புதன், 31 டிசம்பர், 2025

புத்தாண்டே வருக வருக.

புரண்டுவரும் செல்வங்கள் பொன்னும் மணியும்

இரண்டா  யிரத்திருபத் தாறில் ----- திரண்டுவரும்

இம்மா நிலம்படைத்த    இன்தெய்வம் ஆசிதர

நன்மா நிலம்செழிக்கும்  நாள்.


இது புத்தாண்டை வரவேற்கும்  நேரிசை வெண்பா .

பொன்னும் மணியும் புரண்டுவரும் செல்வங்களும்  இந்த 26-ம்  ஆண்டில்

செறிந்து வரும் என்று இப்பாடல் வாழ்த்துகிறது.  இதற்கான  ஆசிகளை  

கடவுள் கொடுப்பார். குற்றம் முதலிய மிக்கில்லாத நாடுகள் தமக்கு இந்த 

புத்தாண்டு நாள் வளம் தருவதாகும். புத்தாண்டு நாளையும் சிறப்பித்தவாறு. 


சிவமாலா.

திங்கள், 29 டிசம்பர், 2025

இலாயக்கு

தமிழர் நாகரிகத்தில் இல்லமும் அதனுடன் தொடர்புபட்ட பொருள்களும்  முதன்மை வாய்ந்தன ஆகும்.  புறத்தனவாய் வாழ்வில் இணைவனவினும்  அகத்தனவாய் மிளிர்வனவே மிக்க விரிவுடையன  ஆகும். சங்கத் தொகை நூல்களில்  அகவொழுக்கமே மிக்க விரிவாக விளக்கப்படுகிறது. காதலித்து மணம் புரிந்துகொண்டு வீட்டுடன் வாழும் வாழ்வே தமிழன் விரும்பிய முழுமையான வாழ்வு ஆகும்.  புறவாழ்வின் வெற்றியும் விரிவேகமும் அகவாழ்வினை அமைத்துக்கொள்ள உதவினவே  ஆகும்.

இலாயக்கு என்ற பேச்சுவழக்குச் சொல்.  அகவாழ்வில் அவன் அடைந்த அமைதியினை நன்கு உணர்ந்துகொள்ள உதவிடும் வழக்குச் சொற்களில் சிறந்த ஒன்றாகும். இலாயக்கு என்பதைப் பிரித்துப் பார்த்தால்.  அகவாழ்வுக்கு உடையவை என்ற  கருத்து  மேலெழுந்து நிற்பதனை அறியமுடிகிறது.

இலாயக்கு என்ற  சொல் இன்று தலையிழந்து,  லாயக்கு என்றே வழங்குகிறது. இந்தச் சொல்  மூன்று பகவுகளை உடையதாய் உள்ளது.  இந்தப் பகவுகளை ஒவ்வொன்றாக அறிந்து இன்புறுவோம்.  இல்,  ஆய்,  அ, அக்கு என்பன இவை. இல்லத்துக்கு ஆன உரிமையை அடையாதவை,  ஒன்றுக்கும் தகுதி இல்லாதவை  ஆகும். ஆகவே உரிமை உடையவை என்பதைக் குறிக்க '' இலாயக்கு'' என்ற சொல் வழங்குகிறது.

இக்காலத்தில் உதவாதவற்றைக் குறிக்கவரும்போதுதான்  தகுதி என்ற பொருளில் லாயக்கு என்பது வழங்குகிறது.  '' இ--லாயக்கு இல்லை'' என்று இச்சொல் வந்துவிடுகிறது.

அக்கு என்பது சொல்லின் இறுதிப் பகவு  ஆகும்.  அக்கு என்றால் உரிமை.  இந்தச் சொல் நெடுங்காலமாக ஓர் இணைத் தொடரில் பொதிந்துள்ளதைக் காணலாம்.  இச்சொல்லுக்கு உரிமை என்ற பொருள் எவ்வாறு வந்துற்றதென்பதை கண்டுகொள்வோம்.   அக்கு என்ற சொல்லில் இரண்டு மிக்கப் பழந்தமிழ்ச் சொற்கள் உள்ளன. எவை எனில்   ''அ'' (அவை) என்னும் சுட்டுச்சொல்லும் கு என்ற சேர்வு குறிக்கும் சொல்லுமாகும்.  சென்னைக்குச் சென்றான் என்ற வாக்கியத்தில் வரும் கு என்னும் சொல் சேர்தலைக் குறிக்கும் சொல். அக்கு என்பதில்   இவை இரண்டும் அதற்குச் சேர்ந்தது என்ற பொருள்தரவே,  ''உரிமை'' என்ற பொருள்  போதருகிறது.  அக்கு வேறு ஆணிவேறாகக் கழன்றது என்ற வாக்கியத்தில்,  உரியன வேறு,  அல்லாதன வேறாகக் கழன்றுவிட்டது  என்ற் பொருள் கிட்டுகிறது. புல்லுக் கட்டில்,  உரியவை  புல்லும் தழையும்.  கயிறு  மாட்டுக்கு உணவாகாத வெளிப்பொருள் ஆகும்.

இல் -  இல்லிற்கு என்று பொருள்தரும். ஆய் -  ஆக என்று பொருள்.  அ -  சேர்ந்தன என்று பொருள்.  

இலாயக்கு என்றால்  இல்லாத்திற்கான உரிமை என்று பொருள்.

இச்சொல் முன்னாளில் வீட்டுக்குத் தேவை என்பது குறித்து, பின் இல்லாதவை என்ற சொல்லால் அவ்வுரிமை இல்லாதவை என்று பொருள் தந்தது.

இது அரபிச்சொல் என்று கொள்ளப்பட்டிருப்பினும் தமிழில்  இருந்த இந்த வழக்குச்சொல்,  பின்னர் அரபியர்களால் பெரிதும் கொள்ளப்பட்டிருக்கவேண்டும் என்று தெரிகிறது.  .  சில தமிழ்ச்சொற்கள் வெளிநாட்டினரால்  விரும்பி வழங்கப்படுகின்றது..  கடித்துக்கொள்வதற்கான உணவு என்ற பொருள்தரும் ''கறி''.  இன்று உலகப்புகழ் பெற்ற சொல்லாகி விட்டது

இலாயக்கு என்பது தமிழாகவும்  ''லாயக்''  என்பது தொடர்பற்ற சொல்லாகவும் ஓர் உடனிகழ்வு  காரணமாக (coincidence)  ஒலியொற்றுமை உடையனவாக இருக்கின்றன என்பதாகவுக் கூறலாம்.  ''லாயக்'' என்பதன் அடிச்சொற்கள் அரபியில் ஆய்வுக்குரியது ஆகும். இலாயக்கு என்பது தமிழ் என்பதில் ஐயமில்லை.

அரபியில் லாயக்  என்றால் பொருத்தமானது. தமிழில் இலாயக்கு என்றால் இல்லத்துக்கு உரிமையானது அல்லது வேண்டப்படுவது என்பது. பொருள்வேற்றுமை சிறிது உள்ளது.  அடிச்சொற்கள் அரபியில் வேறு. (عدم اللّياقة)

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

.பகிர்வுரிமை





அக்கு -  உரிமை.

இல் -   இல்லலம்  உரி

ஆய்  ஆய் - உரிமை



வெள்ளி, 26 டிசம்பர், 2025

சூடு இயல்விக்கும் விண்கருவி சூரியன் ஆன தமிழ்மொழிப்பண்பு

 அடு மற்றும் அரு என்ற இருசொற்களையும் முதலில் எடுத்துக்கொள்வோம். அடுத்தல் என்றால் அருகிற் செல்லுதல்.  அருகுவைத்தல் என்றால் சூடு ஏற்றும்  ஒரு சட்டியையோ மற்ற வெப்பமேற்றியையோ அடுத்து வைத்தல் என்று பொருள்.  குழந்தைக்கு இசிவு வரும்போது இது செய்யப்படுகிறது. இதுபோழ்து இதற்கு மின்னாற்றலால் இயங்கும் கருவிகள் ஏற்பட்டுவிட்டன. அருகுவைத்தல் என்பது இப்போது யாருக்கும் நினைவிலிருக்கும் என்று யாம் நினைக்கவில்லை. அதற்கான ஆங்கில மருத்துவச்சொல் வழங்கிக்கொண்டிருக்கும். சூரியன் எத்துணைக்கல் தொலைவி லிருந்தாலும். அருகிலிருப்பவன் போல் நமக்கு வெப்பமளிப்பதால்,  அவனுக்கு ''அருக்கர்''  என்ற பெயரும் ஏற்பட்டிருக்கிறது.  அருகு+ அர்>  அருக்கர் என்ற பெயர் உள்ளது.. சிலம்பு+ அதிகாரம் >  சில்ப்பதிகாரம் என்று பெயர் ஏற்பட்டதுபோல் இது ஒரு வலித்தல் விகாரம். மிகு+ ஆர்+ அம் > விகாரம் என்றாகும்.  மிஞ்சு> விஞ்சு என்று திரிதல்போல் விகாரம் இது.. 

உடு - உரு என்ற இணையும் இத்தகு பொருளணுக்கத்தை முன்நிறுத்தும்.  சொற்கள் வெவ்வேறு விகுதிகளைப் பெற்றுச் சொல்லமைந்தாலும்,  பகுதிகளையே ஒப்புநோக்கி இதை உணர்ந்துகொள்க. உடு > உடல்,  உரு- உருவம் என்பன காண்க. பொருள் சற்று வேறுபடுதல்,  ஒப்புமை எவ்வாறு எழுமென்பதைத் தெளிவாக்குகிறது. மனிதன் உருவிற்கு உடை அணிவிக்கப்படுகிறது.  உரு என்பது உடலின் புறக்காட்சி;  உடை என்பதும் புறக்காட்சிக்கு உதவுவதே  ஆகும்.  தமிழ்மொழிக்கு ஒரு சொல்லாக்கப் பண்பு மேவுவது  இதன்மூலம் தெளிவுபடுத்தப் படுகிறது.

மடி - மரி என்பன டகர ரகர திரிபியலுக்கு எடுத்துக்காட்டப் பெறும் ஒரு சிறந்த உதாரணம் ஆகும்.  இவை பொருத்தமான விகுதிகளைப் பெறும்,  மடிதல், மரித்தல் என்பவற்றில் ஒன்றில் வலிமிகாதும் இன்னொன்றில் வலிமிக்கும் வரும்.  மரிதல் என்ற சொல் அமையவில்லை போலும்.  அதற்குப் பதிலாக, மருவுதல் என்ற வினைச்சொல் அமைந்துள்ளது. மடிதல், மரித்தல் இன்னும் மருவுதல் ஆகிய எல்லாம் மாறுதல் கருத்துக்கள் என்ற அளவில் ஒருமைப்பாடு உடையவை. இங்கு நாம் இத்துணை சொல்லமைப்புப் பண்புகளை எடுத்துக் காட்ட வேண்டியதில்லை. இவற்றுக்குள் செல்லாமலே,  ஒரு சொல் திரிபைக் காட்டிவிட்டு,  சூடியன் - சூரியன் என்பதைக் காட்டலாம்.  அது போதுமானதாகவே இருக்கும் என்றாலும்,  சிறிது அதிகச் சர்க்கரையை இங்கு தந்துள்ளோம்.

சூடு தருவதே சூரியனின் வேலை.  இது ஒரு நாட்டுப்புற வழக்கி லிருந்து வந்த ஒரு சொல்.  வெப்பி என்று பெயரைக் கூட வைத்திருக்கலாம்.  வழக்குப் பெற்றுவிடுமாயில் மொழியில் இடம்பெற்றுவிடும். சூடு கொளுத்தினும்  கொளுத்தி என்றும் அமையவில்லை. கொளுக்கி என்ற பெயர் கொளுவிக்கு அமைந்தது.   கொளுக்கி என்பது இடைக்குறையாய் கொக்கி என்று வந்தது.  இவை வேறு பொருட்களுக்கு அமைந்தன.

சூரியனுக்கு அமைந்த பெயர்கள் பல.  அவை நீங்கள் அறிந்தவை.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை














சிப்பந்தி

 பலர் உண்ணும்  அமர்வூட்டு முறையை,  பந்தி என்று சொல்கிறோம்.  இந்தப்  பந்தி என்ற சொல்லினை,  நம் பவணந்தியாரின் முறையைக் கையாண்டு பிரித்துப் பார்த்தால்,  எளிதிற் பொருள்கண்டு மகிழ்வினை எய்தலாம்.  சொல்லினை ஆய்வுசெய்கையில் மகிழ்வு அடைந்துகொள்வது,  மனப்பதிவு ஆய்வு முறைக்கு வித்திடும் என்று எதிர்க்கலாகாது.. எதைச் செய்தாலும் செய்வதில் மகிழ்வு கொள்ளுதல் என்பது ஒரு பங்காற்று முறையாகும்.  

பன்மை+ தி >  பன்+தி >  பந்தி என்று எளிதாக அமைத்துக் காண்க.  மைவிகுதி இணைத்து விலக்கிப் புணர்த்துவது பவணந்தியார் பண்புப்பெயர்கள் அமைவதற்குச் சொன்ன முறை.  இங்கு எளிதிலுணர்தல் என்ற பெறுதல்முறைக்காக இதைப் பரிந்துரை செய்கிறோம்.

பல வேலைத் தலங்களில் ஊழியர் பலர் இந்நாளில் வேலையிலிருப்பர்.  இவர்கள் பெரும்பாலும் பலராயிருக்கும் சிறிய வேலைக்காரர்கள் தாம். சிறு வேலைக்காரர்கள் என்பது தோன்றும் வண்ணம் சிறு என்பதை முன்னில் இட்டு,  சிறுப்பந்தி என்று இணைத்தால் சிறுவேலைப் பலர் என்று பொருந்தும். சிறுப்பந்தி என்பதற்கு  சிற்பந்தி என்று போட்டு,  இன்னும் எளிமையாக்கி, சிப்பந்தி என்று ஆக்கிவிட்டால் என்ன?  வேலை எளிதில் முடிந்து ஒரு புதுச்சொல்லும் கிட்டிவிட்டது.

இயற்றமிழின் இனிமை கண்ட புலவர்-- இதனை ---பகுதிச் சொல்லை மிக்கக் கடிய முறையில் வெட்டி எடுத்துச் சொல்லை இயற்றுவதை,-------  இயற்றமிழ்ப் புலவர்கள் விரும்பார். அவர்களுக்கும் எரிச்சலின்றிச் சொல்லாக்குதல் கடனாகும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை












செவ்வாய், 23 டிசம்பர், 2025

தனயன் என்பதும் மற்றும் சமஸ்கிருத மொழிப்பண்பும்

 ஐகாரம் இடையில் வந்த சொற்கள் சில,  அந்த ஐகாரம் அகரமாக மாறிவரும். இது ஒரு குறுக்கம்.   சொல்லாக்கத்தில் மட்டுமன்று,  கவிதையிலும் இத்தகு குறுக்கங்கள் வரும்.  இன்னும் பேச்சு வழக்கிலும் ஐகாரம் இடையில் நிற்கும் சொற்கள் அந்த ஐகாரம் அகரமாகத் திரியும்.  வடையில் எண்ணெய் அதிகம் என்பது வடயில் எண்ணெய் என்பதுபோல் ஒலிக்கும்.  டை என்பது ட ஆயினும்  கெடுதல் இல்லாமல் தோன்றும்.

தனையன் என்ற சொல்  தன் ஐயன் என்ற இருசொற்கள் புணர்ந்து ஏற்பட்டிருந்தாலும்  தனயன் என்பதுபோல் ஒலித்து.  சம ஒலியாகத் திகழும். தனையன் என்ற சொல்லும் தனயன் என்று திரித்து எழுதப்பெறுவதும் நடைபெறும்.

தனயன் என்பது சமஸ்கிருதமா என்றால்,  ஆம் என்று சொல்லலாம்.  ஏன் என்றால் இவ்விரண்டு வடிவங்களும் பெரிய வேறுபாடு எதுவும் இல்லாதவையாகவே  தோன்றுகின்றன.  பேச்சில் இவ்வாறு  திரிந்து ஒலித்தால் கண்டுபிடிக்கவே முடிவதில்லை.  பேசுகிறவன் ஐகாரத்துக்கு உள்ளது ஒலிக்கும் நேரத்தில் குறுக்கம் விளைந்ததை அறியாமலேகூடப் பேசுகிறான்.  நெடுங்காலமாக் இப்படித் திரிந்து வழங்குவதால் தனயன் என்பதே சரி,  தனையன் அதன் திரிபு என்றுகூடத் துணிந்துவிடுகிறான்.

சங்கதம் என்பது சமஸ்கிருதத்துக்கு மற்றொரு பெயர்.   கதம் என்ற இரண்டாவது பகவு,  கத்து என்பதிலிருந்து வருகிறது.  கத்துதல்  என்றால் ஒலி செய்தல். கத்து என்ற பகுதி  கது என்று ஆனபின்,  அம் விகுதி பெற்றுக் கதம் ஆகிறது. சங்கதம் என்றால்  சமமான ஒலி என்று பொருள்.  இப்போது இந்தப் பொருள் மிகச் சரியானதாக உள்ளது என்பதை நீங்கள் அறிந்து இன்புறலாம். இம்மொழிக்குச் சரியாகவே பெயர் வைத்திருக்கிறார்கள். ''சமஸ்`¬ கிருதம்'' என்பதற்கும் அதுவே பொருள். ஆனால் வெள்ளைக்கர ஆய்வாளன் '' நன்றாகச் செய்யப்பட்டது'' என்று பொருள் கூறினான்.

