செவ்வாய், 8 ஏப்ரல், 2025

தர்சனம், தரிசனம், தர்சனை,

 தெரிதல் என்பது தனித்தமிழ்ச் சொல்..  இதற்கும் தெள்> தெர்> தெரிதல் என்ற சொல்லுக்கும்  பிறப்பியல் தொடர்பு  உள்ளது.   தெள்>  தெர் என்றும் மாறும்.  இந்த ளகர ரகர மாற்றீடுகளில்  கவனிக்கவேண்டிய முக்கியமான பழைய சொற்களில் ஒன்றுதான்  மடி - மரி என்ற  மாற்றீடு ஆகும்,   டி என்பது ரி என்று மாறிற்று. இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்புதல் என்பதுதான் மொழி  நூல் விதியாகும்.  இதுவும் நம் பண்டை உரையாசியரால் பலமுறை விளக்கப்பட்டதே  ஆகும். இதை நீங்கள் தேடிக் கண்டுபிடித்துக் கட்டுரையாக வெளியிடுங்கள்.  அல்லது நூலாக்கிப் புகழ்பெறுங்கள்.

மாள் > மடி > மரி என்பனவும் தொடர்புடைய சொற்களே. இதன் அடிச்சொல் மள் என்பதாகும்.  இது குறைதல் குறிக்கும் சொல்.  மடிதலினால் ( மடியாமல் ) இருக்கும்  தொகை குறைவு படுகிறது..  மடிதல் என்பது நிகழ்வாகவும் குறைதல் என்பது மடிதலின் விளைவாகவும் கொள்ளத்தக்கவை.  பண்டை மனிதன் வேட்டையின் போது பத்து முயல்களில் நான்கைப் பிடித்துவிட்டால், மீதமிருபது குறைவுதான்.  பண்டை மனிதன் இவ்வாறே தொடர்பினை அறிந்துகொண்டான்.  இதன்மூலம்  மள்> மாள் என்பதன் தொடர்பினை அறிந்துகொள்ளுங்கள்.

மள் > மளிகை:  பெரும்பாலும் உயிரற்ற அல்லது காய்தலுற்ற பொருட்களை விற்றுத் தொழில் செய்வதுதான் மளிகைக் கடை.  மளிகாரம் என்பது காய்ந்த ஒரு மருந்துப்பொருள். ( பொராக்ஸ் borax ). நீரிருந்து காய்ந்த இடங்களில் கிடைப்பதும்  ( நீர்குறைதற் பயனால் கிட்டுவது) மற்றும் பூச்சிக்கொல்லக் கூடியதுமாகும். வெண்காரம்  என்பதும் இதுவே. பூச்சிகள் குறைவுக்கு உதவுவது.

குறைவதும் கூடுவதும் ஒரு நிலைக்களனில் தோன்றும் கருத்துகள்  ஆகும். பத்து முயல்களில் இரண்டு இறந்துவிட்டால் அல்லது அவற்றை உண்டுவிட்டால்,  இறந்தவையை நோக்க இருப்பவை எட்டு,  ஆகவே கூடுதல் ஆகும். பெரும்பாலும் உடற்பலம் அல்லது வலிமை என்பது இவ்வாறுதான் வலியவர்களைச் சுட்டும் கருத்தாகிற்று.  மள்ளர் என்பவர்கள் உடல்வலிமைக் குரிய வேலைகளில் ஈடுபட்டவர்கள். பள்ளம் தோண்டுவதும் வலிமையற்றோரால் இயலாதது  ஆகும். ஆகவே மள்ளர் என்பது உடல்வலியோர் என்றானது இவ்வாறுதான்.

இவை ளகர ரகர மாற்றீட்டை விளக்க எழுதப்பட்டன.  

தெள் > தெளி> தெரி.  இதிலிருந்து தெரிதல் வினை வந்தது . தெரி > தெரிசு> தெரிசு அன் அம் >  தெரிசனம் ஆகும்.  அன் > அண் தொடர்புள்ளவை. இவற்றை முன்வந்த இடுகைகளில் விளக்கியுள்ளோம்.  எடுத்துக்காட்டு: அன் > அன்பு, (அணுக்கம்).  அண்> அணுக்கம்.  அன்= அண். ( இதன் தொடர்பில்).

தெரி என்பது தரி என்று வந்தது திரிபு.  தெரிசனம் > தரிசனம்.  இது தரிசனம் என்றுமாகும். தர்ஷன் என்பது இதனின்று வந்த திரிபு.  தெய்வக்காட்சியைக் குறிப்பது இச்சொல்.

தெரிசனம் என்பது  தர்சனை என்றும் வரும்.

இனி வேறொரு விளக்கத்தில் தொடர்புற்ற பிற விளக்குவோம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.

If you enter compose mode please do not make changes.

நீங்கள் எழுதும் பயன்முறையில் நுழைந்தால், தயவுசெய்து மாற்றங்களைச் செய்ய வேண்டாம். 

இந்த இடுகையை எந்த சமூக ஊடகங்கள் மூலமாகவும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்த இடுகைக்கான பதிப்புரிமை விலக்கு அளிக்கப்படுகிறது.


You may share this post with others through any social media. Copyright is waived for this post.




ஞாயிறு, 6 ஏப்ரல், 2025

விஞ்ஞானம் என்ற சொல்லின் முன்னோடிச் சொல்.

 விஞ்ஞானம் என்ற சொல்,  வி + ஞானம் என்று அமைக்கப்பட்டிருக்கலாம் என்பது உங்கள் கருத்தாக இருக்கலாம்.   சொல்லைப் பார்த்தாலும் அப்படித்தான் தெரிகிறது.  ஞானம் என்ற ஒரு தனிச்சொல்லும் இருப்பதால்  வி என்று சிறப்புக் குறிக்கும் சொல்லின் முதலெழுத்துடன் தொடங்குவது எளிதாகிறது. ஞானம் என்றால் அறிவு என்பது பலரும் அறிந்திருப்பதால்,  இதிலெதுவும் குழப்பம் இருப்பதாகத் தெரியவில்லை!

விஞ்ஞானம் என்ற சொல்லின் முன்னோடியாய் இருந்தது விண்ணானம் என்ற சொல். இது விண்ணானம் என்றும் குற்றாலக் குறவஞ்ச்சி என்னும் நூலிலும் வந்துள்ளது. 

விண்ணாணம் என்பதன் பொருளாவன:

1. இடம்பகம்,  சாதுரியம்

2  சாதுரியம்

3 அறிவு\

4 நாகரிகம்

5 சாலக்கு, பாவனை

6 பகட்டு,  வெளியிற்  காட்டிக்கொள்ளுதல்

7 நாணம் ( யாழ் அகராதி )

ஏறத்தாழ இச்சொலின் பொருள் இவை என்று அற்கிறோம்.

இது விள்+ நாணம் என்று பிரிக்கப்பட்டுக் காட்டப்பெறும்.   ஆயினும் இவ்வ்வாறு காட்டுதல் யாழ் அகராதிக்குரியதாக இருக்கலாம்.   விஞ்ஞானம் என்பதற்கு இப்பிரிப்பு  உதவவில்லை.

விண்ணாணம் என்பதில் வரும் நாணம்,    வெட்கம் குறிக்கும் நாணம் அன்று. இது வேறு சொல்.  நண்ணுதல் என்ற வினை,  நண்ணு + அம் >  நாணம் என்று முதனிலை நீண்ட சொல்லால் அமைந்தது.    நண்ணுதல் என்பது அணூகி ஆராய்தலுக்கு உதவும் சொல்.விணை ஆராய்தல் என்பது பழங்காலத்திலிருந்தே தமிழர்களுக்கு ஒரு கலையாக இருந்துள்ளது. இதிலிருந்தே  விஞ்ஞானம் என்ற சொல்லும் திரிந்திருக்க வாய்ப்புள்ளது.  வானநூல் என்பது ஒரு அறிவியலும்  முதல் ஆய்வுமாக இருந்திருத்தல் பொருந்துவதே  ஆகும்,

விண்ணாணம் என்ற சொல்லைக் கண்டு அதைப் பின்பற்றி விஞ்ஞானம் என்ற் சொல்லை அமைத்தனர் என்பது தெரிகிறது.

அறிக மகிழ்க\

மெய்ப்பு பின்

.f you enter compose mode please do not make changes.

நீங்கள் எழுதும் பயன்முறையில் நுழைந்தால், தயவுசெய்து மாற்றங்களைச் செய்ய வேண்டாம்.

 இந்த இடுகையை எந்த சமூக ஊடகங்கள் மூலமாகவும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்த இடுகைக்கான பதிப்புரிமை விலக்கு அளிக்கப்படுகிறது.


You may share this post with others through any social media. Copyright is waived for this post.



வியாழன், 3 ஏப்ரல், 2025

சாமர்த்தியம் இன்னோர் முடிபு

 சாமர்த்தியம் என்ற சொல்லுக்கு இன்னொரு முடிபு காண்போம்.

முன்னர் கண்ட முடிபு இன்னும் உள்ளது.  சுருங்கக் கூறின்,  அது சா என்பதற்குச் சாதல் என்ற பொருள்கொண்டு  அதனின்று தப்பிக்கத் திரம்படச் செயல்பட்டு அந்த இடுக்கணிலிருந்து வெற்றியுடன் விடுபடுதல்  என்ற பொருள்பதிவுறு மாரு சொல்லப்பட்டது.

