ற , எப்படியெல்லாம் திரியும்?   சறுக்கரம் > சக்கரம் முன்போர் இணைய தளத்தில் கூறியுள்ளேன். சக்கரம் அறியுமுன் சறுக்கிச் சென்றவன் மனிதன் .












1(உது = முன் நிற்பது; ஆர்தல்= நிறைவு ; அம் = விகுதி )


பாராளும் மன்னனாய் பக்சே


பையவே  பார்த்தலும் பாராளும் மன்னனாய் 
வாழ்ந்துள்ளான் இராச   பக்சே
கொய்யவே கைவந்த கோலத்துக் கனிகள்போல்
காய்த்திட்ட பணத்தை உண்டான்
நையவோ பிறந்தார்கள் நாட்டினரும் நாசவியற்  
குண்டுதுளைக் காத நேர்த்தி
ஐயகோ ஐம்பதிற் கதிகமாம் உந்துகளும் 
அணியாகப் பயன்செய் தானே

பணம்  என்பது அரசுத் தோட்டத்தில் காய்க்கிறது;  அது ராஜ பக்சேவுக்கு காய்கள்  தாம் . காய்கள் என்பவாதலின்  அவன் உண்ணற்குரியனவல்ல.
கொய்யக் கைக்குள் வந்த அழகிய கனிகளாய் அவன்  எண்ணி அவற்றை  உண்டுவிட்டான்  என்பது  கருத்து.



வெள்ளி, 23 ஜனவரி, 2015

Investigation

Temple consecration this Monday 26 inst

திங்களன்று திருக்குடமே நீராட்டப் பெறுகின்ற நன்னாள்  காணும்
தங்கக்க லசமுடைய தன்னிகரே இல்லாத வினாய கன்றன்
துங்கமுறு ஆலயத்திற் சென்றுதொழு திணையில்லா மனக்க  ளிப்பில்
பங்கமறு சீர்வாழ்க்கை பாரினிலே பெறுவீரே பாக்கி யம்மே


முன்னாளில் இவண்வந்த இந்துக்கள் மூதறிவால்  நிறுவிச் சென்றார்
 இந் நாளும் இன்னாளாய் இருந்திடவே  இவ்விடமே கோவில் கண்டார்
எ ந் நாவில் மொழிவாரும்  என் நாதன் என வணங்கித் துன்பம் நீங்கிக்
கண்ணாரக் கண்டுவழி காண்புறுத்தும் வினாயகனைக் கருத்தில் வையே

எ ந்  நாவில் -  எந்த பாடையில் ;


விழுமியநல்  நாயகனே  விநாயகனாம் என்றுணர்வார் பல்லோர் உண்டே
விழும்எழும்பல் வேதனைசேர்  வினைஆய்வான் அவனென்பார் பல்லோர் உண்டே
அழும்குரல் கேட் டாதரவு நல்கிடுவான் வினாயகனே கண்டோர் உண்டே
உழும் நிலத்துப் பயிராகும் உள்ளன்பால் வினாயகனைக் கருத்தில் வையே. 


place: SeNpaga VinAyakar Alayam,   Ceylon Rd  Singapore

will edit

வியாழன், 22 ஜனவரி, 2015

Air Asia flight Cochin- Singapore

When I recently  went to Cochin , I took an Air Asia flight. On the way back, to Singapore from KLIA II,  Captain Siva was the pilot.  The take off  at KL and landing in  Singapore Changi, his piloting  was so good, smooth and comfortable.  All the pilots are OK. The sea crash  near Java recently is really an unfortunate exception.

முல்லைக்குத் தேர்கொடுத்துத் தன் புகழ் நிறீஇ......

முல்லைக்குத் தேர்கொடுத்துத்  தன் புகழ் நிறீஇப்  பின் பல நூற்றாண்டுகளிலும் மக்கள் மனத்தில் பரிவு அதிர்வுகளை விளைத்தவன் பாரிவள்ளல்.  அவனை  நினையாத புலவர்கள் தமிழக வரலாற்றில் இருந்திருக்க மாட்டார்கள்.  இலக்கணம் வரையும்போது கூட அவன் நினைவு நிகழ்கின்றது.

முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும் 
எல்லை  நீர் ஞாலத் திசைவிளங்கத்  --- தொல்லை 
இரவாமல்  ஈந்த இறைவர்போல்  நீயும் 
கரவாமல் ஈகை கடன்.  (பு.வெ .மா. 164.)

என்பது  ஐயனாரிதனாரின் பாட்டு.

எல்லை நீர் =  மிக விரிந்த கடல்.  இசை  = புலவர் பாடிப் பாராட்டும் புகழ்.  
தொல்லை =  முற்காலத்தே;    இரவாமல்  ஈந்த  = யாசிக்காமல் வழங்கிய;
இறைவர் =  மன்னர்கள் .  கரவாமல் =  இல்லை என்னாது.  

பரிசில் கேட்பான்  யார்யார் என்னென்ன கொடுத்தனர் என்று பட்டியலிட்டு, அவர்கள் போலவே  நீயும் எனக்கு அளிக்கவேண்டுமென்று பாடினால்,  அது, 
பாடாண் திணையில் "இயன்மொழி வாழ்த்து"  என்னும் துறை என்று புறப்பொருள் இலக்கணம் வகைப்படுத்தும்.

வள்ளன்மை  மரபு வழாது வழங்குக என்பதாம்.

அரண்மனைச் செல்வங்கள் எல்லாம்  நல்ல பொக்கம் உள்ள இடத்தில் பத்திரமாகப் பெட்டிக்குள் வைக்கப்படும்.  பொக்கமான இடத்தில் உள்ளது பொக்கிடம்  ஆனது. அது பின் பொக்கிஷம் ஆயிற்று.  பொங்கு+ அம்  = பொக்கம்.   ~ங்கு + அம் = ~க்கம் என்றே முடியும்.  செல்வங்கள் பொங்குமிடம் 
என்பதுமாம். பொங்குதல் = உயர்தல். rising;  height.  சிலர் கிடங்குகளில் வைத்திருப்பார். அங்கும் அது சற்று மேலெழுந்த இடத்திலேதான் வைக்கப்படும்.

செலவங்கள் குறைதல் ஆகாது என்று கொடுப்போன் எண்ணினாலும்,  மரபினைச் சுட்டிக் காட்டுகையில் என்செய்வது?  கொடுத்தலே கொள்ளத்தக்கது.
   


WALNUTS EAT BOOSTS MEMORY

]]]]]]]]]]]]]

air asia flight climbed too fast and stalled,,,,,

Warning alarms in AirAsia flight QZ8501 were "screaming" as the pilots desperately tried to stabilise the plane just before it plunged into the Java Sea last month, a crash investigator said Wednesday.
The investigation into AF447 found that both technical and human error were to blame.
Full story refer to 
===Yahoo

என்னை நாடிவந்த குருவி

எங்கெங்கோ பறந்து சென்றாய் 
இரைதேடி  அலுத்துவிட்டாய் ;
இங்கிந்த அறைக்குள் உண்ண
இருக்குமோ எனவே எண்ணி 
பங்கொன்று விழைந்து வந்தாய் !
பணிவோடு பதுங்கி நின்றாய்!
தங்கென்றன் நண்பன் ஆக!
தருவேன் நான் சுவையாய் உண்ண.

அரிசியை  எடுத்தேன் கொண்டு 
அருகினில் இடுதல் முன்பே,,
பெருகிய நடுக்கம் யாதோ 
பேடிமை உடுக்கும் உள்ளம் 
உருகிய எனக்கே நீயும் 
ஒளிந்தனை  விரித்துக் காட்டிச் ,
சிறகினைப் பரப்பிக்  காற்றில் 
 பறந்திடல் முறையோ சொல்வாய்!.

பேடிமை -  அச்சம்;  உடுக்கும் -  அடைந்த; கொண்ட .  ஒளிந்தனை  ஆதலின் 

பேடிமை உள்ளம் விரித்துக் காட்டிப் பின் பற ந்தனை;  என்று இணைக்க. 