தன் ஐயன் என்பதே தனயன் ஆகிவிட்டது. மகனை அப்பா என்று அழைக்கிறவர்களும் உள்ளனர். அப்பாகவே இல்லாத ஒருவனை '' அட என்னப்பா இது''  என்று குறித்துப் பேசுவதும் காணலாம். பல மலைகள் ஏறித் தவமிருந்து பெற்ற மகனை மிக்க அன்புடன்  ஐயன் என்று சொல்வோரும் உளர்.  அண்ணனை ஐயன் என்போரும் உள்ளனர். தனையன் என்பது அன்பினால் அமைந்த சொல் ஆகும்.  ஐயன் என்றால் தலைவன் என்பதே பொருள் ஆகும். ஐயா என்பது இன்று பெரியோரைக் குறித்த போதும்  அது ஐயன் என்ற சொல்லின் விளிவடிவம்தான்.

சமஸ்கிருதம் என்பது வெளிநாட்டிலிருந்து வந்த மொழியன்று.  உள்நாட்டில் தோன்றிச் செறிந்து வழங்கிய மொழிதான். ஆதலால் தனயன் என்பது தமிழ்தான்.  சமஸ்கிருதமும்  ஆகலாம். சம ஒலி மொழிச் சொல். நாளடைவில் சமஸ்கிருதம் என்ற பொருள் மறையும்படி  விரிந்து வளமடைந்தது.  பலசொற்கள் இன்று சம ஒலி  அல்லாதனவாய்த் தோன்றலாம்.  அஃது பிற்பாடு விளைந்த மாயை ஆகும். இந்தோ ஐரோப்பியம் என்பது வெள்ளைக்காரன் பிற்பாடு ஏற்படுத்திய இன்னொரு மாயை.  

தன் + ஐயன் >  தன்னையன் >  தனையன் > தனயன்> தநயன்.

இன்னொரு வகையில்:

தன் + நயம்>  தன் நயன்> தநயன்> தனயன்

அப்பன் பெரிதும் விரும்புவதால் மகன் நயமுடையவனாகிறான்.

தனக்கு நயம் சேர்ப்பவன் மகன்.

மகனை உயரியோனாய் அப்பன் போற்றுவான் என்பதும் காண்க.

துவட்டா ஈன்ற தனயன் ( திருவிளையாடற்புராணம். இந்திரன்பழி.8)

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உடையது











வெள்ளி, 19 டிசம்பர், 2025

கணம் (சொல்), வெகுளி என்பவை

 இதனை வாருங்கள் ஆராய்வோம்..

''குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி 

கணமேயும் காத்தல் அரிது''  

என்பது குறள். வெகுளி என்ற சொல்,  சொல்லாய்வில் ஓர் ஆய்வுக்கு அருமையான சொல்லுமாகும்.  இதன் மூல வினைச்சொல்  வேகுதல் என்பது.  வேகு> வெகு> வெகுள்>  வெகுளி என்று அமைந்துற்ற சொல்லாகும். உள் என்ற விகுதி வினையாக்கத்திலும் வருமென்பதை இதனால் அறிந்துகொள்ளலாம். கடத்தல் (தாண்டிச்செல்லுதல் என்று பொருள்படும் வினை) என்பதிலிருந்து,  கடவுள் என்ற சொல் உள் விகுதிபெற்று அமைந்துள்ளதைக் காணலாம். வெகுள் என்பது ஒரு வினையிலிருந்து இன்னொரு வினை உண்டாக உதவுகிறது. இது வெகு+ உள்> வெகுள் என்று அமைந்தது.  சுரு என்ற அடிச்சொல்லிலிருந்து  சுருங்கு,  சுருள் என்ற வினைகள் உண்டாயின.  இவற்றில் சுரு+ உள் > சுருள் ஆகும். சுர்> சுரு.  சுர் என்பதே மூல அடி ஆகும்.  சுரிதல் என்ற வினையும் உள்ளது. சுரிதலாவது சுருங்கி உள்வாங்குதல் என்று விளக்கலாம். சுரிந்தோடும் நாகம் என்று ஒரு கவிதையில் எழுதியது நினைவுக்கு வருகிறது.

வெகுளி என்பது கோபம் ஆகும். வெகுளிக்காரன், வெகுளிப்பெண் என்ற சொற்பயன்பாடுகளும் உள.  கள்ளம் கபடு இல்லாத குணத்தினர் என்ற பொருளில் இவை வரும்.

கணம் என்ற சொல் கண்ணிமைக்கும் பெழுது அல்லது நேரம் என்று பொருள்படும்.  கண்ணிமைப் பொழுது ஆதலால்,  கண்+ அம் > கணம் என்றானது இந்தச் சொல்.  கண் இமைத்தலால் அமையும் நேரம் ஆதலின்  கண் அம் என்பவற்றால் ஆயிற்று இச்சொல்.  அம் என்பது அமைத்தல் என்பதன்  அடிச்சொல். இங்கு இது விகுதியாக வந்து  அமைத்தலை உணர்த்துகிறது.

சிலவிடத்து, விகுதி பொருளோடு இலங்குதலும் உளது.  பொருளில்லாத விகுதிகளும் உள.

ககரத் தொடக்கத்துச் சொல்,  சகரத் தொடக்கமாகவும் வரும். கணம்>  சணம் ஆனது ககர சகரத் திரிபு.   சேரல்>  சேரலம் > கேரளம் என்பதில் இவ்வாறே  ஆனது.

கணம்> சணம் என்பது பின்னும் முன்னேறி,  க்ஷணம் என்றுமானது. கணமென்பது மூலத் தமிழ்ச்சொல்  ஆகும்.  

சமஸ்கிருதம் என்பதன் பொருள்.

(க்ஷணம் என்னும் சமஸ்கிருதம்)

சமஸ்கிருதம் என்ற சொல்லில் சமம், கதம் என்ற சொற்பகவுகள் உள்ளன.  கதம் என்பது ஒலி.  கத்> கதம். கத்> கத்து என்பதில் ஒலி எழுப்புதல் பொருள். கத்> கதறு என்பதிலும் ஒலியே முன்மை அல்லது முதன்மை பெற்றது. கத்> கது> காது என்று முதனிலை திரிந்து சொல்லமையும்.  காதால் கேட்டறியும் நிகழ்வு கூறுதல் கதை ஆனது.  இது பின் முதல் நீண்டு காதை ஆனது.  காதை என்பது கீதை ஆனது  செவிக்கதை என்று பொருள்தரும்.  இது சொல்லாக்க மூலப் பொருள். கதம் என்பது கிருதம் என்று திரியும்..  சமஸ்கிருதம் என்றால் மூலத்துடன் சமமான ஒலி உடையதாகிய மொழி என்று பொருள். இதற்கு வெள்ளைக்காரன் ''நன்றாகப் புனையப்பட்டது'' என்று பொருள் சொல்லுவான்.  எதுவும் கெடுதலாகப் புனையப்படவில்லை,  எல்லாம் நன்றாகவே செய்யப்பட்டுள்ளது.  கணம் என்பது க்ஷணம் ஆனதில் ஒலிமேம்பாடு,  பிற தேயத்தாருக்கு உரியபடி செய்யப்பட்டுள்ளது. ஒலி மேம்பாட்டினால் சமஸ்கிருதமான சொல் க்ஷணம் என்ற சொல் ஆகுமென உணர்க.  இதனால் கண் என்ற மூலச்சொல்லுக்கு எந்தக் குறைவும் இல்லை.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

பகிர்வுரிமை உடையது.




https://r.search.yahoo.com/_ylt=Awr1Te0riUZpJgIAFisj4gt.;_ylu=Y29sbwNzZzMEcG9zAzQEdnRpZAMEc2VjA3Ny/RV=2/RE=1767439916/RO=10/RU=https%3a%2f%2fwww.lexilogos.com%2fenglish%2fsanskrit_dictionary.htm/RK=2/RS=R8a0L2BoRel.nB5KCNvPw811C0s-









செவ்வாய், 16 டிசம்பர், 2025

மத்தியம் என்ற சொல்.

 இந்தச் சொல்,  எவ்வாறு அமைகிறது?  

தமிழில் இதற்குப் பல சொற்கள் வழங்குகின்றன.  நடு என்பது சுற்றிலும் ஒத்த தொலைவுடைய இடமே  ஆகும்.  இதற்குக் கேந்திரம் என்ற சொல்லும் வழங்குகின்றது. 

நடுவான ஓரிடத்திலிருந்து ஒலி எழுப்பினால்  ( கத்தினால்),  அஃது ஏறத்தாழச் சுற்றுவட்டத்தில் உள்ளவர்களுக்கு நன்கு கேட்கும். உறவினர்கள், தொலைவில் இல்லாமல் ( அருகில் ) இருப்பவர்கள். நடு என்பதன் முன்னுள்ள வடிவம் நள் என்பது.  இதுவும் அருகிலுள்ளோர் என்பதைக் காட்டும். கேள் என்ற சொல்லும் உறவினரைக் குறிக்கும்.  கேளிர் என்றால் உறவினர்.  ஆதலால் ஒலி சென்றடையும் தொலைவும் உறவினரும் ஒப்பிட்டு உணரப்பட்டனர்.  நடு என்ற பொருள் உள்ள நள்,  நண்-,  நண்பு,  நண்பர் என்றெல்லாம் அமைவதைக் காணலாம். நண்பு என்ற மெல்லினம் வந்த சொல்,  வல்லினம் வந்த நட்பு என்ற படி  வந்து  அண்மையில் இருந்து அன்புகொள்வோர் என்பதைக் காட்டுகிறது.

நள்தல்,  நளுதல், நள்ளுதல் மற்றும் நடுதல் என்ற சொல் வடிவங்களையும் காண்க.

கேளிர் உறவால் அருகிலிருப்போர்.  இது ஓர் உவமையால் அமைவது.  கேள், கேண்-,  கேண்திறம்>  கேந்திரம் என்பது இதனால்தான் நடுவைக் குறித்தது.  கேந்திரம் என்பது திரிசொல். திரிசொற்களை முழுமையாகத் தவிர்த்துவிடுதல் இயலாது.  கூடுமானவரை இயற்சொற்களால பாடல்கள் அமைவதை விரும்பியவர்கள் தமிழர்.  தமிழை இயன்மொழி என்று பெருமிதம் கொண்டவர்கள் தமிழர். 

பந்து என்று பொருள்படும் கேள்> கேண்டு என்ற சொல்லிலும் இந்தச் சுற்றுப்பொருள் உள்ளது.   கேள்> கேண்> கேண்+து > கேண்டு  ஆகிறது. தமிழர் சுற்று, வட்ட,ம், நடு என்பவற்றை நன்கு உணர்ந்திருந்தனர்.

முற்காலத்தில் நடுவாக ஒரு முடி அல்லது முடிச்சை வைத்துச் சுற்றிலும்  கயிறு அல்லது அழுத்தமான நூல் சுற்றிப் பந்துகள் அமைக்கப்பட்டன. நடுவைப் பற்றி அல்லது சுற்றிச் செல்லுமாறு வைத்துப் பந்துகள் அமைவுற்றதால் பல்> பன்>பன்+து> பந்து என்று சொல் அமைந்தது.   இதைச் சுருக்கமாகப்  பல்+து > பந்து என்னலாம்.  பல்+து> பற்று என்றும் வரும்.   நம் வாயிலுள்ள பற்கள், ஈறுகளைப் பற்றி நிற்பனவாதலால் ''பல்''  என்று பெயர்பெற்றன. பழங்காலத்து,  தேய்வகப்  ( rubber)  பந்துகள் இல்லை. இதை அறியாதான், பந்து என்பது தமிழ்ச்சொல் என்று அறியான்.

நடு என்பது சுற்றுவட்டதைத் தழுவி நிற்கிறது. தழுவி நிற்றலாவது, மருவி நிற்றல்.  இரண்டிற்கும் பொருண்மை ஒன்றாககவே பொலியக் காணலாம். ஆகவே மத்தியம் என்ற சொல் இவ்வாறு அமைந்தது.

மரு> மருத்து> (இடைக்குறைந்து) > மத்து.  நடுவில் வைத்துச் சிலுப்பித் தயிர் கடைவர்.  பருப்பும் கடைவர்.  ( சுற்றுவட்டம் அனைத்தையும் நடுவிலது தழுவி நிற்கிறது, அல்லது மருவி நிற்கிறது.)

சுற்றுவட்டத்தை மருவி நிற்பது நடுதான்,  மருத்து> மத்து > மத்தியம். ( சுற்று வட்டத்தை மருவி இயல்வது என்று பொருள்.

மத்தியம் என்ற சொல் தமிழிலும் வழங்குகிறது,  சமஸ்கிருதத்துக்கு  ( இம்மொழிக்குச் சங்கதம் என்றும் பெயர்) உரிய சொல்  மத்தியம்..

சமஸ்கிருதத்தில் இன்னும் சுருக்கி, ''மத்ய''  என்று அமைத்தனர்.

மத்திய என்றால் சுற்றினை மருவி இயன்ற நடு என்று விரிக்க.

மரு என்பது ( மருவு - வினைச்சொல்),  சுற்றுவட்டத்தினை சமதொலைவில் மருவி நிற்பதான நடுவினது ஆகும்.

மத்தியம் என்பதன் தமிழினை அறிந்தீர்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு  பின்னர்.

பகிர்வுரிமை












சனி, 13 டிசம்பர், 2025

''துவஜம்'' என்ற வடசொல்லின் தமிழ்மூலம். ( ''கொடி'')

 துவசம்  ( துவஜம்) என்பது கொடி என்று பொருள்தரும்.  ஒரு மரத்தண்டில் கட்டி ஏற்றிப் பறக்கவிடுவதற்கான சீலையே  கொடி அல்லது துவஜம் என்று சொல்லப்படுகிறது. 

காற்று  வீசுகையில் அங்குமிங்கும் மடங்கி மடங்கி யாடுவதைக் காற்றில் துவளுதல் என்று சொல்வர்.  துவளுதல் என்பது வளைதற்கருத்து.

கொடிகள் பலவகை.  வெற்றியின்போது ஏற்றப்படுவது  வெற்றிக்கொடி.   அன்ன சத்திரத்தில் ஏற்றி  அறிவுறுத்துவதற்காக வைக்கப்படுவது  அன்னக்கொடி ஆகும்.  பசித்தோர் அங்குச் சென்று உணவு பெற்றுக்கொள்ளுவர். பெரும்பாலும் விலையின்றிப் பெறும் உணவு அதுவாகும்.

அழுக்குத் துணியைக் கழுவுவதற்கு அல்லது துவைப்பதற்கு ,  துவைத்தல் அல்லது தோய்த்தல் என்பதுண்டு.  சலத்தில் (ஜலத்தில்) வைத்துத் தூய்மை செய்வதால்  ''சலவை''  என்பதுண்டு.  சலசல என்ற ஒலியுடன் ஓடுவதால் சலம் என்ற தண்ணீரின் இன்னொரு பெயர்.. இது பின் ஜலம் ஆனது.    சலம் அல்லது ஜலம் என்பது ஒலிக்குறிப்பு  ஆதிய சொல். (ஓலிக்குறிபை ஆதியாக உடைய சொல்.  சலக்கிரீடை  ( ஜலக்கு இரு இடை) என்பது நீரின் இடையில் இருப்பது என்பதுதான்,   ஜலக்கு = ஜலத்திற்கு.  ( ஜலம்+ கு =  ஜலத்து + இல்+ கு), இங்கு அத்துச் சாரியையும், இல் என்னும் இடப்பொருட் சொல்லும் ( உருபு) ஜலக்கு என்பதில் விடுபாடு ஆகும்.  பின் கு+ இரு+ இடை என்பவை பிரிந்து தனியாயின. தலைக்கு வைப்பது தலைக்கிரீடம்.  தலைக்கு+ இரு+ இடம்= தலைக்கிரீடம்,  இது முதற்குறைந்து கிரீடம் ஆனது.

கிரீடம் என்பது ஒரு METANALYSIS.  பிறழ்பிரிப்பு.   இச்சொல் பின் தனிச்சொல் ஆனது.  மொழி இப்படியும் வளரும்.  இதை எவரும் உணர்ந்து எழுதியிருக்கவில்லை யானறிந்தமட்டும்.

துவளும் இயல்பினதான கொடி,  துவசம் என்றே வழங்கியது.  பின்னர் அது துவஜம் ஆயிற்று.  துணி என்ற சொல்,  அது துணித்துப் பயன் கொள்ளப்படுதலால் வந்த பெயர்.   துணித்தல் என்றால் வெட்டுதல்.  வேட்டி என்பது வெட்டு என்ற சொல்லால் உணடானதே.  முதனிலைத்  திரிபு.