இப்போது சா என்பது சார் என்பதன் கடைக்குறையாகக் கொண்டு பொருளுரைக்கப்படுகிறது.   இடுக்கண் வந்துற்ற காலை,  சார்பு கொள்ளத்தக்க நிலையை மேற்கொண்டு,   மருவி -   அதாவது கடைப்பிடித்து,  அவ்விடுக்கணிலிருந்து தப்பி வாழ்தல் என்று பொருள்கொள்ளப் படுகிறது.  

சார்தல் - வினைச்சொல்.

சார் >  சா  -    இது கடைக்குறை வினைச்சொல்.

சார் +  மரு +  து  +  இ + அம்

சா+ மார் + து + இயம்

>  சாமார்த்தியம்   ஆகும்.             

மரு என்பது மார் என்று திரியும்.   இன்னொரு உதாரணம்:  தரு > தார்.   தருவான்,  தாரான்  என்பது காண்க.  தாரம் என்ற சொல்லிலும் தரு என்பது தார் என்று திரிந்தது.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்     

முடிபு என்பது ஆய்வின்  முடிபு என்று பொருள்படும். இது தொல்காப்பியம் முதலிய நூல்களிலும் காணப்படும் சொல். 


YOUR ATTENTION PLEASE


If you enter compose mode please do not make changes.


You may share this post with others through any social media. Copyright is waived for this post.. 


நீங்கள் எழுதும் பயன்முறையில் நுழைந்தால், தயவுசெய்து மாற்றங்களைச் செய்ய வேண்டாம். 


இந்த இடுகையை எந்தச் சமூக ஊடகங்கள் மூலமாகவும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்த இடுகைக்கான பதிப்புரிமை விலக்கு அளிக்கப்படுகிறது.



                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                   

செவ்வாய், 1 ஏப்ரல், 2025

தூதன் யார்? எதனால் இப்பெயர்? அடிச்சொற்கள்

தூதன் என்ற  சொல்லை அறிந்துகொள்வோம்.

தூதனைப் பற்றிய செய்திகள் நிறைய உள்ளன.  தூதன் என்பவன் அரசரிடைத் தொழில் புரிவோம் மட்டுமின்றி,  காதரிடையே சென்று செய்தி சொல்வோனையும் குறிக்கிறது. பாட்டில்,

செல்லா மனைக்குத் தூது சென்றுவா என்றேனோ

செய்யாத காரியம் செய்யவும் சொன்னேனோ 

என்று வருவதால் இறைவனிடமும் இறைவியிடமும் தூதுபோகிறவனுக்கும் இதே பெயர் உள்ளது.

ஒற்றன் என்பவனும் தூதன் தான் எனினும், அவனுடைய வேலை மறைமுகக் கண்டுபிடித்து அரசனுக்குச் சொல்வதாகும்.  சற்று மாறுதலான வேலை இதுவாகும்.

உ,  ஊ என்பன  சு சூ என்றும் து  தூ என்றும் திரியத் தக்கவை.  உ என்றால் முன் செல்வது.  அரசன் போகுமுன் செல்வதால் முன்செல்வதாகிறது.

ஊ >  தூ >  தூது.  இதில் து என்பது விகுதி.

இது ஒரு சுட்டடிச் சொல்  ஆதலால் தமிழ்ச் சொல்.  இதை நீங்கள் மேலும் கேட்டறிந்ந்து கொள்ளலாம்.

அறிக மகிழ்க.\

மெய்ப்பு பின் 


YOUR ATTENTION PLEASE


If you enter compose mode please do not make changes.


You may share this post with others through any social media. Copyright is waived for this post.. 


நீங்கள் எழுதும் பயன்முறையில் நுழைந்தால், தயவுசெய்து மாற்றங்களைச் செய்ய வேண்டாம். 


இந்த இடுகையை எந்தச் சமூக ஊடகங்கள் மூலமாகவும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்த இடுகைக்கான பதிப்புரிமை விலக்கு அளிக்கப்படுகிறது.


ஞாயிறு, 30 மார்ச், 2025

அசோகப் பேரரசன் காலத்துத் தமிழ்த் திரிபுகள்



அசோகப் பேரரசனின் கல்வெட்டுக்களில் அதியமான் என்னும் தமிழரசனின் பெயர் திரிந்து காணப்பெறுகிறது. அயல் நிலங்களைச் சென்று சேர்ந்த சொற்கள் பல திரிந்துவழங்குதல் என்பது மொழிகளின் இயல்பு ஆகும். திரிதல் ஒன்றும் வியப்பை ஏற்படுத்தவில்ல்லை. போலிச்சொற்கள் விதிப்படியே திரிந்துள்ளன என்பதே இன்று இங்கு நம் கவனத்துக்குரிய தாகியுள்ளது.
அதியமான் என்னும் சொல் சதியபுத என்று அறியப்பட்டுள்ளது. அதிய என்பதே சதிய என்பது திரிபு.இது அகர சகரத் திரிபு, இது இலக்கணத்துடன் ஏற்புடைய திரிபே ஆகும். மான் என்பது எப்படி புத ஆனது? மான் என்பது உண்மையில் மகன் என்ற தமிழ்ச்சொல்லின் திரிபே. மகன் மான் இரண்டும் தமிழே. மகன் என்றால் புதல்வன் ஆதலால் அசோகப் பேரரசின் கல்விமான்கள் புத என்ற சொல்லின்மூலம் அவனைக் குறித்துள்ளனர்.
புத என்பது புதல்வன் என்பதிற் பாதிதான். வடதேசத்து மொழிகளில் அன் விகுதி இல்லை. ஆகவேதான் புது அல் வு அன் என்ற சொற்பகவுகளில் புது அல்> புத என்று சொல் நின்றுவிட்டது. புதல்வு, புதல் என்பன அசோகன் ஆட்சியின் மொழிவடிவங்கட்கு ஏலாதவை.
இந்தோ ஆரிய மொழிகள் என்று கூறப்பட்டாலும் அன் தவிர்த்த புதல்வு என்பது "சோல்வ்" என்ற ஆங்கிலச்சொல் போல் ஒலி ஏற்கப்படவில்லை என்பது தெளிவு,
புத என்பது அக் காலத்திய மொழியின் சொல்வடிவங்கட்கு ஏற்புடையதாய் இருந்துள்ளது எனற்பாலதையே இது திறம்படக் காட்டும்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்



உங்கள் அன்பான கவனத்திற்கு

FOR YOUR KIND ATTENTION PLEASE

If you enter compose mode please do not make changes.

You may share this post with others through any social media. Copyright is waived for this post..

நீங்கள் எழுதும் பயன்முறையில் நுழைந்தால், தயவுசெய்து மாற்றங்களைச் செய்ய வேண்டாம்.
இந்த இடுகையை எந்தச் சமூக ஊடகங்கள் மூலமாகவும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்த இடுகைக்கான பதிப்புரிமை விலக்கு அளிக்கப்படுகிறது.







சனி, 29 மார்ச், 2025

TAMIL FOR SCANNING: உறுவித்தல்.

 எல்லா விவரங்களையும்  உள்ளடக்கி  எடுத்து வைத்துக்கொள்ளுதல் என்று இதற்குப் பொருள் சொல்லலாம்.  ஸ்கேன்னிங்  என்பதற்குப் பதினாங்காம் நூற்றாண்டிலிருந்து பல்வேறு பொருட்சாயல்கள் ஏற்பட்டுப் பயன்பாடு கண்டுள்ளன என்பது ஐரோப்பிய அறிஞர்கள் கூறுமுகத்தான்  தெரியவருகின்றது.

ஓர் இயந்திரத்தில்  நாம் கொண்டுபோய் ஏற்றும் தாளிலிருந்து எடுத்துக்கொள்ளுதல் என்பது  நாம் செயல் முறையில் கண்டுகொள்ளும் பொருளாகும்.

இதற்குத் தமிழில்  உறுவித்தல் என்ற சொல்வது மிக்கப் பொருத்தமாகும்.  உறுதல் என்ற சொல் நெடுங்காலமாக வழக்கில் இருந்த சொல். ஒன்றில் மற்றொன்று  படுதல்,  அல்லது தொட்டுத்தொடர்பு கொள்ளுதல் என்பது இதன் பொருள்.

இது என்னவென்றால் தொடர்பு படுத்தி மேலேற்றுதல். ஒரு இயந்திரம் தாளைத் தொட்டவுடன் தாளிலுள்ளது இயந்திரத்துக்குள் ஏறிக்கொள்கிறது.  இயந்திரம் அதைப் பதிந்து இங்கோ வேறிடத்திலோ வேண்டியபடி கொண்டுதருகிறது.

உறுதல்  தன்வினை  உறுவித்தல் பிறவினை. உறுவித்தல்  என்பதன் மூலம் இதே கருத்து நமக்குக் கிட்டுகின்றது.

வி என்ற விகுதியை இணைப்பதன் மூலம் நாம் தமிழில் இதை எளிதாகச் செய்துவிடலாம்

FURTHER READING:

If you have the time, you may wish to read this as well:

https://sivamaalaa.blogspot.com/2016/11/blog-post_19.html

மேற்கண்ட இடுகை மகத்தான என்ற சொல்லை விளக்குகிறது. கோடிட்ட பகுதியைச் சொடுக்கி வாசிக்கவும்.  Click the underlined entry above and it will take you to the post. 


அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்

YOUR ATTENTION PLEASE

If you enter compose mode please do not make changes.

You may share this post with others through any social media. Copyright is waived for this post.. 

நீங்கள் எழுதும் பயன்முறையில் நுழைந்தால், தயவுசெய்து மாற்றங்களைச் செய்ய வேண்டாம். 