புதன், 21 ஜனவரி, 2015

பொருள்மொழிக் காஞ்சித் துறை

புறப் பொருள் இலக்கணத்தில் ஏனைத் திணை துறைகளில் அடங்காதன சில, பொதுவியலில் கூறப்படும்.  அவற்றுள் ஒன்று "பொருள்மொழிக் காஞ்சி"
என்னும்  துறை ஆகும். இதற்கான கொளு வருமாறு:

"எரிந்து இலங்கும் சடைமுடி முனிவர்
புரிந்து கண்ட பொருள் மொழிந்தன்று."    பு.வெ .மா .

அறிஞர் ஆய்ந்துகண்டதனைப் புலவன் தன் பாடலில் கூறுவானாகில்,  அப்பாடல் பொருள்மொழிக் காஞ்சித் துறைப் பாற்படும். பொதுவியல் திணை.

தன்மூப்பாய் ஓடாமல் தக்கோர் உனக்குரைத்த
சொன்முயன் றன்பேதன்   சொந்தமாய் --- முன்கொண்டே 
இவ்வுலகு நீங்கும் இறுதிவரை நீவாழ்வாய்
செவ்விய வாழ்வதே சீர்.

இத்துறைக்கு யான்   தரும் பாடல் இது.

நம் அற நூல்களில் பலவும் இத்துறைப் பாடல்களைக் கொண்டுள்ளன.

கொளு :  விளக்க எடுத்துக்கொண்ட பொருளைச்  சுருக்கமாகத்  தன்னகத்துக் கொண்டிருக்கும் வரிகளைக் கொண்ட பாடல்.  a gist stanza.
மொழிந்தன்று:  மொழிந்தது.  

NUCLEAR POWER plants mistake to oppose?

This is a controversial matter. However, to us in SEAsia, this is purely an academic topic now. Prof Levin's views are for your study and grasp:

Nov 14, 2014  ·  Stanford L. Levin, Emeritus Professor of Economics, Southern Illinois University - Edwardsville, Daily Herald   ·   Link to Article
Nuclear power is by far the most environmentally friendly source of electricity. Nuclear plants produce no carbon emissions and are available about 90 percent of the time, including, most importantly, at periods of peak demand. Maintenance is generally scheduled when the plants are less needed.

http://www.nuclearpowersillinois.com/news-resources/news-articles/closing-of-nuclear-plants-a-mistake

India economy

பொருளியல் முன்னறை புக்கினும் நாட்டில்
தரும் நற்   றுணையால் நிலைக்கும்     == பெரும்பயனே
எல்லாரும் ஒன்றாய் இழுத்தாலே முன்செல்லும்
வெல்லாத வீண்மை விழ.

புக்கினும் -  புகுந்தாலும்;

http://www.thehindu.com/business/Economy/imf-lowers-global-growth-forecasts/article6804707.ece



In its latest World Economic Outlook report released on Tuesday, the International Monetary Fund (IMF) projected that India will grow 6.5 per cent in 2016, overtaking China which, it projected, will slowdown to 6.3 per cent.
For 2015, the IMF forecast India will grow at 6.3 per cent, up from 5.8 per cent in 2014. China’s 2014 growth rate was 7.4 per cent.

செவ்வாய், 20 ஜனவரி, 2015

லதா.

லதா என்ற சொல் பல பொருள் உடையது. அப்பொருள்களில் ஒன்று,  "கொடி" என்பது  .   பிற  பொருள்  வருமாறு :

f.  twining tendril ,   slender woman , any woman  ; the thong or lash of a whip , whip a string of pearls  a streak , line , thin jets of water.  a kind of metre , name  of an Apsaras, ; of a daughter of Meru and wife of Ilavrita.
(The above seem to be derived meaning) 


கொடியாவது, படர்தல் உடையது.  தாவர வகையைச் சேர்ந்தது.

இலை " தருவது" கொடி. தருதல் இங்கு வளரும் இடமாகிய கொடி  குறித்தது.  கொடிக்கு வேண்டிய உணவினை இலை உண்டாக்கி ஊட்டுகிறது.    



இலை + தா =  இல +தா  =  இலதா = லதா.


இலையைத் தருவது கொடி.  எனவே லதா என்பது கொடி குறித்தது.  இது காரணப் பெயர்.(காரண இடுகுறி )

இலைதா என்பது  இலதா  என்றானது ஐகாரக்குறுக்கம்.