துவஜம் என்பதற்கு மற்றுமொரு பெயர் வேண்டின்,  காற்றாடுசீலை என்று தனித்தமிழில் சொல்லலாம்.  அது துவசம் ( துவசு+அம்) என்பதே.சு  என்பதுவும் ஒரு தொழிற்பெயர் விகுதியே. பரிசு என்பதிற்போல.  பொருளின் வரவைப் பெறுவோன் வாரிசு.  வரு+ இ+ சு> வாரிசு.  இது ஒன்றும் உருது அல்ல..  உருது அதைத் தமிழிலிருந்து பெற்றுள்ளது.   மூலச்சசொற்கள் தமிழில் உள்ளவை.  வரு என்பது வாரி என்று வந்தது வியப்பில்லை.   வரு> வாரீர் என்று அமைவது காண்க. 

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

பகிர்வுரிமை



செவ்வாய், 9 டிசம்பர், 2025

யுத்தம் என்ற சொல்லில் தமிழ்ச் சொல்லாக்கப் பண்பு.

 யுத்தம் என்ற சொல் தொன்று தொட்டுத் தமிழில் வழங்கிவந்துள்ளது.  இது சங்க இலக்கியத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும்,  தமிழ் மூலத்தை உடைய சொல்லே

ஒருவனை அடிப்பதென்றால்  அவனுக்கு அடுத்து நில்லாமல் அவனை அடிக்க இயலாது.  இக்காலத்தில் 11000 கல்தொலைவுக்கு அப்பாலிருந்தும் ஓர் ஊரை அடித்துத் தூளாக்கலாம் என்று சொல்கிறோம்.  இத்தகைய கருத்துக்களும் அதற்கான ஆயுதங்களும் பண்டை இருக்கவில்லை. அடுத்துச் சென்றுதான் கையாலடித்து வலியை உண்டாக்குவது சொல் உண்டான காலத்தில் இருந்தது. ஆகவே தமிழை ஆயுங்கால் இதனைக் கருத்தில் கொள்ளவேண்டும். 

ஒருவனுடன் சண்டை செய்வதென்றாலும் அண்மிச் சென்றுதான் பெரும்பாலும் சண்டை இட்டார்கள்.  வில்லால்  தாக்குவதானாலும்,  ஓரளவுக்கு அண்மையில் இருக்கவே வேண்டும்.   சண்டை என்ற சொல்,  அண் என்ற அடிச்ச்சொல்லினின்று வருகிறது.  அண்> சண்> சண்டு> சண்டை என்று இச்சொல்  அமையும்.   அடி என்ற சொல்லில் இருக்கும் அடு> அடி என்பதிலுள்ள கருத்தே இங்கும் உள்ளது.  

இனி யுத்தம் என்ற சொல்லைப் பார்ப்போம்.  உத்தம் என்பதே இதன் முன் வடிவம் ஆகும்.  உ என்பது முன்னுறல் காட்டும் தமிழ்ச் சுட்டெழுத்து.  இது உன், உம் என்ற பதிற்சொல் திரிபுகளுடன் தொடர்புடையதாகும்.  தமிழை நன் கு கற்றிருந்தால் இது வாத்தியார் சொல்லிக்கொடுக்காமலே புரியக்கூடியது ஆகும். அகர  வருக்கங்கள் சகர வருக்கங்களாகும்,  இதுவும் அண்டை> சண்டை என்பது போலவேதான்.   எப்போதும் காட்டும் எளிதான உதாரணம்  அமணர் > சமணர் என்பது.  ஊகம் > யூகம் > வியூகம் என்பவும் காண்பீர்.  ஆனை > யானை என்பதில்,  அகர வருக்கங்கள் யகர வருக்கங்கள் ஆதல் கண்டுகொள்க.  முன்னுறலாகிய உத்தம் என்பதிலிருந்து யுத்தம் என்று திரிந்து  முன்னுறலையே சொல் காட்டுகிறது. முன்னுறல் என்பதும் அடுத்துச் செல்லுதலின் வேறன்று.

யாம் காண்பது இங்கு யாதெனின்,  அடுத்துறல் என்ற கருத்திலேதான் இச்சொற்கள் அமைந்துள்ளன.   உத்தம் என்பது தமிழ் மூலம் தான்.  சமஸ்கிருதத்திலும் இச்சொல் உள்ளது.  இரண்டும் சகோதர மொழிகள்.  எனவே,  இவை சொல்லாக்கத்தில் உள்ள பொதுப்பண்பை ஒட்டி அமைந்த சொற்களாகும்.

சமஸ்கிருதம் ஆரிய மொழி என்றால்  அது வெள்ளைக்காரன் மொழியன்று.  அறிவுடையோர்,  இறைபோற்றுவோர் ஆனவர்கள் பயன்படுத்தி வந்த மொழி. தமிழும் பல இறைப்பற்று இலக்கியங்கள் உள்ள மொழிதான். மணிமேகலை என்ற புத்தமத இலக்கியம் தமிழில்தான் உள்ளது.  அதன் இறுதி நான்கு காதைகளில் பல்வேறு சமயக் கருத்துகள் சொல்லப்படுகின்றன.  இதில் கூறப்படும் சில கருத்துகள் மகாயன புத்தம் கூறும் பாலியிலும் சீனத்திலும் இல்லை என்று கூறப்படுகிறது. மணிமேகலையின் ஆசிரியர் கூலவாணிகன் சாத்தனார், தமிழ் சமஸ்கிருதம் இரண்டிலும் வல்லுநர்.  புத்தமத நூல் தெளிவினர்.   

பிற்கால வெள்ளையர் முயன்று சமஸ்கிருத  ஒளியில்  தாங்கள் மின்னிட நினைத்தனர்.  

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

பகிர்வுரிமை உடையது.


சனி, 6 டிசம்பர், 2025

பதாகை என்பது.

 பதாகை என்னும் சொல்லை அறிவோம்.

பதாகை என்னும் சொல்லின் அடிப்படை வினைச்சொல்  பதிதல் என்பது. பதி + ஆகு+ ஐ > பதாகை.  

விருதுக்கொடி,  பெருங்கொடி, தேர்க்கொடி முதலியனவையும் இப்பெயர் பெறும். எழுத்துகள் எழுதப்பெற்றுக் கொடியாய் வைக்கப்படுவதும் இவ்வாறு சுட்டப்பெறுகிறது. 

நாட்டியத்தில் கையினால் காட்டபெறும் ஒருவகை அபிநயமும் பதாகை என்பர், எனவே இதைப் பல்பொருள் ஒருசொல் என்னலாம்.

பதி + ஆகு + ஐ >  பதாகை.   பதி என்பதன் இகரம் விடுபாடு கண்டது, ( கெட்டது). பின், பத் + ஆகு + ஐ > பதாகை ஆயிற்று.  த்+ஆ> தா ஆகிவிடும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

பகிர்வுரிமை



திங்கள், 1 டிசம்பர், 2025

கோபம் என்ற தமிழ்ச்சொல்.

 இன்று கோவம் என்ற தமிழ்ச்சொல்லை அறிந்தின்புறுகிறோம்.

ஒரு நல்ல நிகழ்வு நடந்துவிட்டால், நம் மனம் மலர்கிறது.  மனமென்பது ஒரு மலருக்கு ஒப்புமையாகும் ஓர் உறுப்பு.  இது இருதயம் அல்லது இதயமாகுமென்று சொல்வர்.  ஆனால் இதை அறிவியலார் ஒத்துக்கொள்வதில்லை. எண்ணங்கள் மூளையிலிருந்தே உண்டாவதாகச் சொல்வர். கோபம் என்பது  மனம் குவிதல் அடிப்படையில் உண்டான சொல்லே.  அறிவியல் கருத்துக்கு ஒப்ப அமையவில்லை.

குவிதல், வினை.

குவி > கோவி >  கோவித்தல்,  ககர ஒற்றின்மேல் உகரம் ஏறியது,  ஓகாரமாக மாறும் திரிபு.

இவற்றைக் கவனத்தில் கொள்க.

ஊ-  ஊது,   ஓ> ஓது.  காற்றினால் எழும் ஒலிகள்.

ஊடு >  ஓடு.  ஓடுவது காற்றினூடு விலக்கிக்கொண்டு ஓடுவதானன்றோ.

பேச்சில் உகரம் ஒகரமாக ஒலிப்பதுண்டு.    உக்காரு - ஒக்காரு என்று பேசுவது கவனித்துள்ளோம்.

உச்சரி என்பது , உ- உச்சு  ( முன்வருதல்,  ஒலி முனவருதல்;  அரு+ இ>  அருகில், இவண் என்னும் கருத்துகள்,   அரு இ >  அரி.  அருகில் இங்குவருதல். உச்சு என்பதில் முன்வரவு முதலெழுத்திலும் ஈற்றிலும் வந்து  அழுத்தம் தருகிறது. உச்சி என்ற சொல்லிலும் உகரம் முன்வரவையும் இகரம் அண்மையையும் தெரிவிக்கிறது. நிற்கையில் முன்னிருப்பது உச்சி.

குவி என்பதில் குறுக்கத்தைக் குறிப்பது குகரம்.  இகரம் இங்கென்னும் பொருளது.  குறுகி இங்குத் தெரிகிறது குவிதல் என்னும் நிகழ்வு.

கோவம் என்ற முதல் வடிவம், கோபம் ஆவது வகர பகரப்  போலி  அல்லது திரிபு.  வகு> பகு என்பதைப்  போல்.

சமஸ்கிருதம்.

சமஸ்கிருதம் இந்திய மொழியே ஆதலால்,  தமிழுக்குச் சொல்வது சமஸ்கிருதத்துக்கும் ஒப்பதே.  சமஸ்கிருதம் இந்தோ ஐரோப்பிய மொழி என்பது பிற்கால ஐரோப்பியர் ஆராய்ச்சி. சீனமொழியுடன் ஐரோப்பிய மொழிகளை உறவு கற்பிக்க முயன்று தடுமாறி இறுதியில் சமஸ்கிருதத்தை எடுத்துக்கொண்டனர். இந்தக் கற்பனை மொழியுறவு, ஐரோப்பியர் ஆசியாவுக்கும் உரியவர் என்ற கருத்தை நிலைப்படுத்தவே. இதனால் ஐரோப்பிய மொழிகள் வளம்பெற்றன.  இந்தோ ஐரோப்பிய மூலமொழி என்பது கற்பனை.

திறவிடம் என்பது தென்னிந்தியாவின் திறந்த ( கடலினை எதிர்கொண்ட்)  இடம்.  திரவிடம் என்பதன் மூலமும் திற இடம் தாம். கடல்சூழ் இடத்தை எதிர்கொண்டு வாழ்ந்த பிராமணர்  திரவிடப் பார்ப்பனர்.  றகரம் சொல்லாக்கத்தில் வந்தால் ரகரமாகிவிடும்.   திறவிடம் > திரவிடம். மூலச்சொல் தமிழ் அடிப்படை. ஆனால் தமிழுக்காக உண்டானதன்று.  இடப்பெயர்.  கடலால் சூழ்ந்து திறந்த இடம் திற இடம் > திரவிடம். 

குவி (௳னம் குவிதல்,  மலர்ச்சிக்கு எதிர்).

குவி அம் >  கோவம். குவி கோவி திரிபு.

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்

பகிர்வுரிமை

















சனி, 29 நவம்பர், 2025

திவ்வியம் என்பதன் தமிழ் மூலச்சொல்.

 திவ்வியம் என்ற இனிய சொல்லைக் காண்போம்.

திவ்வியம் என்றால் என்ன என்று கேட்டால்,  கேட்டவனுக்கு  திவ்வியமான ஒன்று என்ற பதில்வருமானால்,  முன்னினும் தானறிந்து கொண்டது ஒன்றுமில்லை என்றுதான் கேட்டவன் நினைப்பான். இப்போது  தி + இயம் >  திவ்வியம் என்று புணர்த்திச் சொல்லை உருவாக்கிக்  காட்டினாலும்,  தி என்பது எதைக் குறிக்கிறது மீண்டும் கேட்கத் தோன்றும்.

தித்தி என்ற சொல்லில் தி  என்பது இனியது என்னும் பொருளதாய் உள்ளது. இதைத் தீந்தமிழ்  என்ற சொல்லின்மூலம்  அறிந்துகொள்வோம்.  தீம்பூ என்ற சொல்லில்  பூ என்றால் வினைப்பகுதியாக வந்து முதனிலைத் தொழிற்பெயராக நின்று  '' தோன்றிய ஒன்று''  என்று பொருடரும். (பொருள்தரும்).  பூ என்பது நறுமணத் தொடர்புடையது என்பதால் தீம்பூ என்பதற்கு  வாசனை என்று பொருள் சொல்லவேண்டும். தீந்தமிழ் என்றால் இனிய தமிழ் என்பது பொருள்.  இதைத் தீத்தமிழ் எனலாகாது. வலிமிகின் கெடுபொருண்மை உடையதாகிறது.

ஆனால் தீம்பு என்பது  தீமை என்று பொருள்படுகிறது.  ஆகவே இங்குக் கவனம் தேவையாகிறது.  தீயது என்பது இனியது என்றும் பொருள்தருவது.  ஆனால் இற்றை வழக்கில் கெட்டது என்று பொருள்கொள்ளவேண்டும்.  தீயம் என்றால் இனிமை உடையது என்பதாகும்.  தீயம் என்பது இடைக்குறைந்து தீம் என்று வருகிறபோது இனிது என்பதே பொருள்.

தீவிய என்றால் இனியது என்பதே.  இது குறுகி,  திவ்விய என்றால் அதுவே பொருள். இனிமைப் பொருளதான தீயளி என்பது பசுங்காய் என்றாகும். தீவு என்பது நன்மைப் பொருள் தந்து , தீவாம் வாழ்வு என்றால் இனிய வாழ்வு என்றுதான் பொருள்.

இப்ப்டி முயன்று பொருளறிந்து கொள்வதினும்,  சுருக்கமாகத் திவ்வியம் என்பதை அறிந்துகொண்டுவிடலாம்.

திருவியம் ( திரு+ இயம் ) >   திருவியம்> தி( ரு )வியம் > திவ்வியம்.

திருவமைந்து நிற்பது,  இனிமையானது,  மிக்க உயர்வானது. இடைக்குறைச் சொல்.

மூலச்சொல் எது என்பது தானே புரிந்துகொள்ளத் தக்க விளக்கம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உடையது.









புதன், 26 நவம்பர், 2025

சாதுரியம்

 சாதுரியம் என்ற சொல்லிற் புதைந்துள்ளன காண்போம். 

இதன் பொருள்,   நிதானம், நினைவு, பின் தொடர்தல், பாவனை, கிரகித்தல் என்று கூறுவார்,  அகரவரிசை செய்த  அறிஞர்  கதிரைவேற்பிள்ளை.

சாதுக்கள் என்போர்,  பெரும்பாலும் சிந்தனைகளில் ஈடுபடுவோர். அதாவது கைவேலைகளில் ஈடுபடுவோர் அல்லர். மனத்தில் தோன்றும் சிந்தனைகளே இவர்கள் மக்களுக்குத் தருவன ஆகையால்,  இவர்களுக்கு உரியன சிந்தனைகளே. இவர்கள் பிறருக்குச் செயலாற்ற  உதவுவனவும் அவையேயாம்.

சாதுக்களுக்கு உரியன >  சாது + உரியன >  சாது உரியம் > சாதுரியம்.

நிதானம் தவறாமை,  நினைவுகளில் ஆழ்ந்திருத்தல், சிந்தனைகளை மேலானவையாய்க் கொள்ளுதல்,  பாவித்துரைத்தல்,  மனத்தில் வைத்தல் என்று விரித்தல் கூடும்.

யோகக் கலையில் தன்னை இறந்தவன்போல் பாவித்து  ஆசனம் கொள்ளுதலும் ஒன்றாகும்.  இது சவாசனம் எனப்படும். செத்த பொருள்போல் கிடப்பதால் சா- சாதல் எய்தியவர் போல்,  து -  தொடர்பவர். சாதல் என்ற சொல்,  இறந்தோனைக் குறிக்கையில், சவம் என்றாகும்.  சாவு+ அம் > சவம்,  முதனிலை நெடில் குறுகி சா- ச என்று குறிலாகித் தொழிற்பெயர் ஆயிற்று.  தோண்டு> தொண்டை என்பது இன்னொன்று. இவ்வாறு முதனிலைக் குறுக்கத்தை யாம் பலகாலும் சுட்டிக்காட்டியுள்ளோம்.  ''வாய்'' இடமென்றும் பொருள்.  அம் விகுதி வர வயம் ஆகும். வாய்> வயம்.  ஓர் இடத்திலிருத்தலே வயப்படுதல்.  இவ்வாறு சிந்தித்து அறிந்துகொள்க. இதுவும் முதனிலைக் குறுக்காய் ஆன தொழிற்பெயர்.

இறந்தோன்போல் கிடக்கையிலும் சிறந்தோனாய்ச் சிந்தனைகளுடன் இருப்பவர் சாது.

து என்பது அஃறிணை விகுதி.  சாது - செத்தது (போல்). ஒப்புமையில் உண்டான சொல்லாக்கம். ஒப்புமையால் உருப்பெற்ற சொற்கள் பல.  பழைய இடுகைகளை ஆய்ந்து பட்டியலிட்டுக் கொள்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை





திங்கள், 24 நவம்பர், 2025

அம்மாள் என்ற வடிவம் தவறன்று

 மகள் >  மாள்.