இந்த இடுகையை எந்தச் சமூக ஊடகங்கள் மூலமாகவும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்த இடுகைக்கான பதிப்புரிமை விலக்கு அளிக்கப்படுகிறது.


வியாழன், 27 மார்ச், 2025

சிக்குதல் வினைச்சொல் வந்தது எப்படி?

நாம் தையல்வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, சிலவேளைகளில் நூல் சிக்கிக்கொள்கிறது.  சிலர் சிக்கு எடுப்பதில் வல்லவர்களாக இருக்கிறார்கள்.  சிக்கை அவிழ்த்து நூலை முன்போலாக்கி தைத்துக்கொண்டிருப்பார்கள். அவர்களைப் புகழாமல் இருக்கமுடியாது  சிக்கு அவிழ்படாமல் போய்விட்டால் அது இறுகிச் சிறு உருண்டை போலிருக்க, மிச்ச நூல் பகுதிகள் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக  தொங்கிக்கொண்டிருக்கும், இப்போது சிக்குண்ட நூலின் மொத்த நீட்டமும் குறுகி இருக்கும்.  சிக்கிய இடத்தில் நூல் ஒரு சிற்றுருண்டை ஆகிவிடும்,   நூல் சிறிதாகிறது; சிக்கும் இறுகிச் சிறிதாகிறது,
சிறுகு >  சி கு >  சிக்கு என்று  சொல் அமைகின்றது.  
முதலில் றுகரம் கெடுகின்றது  (அதாவது  எடுபட்டு விடுகிறது. ). பிறகு சி கு என்ற இரண்டும் சேர்ந்து  சிக்கு என்ற வினைச்சொல் உண்டாகிறது. 
இந்தச் சொல் மொழி ஓரசைச் சொற்களைக் கொண்டு அமைந்த மிகப் பழங்காலத்தில்,  சி என்று மட்டும் இருந்திருக்கலாம்.  அதில் கு என்ற வினையாக்க விகுதி சென்று சேர்ந்து,  சி + கு > சிக்கு என்று அமைந்திருக்கலாம்..  இப்படிஸ் சொன்னல் அது சரிதான்,  ஆனால் சி என்ற  அடிப்படை  மூலச்சொல் இப்போது  அதன் பொருளைத்  தெளிவாகக் காட்டவில்லை,  ஆய்வின் மூலமே அறியமுடிகிறது.  
அப்படியானால் இதை அறியவிரும்புவோருக்கு எப்படி விளக்குவது?  சிறு என்ற சொல்லினின்று அதை விளக்கலாம். அதைத்தான் இங்கு செய்திருக்கிறோம்.
சீர் என்பதற்கு பலவேறு பொருட்சாயல்கள் உள்ளன.  சீர்வரிசை முதலியதும் சீர் என்று குறிக்கலாகும்,  பாக்களின் அசைகள் கொண்டு ஏற்படும்  பகுதிகளும் சீர் என்றே சொல்லப்படுகிறது.  இது பல்பொருளொரு  சொல்.
று என்பதும் ஒரு வினையாக்க  விகுதியே.  இதை பழைய இடுகைகளின் மூலம் அறியலாம்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.

YOUR ATTENTION PLEASE

If you enter compose mode please do not make changes.

You may share this post with others through any social media. Copyright is waived for this post.. 

நீங்கள் எழுதும் பயன்முறையில் நுழைந்தால், தயவுசெய்து மாற்றங்களைச் செய்ய வேண்டாம். 

இந்த இடுகையை எந்தச் சமூக ஊடகங்கள் மூலமாகவும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்த இடுகைக்கான பதிப்புரிமை விலக்கு அளிக்கப்படுகிறது.

வியாழன், 20 மார்ச், 2025

அதிசயத்தில் சாய்வதும் சரிவதும்

 இன்று  அதிசயம்  ஆச்சரியம் ஆகிய சொற்களின் தமிழ் மூலங்களைக் காண்போம்.

தமிழ் வீட்டினதும் அரசனினதும் மொழியாய் இருந்தபோது  சமஸ்கிருதம் என்பது தொழுமொழியாய் விளங்கியது. அரசன் கட்டிய கோயில்களிலும் வீட்டுக்கும் வெளியில் நிகழ்வுறும் சாமி கும்பிடும் நிகழ்ச்சிகளிலும் சமஸ்கிருதம் வழங்கியது. முதலில் ஒலியைக் கொண்டு இறைவனை வணங்கும் முறை மக்களிடை இருந்தது. இந்த ஒலிகள்  முதலில் ஏடுகளில் இல்லை. வெகுகாலம் ஏட்டுப்பதிவில் இல்லாதிருந்து ஒலிகளையும் இணைந்திருந்த  தொழுமணிகளையும் (verses of vEdas ) மறக்கத் தொடங்கி, பலவற்றை இழந்தபின்பே இவற்றைப் பாதுகாக்கும் எண்ணம் ஏற்பட்டுப் பதிவிடல் தொடங்கிற்று.  பதிவிடலால் ஒலிகளைச் சரிவரச் சொல்வதற்கு எந்த உதவியும் வரவில்லை. தெரியாதவர்கள் படித்து நன்கு  சொல்லமுடியாமல் கெடுத்ததனால், பலர் இந்த எழுத்துமுயற்சிகளை ஆதரிக்கவில்லை.  அதனால் சமஸ்கிருதத்திலும் பல பாடல்கள் அழிந்துவிட்டன. எஞ்சியதையே வேதவியாசன் பணியினால் நாம் பெற்றுள்ளோம்.

அதற்கென்று போற்றி வைத்திருப்போரை  நேமிக்க வேண்டி இருந்தது. ( காப்பியக் குடிபோன்ற பிரிவினர் தோன்றி மொழிகாத்து வேண்டிய நூல்களை இயற்றினர்.)

ஒரே களத்தில் இயங்கிய காரணத்தால் சமஸ்கிருதம் தமிழ் முதலிய பல பொதுச் சொற்களைக் கொண்டிருந்தன.  கடன்வாங்கிய சொற்கள் என்று குறிப்பதெல்லாம் இதை அறியாமையே ஆகும்.

அதிசயம் ஆச்சரியம் முதலிய சொற்கள் சமஸ்கிருதம் எனப்படுவன,  அவற்றின் மூலச் சொற்களைக் காண்போம்.

மிக்க வியப்பான ஒன்றைக் கேள்விப் பட்டவுடன்,  ஒருவிதச் சாய்வு உண்டாகிறது.  மனம் அந்தச் செய்தியின் பால் சாய்ந்து,  சிலர் நம்புவதும் சிலர் நம்பாமையும் ஏற்படுகிறது,  இது நேரன்மை ஆகும்,  அதாவது சாய்வு,  மனச்சாய்வு.

அதி சயம் என்பதில் சாய் + அம் >  சயம் என்று முதனிலை குறுகிச் சொல் அமைகிறது.  மனிதன் வியப்பின் பக்கம் சாய்வு கொள்கிறான்.

ஆச்சரியம் என்ற சொல்லிலும் சாய்வுக் கருத்தே உள்ளது,  சரிதல் என்பதும் சாய்வுதான்.  சரி + அம் > சரியம் ஆகிறது.

ஆதலின் சரிதல்  ஆச்சரியம் ஆகும்.  அதாவது வியப்பு,  சாய்தல் என்பதும் அது.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.

தொடர்புடைய பதிவுகள்:

https://sivamaalaa.blogspot.com/2015/10/chayanam.html

அனந்த சயனம்

https://sivamaalaa.blogspot.com/2017/09/blog-post_18.html

சயனம்  சயனி  ஆந்தசயனம்

https://sivamaalaa.blogspot.com/2017/09/blog-post_18.html

சங்கதத்தில் தமிழ்\\


https://sivamaalaa.blogspot.sg/2015/10/chayanam.html

அனந்த சயனம்

YOUR ATTENTION PLEASE

If you enter compose mode please do not make changes.


You may share this post with others through any social media. Copyright is waived for this post.. 


நீங்கள் எழுதும் பயன்முறையில் நுழைந்தால், தயவுசெய்து மாற்றங்களைச் செய்ய வேண்டாம். 


இந்த இடுகையை எந்தச் சமூக ஊடகங்கள் மூலமாகவும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்த இடுகைக்கான பதிப்புரிமை விலக்கு அளிக்கப்படுகிறது.


செவ்வாய், 18 மார்ச், 2025

புதிய காட்சியுரை: நாகரிகம் என்ற சொல்.

 இன்று       நாகரிகம் என்ற சொல்லை ஆய்வு செவோம்.  அதனுடன்  "நாகரீகம்" என்ற சொல்லையும்  சேர்த்துக்கொள்வோம்.  இதில் ஓர் எழுத்து  ( ரீ ) நெடிலாக வருகிறது.  இரண்டு வடிவங்களும் அகரவரிசைகளில் காணப்படுதலால் ஒன்று சரி மற்றது பிழை என்னாமல் இரண்டையும் ஆய்வுக்கு உட்படுத்திப் பொருளுரைக்க முடியுமா என்று பார்ப்போம்.\

முன்னர் ஒரு காலத்தில் நாகரிகம் என்பது என்ன சொல் ( தமிழா அல்லது சமஸ்கிருதமா )  என்று தெரியதநிலை இருந்தது.  மேலும் தமிழ் நூல்களில் நாகரிகம் என்று சிலவற்றிலும்  நாகரீகம் என்று சிலவற்றிலும் இந்தச் சொல் பயின்று வழங்கியது. இரண்டுக்கும் ஏறத்தாழ ஒரே பொருள் கூறப்பட்டமையின், இரண்டில் ஒன்ரு வழு என்றும் தமிழாசிரியர்கள் எண்ணினர்/  அதனால் நாகரீகம் என்பது "வழூஉச்சொல்" என்ற  கருத்தும் நிலவியது. இதுதான் முன்னைய நிலைமை .