இகரம் வீழ்ந்து லதா என்றானது இயல்பே ஆகும். தலை இழந்த சொற்கள் பற்றி முன்னரே கவனித்துள்ளோம்.


தமிழ் மூலம்.


இலை   பேச்சில்  "எல "   என்பர்.


freedom of press in the mortuary

19 Jan  While the late Yao Beina ................. members of the mainland media have recently been slammed for sneaking into the hospital mortuary to take photos of her lifeless body.
As reported on South China Morning Post, Yao's family recently alleged that three reporters from a Shenzhen newspaper have disguised themselves as medical staff at the Shenzhen's Peking University Hospital to take photographs of the late singer.
Yao's manager, Yuan Tao, revealed that the journalists were complaining about having their 'freedom of press' restricted when the family objected to the publishing of the photos.
Journalists slammed for photographing the late Yao Beina

தீயின்றி .......... மனம் வேகும்

தீயின்றி வேம்தமியோர் சிந்தை;  செழுந்தேறல்
வாயின்றி மஞ்ஞை மகிழ்தூங்கும்  ---  வாயிலார்
இன்றிச் சிலர் ஊடல் தீர்ந்தார்; அமர்கின்றி
கன்றிச் சிலைவளைக்கும் கார்.

தமியோர் சிந்தை =  தனிமையில் (வாடுவோரின் )  மனம்.
தீயின்றி வேம்  =  நெருப்பு இல்லாமலே வேகுவதாம்.
 செழுந்தேறல்  வாயின்றி =  வளமான  குடி பானம் வாய்ச் சேர்தல் இல்லாமலேயே,

மஞ்ஞை  -  மயில்கள்,  மகிழ்தூங்கும்  =  மகிழ்ந்து தூங்கும்; (ஆடும்  என்பர் )
வாயிலார் இன்றி  =   இடைச் செல்பவர் யாரும் இன்றியே,
http://sivamaalaa.blogspot.com/2015/01/blog-post_18.html  meaning of  வாயிலார்.
சிலர் ஊடல் தீர்ந்தார் = சில( காதல)ர் ஊடுதலை விடுவர்;
அமர்கின்றி  =  போர் இல்லாமலேயே, அமர் = போர். அமர்த்தல் - to be at strife.
அமர்தல் : to be engaged.  அமர்கின்றி = அமர் + கு+ இன்றி.
கார். =  கார்மேகமானது;
கன்றி  = சினந்து;
ஒப்பீடு:  கனலுதல் -  சினத்தல். கன் > கனல் .  (கன்றுதல் - சினத்தல் )
Some dictionaries may have omitted this word.  கன்றி  : வினை எச்சம்.
சிலை வளைக்கும் = வான வில்லை வளைக்கும்.

இது தண்டியலங்காரம் என்ற நூலில் உள்ள பாட்டு.  பிறிதாராய்ச்சி அணிக்கு ஓர்  எடுத்துக்காட்டு.  இயற்கையில் நடைபெறும் நிகழ்வுகள்  ஒவ்வொன்றுக்கும் ஏதேனும் ஒரு காரணம் இருக்கலாம். நாம் அதனை அறியாமலும் இருக்கலாம். கவிஞன் இவற்றுக்குத்  தன்  கற்பனையின் மூலம் இட்டுக்கட்டி உரைப்பதே இவ்வணியாகும்.


தீ இன்றி வேகுவது எது ? தனிமைத்  துன்பம் உழந்தார் மனம்.  தனியவர்  மனம் வேகுதல் கற்பனை.  கவலை , ஏக்கம்  இருக்கலாம். தீயில் போல் வேகுதல் கற்பனை.  ஏக்கம் வேறு; வேகுதல் வேறு; இரண்டும்  ஒப்பிடப்படுகிறது. தீயின் சுட்டெரிக்கும் தன்மை தனிமைத்துன்பத்தின் பால் கொண்டு ஏற்றப்படுகிறது.

இங்ஙனமே பிறவும். இப்பாடல் சுவை நுகர்க .

Ilayaraja legal notice to a film director

Blames the director for remixing his composition without permission

Music director Ilayaraja has sent a legal notice to director Shankar for “remixing and rearranging” his composition, Ooru Vittu Ooru Vandhu song, in the recently released film Kappal without permission and in violation of copyrights.
Full story in Hindu news.