அம்மகள் என்பது  வழக்கிறந்த வடிவம்.  இது அவர்கள் என்பதுபோலும் சுட்டு,

அம்மகள் >  அம்மாள்.

கோகிலா  அம்மகள்  >  கோகிலா அம்மாள்  ( திரிபு)

இவ்வாறுதான் இது இறுதி ளகர ஒற்றைப் பெறுகிறது.

அம்மாள் என்று ளகர ஒற்றுடன் முடிந்த பெருமைச்சொல் வருவது சரியே.

பெருமகன் என்பது பெருமான், பெம்மான் என்றும் திரியும்.

அம்மை > அம்மா.  இது உண்மையில் விளிவடிவத்தில் அம்மா ஆகிறது.

இதற்கு இறுதியில்  ளகர ஒற்று வராது,  வரவில்லை.  கூப்பிடும் சொற்களில் ள் 

வந்தால் ஒலித்தடை ஏற்படும்.  இது ஒலியியலுக்கு ஒவ்வாமை காண்க.

ஒலித்தடையாவது பலுக்குங்கால் நாவிற்கு ஏற்படும் தடை.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை


பகிர்வுரிமை

சனி, 22 நவம்பர், 2025

இமாலய வெற்றி - இமாலயம்

 இமாலய வெற்றி என்று கூறுவதுண்டு.

இதை இவ்வாறு பிரித்தறிக.

இ -  இது;  மா - பெரிய;  ஆல்  ( அகல் என்பதன் திரிபு) - அகன்ற; அய - அடைந்த அல்லது அருகிலான.

இந்த அய என்பது  இரண்டு மூலச்சொற்களின் இணைப்பு.  அ என்பது அருகில் அல்லது அயலில் என்பதற்கும் மூலம்.  அங்கு என்பதற்கும் மூலமாகும்.  அ அ என்பது அய என்று வந்ததில் யகர உடம்படுமெய் வந்தது.  

மா+ அகல்+ அ+ அ ,  அகல்> ஆல் என்று திரியும்.

மா+ ஆல் > மால் என்று,  ஆ கெட்டது அல்லது வீழ்ந்தது.  இது மக+ அன் > மகன் என்று அ வீழ்ந்தது போலுமே. வகர உடம்படு மெய் வரவில்லை.  மக அன்> மான் என்றுமாகும். பகு> பகுதி> பாதி, காண்க. ககர வருக்கம் வர முதல் நீளுதல். அதியமான், புத்திமான். பெருமகன் > பெருமான். தொகு+ஐ>  தோகை. தொகை என்றுமாகும். பகு+ ஐ>  பாகை.

சொல்லாக்கப் புணர்ச்சி வேறு.  முழுச்சொற்கள் புணர்ச்சி வேறு. இவ்விரண்டிலும் ஒற்றுமைகளும் உண்டு,  வேறுபாடுகளும் உண்டு.

இமைய ஆலய என்ற சொற்களின் இணைப்பு எனினும் ஒன்றே.  இதை விரிவாக மேலே கூறியுள்ளோம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு  பின்னர்

பகிர்வுரிமை


வியாழன், 20 நவம்பர், 2025

சகோதரம், சகோதரன், சகோதரி தமிழ்மூலம்.

 தலைப்பில் கண்ட சொற்களை இன்று ஆய்ந்து அறிந்து கொள்வோம்.

அகர வருக்க முதலாயின சொற்கள் சகர வருக்க முதலாய்  ஆகித் திரியும் என்பதைச் சொற்களை ஆய்வோன்  அறிந்திருக்க வேண்டும்.  இக்கருத்துக்கு ஆசிரியர்கள் பெரும்பாலும் காட்டும் உதாரணம் :  அமணர்> சமணர்  என்ற சொல்தான்.  அடுத்தடுத்து மண் குழைத்து இறுக்கமாகச் செய்யப்படுவது  அடு> சடு> சட்டு>  சட்டி   என்போம்.   அடு> சடு>  சடு+ இ>  சட்டி என்று சுருங்கக் கூறிவிடலாம்.  பொருள்விளக்கம் தானும் முன்செய்தபடியே  செய்தல் கூடும்.

அகம் என்பது உள் என்று பொருள்தருவது.  மேற்கூறிய விதியின்படியே,  அகம் என்பது சகம்  ஆகும்.  சகோதரர்கள் தமக்குள் ஒத்தவர்கள்.  ஒருதாய் உடைமையால் பிள்ளைப்  பருவத்திலிருந்து வளர்ந்தவர்கள்.  ஒரு வீட்டில் வாழ்ந்து வளர்ந்தவர்கள் என்றும் விளக்கினும் இழுக்கில்லை.  அக > சக என்றாகிறது.   சக + ஒ >  சகொ >  சகோ என்று திரித்தாலும்  சகோ என்றாகும்.  ஒ+இயம் > ஓவியம் என்ற இன் தமிழ்ச் சொல்லையும் கண்டுகொள்க.  உண்மைப் பொருளை  ஒத்து இருப்பதுதான் ஓவியம்.   ஓ+ அம் > ஓவம் என்றுமாகும் என்றறிக.

அக+ ஓ .>  அகோ>  சகோ.   தரு + அன் >  தரன். தரப்பட்டவன்,  அதாவது தாயினால் தரப்பட்டவன். பிள்ளைகளைத் தருவதனால்தான்,  தா> தாய் என்ற சொல்லும் பொருள் சிறக்கிறது.

சகோதரி என்பது பெண்பால் எனல் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

இவ்வாறு சுருங்கச் சொல்வதால் அறிக.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

பகிர்வுரிமை உடையது.


 

புதன், 19 நவம்பர், 2025

வயிறு - சொல்லும் பொருளும்.

 வயிறு என்றால் இறுதியில் வைக்கப்பட்டது என்று பொருள்.  முன் காலத்திலே இச்சொல் அமைந்து நெடுங்காலமாக வழங்கி வருகிறது.  

வை  -    வைக்கப்பட்டது. இந்தப் பகவு,  வ்+ ஐ என்ற ஈரெழுத்துக்களால்  ஆனதாம். இங்கு வை என்பது நெடில்.  குறுகி  வ என்று நின்றது.

இறு  என்பது இறுதி என்ற பொருளது.   இறுதல் என்ற வினை, விகுதி பெறாமல் பகுதி மட்டுமே பகவாக நின்றது.  இறு என்றபடி.

வ+ இறு >  வயிறு  ஆனது.   யகர ஒற்று,  இரு பகவுகளையும் உடம்படுத்துகிறது,  அதாவது இணைக்கின்றது.

உதரம்  என்பது வயிற்றுக்கு இன்னொரு பெயர்.  இது உது + அரு+ அம் என்ற மூன்று பகவுகளைக் கொண்டு ஆன சொல்.

உ - என்றால் முன்.  து என்ற விகுதி இணைந்து உது -  முன்னிருப்பது என்ற பொருளில் வரும்.  நீ > உன் என்ற சொல்லில் உன் என்பது முன்னிருப்பவனுக்குப் பதிற்பெயர் ( pronoun).[ in the possessive case]. இது  ஊன்> உன் என்று குறுகிற்று என்று இலக்கணியர் உரைப்பர். நீ என்ற சொல், நீங்கற் பொருளது ஆகும்.  தன்னின் நீங்கி நிற்பவன் என்று பொருள்.'' உன்னில்'' முதுகுக்கு அருகில் இருப்பதால்  '' அரு'' என்ற  பகவு வந்தது.  ஆகவே உன்னில் முதுகுக்கு அருகில்  அமைந்தது   அரிய பல உள்ளுறுப்புகளைக் கொண்டிருக்கும் இடம் என்று பொருளுரைத்தல் கூடும்.  இவ் வுதரம் என்ற சொல் ஒரு காலத்தில் வழக்கில் இருந்து பின் வழக்குக் குன்றியிருக்கலாம்.

'' உன் உதரத்து உதித்து எழுந்தே ஒன்று பல ஆயிடினும்''  என்ற மனோன்மணீயம் வழக்கினைக் கண்டுகொள்க.  உது அரு என்னாமல் உ+ தரு என்றும் விளக்கலாம்.  இஃது '' முன் வைக்கப்பட்டது''  என்று பொருள்படும். 

ஆகவே ஒன்றுக்கு மேற்பட்ட அமைப்புகளை உடைய சொல் என்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உடையது.


திங்கள், 17 நவம்பர், 2025

கேதாரம் இராகம். சொல்லமைப்பு

 கேதாரம் என்பது 29-வது மேளகர்த்தா இராகம் என்பர்.  இது ஆரோகணத்தில் மத்திமம் ஒழுங்கு மாறி வருவதனால்,  இந்த ஒழுங்குமாற்றம்  ''கேடு'' என்ற சொல்லால் அறியப்படுகிறது.  தமிழ் இலக்கணத்திலும் விடுபாடுகளைக் கேடு, கெட்டது என்ற சொற்களால்தாம் குறிப்பிடுவர்.  எடுத்துக்காட்டாக என்னில் என்ற சொல்  எனில் என்று வரின்,  னகர ஒற்றுக் கெட்டது என்று சொல்வர். எதையும் விடாமல் தொகுக்க முடியாதாகையினால், இதைக் கெடு என்ற வினை சரியாகவே குறிக்கிறது.  தொகை (தொகுத்தல்) என்பதும் அது. புலவர்கள் பாடியவை பல இருந்திருக்கலாம்.  நானூறு பாட்டுகள் தாம் வேண்டின் பலவற்றை விடவேண்டியதாகிறது.  பல நூறுகளை விட்டிருக்கலாம்.  இல்லாவிட்டால் தொகுக்கமுடியாது.  எட்டுத்தொகை நூல்கள் அவ்வாறு தொகுக்கப்பட்டவைதாம். ஆனால் விடப்பட்டவை கெட்டவை என்பது பொருளன்று. விடுபாடு என்பதே இங்குப் பொருளாகும்.

கேடு+ தாரம் >  கே+ தாரம் >  கேதாரம்.

தரு+ அம் > தாரம்,  அதாவது விடற்பாலவற்றை விட்டு மிஞ்சியவை தருதல். இது முதனிலை நீண்ட தொழிற்பெயர்.

கேது என்பது ஒரு நிழற்கிரகம். ஒளி கெட்டமையால்,  கேடு+ து > கேது எனப் பெயர் ஏற்பட்டது.  கேடு என்ற முழுச்சொல்லில் டுகரம் விடுபாடு ஆனதனால், இதை இலக்கணத்தில் கடைக்குறை என்பர்.

இதுபோலும் எழுத்துக் கெட்ட செற்களை,  பழைய இடுகைகளைப் படித்துப் பட்டியலிட்டுக் கொள்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

பகிர்வுரிமை 





















புதன், 12 நவம்பர், 2025

சிலாகித்தல் என்பதன் தமிழ் மூலம்

 

சிலாகித்தல் என்றால் என்ன?

இன்று சிலாகித்தல் என்ற சொல்லெழுந்த வகையை  அறிந்துகொள்வோம். இஃது இன்னும் வழக்கில் உள்ள சொல்லாம்.

அறிதற்கு எளிமையானதே இது.

இதனைச் "சில  ஆகுதல்" என்ற தொடர்கொண்டு  அறிக.

இந்தச் சொல்லiைப் படைத்தவர்,   ஆகுதல்  என்ற செந்தமிழ் வடிவினைக்
கையிலெடுத்து  ஆகி என்று வினை எச்சமாக்குகிறார்.

அப்புறம்  அதில்  -தல் என்னும் தொழிற்பெயர் விகுதியை  இணைக்கிறார்.

இணைக்க  "ஆகித்தல்"  என்ற வடிவம் கைவரப்பெறுகிறார்.

இது  "ஓது" என்ற சொல்லை  "ஓதி"  என்று எச்சமாக்கி அப்புறம்  -தல் விகுதி இணைத்து ஓதித்தல் என்று தொழிற் பெயர் ஆக்கியது போலுமே. இதை  "ஆமோதித்தல்" என்பதில் வர அறிந்து மகிழ்வீர்.

அந்தக் காலத்தில் செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்துப் புலவோர் இது கண்டு மகிழார் எனினும்  புதுமை விழைவார் யாதுதான் செய்வது.  கூடுதலான எதிர்ப்பு வரின் பிறமொழி என்று மழுப்பிட வேண்டியதே.


எச்சத்தினின்று வினைபுனைதல் பாலி முதலிய பிற மொழிகளிற் காணக் கிடைப்பதே.

சில வழிகளில் புகழ்தல்   என்பது சிலாகித்தல் என்பதான புதுப்புனைவுக்குப்  பொருள்  ஆயிற்று.  புகழே ஆக்கம்.  மற்றென்ன உண்டு மானிடற்கு?  இசைபட வாழ்தலே ஊதியமென்றார் வள்ளுவனார்.  சிலாகித்தலுமது.

ஞாயிறு, 9 நவம்பர், 2025

வினோதம் ( விநோதம்) சொல்

 வினோதம் என்னும் சொல் தோற்றம்.

இதற்கு இன்னொரு சொல் வேண்டின்,  ''விசித்திரம்''  என்று சொல்லலாம். 

இச்சொல்லுடன்,   நோடு(தல்) என்றொரு சொல்லையும் ஒப்பிடலாம் என்றாலும், இச்சொல் இப்போது கிடைக்கவில்லை. ஆனால் நோட்டம் என்ற சொல் கிட்டுகின்றது.  ஆடு> ஆட்டம் என்பதுபோல்  நோடு> நோட்டம் இருக்கவேண்டுமே.  இச்சொல் ( நோடு) வழங்கிய நூல் கிடைக்கவில்லை.  நீங்கள் நூல்கள் வைத்திருந்தால், அவற்றில் கிடைக்கிறதா என்று பாருங்கள்.  ஆனால் நோண்டுதல் என்ற சொல் கிட்டுகின்றது.  நோண்டி நோண்டிக் கேட்கிறான் என்று வாய்ப்பேச்சில் வரும்.  நோண்டு என்ற வினை இடைக்குறைந்தால் நோடு என்றாகும்.  என்னில்> எனில் என்று குறுகுவது போலும் இது வருகிறது.

புதிராக இருத்தல் என்பதும் ஓரளவு ஒருபொருளினதாய் இருக்கலாம்.

ஒன்றைப் பெரிதாக எண்ணுவீரானால் இயல்பு கடந்ததாகக் கருதப்படுமானால் அதை வினோதம் என்னலாம்.   வியன்  என்ற சொல் வின் என்று இடைக்குறைந்து,  ஓது+ அம்> ஓதம் என்று வந்து,  வின்+ஓதம் > வினோதம் ஆகிறது. வியன் - பெரிது என்பது.  விரிநீர் வியனுலகம் என்பது குறளில் வரும் தொடர். விண் இன்று  பொய்ப்பின் விரிநீர் வியனுலகத் துண்ணின் றுடற்றும் பசி என்பது காண்க.

நோட்டம் செய்வோனை நோட்டக்காரன் என்றும் சொல்வதால் நோட்டம் என்ற சொல்லுக்கு வினை நோடு என்பது பெறப்படுகிறது. இது நோட்டன் என்ற சொல்லைக் கவனிக்கத் தூண்டுகிறது.  நோட்டை ( நொட்டை)  என்பதும் பேச்சில் உள்ளது. இயல்பாக ஒன்றைக் கருதாமல் பேசுவது இதன் பொருளாகத் தெரிகிறது. 

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை

புதன், 5 நவம்பர், 2025

அடு(ச்) சரம் - அட்சரம்.

 தமிழுக்கும்  ''வடமொழி''க்கும் உள்ள அணுக்கத் தொடர்பினை அறிந்துகொள்ள அட்சரம் என்ற சொல்லும் சான்று பகரும்..  இதில் எனக்கு ஓர் ஐயப்பாடும் இல்லை,

எழுத்துக்களை உண்டாக்கிய பின்  இலக்கண ஆசிரியர்கள் இவ் வெழுத்துக்களின் தொகுப்புக்கு ஒரு பெயர் வைத்தனர்.  சில விதிகளின்படி எழுத்துக்கள்  சரமாக  அடுக்கிவைக்கப் பட்டன.  இந்த விதிகளை இன்னொரு நாள் காண்போம்.  சமஸ்கிருதத்துக்கு இந்த வேலையைச் செய்த பெரும்புலவர் பாணினி என்பவர்.

சரம் என்ற சொல் முறையாக என்று பொருள் தரும்.   அடு என்பது  அடுக்கப்பட்டதைக் குறிக்கிறது.

அடு  சரம் >  அடுசரம் ,  இதில்  அடு என்பதை அட் என்று குறுக்கியது மட்டுமே இங்குச்  சொல்லமைப்பு.   அடு சரம் >  அட்சரம்  ஆகியது,   இது இவரின் சிறந்த சொல்லாக்கத் திறனை எடுத்தியம்புகிறது என்பது தெளிவு.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை 

வெள்ளி, 31 அக்டோபர், 2025

காண்தாரம் என்பதன் திரிபு

 காண்தாரம் என்ற சொல் எவ்வாறு திரிந்துள்ளது என்பதைக் காண்போம்.

காண்தார நாட்டின் இளவரசி காந்தாரி.  இவள் பாரதக் கதையில் வரும் கதைமகள் ஆவாள்.  