தமிழ்ப்  பேரகராதி வெளியிட்ட  சென்னைப் பலகலைக்கழக புலவர்கள் இரு வடிவங்களிலும் இந்த நாகரிகச் சொல்லைக் கண்டு பதிவிட்டிருந்தனர். பேரகராதிக்கு முன்வந்த அகரவரிசைகளில் இரு வடிவங்களும் காணப்பட்டன.
இது நகர் என்ற சொல்லினின்று வந்ததாகவே தேவநேயப் பாவாணர் சொல்கிறார்.  என்றாலும் இது  நாகர் என்ற சொல்லினின்றும் வந்ததாகவுமே சொல்லப்படுவதுண்டு.  நாகர் மிக்க நாகரிகம் அடைந்திருந்தனர் ( அதாவது நகரவாசிகளாக  இருந்தனர்) என்றும் விளக்கினர்.

இதை இங்கு வேறு கண்டுபிடிப்புகளுடன் நாம் கூறுகிறோம்.

நாகரிகம் என்ற சொல்லின் பகவுகளைக் காண்போம.

இதை நகுதல் என்ற சொல்லினின்று  தொடர்கிறோம்.  நகுதல் என்றால் ஒளிசெய்தல்.  நகு என்பது நாகு என்று மாறுகிறது.  இதில் முதனிலை நீண்ட தொழிற்பெயர்.  நக்கத்திரம் > நட்சத்திரம் என்ற சொல்லும் நகுதல் என்ற சொல்லினின்றே வந்ததாக புறநானூற்றுச் சொற்பொழிவுகள் செய்த பேராசிரியர்கச் ஒப்புக்கொண்டனர்.
 
1952;  புறநானூற்றுச் சொற்பொழிவுகள். சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, காண்க.

அடுத்தசொல் அரு ( அருமை) என்ற சொல்லாகும்..  \இரண்டும் சேர்த்து நாகரு என்று ஆகும்.

இகம் என்பது ஒரு விகுதி.  இதற்குச் சொல் என்ற அளவில்  இகுத்தல் என்பதிலிருந்து வந்தது என்பதே சரி.  இகுத்தல் என்ற கொடுத்தல் அல்லது ஈதல்.  ஆகவே கொடுப்பது என்பது பொருளாகிறது.  இதற்குப் பல பொருண்மைகள் கூறப்படுவதால் வேறு சொற்களில் விகுதிக்கு வேறு பொருள் வரக்கூடும்.  விகுதிகள் பொருள் இல்லாமல் வேறு சொல்லமைப்புக்கு உதவுதாகவும் இருத்தல் உள்ளது.

நாகரு+ இகம் >  நாகரிகம் ஆகிறது\\

நாகரீகமென்பது பாடல்களில் இசைமுறிவு ஏற்பாடாமல் இருக்க  நீட்டுதல் என்று முடிக்கவேண்டும்.  அதற்கு வேறு பொருளில்லை. பொருள் இதுவேதான் என்று உணர்க.

விண்ணானம் என்பது நாகரிகத்துக்கு இன்னொரு சொல். இதில் விண் ( ஆகாயம்) என்னும் பொருள் உள்ளசொல் நாகரிகத்துக்கு ஈடான சொல்லாகக் கொள்ளப்பட்டிருப்பதால் ஒளி குறிக்கும் ஒரு சொல் நாகரிகத்துக்கு ஆளப்பட்டிருப்பதும்  ஏற்புடையதே என்று உணர்க.

நாகரிகமென்ற சொல்,  திருக்குறளில் உள்ளது:  குறள் வருமாறு:

பெயக்கண்டு நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம்  வேண்டு   பவர் 

என்பது குறள். இது  இலக்கிய வழக்கு உள்ள சொல் என்பதும் அறிக.  இது ஒரு பல்பிறப்பி என்றும் உணர்க

அறிக மகிழ்க

மெய்ப்பு: பின்னர்.
"அதிசயத்தில் சாய்வதும் சரிவதும்" நாளை வெளிவரும். படிக்கத் தவறாதீர்.



வெள்ளி, 14 மார்ச், 2025

நிமிடம் என்ற சொல்.

 நிமிடம் என்ற சொல்லைச் சற்று விளக்கமாக்குவோம்.

இமை என்பது நிமை என்று திரியும் என்பது தமிழாசிரியரிடம் கருத்தாக இருந்துள்ளது.  இது பிறழ்பிரிப்பாலும்  அல்லது திரிபாலும் நிகழலாம்.  பிறழ்பிரிப்பானால் இதை இவ்வாறு காட்டுக:

கண்+ இமை > கண்ணிமை >  நிமை .    கண் என்ற ஈரெழுத்து மறைவு. இதை முதற்குறை என்னாமல் ஒருவகைத் தொகுப்பு என்னலாம். "ணி" முதலெழுத்தாகாதபடியால்  "நி"  வந்தது.

இமை இடுதல் என்பது நிமை இடுதல் என்றாகும்.

நிமை +  இடு +  அம் >  நிமிடம். 

நிமை என்ற சொல் தன் ஐகார இறுதியை இழந்து, நிம் என்று நின்று "இடு + அம்" என்றவை புனைவுற்றது.

ஏனைக் கருத்துகளுக்கு வாசிக்க:

https://sivamaalaa.blogspot.com/2020/04/blog-post_9.html.

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்.

If you enter compose mode please do not make changes.

You may share this post with others through any social media. Copyright is waived for this post.



திங்கள், 10 மார்ச், 2025

குறைபட்ட இந்தப் புவி வாழ்வு

 இரவொன்று வாராமல் பகலே வந்த

இன்பநாளைத் தருகின்ற வலிமை ஒன்றைத்,

தரவேண்டும் என்றெண்ணும்  பகலோன் தானும்.

தகவளந்து   தருதற்கோ இயல்வ தில்லை!

பரவோங்கும் வான்போற்றும் புவியின் மீதும்

பரந்துவாழும்  மக்களிடை  நிலவும் சூழல்,

குறைவாழ்ந்த திலையென்று  நினைத்திட்  டாலும்

குறைவிகுந்து தலைசாய்ந்தார் பலரே ஆமே.   

\

உலகில் சில நடப்புகள் நாம் நினைத்தபடி நடப்பதில்லை.  அதற்காக உடனே உயிரை மாய்த்துக்கொள்வது பரிதாபத்துக்குரியது ஆகும்.  இன்று காலையில் வந்த மணிலாச் செய்தியில் 24 வயதுடைய ஒரு தென் கொரிய சிறந்த நடிகை இறந்துவிட்டாள் என்று தெரிகிறது. ஏதோ ஒன்று நிறைவேறாமல் போனதாக இருக்கலாம்.  பாவம் இவள்.  இதுபோன்று உயிரை மாய்த்துக்கொண்டோர் பலர். இரங்கத் தக்க இதுபோல்வோருக்கு இப்பாடல் எழுதப்பட்டது. 


பொருள்:

தகவளந்து -  தகுதியை அளந்து அறிந்து 

பரவு ஓங்கும்  -  மிகுந்த பரப்புடைய

குறைவு இகுந்து - ஒரு குறைவினால் நிலை அழிந்து 

குறைவு ஆழ்ந்த -  குறைகள் பலவுடைய

இலை என்று - இல்லை என்று

தலைசாய்ந்தார் -  தற்கொலைக்கு ஆட்பட்டார்  ( இடக்கரடக்கல்)

You may share this post with your friends. though any social media.
Copyright is waived. 



மகமும் மிருகமும்


மக என்பது அம், அ, கு, அ என்ற எழுத்துக்களால் அறியப்படுவது ஆகும். இவை, அம் - அமைவும் , அ - அதில் தோன்றுதல், கு - சேர்க்கை, அ - சேய்மை விரிவு, இவற்றைக் குறுக்க, மக என்பது கிட்டுகிறது. கு அ என்ற கடை இரண்டும் க ஆயின.

மக என்ற  மகவு, மகன்,  மகள், மக்கள்  எனற் றொடக்கத்து  பல சொற்களிலும் மகரமே முன்னிற்க,  ஏன் அம் என்பது முதலில் நிற்கிறது என்று சொல்லுகிறோம் என்றால்,  அம் + அ  என்பது  ம + அ  எனில் மக என்ற சொல்லாகும்.  அம் அ கு என்பது ம அ  கு என்றாகி  மக என்று சொல்கிறோம்!  அமைப்பில் அங்கு சேர்ந்தது என்பது பொருள். இதுவே பிறப்பு ஆகும். இது ஒரு Reverse Formation through which certain words were formed. இதைப் பல ஆண்டுகட்கு முன்னே எழுதியிருக்கிறோம்.  ஆனால் இடைக்குறை முதலியவற்றுக்கு விரிவு கொடுத்ததுபோல் இந்தச் சொல்லமைப்பு முறைக்கு அவ்வளவு விரிவு கொடுக்கவில்லை. காரணம் ஒன்றுமில்லை, இடைக்குறைகள் அதிகம் இருந்தன என்பது தவிர.    தொகுப்பும் இங்கு இடைக்குறையில் அடக்கியே
சொல்லப்படுகிறது. அமக என்று அமைத்து அது சொல்லுக்கு இடைஞ்சல் ஏற்படுத்துவது கண்டு,  அமக என்பதை மக என்று நாளடைவில் வழங்கினர் என்க.  இவ்வாறு செய்வது முதற்குறை என்பதால், இதில் இலக்கணத்தில்கூட இடமிருக்கிறது. நீங்கள் ஒரு கணக்கு எடுங்கள். மூன்று  குறில்கள், உயிராயினும் மெயயாயினும் தொடர்ந்து வரும்படியாக எத்தனை சொற்கள் உள்ளன என்று பாருங்களேன். இரண்டு உயிர், உயிர்மெய் வர அடுத்து ஒற்று வந்த சொற்கள் மிகுதியாக இருக்கவேண்டும்.  யாம் கணக்கெடுக்கவில்லை. ஓர் உய்த்துணர்வாகச் சொல்கிறேன்.