திங்கள், 19 ஜனவரி, 2015

No Indian American, Just American please

Asserting that he didn’t believe in hyphenated identities, Louisiana Governor Bobby Jindal has said that his parents came to the U.S. from India four decades ago to become Americans and not Indian-Americans.
He invoked his ethnic heritage to make a call for immigrant assimilation and called people who talked about skin pigmentation as the “most dim-witted lot” around.
“My parents came in search of the American Dream, and they caught it. To them, America was not so much a place, it was an idea. My dad and mom told my brother and me that we came to America to be Americans. Not Indian-Americans, simply Americans,” Mr. Jindal said in a prepared remarks that he is scheduled to deliver next week.
Mr. Jindal, the first Indian-American Governor of any American state, is scheduled to address the Henry Jackson Society on Monday in London.
Releasing the prepared remarks of Mr. Jindal’s speech, his office said the Louisiana Governor will call for immigrant assimilation to strengthen countries and protect freedom.
“If we wanted to be Indians, we would have stayed in India. It’s not that they are embarrassed to be from India, they love India. But they came to America because they were looking for greater opportunity and freedom,” Mr. Jindal said, explaining the reason why he does not like to be called or described as an Indian-American.
“I do not believe in hyphenated Americans. This view gets me into some trouble with the media back home. They like to refer to Indian-Americans, Irish-Americans, African-Americans, Italian-Americans, Mexican-Americans, and all the rest. To be clear — I am not suggesting for one second that people should be shy or embarrassed about their ethnic heritage,” he said.
“I am explicitly saying that it is completely reasonable for nations to discriminate between allowing people into their country who want to embrace their culture, or allowing people into their country who want to destroy their culture, or establish a separate culture within,” he said.
“It is completely reasonable and even necessary for a sovereign nation to discriminate between people who want to join them and people who want to divide them. And immigration policy should have nothing at all to do with the colour of anyone’s skin. I find people who care about skin pigmentation to be the most dim-witted lot around. I want nothing to do with that,” he said.
Mr. Jindal said his objective in this speech is to speak clearly about what he believes to be America’s proper role in international affairs; to speak bluntly about the nature of the threats being faced and the recent tragic events in France; and to suggest what he think is the way forward.
“The first step for America, and for any nation that wants to protect its own freedom and encourage it everywhere is to have a strong economy. When the United States became a major economic power at the end of the 19th century, it had the means to become a major military power and to become a leader in the free world,” Mr. Jindal said.
The Governor said the first tenet of American foreign policy must always be freedom, and the relentless pursuit of freedom for our people, and for all people, regardless of race, creed, religion, ethnicity, or any other artificial divisions, which humans use to divide one from another.
“America must always be a beacon of freedom throughout the world. I’m not naive enough to suggest that the entire world will ever be free, but I’m also completely opposed to ever giving up on the notion that all people everywhere in the world deserve and desire to be free,” he said.
“The next principle is of course security. America must and will pay any price to defend itself and to defend its allies. No two countries are the same, but those countries that value freedom and democracy and civility and decency must band together, and must defend each other,” he said.
“Those countries that desire security and harbour no ill—will toward their neighbours must stick together in an increasingly dangerous world. The third principle that is crucial is truth. We must speak the truth, to each other, and to our own countrymen,” he said.
“When a country or a movement is behaving badly on the international stage, we must not pretend otherwise. You cannot remedy a problem if you will not name it and define it. One of the most prominent examples in our day is ISIS and all forms of radical Islam. These people have no legitimate claim, they have no justification for their cowardly, barbaric, and inhuman behaviour, and we must not pretend otherwise,” Mr. Jindal said.

உண்பதற் கொன்று மிலாதவர்

உண்பதற் கொன்று மிலாதவர் தம்மை நினைந்துவிட்டால்
நண்பரும் நாட்டினிற் பல்லோர் தமரும்  எறியுணவைக்
கண்ணுறுங் காலை கழறவும் நாவிற் கெதுவுமுண்டோ
புண்படு நெஞ்சிற் புதைந்தது மேலெழப் போக்கிலையே