காண்தார நாட்டின் அழகின் காரணமாக அந்நாட்டுக்குக் காந்தாரம் (காண்தாரம்) என்ற பெயர் ஏற்பட்டது.  காணபதற்குப் பல அழகுகளை உடைய நாடு என்ற பொருளில் இச்சொல் அமைந்துள்ளது.  காண் -  காண்பதற்கு  தாரம் - அழகுபல தருவதான நகர்.  காணுதல் தருதல் என்பன இதன் வினைச்சொற்கள்.

மகாபாரதச் சொற்களில் பல தமிழ் மூலங்கள் உடையவை என்பதை முன்னர் எடுத்துக்காட்டி யுள்ளோம்.

காண்தரு அழகுடைய நகர்.  காண்தரு+ அம் > காண்தாரம்.

காண் தரு > காண்தாரி> காந்தாரி.

சமஸ்கிருதத்திலும் தமிழிலும்  இச்சொல் வழங்குகிறது.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

பகிர்வுரிமை,

வியாழன், 30 அக்டோபர், 2025

நாமம் நாவு

 நாவு என்ற சொல் நாக்கு என்றபடி  இன்று பேச்சிலும்  எழுத்திலும் வழங்குகிறது.  நாவு என்பது  நா  என்றும் வழங்கும். நாய் என்ற விலங்குக்கும் இச்சொல்லே அடிச்சொல் என்பது புலவர்கள் கருத்து. பரத்தல் என்ற வினையின் அடி பர என்பது.  பர என்பது பார் என்று திரிந்து,  உலகு என்ற பொருளில் உலவுகின்ற சொல். ஒரு குறிப்பிட்ட பொருளைப் பார்வையைக் குறுக்கிச் செலுத்திக்  காட்சிகொள்ளாமல் விரிந்து செல்வதுதான்  '' பார்த்தல் '' எனப்படும். கடவுள் என்பவர்க்கு இருப்பிடம் கைலாயம், வைகுண்டம் என்று சொற்கள் இருப்பினும் அவர் ஓரிடத்துக்கும் ஒடுங்காதவர்.  ஆகையால் இவர்க்கும் பரமன், பரப்பிரம்மம் என்றபடி பெயர்கள் அமைந்துள்ளன.

நா என்பதிலிருந்து நாய் என்ற சொல் அமைந்தது போலவே,  பரவலுற விரிக்கப்படுவதற்குப்  பார்>  பாய் என்ற சொல் அமைந்தது. இது போலவே, பழத்திற்கு முந்தியது  காக்கப்பட்டதனால்  கா(த்தல்) > காய்  ஆயிற்று. காய்கள் சில கசப்பு உடையவையாக இருப்பதானால்   கச> கய>  காய்  என்ற சொல் வந்தது.

மனிதன் பிறக்கிறான்,  காலம் செல்ல, இறந்துவிடுகிறான்.  நரை, திரை, மூப்பு, பிணி, மரணம் என்பர். பழங்காலத்தில்,  கொலை என்பதை  ஆங்கில மொழியில் மர்டர் என்று எப்படிப் பெயரிட்டனர்?  மர்ட்ரம் என்பது  கொன்றவனிடம் வசூலிக்கப்பட்ட ஒரு வரி. இதிலிருந்தே  மர்டர் (கொலை) என்பதற்கான சொல் பெறப்பட்டது.  அரசனின் கவனம் இதில் பெயரிடும் அளவுக்கு ஏன் சென்றது என்றால்,  இறந்தவன் அரசுக்குச் செலுத்திய வரி வராமல் கொலைஞன் கெடுத்துவிட்டான் என்பதனால்தான்.  சொல் அமைவதற்குக் காரணம் வரலாறு தொடர்புடையதாகவும் இருக்கலாம்..

பழங்காலத்தில் மக்கள்தம் பிறப்பு இறப்பு பற்றியவை  கல்வெட்டில் பொறிக்கும்   அளவுக்கு முன்மை ( முக்கியத்துவம்) பெறவில்லை. குடும்பத்தார் ஓலைகளில் எழுதி வைத்திருந்திருக்கலாம்.  இது எழுத்துக்கள் உண்டான பின்புதான் இயன்றிருக்க முடியும்.  பெயரிடும் வழக்கம்  அதற்கும் முன்னரே உண்டானது என்பதற்கு நாமம் என்ற சொல் சான்றாகின்றது.  பெயர்கள் நாவினால் அழைத்து உண்டானவை. நாவினால் பலமுறை அழைத்தபின்பு தான் அது நாமம் ஆகிறது.    நா> நா அம் > நாமம்.    அம் என்ற இடைநிலையும்  அம் என்ற இன்னொரு விகுதியும் பெற்ற சொல்லே நாமம் ஆகும்.

சமஸ்கிருதம் என்பதும் உள்நாட்டு மொழிதான்.  ஐரோப்பியர்கள் அதனுடன் உறவு கொண்டாடி,  அதிலிருந்து பல சொற்களை எடுத்துக்கொண்டனர். சீன மொழியை அவர்கள் கவனித்தனர் என்றாலும் அங்குள்ள சொற்களால் வசதியான உறவை அம்மொழியுடன் உண்டாக்கிக் கொள்ள முடியவில்லை. பெரிதும் ஓரசைச் சொற்களாய் இருந்ததும் ஒரு காரணம். இதைக் கூறும் இடுகைகள் அல்லது கட்டுரைகள் தொடக்கத்தில் இணையத்தில் இருந்தாலும் இப்போது அவை அங்கு இல்லை.  நூல்களில் கிட்டலாம்.

வீட்டில் உம்மைப் பலகாலும் அழைக்கப்  பயன் தருவதே  நாமம்.  நா> நாமம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு  பின்

பகிர்வுரிமை உடையது.


வெள்ளி, 24 அக்டோபர், 2025

துரியோதனன்

துரியோதனன் தான் கல்வி கற்கும் காலங்களில் சிறப்புடையோனாகத் திகழ்ந்ததாகவே தெரிகிறது.  தான் கசடறக் கற்றதுடன், பிறருக்கும் போதித்த பெருமையோன் என்பது தெளிவு.  துரியோதனன் என்ற பெயர் இயற்பெயராகத் தோன்றினபோதிலும்  இது தமிழ் மூலங்களை உடைய சொல் என்பது எமக்குத் தெளிவாய் உள்ளது.  நீங்கள் இதை உடனடியாக ஏற்கவேண்டியதில்லை,  ஆய்வு செய்து ஏற்கலாம்  அல்லது புறந்தள்ளிவிடலாம்.  இவ்வாறு செய்வது உங்கள் ஆய்வுரிமை.

துரியோதனன் கல்வியிற் சிறந்தோன்.  அவன் '' துருவி ஓதுநன்''  ஆவான்.

ஒன்றைத் துருவி துருவிக் கற்று மனத்தில் அமைத்துக்கொள்பவன்.

துருவி ஓதுநன் >  துருவோதுநன் >  துரியோதன >  துரியோதனன்.

பாண்டவர் என்பதற்கும் பாண்டியர் என்பதற்கும் உள்ள ஒலியொற்றுமையை கவனித்துக்கொள்ளுங்கள். உடன்வீழ்க என்று யாம் சொல்லவில்லை.

இதை வேறு யாரும் சொல்லியிருக்கிறார்களா என்று யான் அறியவில்லை. அவர்களை மேற்கோள் காட்டவும் எண்ணவில்லை.

ஒன்றை நன்றாகத் துருவி ஆய்ந்து அறிந்தபின்  அவன் அதை  ஓதும் பண்பினன். அவன் அதைப் பின் ஒலிப்படுத்துவான். தன் செவிகட்கும் அவன் ஓதுவான்; பிறருக்கும் ஓதுவான்  ( ஓதுவிப்பான் /கற்பிப்பான்).

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்

பகிர்வுரிமை

  

திங்கள், 20 அக்டோபர், 2025

பயம் (அச்சம்) என்ற சொல்.

 இன்று பயம் என்ற சொல்லை ஆய்வு செய்தல் நண்ணுவோம்.

பைம்மை என்பது  இளமைக்காலத்தைக் குறிக்கும்.   பை>  பையன்,  இது இளவயதினனைக் குறிக்கும் சொல்.  இச்சொல் முன் தமிழில் பையல் என்றிருந்து பின்னர் பையன் என்று அன் விகுதி பெற்றது.  லகர ஒற்றால் இறுதி பெற்று, பின்னர்  னகர ஒற்றால் முடியும்  சொற்களில் பையன் என்பதும் ஒன்றாகும்.  பையல் > பையன் ;  

பையல் >  பயல் என்றுமாகும்.   ஐகாரக் குறுக்கம் தொல்காப்பியத்தில் சொல்லப்படுகின்றது.  சொல்லாக்கத்திலும் இக்குறுக்கம் நிகழும்.

ஒருவன் பையனாக இருக்கும்போது,  எளிதில் அவனைப் பயமுறுத்திவிடுதல் கூடும். அச்சமின்றி நடந்துகொள்வது எல்லாப் பையன்களாலும் இயலுவதில்லை.   சொற்கள் பெரும்பாலும் பொதுப்பண்பு கருத்தியே அமைபவை. இவ்வாறு,  பயம் என்ற சொல்  அச்சத்தைக் குறிக்கலாயிற்று. இதன் அடிச்சொல் பை  என்பதே.

இதே அடியிலிருந்து  பைத்தியம் என்ற சொல்லும் வந்துள்ளது. இது:

பை -  இளமை குறிக்கும் அடிச்சொல்.

பை+ து >  பைத்து   பொருள்:  இளந்தன்மை காரணமாய் எழுவது.

பைத்து + இ+ அம் > [பைத்தியம்.  இளமையினால் அல்லதூ முதிர்வின்மையால் எழும் மனநோய்.]

''ஆளும் வளரணும்  அறிவும் வளரணும்'' என்று பாட்டில் சொல்வதுபோல்  ஆள் வளர்ந்தும் அறிவு பைம்மை நிலையில் இருப்பதுதான்  பைத்தியம்.

பயில்தல், பயிற்றுதல் என்ற சொற்களும் பைம்மை அடியாகப் பிறந்தவையே.  

பை> பயம் என்பதே  இதன் பிறப்பு.   பயன் என்ற சொல் பயம் என்றும் வரும்.  அதை வேறு சொல்லாகக் கொள்ளலாம்.  இங்குப் பயிர் என்ற சொல்லையும் இணைத்துப் பொருள் சொல்லலாம் எனினும் அதை வேறோர் இடுகையில் செய்வோம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை,


வியாழன், 16 அக்டோபர், 2025

உலவுதலும் உராவுதலும்.

 லகரம்  சொல்லில் ரகரமாக மாறிவிடும் என்பது நம் பல இடுகைகளில் முன்னர் சொல்லியிருத்தலைக் காணலாம். இம்மாற்றங்களில் பலவற்றை மிக்க நுட்பமாக ஆய்வு செய்தால் இந்தத் திரிபு மனப்பாடமாக மறக்க முடியாததாகி விடும் என்பது தெளிவு.

இவ்வகைத் திரிபு மிக விரிந்த தாக்கமுடையது ஆகும். 

பழந்தமிழில் லகர ஒற்றில் முடிந்த சொற்கள் பலவிருந்தன.  வள்ளல் என்ற சொல் இன்னும் வழக்குடையதாய் உள்ளது. நாளடைவில் அல் என்று முடிந்த மனிதனைக் குறிக்கும் சொற்கள் அல் என்று முடியும்படி இல்லாமல் அர் என்று முடிவெய்தின. இளவல் என்ற சொல்லை எடுத்துக்கொள்ளலாம் .  தம்பி என்று பொருள்படும் இச்சொல் இறுதி லகர ஒற்றில் முடிந்தது. இதுவும் எப்போதாவது உயர்ந்தோர் (கல்வியாளர்கள்) நடையில் தோன்றி மகிழ்விக்கும்.  தோன்றல் என்ற சொல்லும் மிகப்பெரியோன் என்று பொருள்தருவது.  வேறு பொருள் உண்டாயினும்,  இது லகர ஒற்றில் முடிதலைக் கண்டுகொள்க.

இங்கு காட்டப்பெற்றவை சொல்லின் இறுதியில் வரும் லகர ஒற்று. லகர ரகரங்கள் சொல்முதலாக வருவதில்லை.  ( மொழிமுதல் என்பர் இலக்கணியர்).

உலாவுதல் என்பது உராவுதல் என்றும் வந்ததற்கான இலக்கியம் உண்டு என்பதறிக. இத்திரிபு  லகர ரகரத்தது ஆகும்.

லகர ரகரத் திரிபுகள் பிறமொழிகளிலும் காணப்பெறுவது ஆகும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை



திங்கள், 13 அக்டோபர், 2025

இரக்கம் , ரக்கம்> ரட்சம், ரட்சகர் முதலியவை

 மேற்கண்ட (தலைப்புச்) சொற்களை ஆராய்வோம்.

ஒரு பறவைக்கு  அது இடம்பெயர்வதற்கான உதவி உறுப்புகள்  பக்கவாட்டில் அமைந்துள்ளமை யாவரும் அறிந்ததே.  அதனால் அதற்குப் பக்கி என்ற பெயர் அமைந்தது.  பக்கங்களில் அமைந்தவை என்று இந்தச் சொல்லுக்கு பொருள்.  பகு+ அம் >  பக்கம்;  பகு+ இ >  பக்கி.  இ என்பது ஒரு விகுதியும், இருப்பவை என்பதற்கான முதலெழுத்தாகவும் கொள்ளலாம்.   பக்கி என்ற சொல்லே பின் பட்சி என்று  திரிந்தது.

பக்கி > பட்சி என்ற திரிபு,......  என்பதில்  க்கி என்பது ட்சி என்று திரிந்தது போலவே,  இரக்கம் என்ற சொல்லும்  ரக்க> ரட்ச என்று திரியலானது.  இது சொல்லியலுக்கு ஒத்த திரிபு ஆகும்.  கேரளம் என்ற சொல்  சேரலம் என்ற சொல்லின் திரிபு.  சேரல் என்பது சேரன் எனற சொல்லின் முன்வடிவம்.  க > ச என்றித் திரிபுவகையைக் குறிக்கலாம்.  ச என்பது பின் ட்ச என்று சமஸ்கிருதத்தில் திரிந்து  எளிதாக்கம் பெறும்.  

இரட்சகர் என்றால் இரக்கம் காட்டி உதவுபவர் என்று பொருள். இரக்ககர் என்ற சொல்லே இரட்சகர் என்று திரிந்தது.  அதன்பின் முன்வடிவம் இறந்துபட்டது என்பது தெளிவு. இரக்க அகர் என்பதை இரக்கமுள்ள அகத்தினர் என்று பொருள்கூற வேண்டும்.  அகத்தினர் -  மனத்தினர்.  இரட்ச அணியம் >  இரட்சணியம் > இரட்சண்ய.

மரங்களுக்கு விருட்சம் என்ற சம்ஸ்கிருதச் சொல் வழங்குகிறது.  கிளைகளில் இலைகள் ஏற்பட்டு  விரித்த -   அல்லது விரிந்த நிலையில் நிற்பனவாதலின் இவற்றுக்கு  விரிச்ச < விரித்த என்பதிலிருந்து  விரிச்சம்>  விருச்சம் என்ற பெயர் ஏற்பட்டது நல்ல அமைப்பு.  இது தமிழை ஒட்டி எழுந்த பெயர்தான்.  விரிச்ச என்பது ஊர்வழக்குத் திரிபு.  இது பின் விருட்சம் என்று திருத்தப்பட்டது தெளிவு.

பரிந்து மணவர்களுக்கு இடப்படுவது பரிட்சை.  பரி + இடு + சுஐ (சை).  பரிதல் - ஒருவனிடமிருந்து இன்னொருவனுக்குச் செல்லுக்கின்ற ( பரவுகின்ற)  இரக்க குணம்.  பரீட்சையில் மணவர்களை ஆய்வு செய்தல் பரவும் ஒன்றுதான்.   அது ஆசிரியனிடமிருந்து மாணவனை நோக்கிச் செல்லும் ஓர் ஆய்வுநிகழ்வு.  பரிதல் என்பது இடம்பெயர்தல்  . பரவுதல் இடம்பெயர்தலே  ஆகும்,

ககரத்துக்குச் சகரம் வந்த இடங்களை இவ்வாறே  அறிந்துகொள்க.

அறிக மகிழ.

மெய்ப்பு பின்னர்.

பகிர்வுரிமை உடையது.

 

வெள்ளி, 10 அக்டோபர், 2025

கோவிந்தன் என்ற கடவுட்பெயர்

 இத் திருப்பெயரை இப்போது ஆய்வு செய்வோம்.

மாடுகளை விரும்பி அவைகட்கு உதவி அருள் புரிந்தவன் கோவிந்தன். கோ என்பது பொதுவாக மாடுகளைக் குறிக்கும் சொல். இதற்குப் பிற பொருளும் உண்டு.  

கோவிழைந்தான் என்பது (கோவி(ழை)ந்தான் என்று)> கோவிந்தான் என்று இடைக்குறைந்து,  கோவிந்தன் என்று குறுகிற்று என்பது பொருத்தமான விளக்கம் ஆகும். ழை என்ற ஓரெழுத்துக் குறைந்த இடைக்குறைச் சொல்.. வட வழக்கில் ன்  என்ற மெய்யும் விடப்பட்டது.  அன் விகுதி அங்கு இல்லை.