மகன் என்ற சொல்லைப் படைக்கும் முனைப்பு,   அமைவு  குறிக்கும் அம் என்ற தொடக்கத்திலிருந்து தமிழன் அமைத்தான் என்றாலும்,  வீண் நீட்டத்தை விரும்பாமல் ஒரு முறையைக் கையாண்டு சொல்லைக் குறுக்கினான்.  அதனால்  அதனால் சொல்  அமகன் என்று அமையாமல் மகன் என்றே சுருங்கி அமைந்தது.  அமைகன் என்றும் அவன் அமைக்கவில்லை.
 ஒவ்வொரு சொல்லையும் ஆய்ந்து ஒலிமுறை அமைப்பைப் புரிந்துகொள்ளூங்கள்.

சமஸ்கிருதத்தில் இன்னும் முன்னேற்றமாக,  ம, இர், உ, கு  அம் என்று அமைத்து மகம் என்பதை ம்ரு கம்  >  ம்ருகம் என்று அமைத்துக்கொண்டனர்.

நனகு சிந்த்தித்து  எனக்கு எழுதுங்கள்.

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்

You may share this post with your friends. though any social media.
Copyright is waived. 

 
















சனி, 8 மார்ச், 2025

வந்தனமும் வணக்கமும்.

 வந்தனம்,  வணக்கம் என்ற இரண்டு சொல்லையும்  இன்று ஆய்வு செய்வோம்.

வந்தனம் என்ற சொல்லின் முதலிரண்டு எழுத்துக்கள் வந்  என்பது.  வணக்கம் என்ற சொல்லின் வண  என்பது  உண்மையில் வண் என்ற அடியைக் கொண்டுள்ளது.   இதை  ஒலிமுறைப் படி அவிழ்ப்பதானால்  வண் + அ+ கு + அம் என்று பிரிக்கவேண்டும்.   ஏன் வண் என்பது அடியாகிறது என்று கேளுங்கள். வண் என்பது வள் என்பதன் திரிபு.  வள் என்பது உண்மையில் வளை என்ற சொல்லைப் பிறப்பித்த அடி.  வளை என்றால் கோணிக்கொண்டு என்று பொருள். வணக்கம் என்பது என்னவென்றால் தன்னினும் பெரியவனாய்  அல்லது தலைதாழ்த்தக்கூடிய மேன்மையுடைய ஒருவனின் முன் நாணிக்கோணி நின்று  தன்பணிவைத் தெரிவிப்பதுதான். பழங்கால மனிதன் தன்னைப் பிறனுக்கு சிறியோனாய்க் கருதித்தான் வணங்கினான்.    யாவரும் சமம் என்ற கருத்து அப்போது எந்த மன்பதையிலும் ( சமுதாயத்திலும்) இன்னும் தோன்றவில்லை. மன்+ பது + ஐ > மன்பதை.  அதாவது மனிதர் ஒருவருடன் பிறர் குறித்த எண்ணிக்கையினருடனாகப்  பதிவுகொண்டு  அல்லது உறவுகொண்டு ஒன்றுபட்டிருப்பது. பது, பதி, பதுங்கு, பொதி எல்லாம் உறவுற்ற சொற்கள்.

வந்தனம் என்ற சொல் எப்போது வணக்கம் என்ற சொல்லுடன் உறவு காட்டுகிறது என்றால்  :

வந்  >  வந்தனம்,

வண் >  வணக்கம் என்னும் போதுதான்.

வந்,  வண்  உண்மையில் ஒன்று அல்லது தம்முள் உறவு உடையவை.

எப்படி முடியும். :இணக்கம்

அன்பு என்ற சொல்லில் உள்ள அன் என்பதும்   அணுக்கம்  என்ற சொல்லில் உள்ள அண்  என்ற  அடியும் எப்படி ஒன்றாம் ஈர்ப்பினைக் காட்டுகின்றனவோ அங்கனம்  வண் என்பதும் வந்  என்பதும்  வளைவு காட்டுபவை.  இரண்டும் ஓரின எழுத்துக்கள்.  ந, ண இரண்டும் இனம் ஒன்றியவை.  இவை பெரிய வேறுபாடு  உடையவை அல்ல.

இன்னும் நீட்டிக்கொண்டு போகாமல்,  வந்தனம் என்பது வளைந்தனம் என்பது தான்  அன்றி வேறில்லை.  வண் என்பதும் அது.  இன்னும் விளக்கமாய்ப் பின் எழுதுவோம். வளைந்தனம் > (இதில் ளை குறுக்கினால்)  வந்தனம் ஆகிவிடுகிறது.  எவரும் சொல்லாத ஒன்றைக் கண்டு சொல்லும் போது அது ஆய்வு என்பதை விடக் கண்டுபிடிப்பு என்றுதான் சொல்லவேண்டும்..

இவ்வாறு  இவை உறவுச்சொற்கள்.  சமஸ்கிருதம் என்பது  தமிழின் அக்காள் தங்கை உறவுள்ள மொழி என்பதுதான் உண்மை.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்,

Copyright for this post is waived.

You may share this through any social media.

[ This post had been attacked and errors had been found.  Now it has been re-edited ]


திங்கள், 3 மார்ச், 2025

சித்து சித்தர்

 இப்போது சித்து என்பதையும் தொடர்புடைய  சொற்களையும் கவனித்து  ஆய்வோம்.

முனிவர்கள் பலர் பரத கண்டத்தில் வாழ்ந்துள்ளனர்.  விசுவாமித்திரர் போலும் முனிவர்கள் பேராற்றல் காட்டிப் பெரும்புகழ் படைத்தவர்கள். இவர்களை நாம் பெரிய முனிவர்கள் என்று சொல்வோமானால்  பல்வேறு முனிவர்கள் அத்துணை ஆற்றல் போற்றல்களுக்கு இலக்காக இல்லாமல்  சிறுசிறு நிகழ்வுகள் மூலமே தங்கள் இறைத்தொடர்பினை வெளிப்படுத்தியவர்களும் இருந்துள்ளனர். இவர்களைச் சித்தர்கள் என்று மக்கள் போற்றியுள்ளனர்.

இது பேரரசர், சிற்றரசர் என்று அரசர்களை  வகைப்படுத்தியது போலவே யாகும். பெருமை சிறுமை என்று வகைப்படுத்தப்பட்ட இறையறிவர்கள் மட்டுமல்லர், மரங்களில் கூட இத்தகைய பாகுபாடுகள் நுழைந்துள்ளன.  மா மரம் என்பது ஒரு மரத்தின் பெயரென்றால்,  அரச மரம் என்பது அரசுமுறையோடு ஒப்பிட்டு வைக்கப்பட்ட பெயராகும் என்பது அறிக.  சித்தரத்தை அல்லது  சிற்றரத்தை என்ற பெயரையும் காண்க. பெருங்காயம் என்று ஒரு காயப்பொருளுக்குப் பெயர் உள்ளமை நீங்கள் அறிந்தது. இப்படிப் பெயர் புனைவது பெருவழக்கு ஆகும்.

சிறு > சிற்றர் என்பது சித்தர் என்று திரிந்துவிட்டது காணலாம். சித்தர் அறிந்து சொன்ன வைத்தியம் சித்தவைத்தியம் ஆயிற்று.  வைத்தியம் என்றால் வைத்து - கொஞ்சம் நீண்ட காலமாகத் தகுந்த சிகிச்சை யளித்துக் குணப்படுத்துவது என்று பொருளாயிற்று.

பார்த்து வியக்கத் தக்க சிறுசிறு  வித்தைகளை இந்தச் சித்தர்கள் செய்தார்கள். கொடுத்த உணவினை வீட்டுக் கூரைமேல் எறிந்து  "யானுமிட்ட தீ மூள்க மூள்கவே:" என்று சொல்ல,  கூரை தீப்பற்றி எறிந்த வியப்புச்செயல்  ஒரு வித்தை எனப்பட்டது.

வியத்தல்:  விய > வியத்தை>  ( இடைக்குறைந்து)  வித்தை ஆனது.  இது வியப்புக்குரியதைக் குறிக்கும்.  படிப்பு  பற்றிய வித்தை, மற்றொன்று.  அது வித்து என்னும் சொல்லினின்று பிறந்தது ஆகும்.

சித்தர் செய் விந்தைகள்,  சித்து எனப்பட்டது.  இது சிறு > சிற்று> சித்து என்று அமைந்த சொல்.

சின்> சிந்து என்பது  சிறிய அளவில் கொட்டும் நீர்குறிக்கும் சொல்.  மனத்துச் சிறிய எண்ணங்கள் சிந்தனை எனப்பட்டது.  தொடர்சிந்தனையாக இல்லாம ல் நீண்டு செல்லாத மனவினையாகும்.