இவ்வாறு குறுக்க, கோவிந்தன் என்ற சொல் பிறந்து,  கோவிந்த்  ஆனது.

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்.

பகிர்வுரிமை.



திங்கள், 6 அக்டோபர், 2025

துப்பு என்னும் வழக்குச் சொல் மற்றும் இலக்கியச் சொல்

 துப்பு என்பது '' பல்பொருள் ஒருசொல்.''  இதன் பொருள்களில் உளவு, உளவாளி என்றும் பொருள் உள்ளது.  இது மனிதனைக் குறிக்கும்போது, உளவன் என்று அன் விகுதி பெற்றும் வருதலை உடையதாம்.  

இது அகம் என்னும் சொல்லுடன் சேர்ந்து துப்பகம் என்றுமாகும்.  துப்பு, அ , கு அம் என்னும் பகவுகளை இணைத்து உண்டான சொல்.  அகம் என்பதை சொற்பகவாய்க் கொள்ளாமல் விகுதி மற்றும் இடைநிலைப் பகவுகளாகக் கொண்டு,   அ -  அங்கு, கு - சேர்ந்து அல்லது கூடி, மற்றும் அம் - அமைதல் பொருளதான விகுதி என்றும் கொண்டு,  அங்கு சேர்ந்து அமைவது என்று பொருள்கூற, அது வழக்கில் உண்ணும்போது சோற்றில் முன்னர் ஊற்றப்படுவதான நெய்யைக் குறித்தது என்று கொள்ளல் அதன் வழக்குப் பொருளுடன் சரியாகின்றது. 

துப்பன் என்பது ஆற்றல்லுள்ள மனிதனைக் குறித்தது.   து என்பது முற்செலவு குறிக்கும் சொல்லாகையால், எதிலும்  முன்செல்பவன் வலியோன் என்று பொருள்பயந்து நிற்கிறது. அரசன் செல்லுமுன் முன்சென்று அறிந்து வருவோன் ஒற்றனாதலின், அது ஒற்றனையும் குறிக்கும் சொல்.

துப்புரவு என்னும் சொல்லிலும் துப்பு உள்ளது.  துப்பு, உரு, அ, வு என்பன பகவுகள்.  வு என்பது விகுதி.  துப்பு - முன்னர், உரு -  தெளிவாகி, அ என்பது அங்கு என்று குறிப்பது.  ஆகவே, எல்லாவற்றிலும் முன்னர் அங்கு நிற்பது என்றால் அது தூய்மைதான்.  தூய்மை என்ற சொல்லுமே முன்வரு தன்மையையே குறித்து எழுந்த சொல்தான்.  ஆகவே கருத்தொற்றுமை உள்ளது காண்க. பண்டைத் தமிழர் தூய்மையை வெகுவாகக் கொண்டாடியது இதிலிருந்து தெரிகின்றது.

துப்புரவு என்ற சொல் துப்பரவு என்றும் வரும்,  அரவு என்பது அருமை என்று கொள்க. அரு+மை > அருமை;  அரு+ வு > அரவு.  ரு என்பதிலுள்ள இறுதி உகரம் ரகரமாயிற்று,  இது திரிபு.   தூய்மையே அருமையானது என்பது இதன் சொல்லமைப்புப் பொருளாகிறது.

துப்பற்றவன் என்றால்  முன் நிற்கும் தகுதி அற்றவன் என்று கொள்க.

அரக்கு  என்பதும் பொருள். இன்னும் இச்சொல்லின் பொருளை அகரவரிசைகளில் முழுமையாக அறிந்துகொள்க.  எல்லாம் முன்மை காட்டும் பொருட்களே  ஆகும். "துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை" என்னும் குறளும் காண்க.

துப்புதல் என்ற வினை முன் கொணர்ந்து எச்சிலை உமிழ்தல் என்ற பொருளுடன் அறியப்படுகிறது.  ஆகவே து என்பதற்கு முற்செலவே பொருள். உமிழ் என்ற சொல்லிலும் உ என்ற உகரத்திற்கு முன் என்பதே பொருள்.

இவ்வாறு அறிய இதன் பொருண்மை எளிதாகிவிடுதல் காண்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை





வெள்ளி, 3 அக்டோபர், 2025

ஆலிங்கனம் தமிழ் மூலம்

 ஆளை இங்கு அணை அம் என்ற சொற்களை அல்லது வாக்கியத்தைத் திரித்து இணைத்தாலும்  ஆலிங்கனம் என்ற சொல் வந்துவிடும்.  இவ்வாறு இணைக்கும்போது  உட்பகவுகளைத் திரிக்காமல் இருத்தல்  இயல்வதில்லை. ஆளை என்பது ஆலை என்று மாறிவிடும்.  இங்கு என்பதை இணைக்கையில், ஆலை + இங்கு > ஆல்+இங்கு என்று மாறி,  ஆலிங்கு என்று வரும். ஐகாரக் குறுக்கம் என்பது தொல்காப்பியத்தில் சொல்லப்படுகிறது.. பண்டைக் காலத்தில் கவிதைகளே பெரும்பாலும் எழுதப்பட்டன. ஐயை என்ற சொல்லுடன் ஐ என்ற வேற்றுமை விகுதியைப் புணர்த்தினால்,  பலுக்கும்போது  ஐயயை என்று ஒலித்து, நடுவு இடத்து யை  என்பது ய என்றாவது காண்க. இவண்  ஆளை இங்கு என்பது ஆள்+ இங்கு என்றாகி   ஆளிங்கு > ஆலிங்கு என்றாம்.

இனி அணை என்பது  அனை> அன்  என்று ஐகாரம் முற்றும் தொலைந்துவிடும். இவ்வாறு ஐகாரம் வீடுற,  அனம் என்று வருதல் எளிதாம்.  ஆகவே  ஆல் இங்கு அன் அம் என்று தோற்றமுற்று,   ஆலிங்கனம் என்று எளிதாம் என் க.

இது இன்னொரு வகையிலும் உருவாக்கம் பெறலாம். இது முன் எழுதப்பட்டது. அதனை ஈண்டு காண்புறுவீர். 

ஆலிங்கனம் என்பதற்கு இன்னொரு முடிவு:

https://sivamaalaa.blogspot.com/2021/09/blog-post_28.html

இந்த இடுகையைச் சொடுக்கி, இன்னொரு வகை விளக்கத்தையும் தெரிந்துகொள்ளுங்கள்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை  உடையது.

செவ்வாய், 30 செப்டம்பர், 2025

பூவராகம்

இது திருமாலின் ஓர் அவதாரத்தைக் குறிக்கும் சொல்.  இதனைச் சமஸ்கிருதம் என்றாலும் தமிழ் என்றாலும்  காணப்படும் வேறுபாடு ஒன்றுமில்லை. எம்மொழிக்கு உரித்தாயினும் இதன் மூலச்சொற்கள் தமிழே  ஆகும்,  அவற்றை இங்குக் காண்போம்.

பூ வர ஆகும் என்பதே  பூவராகம் என்று ஒருசொல் ஆனது.  பூமியே அதன்  உருவாகி வந்த கொம்புகளாக இருத்தல் என்பதே பொருள்.  பூ வர அல்லது உருக்கொள்வதற்கு  ஆக்கம் தருவது  பூமி.  இந்தச் சொல்லைப் படைத்தவன் ஒரு தோட்டத்தில் இருந்துகொண்டு இதனை அமைத்திருக்கிறான் என்பது இச்சொல்லிலிருந்து நாம் அறிந்துகொள்வதாகும்.

பூ என்ற சொல்லிற்குச் செடியினின்று தோன்றியது என்பது பொருள். செடி பூமியிலிருந்து தோன்றியதாகின்றது.  பூமி என்றால்  (1) தோன்றியாதாகின நிலம் என்றும், (2) நிலைத்திணையையும் உயிரினங்களையும் தோற்றுவித்ததாகிய நிலம் என்றும் பொருள் கூறலாம்.   நில் > நிலம் :  நிற்பதற்கான இடம் தருவது என்று பொருள்.  தரை :  தரு> தரை.  நிற்பிடமும் வாழ்விடமும் தருவது என்று பொருள்.  இந்தச் சொல் பிறமொழிகளிலும் ஊடுருவியுள்ளது  நமது கொடை. மெய்ப்பொருள் காண்பது அறிவு.

பூமியானது தோற்றமடைந்த ஒரு பெரும் பந்து ஆகும்.  பூத்தல் என்றால்  அழகான தோற்றம் தருதல்.  இம் என்றால் இங்கு என்பதன் சுருக்கம்.  பூ இம் இ >  பூமி, இகரம் தொகுந்தது.  ம் என்ற மெய்யின் ஒலி வெளிவர இ முன் வந்து உதவி செய்கின்றது. மகர ஒற்றில் இகரம் முன்வந்தாலன்றி ஒலி வெளிப்படாது. இ இறுதியை விகுதி எனின் ஒக்கும்.  பூ என்பது முதனிலைத் தொழிற்பெயர். விகுதி இன்றி பகுதி மட்டுமே நின்று பெயராவது.

இனி வராகம் என்பது பன்றியாய் வந்து மாலானது என்று பொருளும் கூறலாம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை

திங்கள், 29 செப்டம்பர், 2025

பொருள் என்ற சொல்லின் தோற்றம்.

 அர்த்த சாத்திரம்  ( சாஸ்திரம்) என்பதைத் தமிழில் ''பொருள்புரி நூல்'' என்பர். பொருள்நூல் என்பதைப்  பொருணூல்  என்றும் புணர்த்தி எழுதலாம். (ள்+நூ-- ணூ என்று வரும்.)  இந்தப் பெயரில் சாணக்கிய(ன்) என்போர் சமஸ்கிருதத்தில்  அர்த்தசாத்திரம் என்ற நூலை இயற்றினார் என்பது அறிந்ததே.

அறுத்த என்ற வினையெச்சத்தைத்தான்  அர்த்த என்று சமஸ்கிருதத்தில்  சொல்வர். பாதி என்பது பகுதி  என்பதன் திரிபு என்றாலும்  இதன் அமைப்புப்பொருள் பகுக்கப்பட்டது  என்பதுதான். வழக்கில் சரிபாதியைக் குறிக்கின்றது.  அறுத்த என்பதும் பகுக்கப்பட்டது என்பதே ;  ஆனால் தமிழில்போல் வடமொழியில் பாதியைக் குறிக்கிறது. இருமொழிகட்கு மிடையில் உள்ள பொருளமைப்பு ஒற்றுமையை இது காட்டுகிறது.

பொரு என்பது  சொல்லின் ஒரு  முதன்மைப் பகுதி  ஆகும். பொருள்  அறியவியலாத வாயொலி  ஒரு வெற்றொலிதான். இதைச் சொல் என்று பெரும்பாலும் குறிப்பதில்லை.  பெரும்பாலான மொழிகள் ஒலிவடிவம் வரிவடிவம் என இரண்டு வடிவங்களும் உடையவை. ஒலிவடிவம் மட்டும் உள்ள மொழிகளும் ஆய்வறிஞர்களால் அறியப்பட்டுள்ளன.

பொரு ( பொர்)  என்பது   ஓர் அடிச்சொல். இது உள் விகுதி பெற்று பொருள் என்று ஆகிறது.   பொர் - பொரு என்ற அடியிலிருந்து வரும் இன்னொரு சொல் பொருந்து என்பது. இச்சொல்லிலிருந்து பொருள் என்பதன் அறிகிடப்பினைத் தெரிந்துகொள்கிறோம்.  சொல்லுடன் பொருந்தி நிற்பதே பொருள்  என்று அறியப்படுகின்றது.  சொல் எதைக் குறிக்கிறது என்பதைப்  பொருந்தி நிற்பதான பொருள் நமக்கு அறிவிக்கின்றது.

செதிள்போலப் பிரியும் மேற்படிவைப் பொருக்கு என்கின்றோம். இதுவும் பொருந்தியிருந்தது  என்பதைக் குறிக்கும் சொல்.

இவ்வாறே நீங்களே தொடர்புடைய சொற்களை அறிந்துகொள்ளலாம். 

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உடையது.


_-----_-----------------------------


ethereal.  எத்தி ரியல்

ஞாயிறு, 28 செப்டம்பர், 2025

வராகனெடை --- வராகனிடை.

 வருவதற்கான எடை என்பதற்கு நிறுத்தெடுத்த பின்பு  அது கொடுக்கப்படவேண்டியவனுக்குச் சென்றுசேரவேண்டியதைக் குறிப்பதாகும். அதுவரைக்கும் அந்தத் தராசுவில் உள்ள எடை போற்றப்படும்.  இது பொன்னின் .எடையையும் காட்டும்.

வராகன் என்பது தங்கவராகனையும் குறித்த சொல்.  தங்கம் என்பது ஒரு காலத்தில் நாணயமாகவும்  வழங்கியது.

தங்க வணிகம் புரிதலில் தங்கம் மென்மேலும் வரவு பெறுவதே  தங்க+ வரு+ ஆகம்  என்பதாகும். ஆகு+ அம் >  ஆகம். இது பொருளோடு  சொல்லிறுதியாய் வருதல் இதன் சிறப்பு. ஆகி அமைதல் என்பது ஆகம் என்பது அறிக.  தங்க இருப்பு போதலை  விட வருதலே தொழிற் சிறப்பு.

வரு ஆகம் என்பது வராகம் என்றமைந்தபின் வராகன் என்று திரிந்தது அம் என்ற இறுதி  அன் என்று திரிதல்.  அதன்பின் எடை எனல் இணைய, வராகனெடை ஆயிற்று.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

பகிர்வுரிமை






----------------------------------------------------------------------------------------------------------------


திரிபு ( நினைவுக்குறிப்பு)

தேய்வடை > தேவடை


வியாழன், 25 செப்டம்பர், 2025

தேவடி(யார்) தாய் > தா என்பன

 தனக்குத் தெரியாத ஒன்று சரியாக நடைபெறுகிறது என்று முடிவு கொள்ளும் மனத்திடம் எளிதில் அமையாமையால்,  தேவர்கட்கு அடியார்களாக இருக்கும் பெண்டிர் சரியான நடப்பு உடையவர்கள் என்று முடிவு செய்யும் திடமனம்  ஒருவற்கு ஏற்படுவதில்லை. அதனால் தேவரடியார் என்ற சொற்கு நல்ல பொருண்மை ஏற்படவில்லை.

இதிலிருந்து தேவடியாள் என்ற சொல் ஏற்பட்டது.  அது இழிபொருளை சொல்லுக்கு ஏற்றியது,

தேவு என்ற சொல்லே தேய்வு என்பதன் இடைக்குறையிலிருந்து ஏற்பட்டது.  மரங்களின் உராய்வு தீப்பற்றுவதாலும் தீயானது பிற்காலத்து வணக்கம்  பெற்றமையாலும் தேய்வு> தேவு என்ற சொல் தெய்வத்தன்மை,  இறைவன் என்பவற்றைக் குறிக்க எழுந்தது.  தேவு என்ற சொல்லோ தமிழிற் றோன்றிய சொல்லே ஆகும்.

தேய்வு அடை என்ற சொல்  தேய்வடை> தேவடை என்று திரிந்தமையும் உணர்க. நாணய எழுத்துக்கள் தேய்ந்தபின் அந்நாணயங்கள் தேவடை என்று குறிக்கப்பட்டன.  சாய் என்ற வினை சா என்று யகர மெய் இழந்த இன்னொரு வினையாய் அமைந்தமையும் கண்டுகொள்க. தாய் என்ற சொல்லும் பெயர்களில் தா என்ற நிற்றல்,  தேவ(த்)தாய் >  தேவதா என்று குறைந்தமையும் கண்டுகொள்க. பெண்பெயர்களில் தாய் என்பது தா என்றே முடிந்து ,  வனிதைத் தாய் என்பது வனிதா என்று பெயராகும். புனிதத் தாய் >  புனிதத்தா> புனிதா என்றாகும். பல்திரிபு மொழிகள் தனிமொழிகளான பின் இவற்றின் தொடர்புகள் மறைந்தன.  

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிவுரிமை


திங்கள், 22 செப்டம்பர், 2025

ஆவிடை , ஆவுடை, தொடர்புடைய சொற்கள்

 ஆ தொடக்கச் சொற்கள் பற்றி கணினி  23000 மேற்பட்ட உள்ளீடுகளின்  இருப்பினைக் காட்டினும்  அவற்றின் வரிசையையும் பொருட்களையும்  தேடுபொறிகள் காட்டத் திணறுகின்றன. ஆ என்பதற்குப்  பசு என்பது பொருள்.  ஆவின்பால் என்றால் பசுவின் பால்.

ஆ வுடையார் என்பதுதான்  ஆவிடையார் என்று திரிந்துவிட்டது என்று தமிழாசிரியர் சொல்வர். இதுவே  ஆவடையார் என்று திரிந்தது என்றும் கூறுவர்.

மாடு என்பதற்குச் செல்வம் என்று பொருளிருப்பதுபோல,  ஆ என்பதும் ஆக்கம் என்று பொருள்தரும் என்ற விளக்கம் உள்ளது.  ஆக்கம்,  செல்வம் என்பன ஒரு பொருளன. ஆ என்பது முதனிலைப் பெயராகச் செல்வம் என்று பொருள்தர வல்லது.  ஆவுடையார் என்பது செல்வம்  உடையார் என்று,  பசுவினை உடையவர் என்றும் பொருள்தரும்.

ஆ அடையார் என்பது  ஆவடையார்  என்றாம்  எனின்,  ஆ என்ற செல்வம் அடையார் என்னும் செல்வம் அடையமாட்டார் என்று எதிர்மறைப் பொருள் தரும்  என்பது சொல்லப்படுவதில்லை.

விடை என்பது கோழி என்ற பொருளும் உடையது.  ஆனால் எருது என்ற பொருளும் உள்ளது இச்சொல்.  ஆவிடை என்னும் போது இவற்றை உட்படுத்துவது இல்லை.

இங்கு கவனிக்க வேண்டியது சொல்லின் திரிபுகளே. மூலம் தமிழே ஆகும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

பகிர்வுரிமை

சனி, 20 செப்டம்பர், 2025

புத்தகம் - புஸ்தகம், பொத்தகம் > பொஸ்தகம் வடிவங்கள்

 இப்போது  எழுபத்தைந்து ஆண்டுகளின் முன் இந்தச் சொற்களை எப்படி உச்சரித்தார்கள் என்பது நினைவிலுள்ள படியினால்  இவற்றின் இன்றை வடிவங்களுடன் ஒப்பீடு செய்வது எளிதாக உள்ளது.  ஆகவே இந்நுகர்வின் பயனாக உணர்தல் எளிமையாகி  விடுகின்றது.

பொத்தகம் என்றால்  ஓர் ஒரத்தில் பொத்தலிட்டு  நூலை அல்லது கயிற்றைக் கொண்டு சேர்த்துக் கட்டி,  எழுதுவதற்குப் பயன்படுத்திய தாள்கட்டு அல்லது ஏட்டுக்கட்டு என்றுதான் பொருள். பொத்து அகம் என்றால்  பொத்துவிட்டு அகப்படுத்திய ஏட்டுக்கட்டு.  இது புலவர் புனைவான சொல் அன்று. இந்தச் சொல் பேச்சு வழக்கில் ஏற்பட்டதுதான்.  இது பின்பு  புஸ்தகம் என்று  மாறிற்று;  பொஸ்தகம் என்றும் பேசக் கேட்டுள்ளோம்.

எல்லாச் சொற்களுக்கும் சமஸ்கிருத்ததிலிருந்துதாம்  வந்திருத்தல் வேண்டும் என்னும் எண்ணத்தினால்  புஸ்தகம் அல்லது பொஸ்தகம் என்று சொல்வது சரியென்று எண்ணியதும் அறிகிறோம். எனினும் அதுவும் உள்நாட்டு மொழியே ஆதலினாலும்  சொல்லிலும் பொருளிலும் தமிழினோடு நெருங்கிய மொழி ஆதலினாலும்  சமஸ்கிருதம் எனிலும் பெரிய வேறுபாடு எதுவும் இல்லை.  இங்கு அது தமிழென்றே கொள்ளப்படும்.

பொத்து அகம் அல்லது பொத்தகம் எனின்  பொத்தலினால் கட்டப்பெற்று அகப்படுத்தப்படும் ஏடுகள் என்பது சரியாகவே வரும்.  பொகரத்தில் தொடங்குவது ''நாகரிகம்'' அற்றது என்ற எண்ணத்தினால்  புத்தகம் என்று திருத்தி யிருந்தாலும்,   இத்திரிபு ஏற்புடைத்ததே,  ஒலியியல் முறையில்.  இதில் நாகரிகமின்மை ஒன்றும் இலது.

இவ்வெல்லா வடிவங்களும் அகரவரிசை உடையோர்க்கு எட்டியுள்ளன.

செருமானிய மொழியில் பொக் என்பதே  மூலமாகக் காட்டப்பெறுகிறது.   புக்கு என்பது பழந்தமிழில் ''புகுந்து''  என்று பொருள்படும்.  காகிதக் கட்டினுள்  நூல் புகுந்து அல்லது புக்கு. கட்டாகின்ற படியினால் இது தமிழினோடு ஒத்த வடிவமே ஆகும்.  பளிக்கறை புக்க காதை என்றால் பளிங்கு அறையினுள் புகுந்ததைச் சொல்கின்ற கதைப்பாட்டு என்று  பொருள்.

பொத்தகம்>  பொத்து :  துளையிடப்பட்டு;  அ -   அத்துளையிலே ;  கு -  இணைத்துச் சேர்க்கப்பட்டு;  அம் -    அமைவது அல்லது அமைக்கப்படுவது.  கு என்பதன் பொருள்  சேர்தல் என்பது.   சென்னைக்கு =  சென்னையை அடைதல் அல்லது சேர்தல் எனல் பொருளாதல் கண்டுகொள்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை

செவ்வாய், 16 செப்டம்பர், 2025

சந்தித்தல் என்னும் சொல் - தமிழ்.

 சந்தித்தல் என்ற சொல்லை இன்று ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம்.

அண்டுபடுதல் என்பது  அண்டையில்  அல்லது பக்கத்தில் இருத்தல் என்ற பொருளுடைய சொல்.  அண்டுதல்  என்றால்  பக்கத்தில் இருத்தல்.

எண்டா  அண்டா என்ற ஐரோப்பிய முற்காலச் சொற்களிலிருந்து  வரும் இக்காலச் சொற்கள் (ஐரோப்பியம்)  வரை,  இந்தத் தமிழின் '' அண்டு'' என்ற சொல்லுடன் தொடர்பு உடையனதாம்.  அண்டை என்பது  ''அண்டு(தல்)  என்ற சொல்லுடன் அணுக்கத் தொடர்பினது ஆகும்.  

ஒப்பீடு:

அண்டு (த) > and. (E)

அடு(த்தல்)> ed (Latin).

i.e. -  id est.  = அதாவது .

et cetera short form etc.   et is also and.  அடு.

சந்து  என்பது துவாரம்.

துவைத்தல் - துளைத்தல்.  துவைத்தல் மேலிட்டால் துளை தோன்றும்.

துளை> துளை ஆரம் >  (துளாரம் ) > துவாரம்.  [ தொடர்பு கண்டுகொள்க]

அண்டுபடுதல் என்பது போலும் ஒரு சொல்லே அண்+தி+ தல்.   இது அண்தித்தல்>  சண்தித்தல்> சந்தித்தல் என்று  திரிந்துள்ளது.  ஒருவனை அல்லது ஒன்றைச் சந்தித்தலாவது  அண்டுதல் அல்லது அடுத்துச் செல்லுதல்.   

எதிர்கொள்ளுதல் என்பதும் அடுத்துச்செல்லுதலே  ஆகும்.

இவ்வாறு இதை அறிய இது தமிழ்ச்சொல்லே  ஆகும்.  சமஸ்கிருதம் என்று இதனைக் கூறியது தமிழின் சாயல்மொழியே அதுவென்று உணராத காலத்திலாகும். அதனை இந்தோ ஐரோப்பியம் என்றது அதனோடு உறவு கொண்டாடி, இந்தியா என்னும் நாட்டுக்கு அவர்களும் உரிமை உள்ளவர்கள் என்று கோருவதற்கே  ஆகும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உடையது.


சனி, 13 செப்டம்பர், 2025

கச்சா ( எண்ணெய்) என்ற சொல்

 இன்று கச்சா என்ற சொல்லை ஆய்ந்தறிவோம்.

சில அரைத்த திரவப்பொருள்களில் அடர்த்தியான பாகம்,  மேலாக உறைந்து  அல்லது திணுங்கிப் படிந்திருக்கும்.  அதன் கீழ்  திணுக்கமற்ற நீர்ப்பொருள் இருக்கும்.  அரைத்துவைத்த நீர்ப்பொருள் மறந்து விடப்பட்ட நிலையிலும் திரவத்தில் ஏற்படும் மாற்றங்ளால் இத்தகைய கடிய படர்வு மேலெழுந்து நிற்பதுண்டு.  பாலைக் காய்ச்சி வைத்துச் சரியான முறையில் தயிருக்கு உறைவு பெறாத பொழுதும் இவ்வாறு மேற்படிவு காணப்படுவதுண்டு.

கல்லெண்ணெய் என்னும் பெட்ரோல்  எடுக்குமிடங்களில் முதலில் எடுக்கப்படும் எண்ணெய்  தூய்மை அற்றதாக இருக்கும்.  

கச்சா என்ற சொல்லில்  கச என்ற சொல் அடியாக இருக்கிறது. இது கச என்றும் மாறவல்லது. கச என்பது கய என்றும் மாறவல்லது.  கயக்கால் என்பது  ஊற்றுக்கண் என்னும் பொருளதாய் உள்ளது. கயம் என்ற சொல்  குளம் என்றும் பொருள்படுகிறது.

கச்சா என்பது  ஆ விகுதி பெற்று ஊற்று என்னும்  பொருளதாகிறது .  கசடு என்பது .  தூய்மை அற்ற நிலைக்குப் பொருத்தமான சொல்.  சரியானதன்று  என்று அறியக் கிடக்கின்றது.  

கசிதல் என்ற சொல்  சிற்றளவில் வடிதலைக் குறிக்கிறது.  கசி> கச்சி> கச்சா என்று மாறக்கூடிய சொல் இது. இவை எல்லாம்  தொடர்புடைய சொற்கள்.

கச்சா என்பது தூய்தாக்கத்திற்கு முந்திய நிலையைக் குறித்தது பொருத்தமே ஆகும்.

இனிக் கடு உச்சம் என்ற சொற்கள் இணைந்து கட்டுச்சம் என்று வந்தால் இது இடைக்குறைந்து  கடுச்சம்>  கச்சம்>  கச்சா என்றாகும். மிக்கத் திணுக்கமான மென்மையாக்க வேண்டிய எண்ணெய்,  கச்சம்>  கச்சா என்றாகும். இஃது இன்னோர்  அமைப்பு ஆகும்.  இச்சொல் பலபிறப்பு உடைத்து என்க.

கச்சா என்பது தமிழ்ச்சொல் ஆகும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்

பகிர்வுரிமை உடையது



வெள்ளி, 12 செப்டம்பர், 2025

அதிருஷ்டம் என்பதன் தமிழ்மூலம்

 அதிருஷ்டம்  என்ற சொல் எப்படிப்  புனைவுண்டது என்று இன்று தெரிந்துகொள்வோம்.

திருஷ்டம் என்ற ''வடசொல்''  தெருள் என்று வழங்கிற்று.   இதன் அடி,  தெர் என்பதுதான். 

தெர் >  தெரி.

தெர் + உள் >  தெருள்.   உள் என்பது ஒரு விகுதி.  கடவுள் என்பதிற்போல   : ( கட + உள்).  இயவுள் என்பதிலும் உள் விகுதி இருக்கிறது.    ஆ + உள் >  ஆயுள் என்பதில் உள் விகுதி என்று பொருள்.  ''  ஆகிவிட்ட ( ஓடிவிட்ட)  காலம்'' என்பது பொருள். வேறு பொருண்மைகளும் பொருத்தப்படலாம்.  

தெருள் என்று சொல் அமைந்தபின்பு,  இது வினைச்சொல்லாய் ''  தெருளுதல்''  என்ற வடிவில் காட்டப்பெறுகிறது.  தன்வினை பிறவினை வடிவங்கள் எனின், தெருளுதல்.  தெருட்டுதல்  என்று  வரும்.  தெருள்வித்தல் என்பதும் ஏற்புடையதே ஆகும்.

இனி, தெருட்டு (வினைப்பகுதி), தெருட்டு+ அம் >  தெருட்டம்,   தெருட்டம்>  திருட்டம் >  திருஷ்டம்,  (திருஷ்டாந்தம்) என்பன காண்க.  திருட்டம் என்று  திரிந்தது  திருஷ்டம் என்று மாறாவிடில்  ஏற்புடைய வடிவமாகாமை காண்க.  இதுபோல்வதே கஷ்டம் என்ற சொல்லும்.  கட்டு+ அம் > கட்டம் என்பதனோடு கடு+ அம் > கஷ்டம்  என்பதை ஒப்பிட்டு அறிந்துகொள்க.  கண்ணால் பார்த்து வரும் ஊறு,  கண்திட்டி,  இதுவும் திருஷ்டி என்று மாறியது சொல்லிணக்கத்தின் பொருட்டு. திருட்டி என்பதில் ருகரம் நீக்கியது திருட்டு என்ற சொல்லினோடு அதற்கிருந்த அணிமையை விலக்குதற்பொருட்டு. ருகரத்தை வைத்துக்கொண்டு ட் என்னும் டகர ஒற்றை நீக்கி ஷ்  இட்டு வேறுவிதமாக வேறுபடுத்தினர்.   இதற்கு வடவொலி உதவியது என்னலாம்.  இதில் கருத்துவேற்றுமை இருக்கக்கூடும்.

அதிருஷ்டம் என்பதில்  அதி என்பது முன்னொட்டு.   திருஷ்டம் என்பது சொல். அதி திருஷ்டம்  வெகுவிளக்கமாக வந்த ஒரு இலாபம்  அல்லது  வரவு என்று  பொருளுரைக்க. நேரல் வழிகளில்  வாராதது என்று கூறினும் ஒக்கும்.  நேரல்வழி எனின் நேர்மை அல்லாத வழி.

தெருள் > தெருட்டம் என்பது இப்போது வழங்கவில்லை.  ( தெருட்டு+ அம்).  அம் விகுதி இணைக்க  தெருட்டம் என்பது  தானே போதரும் .  வேண்டின் மீளுருச்செய்க.

தெருள் என்ற சொல் பிற வட்டங்களில் வளம் சேர்த்தது காண்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உடையது. 



செவ்வாய், 9 செப்டம்பர், 2025

சமரசம் - பல்நோக்குப் பொருண்மை

 சமரசம் என்ற சொல்லைத் தமிழிலிருந்து  ஆய்வு செய்வோம்.

சமரசம் என்பதற்குக் கூறப்படும் பொருள்களாவன:  1  ஒன்றிப்பு,  2 தொகையாக விருத்தல்  3  வேறுபடாமை  4  ஒற்றுமை 5 நடுநிலைமை  6 இணக்கப்போக்கு  என்று பலவாறு கூறலாம்.  இவற்றின்கண்  உள்ள சிறப்புப் பொருள் ஒவ்வொன்றும் இச்சொல்லைக் கையாள்கின்ற நுட்பமுறையால் வேறுபடக் கூடும்.

இதன் பகவுகள்  சமம் என்பதும்   இரசம் என்பதும்  என்றும்  சொல்வர்.  ஒரு பொருளிலிருந்து வெளிப்படும் சாறுதான்  ரசம் எனப்படுகிறது.  சுவை என்ற சொல்லைப் போலவே இரசம் என்னும் சொல்லும் திடப்பொருட் சுவை மட்டுமேயன்றி  மனம்சார் பண்பினால் ஏற்படும் சுவையையும்  காட்டற்கு அமையும் என்பதறிக.   

சமரசம் என்பதை  '' ஒத்த சாறுண்மை''  என்று  அல்லது  சாற்றொப்புமை என்று தனித்தமிழில் பெயர்த்துக் கூறலாம். இங்குத் திடப்பொருள்  சாராத மனப்பொருள் விளக்கத்திற்கு  சற்றொப்புமை என்பது பொருந்தவும் கூடும்.

இரசம் என்பது வடிகட்டி இறுத்து எடுக்கப்படும் நீர்ப்பொருள்  என்னலாம்.  இறுத்து அசைத்து எடுக்கப்படுவது என்பதே இதன் பொருள்.  இறு+ அசை+ அம்> இறசம் என்பதே  இரசம் என்றானது. இதனை அசைத்து இறுத்து என்று முறைமாற்றிக் கொள்க. றகரம் ரகரமாக மாற,  அசை என்பதிலுள்ள ஐகாரம் குறுகி  அகரமாகி,  சகர என்று நிற்க.  ச்+ அ > ச;  சொல்லானது  இற்+ அச் + அம் என்று புணர்ந்து,  இறசம்  ஆகி,  சொல்லாக்கத்தில் றகர வருக்கங்கள் ரகர வருக்கங்களாகி வருவன என்பதால்,  இரசம்  ஆனபின்  தலையிழந்து  ரசம் ஆயிற்று என்பதை  அறிந்துகொள்க.  இத்தலை இழப்பு,  அரங்கசாமி என்பது  ரங்கசாமி என்பதுபோல  ஆனதே ஆகும்.

சம இறசம்  என்பதே அன்றி  ,   சம அரசம் என்பதும்  இவ்வாறு கொள்ளத்தக்கது ஆகும்.  சமமான இரு அரசுகளின் ஒன்றுகூடுதலை  சமரசம் என்பதும் ஒக்குமென்க.  சம இரை, சம உரை என்பவற்றை எல்லாம்  இங்கனம்  பொருத்தலாம்.  இவற்றுக்கேற்ப விளக்கமும்  முன்வைக்கலாம்.

இரு அரசுகள் ஒத்த பலம் உடையவர்களாயின் இவ்விருவரிடையிலும் சண்டைகள் பெரும்பாலும் நிகழா என்பதை அறிக.  சண்டையிடுவது வெற்றிக்கு.  இல்லாமல் ஒழிவது திண்ணமாயின் அதற்குச் சண்டையிடாமல் ஒற்றுமை பேணுதலே சிறந்தது 

சமரசம் என்ற தமிழ்ச்சொல் பலநோக்குப் பொருண்மை உடைய சொல் என்பதை உணர்ந்து போற்றிக்கொள்க.