சித்தர், சித்து என்பதை இவ்வாறு அறிக.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

ம்

ஞாயிறு, 2 மார்ச், 2025

Being Yourself and Sivarathri photo

 Yes just be yourselves at all times. This means also that you avoid external undue influences. That will lead to complete discovery of your own self.

[ On how to live life ]

Published in Facebook.

Also enjoy  Mr Kumaran being upayatharar at Sivarathri temple festival.




சிவராத்திரியில் திரு குமரன் அவர்கள்.

CEO  The Independent,  web paper (Singapore).

சனி, 1 மார்ச், 2025

சிவராத்திரி பிரசாதம் வழங்குதல்


 


ஏறத்தாழ  சுமார் ஐந்நூறு பேருக்குமேல்  பிரசாதம் உண்டு மகிழ்ந்தனர். அவர்களில் ஒரு பகுதியினரைப் படங்களில் காணலாம்.

வியாழன், 27 பிப்ரவரி, 2025

சிவராத்திரியில் ( படம் )

 




சிவராத்திரியில் மூன்றாம் காலப் பூசையில் கலந்துகொண்டு யாவருக்கும் பிரசாதம் வழங்கி மகிழ்ந்தோம்.  அப்போது எடுத்த படம்.

படத்தில்  உபயதாரர்கள் திரு  குமரன்,  திருமதி சுனிதா மற்றும் மா. மணி




சிவராத்திரி தெரிசனம்

புதன், 26 பிப்ரவரி, 2025

சாரங்கபாணி என்னும் பெயர்

சாரங்க பாணி என்ற பெயரை சொல்லாய்வு முறையில் காண்போம்.

சாரங்கம் என்பது வில் என்று பொருள்படும் ஒரு சொல். இதில் சார் என்பது முன் சொல்லாய் உள்ளது.  சார் என்பது ம்   சேர் என்பதும் ஒரு பொருட் திரிபுகள்.  

வில்லிலிருந்து புறப்பட்டுக் குறிவைத்த இடத்திற்குச் சென்று சேர்வது அம்பு.  அமபு சார்ந்திருக்கும் வில்லிலிருந்து புறப்படுவதால்  சார் என்ற சொல் முன் வைக்கப்படுகிறது. விட்டபின் குறிவைத்த இடத்தை அது அணுகிச் செல்லும்.

இப்போது  சார்+ அண்+ கு வரை வந்துவிட்டோம்.    அண் கு என்றால் அணுகிச் சேர்வது என்று பொருள்.  கு என்பது சேர்வுக் குறிப்புச் சொல்.   அம் விகுதி இறுதியைக் குறிக்கிறது.  அம் அத்துடன் முடிவது கருத்து.  அல்லது வெறும் விகுதி எனினும் ஒத்துக்கொள்ளலாம்.

அதாவது அம்புக்கான வேலைக்கு அமைந்தது  வில் என்று பொருளாகிறது.

சார்ந்திருந்த அம்பினை அண்மிச் சேர்வித்து இயக்கும் கருவி என்று பொருள்.

அண்கு என்பது அங்கு என்று திரியும்.

எனவே சாரங்கம் என்பது தெளிவான தமிழ்ச் சொல்லாகிறது.

எல்லா ஆயுதங்களும் பண்ணப்படுபவை. அதாவது தேர்ந்தவர்களால் உருவாக்கப் படுவன.

பண்ணுதல் :  பண் > பாண் ஆகும்  சுடு  சூடாகிறது.அதுபோல் முதனிலைத் திரிபு.  மீண்டும் அம் விகுதி வந்து பாணம் ஆகிறது  பாணத்தை வைத்திருப்பவன் பாணி.  

ஆதலின் சாரங்கபாணி எனில் வில்லாளன் என்று பொருள்.

இது நல்ல தமிழ்ச்சொல்தான்.  

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

அடுத்து வருபவை:


வந்தனம் -  மார்ச்சு 9ல்  வெளிவரும்.

சித்தர் -  மார்ச்சு 4ல்  வெளிவரும்.


 


பதிப்புரிமை இறத்து ஆலோசிக்கப்படுகிறது.

 நாம் தமிழரும் தமிழுலகும் பயன்பெற வேண்டுமென்பதற்காகவே எழுதுகிறோம்.  ஆகவே  இங்கு விதிக்கப்பட்டுள்ள பதிப்புரிமையை இறத்து செய்துவிட்டால் மேலும் பலர் படிக்கவும் பகிர்ந்துகொள்ளவும் வசதியாகும் என்று சொல்லப்படுகிறது.  விரைவில் ஒரு முடிவு மேற்கொள்ளப்படும்,

செவ்வாய், 25 பிப்ரவரி, 2025

சிறுத்தை என்ற விலங்குப் பெயர்

 சில புலி வகைகளுடன் ஒப்பிடும் போது சிறுத்தை சற்று சிறிதாகவே உள்ளது. இதனால் இந்தப் பெயர் இவ்விலங்குக்கு ஏற்பட்டுள்ளது என்று முன்னர் விளக்கப்பட்டது.

ஆனால் இப்பெயர் கடுமையாகச் சீறுவதனாலும் ஏற்பட்டது என்று காரணமுள்ளது.  அப்படியானால்   :

சீறுதல் -   சீறு  > சீறு + தை > சிறுத்தை என்று குறுதலும் ஏற்புடையதே ஆகும். இதற்கு ஏற்புடைய சொல்லமைப்பு விதியாவது:

சா>  சாவு > சாவம் ( சாவு+ அம்) > சவம்  என்றும்  குறுகி அமைதல் போன்றதே ஆகும்.   இது.  தோண்டியது போல இருப்பது  தொண்டை என்று குறுகுதலும் காணலாகும்.   ஆதலின் இவ்விலங்குப் பெயர்: இருபிறப்பி  ஆகின்றது என்பதையும் அறியவேண்டும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்


அடுத்த புதிய இடுகை:  சாரங்கபாணி என்ற சொல்லமைப்பு.Thursday 1242 afternoon will be published..  படித்து மகிழுங்கள்.

திங்கள், 24 பிப்ரவரி, 2025

பஜனை என்னும் சொல்

  • பா. பாட்டு,  பாடு என்ற சொற்கள்  பகரத்தில் தொடங்குவன..  பா என்ற ஓரெழுத்து மட்டுமே எல்லா வடிவங்களிலும் தோன்றுகின்றது.  இதே போல் தான் பஜன் பஜனை என்ற சொற்களிலும் பகரமே தோன்றுகிறது.  டு என்பது ஒரு வினையாக்க விகுதி.  ஓடு, ஆடு, பாடு, தேடு,  இடு, இடு என்ற பல சொற்களில்  வருவது டுகர விகுதி:  இது வினையாக்க விகுதியாகும்.  இதன் அடிச்சொல் எதுவென்றால் அது பா என்பதுதான். இது பரவுதல் கருத்தினால் ஏற்பட்ட சொல். ஒரு பாவில், பல கருத்துகள் அல்லது தொடர்புபட்ட செய்திகள் பரப்பப் படுகிறது. அல்லது பரப்பி வைக்கப்படுகிறது.. எழுத்துகளும் பரவி நிற்கின்றன. எத்தனை சீர்கள் இருக்கலாம் என்ற கணக்கும் உள்ளது.

பஜ, பஜரே முதலிய வடிவங்களிலும் பகரமே வருகிறது. சீர்கள் ஒன்றுடன் இன்னொன்று தொட்டு நிற்கின்றன.  அடுத்து அடுத்து வருவதால் பா+ அடு என்றும் விரித்துச்சொல்லுதல் கூடும். ஆனால் முன் காலத்தில் படிக்கும்போது இராகம் போட்டுத்தான் படித்தார்கள்.  இப்போது பாடிப் படிப்பதற்கு வெட்கப் படும் நிலை உள்ளது.

பரவுதல் என்பதும் படருதல் என்பதும் தோற்ற உறவுமுறை உள்ளவை. படர்> பஜர் என்று தொடர்பு காணலாம்.  படர் > பஜர் என்பதும் காண்க. ஒரு பாவில் சொற்கள் படர்கின்றன என்பதும் காண்க.

ரகர டகரத் தொடர்பை, மடி> மரி என்பதிற் காணலாம்.

எந்தச் சொல் பயன்பட்டிருந்தாலும்,  பாடு> பாடன் > படன் > பஜன் என்பது உறுதி.

வா என்ற சொல், இறந்தகாலத்தில் வந்தான், வந்தாள் என்று குறுகுவதைக் காணலாம்.  பெயராய் அமைகையிலும், சாவு> சவம் என்றும்   தோண்டு > தொண்டை என்று குறுக்கமடைவது காணலாம். ஈர்த்தலில் வந்த சொல் இருதயம் என்ற வடசொல்.  ஈர்> இர்> இருது  அ அம் > இருதயம் என்று உண்டானதுதான். இரத்தத்தை இழுத்து வெளியிடும் ஈர் அல்., ஈர்தயம் > இருதயம்.

ஏனைத் தென்மாநில மொழிகளில்  பாடுபவன் என்பதற்க்கு ஈடான சொற்களையும் ஒப்புநோக்கி யுள்ளோம். " Badavanaru என்ற சொல்வடிவம் காணப்படுகிறது.   இது  "பாடுபவனார்"  என்பதற்குச் ஒப்பானதாக இருக்கிறது என்பதை அறிக.

பஜன் என்ற சொல்லை அறிந்துகொண்டீர்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.


சனி, 22 பிப்ரவரி, 2025

மறைமலை அடிகளும் தேவநேயப் பாவாணரும்

 இன்று மறைமலையடிகளாரையும் தேவநேயப் பாவாணரையும் பற்றி அறிந்துகொள்வோம்.  இருவரும் தமிழ்த் துறையில் சிறந்து விளங்கிய  பெரும்புலவர்கள்.

அடிகள் தனித்தமிழ்த் தந்தை என்று போற்றப்படுபவர். தேவநேயப் பாவாணர் சொல்லாய்வில் மூழ்கித் தனி முத்திரை பதித்த பெருமை உடையவர். 
இருவருமே வெள்ளையர்  ஆட்சியின் முடிவு காலத்தில் வாழ்ந்தவர்கள்.  ஆகவே அவர்களின் மொழிக்கொள்கை வெள்ளையர் எழுதிய இந்திய வரலாற்றினை ஒட்டியே அமைந்திருந்தது. இவர்கள் சமஸ்கிருதம் அல்லது சங்கதம் என்பது  இந்தியர்களின் மொழி அன்று என்ற கொள்கையைக் கொண்டிருந்தனர். 
இந்தக் கொள்கை வெள்ளைக்காரர்கள் இந்தியாவை ஆள்வதற்கு உதவுவதற்காக வரைவு   செய்யப்பட்ட கொள்கை என்பதே உண்மை. இந்தக் கொள்கைக்குச் சில சொல்லாய்வுகள் தாம் காரணம்.  பல இந்தியச் சொற்கள் மேலைமொழிகளில் புகுத்தப்பட்டிருந்தன.  அவை அங்கிருப்பதைக் கொண்டு, இவர்கள் சமஸ்கிருதம்  இந்திய மொழியன்று,  உருசியப் பக்க நிலங்களிலிருந்து பெயர்ந்த மக்களின் மொழி என்றனர்.

ஒரு மொழியில் பிறசொற்கள் உள்ளமை ஒருகாரணமே மக்கள் பெயர்ந்து வந்தனர் என்பதற்கு எப்படி  ஆதாரமாகக் கூடும் என்று இவர்களால் விளக்கமுடியவில்லை.

நாம் செய்த சொல்லாய்வில் பல  சமஸ்கிருதச் சொற்கள் தமிழ்ச்சொற்களுடன் வேர் ஒருமை உடையனவாய் உள்ளன. மேலும் சமஸ்கிருதத்தில் முதல் கவி வால்மிகி முனிவர், ஒரு பழங்குடியைச் சேர்ந்தவராய் உள்ளார்.  அவர் பாடிய வரலாற்றில் வருபவர்களும் மேலை நாட்டினர் அல்லர்  பாணினி என்பவரும் பாணர் வகுப்பைச் சேர்ந்தவர் என்றே சொல்லாய்வு காட்டுகின்றது.
அடிகளும் பாவாணரும் வெள்ளையர்களால் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்பதே நாம் இதிலிருந்து காண்கிறோம் மேலும் சொற்கள் வெளியுலக மொழிகளில் உள்ளமை ஒன்றை வைத்தே மக்கள் பெயர்ந்து வந்தனர் என்பதைக் கூறமுடியுமானால்  பாணினியின் பெயரில் பாண் என்ற பாணரைக் குறிக்கும் அடிச்சொல் இருப்பை வைத்தே பாணினி பாணன் என்பதையும் கூறவேண்டுமே.  ஏன் இது கூறாது தவிர்த்தனர் என்பதற்கும் விளக்கம் இல்லை.

சொற்களை ஆய்கின்ற பொழுது அவ்வப்போது இதனை விளக்கியும் உள்ளோம். இவர்களின் ( அடிகள்  பாவாணராகியோரின் ) சொல்லாய்வு சரி என்றாலும் வரலாற்றுக் கொள்கை சரியாகவில்லை. சமஸ்கிருதம் என்பது ஓர் இந்திய மொழி என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.

அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்.


மாமூலர் என்ற சொல்.



இஃது ஒரு முனிவரின் பெயராக அறியப்படுகிறது. ஓர் இடைப்பையனின் பெயராக இருந்து பின்னர் அது ஆள்மாற்றத்தினால் முனிவரின் பெயரானது என்பது இவரின் வரலாறாக ஆனதென்பர்.

மூலம் என்பது ஓர் நோயின் பெயருமாகும்.

இந்த நோயும் தொன்றுதொட்டு நாட்டில் இருந்ததுதான். இவ்வாறு. ஐயப்பட்ட நோயின் பெயரை மனிதருக்கு இடுவரா என்றால் ஐயத்துக்கு உரியதுதான். இதற்கு மூலம் வேறு மூலன் வேறு என்னலாம். ஐயப்பாட்டை விலக்க இது போதுமானது என்று கருதலாம். அல்லது மா என்ற பெருமைக் கருத்தைச் சேர்த்து முனிவருக்குப் பெயர் வந்ததனால் இடக்கு எந்துவுமில்லை ஆயிற்று என்றும் கருதியிருக்கலாம்.

இனி மாமூலர் என்ற பெயரைக் காண்போம்..

மா என்பது பெருமைக் கருத்து.

மூலர் என்ற சொல்லின் அடிச்சொல்  முல் என்பதுதான்.  முல் என்பது ஆதியில் உள்ளது என்று பொருள். இவ்வடி முல் > முன் என்றும் திரியும்.   முல் என்ற அடியே  மூல் என்றும் திரியும்.. இதிலிருந்தே மூலிகை என்ற சொல் வந்துள்ளது.   முல் > மூல் > மூல்+ இ + கை > மூலிகை என்பது  இச்சொல்லில் இ என்பது இடைநிலை என்றும்  கை என்பது விகுதி என்றும் கொள்ளற்குரியன. மூல் என்ற நெடில் முதலான அடியிலிருந்து   அன் என்ற ஆண்பால விகுதி இணைந்து  மூலன் என்ற சொல் வந்துள்ளது.  இதனுடன் மா என்ற அடைச்சொல் சேர்ந்து  மாமூலர் என்ற் சொல் அமைகிறது.   இதன் பொருள் பெருமை வாய்ந்த முற்கால முனிவர் என்பதுதான்.  இஃது ஓர் இயர்பெயரன்று. இது சிறப்புப்பெயர் என்றே சொல்லவேண்டும்.

இந்தச் சிறப்புப் பெயரிலுள்ள மூலம் > மூலன் என்பதிலிருந்து இடைப்பையனுக்கும் பெயர் கூறப்பட்டுள்ளது.  இதுவும் இயற்பெயர் அன்று. பெயர் அறியப்படாத ஒரு பையனுக்குக் கதைக்கென வைக்கப்பட்ட பெயர்தான் இடைப்பையனைக் குறிக்கும்  மூலன் என்ற பெயரும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர். 












புதன், 19 பிப்ரவரி, 2025

PEACE AT WORKPLACE

 I have had the occasion to work closely with a Facebook Official who is my good friend by the pleasant and now unforgettable name of Elina Devia for quite some time now. In our respectful interactions we come across a great deal of work material in the course of  serving our friends in our Facebook feed.

If a certain material is unusual or unacceptable,   some officers would even go to the extent of creating a great deal of fuss in the course of which they would end up on the brink of of even a fist fight. 

But Elina we found is a capable officer who had her own way of approaching any problem and resolving it with amity and calm enhancing interpersonal relations and workplace accord. Words transform into something pleasant. Office became a place to which you would want to revert more often in life.

She once told us this. In a note, she said that she considers me the most admirable person in the world but could not  understand how  the current material or action would go along with it.

It is clear to us that she knew very well how to change something that she was  not prepared to accept. We saw that she had a great ability to do it without causing unnecessary friction. 

If everyone acted like this, there would be less or no conflicts at work in the world. We should praise her for that.

It seems that she studied at an Indonesian University and graduated/ We hereby express our congratulations and best wishes to her.



History

Saved

செவ்வாய், 18 பிப்ரவரி, 2025

சந்திரன் தமிழ்ச்சொல்லா?



சந்திர னென்ற சொல்லில் திறன் > திரன் என்னும் பகவு உள்ளது. திரம் என்பது ஒரு விகுதி என்பதை முன்னர் விளக்கியுள்ளோம். சிலசொற்களில் விகுதி வெறும் சொல்லாக்கத்திற்கே பயன்படுகிறது. அதற்குச் சிறப்பான அல்லது எந்தப் பொருளும் இருப்பதில்லை. இதற்கான விளக்கத்தைச் சில முன் இடுகைகளில் பதிவிட்டுள்ளேம். (ஏம் - ஒருவினைமுற்று விகுதி). வேறு சில சொற்களில் விகுதிக்குப் பொருத்தமுள்ள பொருளிருப்பதாகக் காட்டமுடியும். இவற்றைச் சொல்லாய்வின் மூலம் அறிந்துகொள்ளமுடியும்.

சந்திரன் என்பது ஒரு சமஸ்கிருதச் சொல்லென்போர், அதற்கு வேறு வேரும் வேர்ப்பொருளும் கூறுவதுண்டு. நம் கொள்கைப்படி, சமஸ்கிருதம் இந்தோ ஆரியத்திலிருந்து நாம் பெற்றதன்று. இந்தோ ஆரியம் என்பதே ஒரு வெறும் புனைவுதான். அது இந்திய மக்களால் வளர்க்கப்பட்டுச் செழிப்பானதாக ஆக்கப்பட்டு இலக்கிய வளமும் உறுத்தப்பட்ட ஒருமொழி ஆகும். அதிலிருந்து மேலைநாட்டினர் பல சொற்களைக் கடன் கொண்டனர். கொண்டு தம் மொழிகளை வளப்படுத்திக் கொண்டனர். தமிழ்க் குடிகளுள் பாணர் என்போர் ஒரு தொழிற்பிரிவினராய் இருந்தனர். இராமகாதை என்பதே பிராமணர் அல்லாத ஒரு புலவரால்தான் பாடப்பட்டது. அவர்தான் வால்மிகி முனிவர்.