தமிழும் சமஸ்கிருதமும் இந்தியாவில் தோன்றி வளர்ந்த மொழிகள்  என்பதால் இவற்றில் இதை எதுவென்றாலும் ஒக்குமென்று முடிக்க.

இவற்றை வேறுபடுத்தியுரைப்பாரும் உளர்.

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்

பகிர்வுரிமை உடையது.


வெள்ளி, 5 செப்டம்பர், 2025

படனை > பஜனை

 இந்தச் சொல் பழங்காலத்தில்  படனம் என்று  இருந்தது.  பின்னர் இது படன அல்லது பஜன  ஆகிப் பஜனை என்று  எழுதப்பட்டு இன்றும் இவ்வாறே வழங்கி வருகிறது.

சாவு என்ற சொல்லுடன் தொடர்புடைய சவம் என்ற சொல் பிணத்தைக் குறிப்பது.

சா> சா+ அம் >  சவம் என்று  குறுகி விகுதி பெற்றுத் தொழிற்பெயராவது காண்க.

தாள் என்ற சொல்லிலிருந்து வருகிற சொல் அம் விகுதி பெற்றுத் தளம் என்று குறுகி  அமைகிறது.    வா என்ற சொல்லினின்று  வந்தான் வருகிறான் என்ற சொற்களும்  வகரமாகக் குறுகிவிட்டன.  இது தமிழ்மொழியில் இயல்பு  ஆகும்.

இதுபோலவே படனம் என்ற சொல்லும்.  பாடு+ அன்+ அம் >  பாடனம்> படனம் என்று குறுகும்.

படனம் > பஜன > பஜனை.

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்

பகிர்வுரிமை உள்ளது

செவ்வாய், 2 செப்டம்பர், 2025

ரவை என்ற சொல். ( துப்பாக்கியின் ரவை).

 இச்சொல்லினை இன்று  ஆய்வு செய்வோம்.

சுழல் துப்பாக்கிகளில் ரவைகளென்னும் தோட்டாக்களை வைப்பதற்குத் துவாரத்துடன் கூடிய சுழலி இருக்கும்.  சுழலியின் துவாரத்தில் வைப்பதற்குரிய தோட்டாக்காக்கள் ரவைகள் எனப்படும்.

இருக்கும்படியாக வைப்பதுதான் இரு + அ + வை > இரவை ஆகும்.   இச்சொல் பின்னாளில் தன் இகரத்தை இழந்து  ''ரவை' ' என்று மட்டும் வழங்கியது.

இரவை என்பதில்  இரு என்பது சொல்லின் பகுதி.  அகரம் இடைநிலை.  வை என்ற இறுதியே விகுதி ஆகும்.

தோட்டில் இருப்பது இரு அ வை > இரவை. ( ரவை).  தோடு > தோட்டா  ( தோடு+ ஆ)   எனவும் படும்.   ஆ என்பதும்  ஒரு விகுதி.    நில் > நிலா எனக்காண்க.  பல சுளைகள் உள்ள பழம் பலா  ( பல் + ஆ).    தோடு> தோட்டா.  இங்கு டகரம் இரட்டித்தது,  இவ்வாறு இரட்டித்தல் வினையிலும் பெயரிலும் நிகழும்.   பாடு> பாட்டு என்பது அறிக.  காடு> காட்டா என்ற சொற்புணர்ச்சியும் காண்க.  இது காடு+ ஆ என்பதுதான்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

பகிர்வுரிமை.


ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2025

அங்ககத்தி என்னும் மரியாதைப் பண்புநலம்

 இந்த மரியாதைப் பண்புக்கு உண்டான பெயரை இன்று அறிகிறோம்.

அணுக்கமாக வந்து பழகுவோரை உரிய பணிவன்புடன் நாம் போற்றிக்கொள்ளவேண்டும்.  எந்த நேரத்தில் எவனால் அல்லது எவளால் நமக்கு ஒரு காரியம்  ஆகவேண்டிய சூழ்நிலை வருமென்பதை உலகில் கணித்து வைத்துக்கொண்டு நடந்துவிடுதல் என்பது இயலாத வேலை.  சிறுதுரும்பும் ஒரு பல்குத்த உதவும் என்பது  உண்மையான  ஒரு பழமொழி.

அணுகி  அகமும் புறமும் மகிழ நிற்பவரை  ''அணுகும் அகத்தினர்''  என்ற தொடரால் அறிந்து கொண்டது பண்டைத் தமிழரின் பேராண்மையைத் தெளியக் காட்டுகிறது 

அணுகு + அகத்து + இ  >  அணுககத்தி >  (அண்கு + அகத்து + இ > அண்+ ககத்தி + அங்ககத்தி   என்ற சொல் அமைந்தது  மகிழத்தக்கது.

ணகர ஒற்று  ங்கென்று வந்தது  அறிந்துகொள்க.  இதுபோலும் சொற்களை முன் பழைய இடுகைகளில் காட்டியுள்ளோம்.

உறுப்புகள் அணுக்கமாக உள்ள பைக்குள் இருப்பதே அங்கம் என்பதும் ஆகும்.  அணுகு+ அம் > அங்கு+ அம் >  அங்கம்  ஆகும்.  தமிழ்ச்சொல்.  அணுகில் உகரம் ஒழிய,  அண் கு அம் >  அண்கம் >  அங்கம்  ஆகும்.  இது வருமொழி நிலைமொழிப் புணர்ச்சி அன்று.  சொல்லாக்கப் புணர்ச்சி  இலக்கண நூல்களில் சொல்லப்படவில்லை.

நீங்கள் (நிங்கள் > நிங்ஙள்)   என்னாமல் தாங்கள்  தங்கள் என்பன இப்பணிவண்பு.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உடையது 

வெள்ளி, 29 ஆகஸ்ட், 2025

ஸ்தாபித்தல் என்ற சொல்லமைப்பு.

 இச்சொல்லை அறிந்துகொள்வோம். 

ஸ்தாபித்தல் என்ற சொல்லை தற்காலத்தில் அவ்வளவாக நாம் உரைநடையில் எதிர்கொள்வதில்லை.. அதற்குப் பதிலாகவோ அன்றித் தனித்தமிழிலோ நிறுவுதல் என்ற சொல் நன்கு வழங்குகிறது. வேறு வகைகளில் சொல்வதற்குப் பல வழிகள் உரைநடையில் உள்ளன.

தாபித்தல் அல்லது தாவித்தல் என்று வருவதில்லை.

ஸ்தாபித்தல் என்றால் தளம் அமைத்து எழுப்புதல் என்று சொல்ல,  அது சரியாகவிருக்கும். 

தளம் >  தளப்பித்தல் > தாள்பித்தல் >  தாட்பித்தல் >  தாபித்தல்  >  ஸ்தாபித்தல் என்று வந்ததே இச்சொல்.

ஓர் அமைப்பின்  தாள்  அல்லது அடிப்பகுதியாய் இருப்பதே தளமாகும்..

தாள் > தாள்+ அம் > தளம்.  

இதில் அம் விகுதி வந்து சேர,  தாள் என்பது தளம் என்று குறுகி அமைந்தது.

சாவு+ அம் >  சவம் என்றமைந்தது போலுமே இது. இதுவே போல் தோண்டப்பட்டது போன்றிருக்கும்  குழாய்,  தொண்டை என்று குறுகி  அமைந்ததும் காண்பீராக.

வாண்டையார் என்ற பட்டப்பெயர்  வள் என்ற அடியிற் றோன்றி,  -----

வள் > வாள்>  வாண்டை >  வாண்டையார்  ( வளமுடையார்)  என்ற பொருளில் வரும் என்பதும் அறிக.  

நீள்தலும் சுருங்குதலும் தமிழியல்பு,  சொற்களில்.   வருக,  வாங்க என்ற சொற்களில் வரும் சுருக்கம்  நீட்சிகளை அறிக.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.

பகிர்வுரிமை.

செவ்வாய், 26 ஆகஸ்ட், 2025

பகிரங்கம் என்ற சொல்.

பகிரங்கம் என்ற சொல் அறிந்தின்புறுவோம்.

பகிரங்கம் என்னும்போது ஒருவரை ஒருவர் அணுகி  அதைப் பகிர்ந்துகொள்வர்.   அதைத்தான் பகிரங்கம் என்று சொல்கிறோம்.  பகிரங்கம் என்ற சொல் அமைந்த காலத்தில் பத்திரிகை இல்லை,   அறைதல்  என்ற  சொல்லுக்கு என்ன பொருள் என்றால்  அரசன் தகுந்த முறையில் தன் கீழதிகாரிகளிடம் சொல்லி முரசறையச் செய்து,  கூவித் தெரிவித்தல்.  இதிலிருந்து பறைதல் என்ற சொல் கிளைத்தது.  அப்படி வராமல் தகுந்த முறையிலின்றி அங்குமிங்குமாகப் பேசிப் பரவுவதுதான்   தகவு+ அல்.   தகுந்த முறையில் அல்லாதது.  தமிழரசுகள் மறைந்தபின்  ''தகவு அல்''  - தகுந்த முறையில் இல்லாதனவே பரவின.  இவ்வரசுகள் போகவே,  அறைதல் என்ற சொல் வழக்கு  இலதாகி,  தகவல் என்பதே எஞ்சி நிகழ்ந்தது.

பகிர்ந்து அண்கு  அம் >  பகிர் அண் கு அம் > பகிரங்கம்  ஆயிற்று.  அண்கு அம்> அங்கமானது.

பகிரங்கம் என்ற சொல் உண்டானபோது  அவர்களிடம் இருந்த பகிர்வு முறைகள் இன்றைய நிலையுடன் ஒப்பிடமுடியாதன.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உடையது.


 

சனி, 23 ஆகஸ்ட், 2025

க> ச வருக்கம் திரிபுவகை [களி>சளி]

 இதனை இன்று   ஆய்வு செய்கிறோம்.

கேரளம் என்ற சொல்லை ஆய்ந்த தேவநேயனார்  சேரல்  என்ற சொல்லே சேரலம் என்ற திரிபு கொண்டு பின் கேரளம் என்று திரிந்தது என்று சொன்னார்.  ச என்ற எழுத்து  க என்று திரிவதானால்தான் இவ்வாறு கூறப்பட்டது. சளி என்பது  ஏறத்தாழ அரிசிக்களி போன்றே இருப்பதால்  களி > சளி என்று திரிதல் இயல்பு. இந்த மாற்றம் கள்>சள் என்று மாறி ஏற்பட்டமையின் இது பொருத்தமே. ( Medical people say that phelgm is a vegitable matter.  )அரிசித் தூள்  பன்மைத் தன்மை உள்ளமையின் கள் என்பது சள் என்று திரிந்து பொருண்மை பிறழாமல் வந்தது. பலர் இருக்கும் இடம் ''கள்> களம்''  எனப்படுவது அறிக. பரவலாகப் பறிக்கப்படுதலால்   கள்> களை என்பதும் காண்க. கள் > களர் என்பதும் அது. பலமரங்கள் (தென்னை) எடுக்கத் தருதலாலும் மற்றும் பல சொட்டுக்கள் வடிதலாலும் கள் என்ற பானம் அவ்வாறு குறிக்கப்படலாயிற்று.

தனது வலிமை பலவாறு விரிந்து ஓய்ந்துவிடுதலை  சள் > சளை > சளைத்தல் என்பதும் குறிக்கிறது. விரிவாகப் பல இடங்களிலும் உடலைத் தேய்த்துத் தடவும் விளையாட்டு :   சள் >சல்> சல்லாவம் எனவாகும். பல சிறியவான கற்கள் சல்லி என்பர்.  இவ்வாறு அறிக.

குருளுதல் > சுருளுதல் என்பதையும்  க - ச திரிபில் கவனத்தில் கொள்ளுங்கள்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

பகிர்வுரிமை

இதில் சில எழுத்துக்கள் அழிந்துவிட்டனவாகையால் இது 

மீட்டு எழுதப்பட்டது என்பதறிக.

திங்கள், 18 ஆகஸ்ட், 2025

ஐப்பசி மாதம் அப்பியை மற்றும் திரிபுகள்

  இப்போது ஐப்பசி என்ற மாதப்பெயரையும்  அதன் மாற்று வடிவங்களையும் ஆய்ந்து காண்போம்.

ஐப்பசி என்ற சொல்லை  ஐ+ பசி என்று பிரித்து  அதற்குப் பொருள் சொன்னால் ஒருவேளை பொருளும் ஆய்வும் தவறாக முடியலாம்,  ஏனெனில் ஐ என்பது சொல்லாக்கத்தில் ஒரு பகவு ஆயினும் பசி என்பது  சரியான பொருளைத் தரவியலாத திரிபு   ஆகும்..

பசி என்பதற்கு இங்கு உடலுக்கு உணவு தேவைப்படுதல் என்ற பொருளுடைய சொல்லன்று.

ஐ என்ற முன்வரும் பகவு,  முன்  ஆசு என்பதன் திரிபு.   ஆ(சு) என்பது  ஆதல் என்ற சொல்லின் முதலெழுத்து.  சு என்பது ஒரு விகுதி.   ஆசிடையிட்ட எதுகை என்ற தொடரில்  ஆதலென்ற வினையின் முதலெழுத்து வருகிறது.  ஆசு என்றால் பற்றுக்கோடு என்ற பொருளும்  உள்ளது. பற்றுக்கோடு என்பது பேச்சுவழக்கில் ஆதரவு என்ற சொல்லால்  குறிக்கப்படும்.  ஆ என்பது பசு என்ற பொருளில் வருவதுடன்  ஆ(தல்) என்றும் வினையாகவும் உள்ளது.   ஆ என்பது  மாடு என்று பொருள்படுகையில்  ஆக்கம் தரும் விலங்கு என்று உணர வேண்டும்.  அதனால்தான் அதற்கு ஆ என்று பெயர்.  மாடு என்பதும் செல்வம் என்று பொருள்தரும்.  மாட்டை    ''ஆ''  என்றது காரணப்பெயர் என்று அறிதல் வேண்டும்.

இகம் என்பது  இ+ கு+ அம் என்பன இணைந்த சொல்லாதலாதலின் இவண் சேர்ந்து இணைந்திருப்பது என்று பொருள் காணவே,  இவ்வுலகம் என்றும் இங்கிருப்பது என்றும் பொருள்படும்.

ஐப்பசி   என்பது முன்னர் ஐப்பிகை என்று கல்வெட்டில் வந்துள்ளது. இது ஐ+ பு + இகை என்ற பகவுகளின் இணைப்பு.  பு என்பது இடைநிலை.  இகை என்பது இகம் என்பதன் திரிபுதான்.  இறுதி ஐ  விகுதி  பெற்றது.

இகு என்பது அம் விகுதிபெறாமல்  இகரவிகுதி பெற்று  இகி என்றாகிப் பின் இசி என்றாயிற்று. இது ககர சகரப் போலி.    சேரலம் >கேரளம் என்பது போல.  இது பிற மொழிகளில் வரும்.  ஆங்கிலத்திலிலும் ஐரோப்பிய மொழிகளிலும் காணலாம்.  அக்டோபர் மாதத்தில் தொடரும் பருவ காலமாகையினால் ஐப்பசி என்பதற்குத் தொடரும்  மாதம் அல்லது காலம் என்று பொருள் உரைத்தல் வேண்டும். 

ஆய்ப் பயில்வது என்ற தொடரை எடுத்துக்கொண்டால்  :  ஆய் > ஆயி>  ஆசி> இது குறுகி: அசி  >  பசி  ( ஐப்பசி)  என்று  ஐப்பசி என்பதுடன் தொடர்பு படுவதை உணரலாம். ஐப்பசி என்பது  பு+ அசி தான். பயி என்ற இரண்டெழுத்துகளும்  பயி > பசி என்றாதலைக் காணலாம்.  ஆகவே ஆய் என்பதை அய்> அயி> ஐ  என்று நிறுத்திவிட்டு,  பயி > பசி என்று காணின்,  ஐ-- பசி  என்று எளிதாக வந்திருக்கின்றது. ஐப்பசி என்பதற்குப்  பலவாறு விளையாடிக்கொண்டிருந்தாலும்  அன்பருக்கு ஆய்ப் பயில்வது என்று மட்டும் சொல்லி மற்றவற்றைத் தராவிட்டாலும் ஐப்பசி என்பதை விளக்குதல் எளிதுதான்.

தொடர்பு குறிக்கும் மாதம் ஆதலால்  அப்பி இயைப்பதான மாதம் என்றும் சொல்லிவிடலாம். எல்லாம் இதன் பால் உள என்று சொல்லுமளவுக்குப் பொருத்தமுடைய மொழி தமிழ். ஒன்றுக்கு மேற்பட்ட முடிவுகளைத் தமிழில் காட்டுவது  இந்த வசதியினால்தான்.

தமிழ் மொழி உலகத் தொடக்கமாய் இருந்ததனால் பலவும் ஒன்றாய்க் காணக்கிடைக்கின்றது.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.

பகிர்வுரிமை தரப்படுகின்றது.