இராமர் கதையில் பிராமண சூழ்ச்சி என்று ஒன்றுமில்லை.

ஆர் இயம் என்றால் நிறைவான இசைக்குழு என்பதுதான் பொருள். இயம் - இயக்கப்படுவதான், ஓர் இசைஞர் குழு.

தவறாகப் பொருத்தி உரைக்கப்பட்டதால் இன்று ஆரிய என்ற சொல்லுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் உள்ள நிலை ஏற்பட்டுவிட்டது.

இனிச் சந்திரன் என்ற சொல்லைப் பார்ப்போம்.

சந்திரன் பூமிக்கு அருகில் உள்ள ஒரு கோள் ஆகும். இந்தப் பொருள் சந்திரன் என்ற சொல்லிலே காணலாம்.

அண்> சண் என்று திரிவது, அமணர்- சமணர் என்பதுபோல அகர சகரப் போலி. சண்+ திரன் > சந்திரன். ண்+தி என்பது ந்தி என்று திரியும். இதை முன் இடுகைகளில் காட்டியுள்ளேம். இது பாண்+ சாலி > பாஞ்சாலி என்று திரிந்தது போலுமே ஆகும். திரௌபதை என்ற அரசி பாணர் வகுப்பைச் சேர்ந்தவள். பாணர்களும் அரசாண்டு உள்ளனர். வள்ளுவன் அரசனாய் இருந்த பெரியோன் என்பது இற்றை ஆய்வுகளால் தெரியவந்துள்ளது.

திரௌபதை என்ற சொல்லும் பல்பிறப்பி ஆகும். இங்கு இது திரு - உயர்வான, அவ்வை< அவ் = அம்மை, பதி - நற்குணங்கள் பொதிந்தவள் என்று பொருள்தாரும். இதற்கே வேறு விதமாகவும் பொருள்காணக் கூடும். எதுவும் தவறு அன்று, பல்பகுப்பு வசதியுள்ள சொல்லால் இப்பெயர் ஆக்கப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை.

சந்திரனுக்குத் திரும்புவோம். பூமிக்கு அருகில் உள்ளது சந்திரன் என்பது முன்னரே தமிழரும் ஏனை இந்தியரும் அறிந்திருந்தனர் என்பது தெளிவாகிறது. அது அண் ( அண்மை) மையில் உள்ள கிரகம் என்பது அறிவியற் கருத்து என்றாலும் அதையும் இந்தியர் அறிந்த அறிவுடையவர்களாய் இருந்தனர் என்பது இவ்வாய்வினால் தெரிகிறது.

சந்திரன் என்பது அன் விகுதியும் பெற்றுத் தொன்றுதொட்டுத் தமிழில் வழங்குவதால் அது ஏற்புடைய சொல்லே. அது தமிழென்றாலும் சமஸ்கிருதம் என்றாலும் ஒரு மாறுபாடும் இல்லை.

சம் கதம் > சம+ ஸ் + கிருதம் என்பது, சம ஒலி உடைய மொழி . ஒரு சீனனோ வேற்று மொழியினனோ செவிமடுத்தால் அவனுக்கு அதன் ஓசை தமிழ் போன்ற தாகவே இருக்கும். சுனில்குமார் சாட்டர்ஜி சமஸ்கிருத மொழி தென் மொழிகளின் ஒலியமைப்பு உடையது என்று கூறினார். இலக்கணம் எழுதிய பாணினி ஒரு பாணப் புலவன். பிராமணன் அல்லன்.பிரம்மத்தை உணர்ந்தவன் பிராமணன் என்பதால் பாணினியைப் பிராமணன் என்பதில் தவறு ஒன்றுமில்லை. சங்கதம் என்றாலும் சமஸ்கிருதம் என்றுதான் பொருள்.

இவ்வாய்வின் மூலம், சந்திரன் பூமிக்கு அருகில் இருக்கும் கோள் என்பதை இந்தியர் அறிந்தவர்கள் என்பது புலப்படுகிறது.

தண் திரள் என்பதும், தண் திர> சண் திர> சந்திர என்றாகி, சந்திரன் ஆகும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்



ஞாயிறு, 16 பிப்ரவரி, 2025

இலாபம் சொல் தமிழ் ஆவது

 இலாபம் என்ற சொல்லில்  இல்,  ஆதல் என்ற இரண்டு பகவுகள் உள்ளன.

இல் என்பது இன்மை. இன்மை புகுந்துவிட்டால் புதிய வரவு இல்லை என்று பொருள்.

அடுத்து ஆதல் என்ற சொல் வருகிறது. இச்சொல்லுக்கு திரிபுகள் ஏற்பட்டுள்ளன.  ஆ + அம் >  ஆவம்.  ஆ (என்பது ஆக்கம் )  என்னும் வினையடி. ஆவம் என்பது வகர பகரத் திரிபால்  ஆபம் என்றாகிறது.

வரவின்மை  ஆக்கம்  ஆவதுதான் ( மாறுவதுதான் )  மேல் 

 ஆக்கம் ஆகிய இலாபம்.

இல்லாமை ஆக்கம் ஆனால்  அது இலாபம்.

இல் என்பதற்கு இடம் என்றும் பொருள் உள்ளது.  இடத்தில் ஆவது என்பது வருமென இருக்கும் இடத்தில்  ஆக்கம் பெறுவது என்றும் கூறின் அதுவும் சரியாகும். 

profectus என்ற இலத்தீன் முன்னேற்றம் என்ற பொருள் உள்ளது.   தமிழ் இலாபத்தில்  ஆவது என்பது  முன்னேற்றமே ஆகும்.

தமிழர்  பண்பாட்டில் உள்ள கருத்துப்படி  ஒரு கெடுதல் ஏற்படின் அதை நலம் நலம் என்ற சொற்களால் மறைத்துக் குறிக்கவேண்டும்.  நல்கூர்ந்தார் என்ற சொல்லுக்கு நனமை அடைந்தோர் என்பது சொற்பொருள் ஆனாலும்,  வறுமை என்பதுதான் புரிந்துகொள்ளவேண்டிய பொருள் ஆகும். வறுமையிலும் செம்மை என்பதே மந்திரம் ஆகும். வறுமையில் ஒழுக்கம் காக்கவேண்டும், அதுவே முதன்மை யாகும் என்றறிக. ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்பதே வள்ளுவனார் குறள். அதுதான் விழுப்பம் தருதலால்.

இல்லாதவிடத்து ஆக்கமே இலாபம் என்றும்  கூறலாம்.

ஒருவனுக்குத் தொழில் தொடங்கிய காலத்திலிருந்தே  அல்லது பரம்பரை பரம்பரையாக முதலை விட அதிகமாக வருமானம் வந்துகொண்டே இருந்தது என்று வைத்துக்கொள்வோம். அப்படி வருவது சிறப்புத்தான் என்றாலும் இதை அவன் மாமூலாகக் கருதுவான். அவனிடம் யாரும்போய் சிறப்புடன் செய்கிறீர்கள் என்றால், " புதியது ஒன்றுமில்லை, என்றும் உள்ளதுதான், எனினும் இறைவனின் கருணை" என்பான். அவனிருக்கும் வரவு உயரத்திலிருந்து இன்னும் மேல்போகவேண்டும். அப்போது மனம் மகிழும்.  எப்போதும் வருவதற்கு எப்போதும்போல் செலவுகள் பட்டியல் இருக்கும். வாங்கித் தின்போர் பட்டியலும் நிரந்தரம் ஆனதாகவே இருக்கும்.  ஆகவே இலாபம் என்று கருதுவது ஓர் ஒப்பு நிலையிலிருந்து மேலாக வரும் வருமானம். புதிதாக ஒன்றும் இல்லையானால் அதுவும் ஒரு இல்லாமைதான். புதியது செய்யப் புதுவருமானம் வேண்டும். இதை இலாபம் என்ற சொல்லில் உணரவேண்டும்.  Similarity to existing or earlier conditions is nothing new.  A normal margin has already been established.  The margin must move to show something new. இல் என்ற சொல்லில் இதை உட்கிடை என்க.


 

அறிக மகிழ்க

மெய்ப்பு பின் 

For Memory


 in memory of Wanaja who loved and respected all humankind



Wanaja M next to the young lady

நிகண்டு என்ற சொல்.

 சொற்களின் பொருளை நிறுத்துக் காணவேண்டும். அல்லது சிந்தனை பலவாறு ஓடி வழிந்து விடாமல் நிற்பித்துக் காணவேண்டும். யாம் நிறு, நிற்பி என்றசொற்களை இங்குப் பயன்படுத்துவதற்குக் காரணி,  இந்த இருசொற்களினின்றும் இது விளக்கமுறுகிறது என்பதுதான். கண்டு என்ற வினை எச்சம் இறுதி முடிபு கொள்ளுதல் என்பதை வலியுறுத்துகிறது. பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை என்று சொற்களிலும் எல்லாமோ அல்லது சிலமட்டுமோ வரலாம்.

நிறு த்திக் கண்டு கொள்ளுதல்>   நிறு கண்டு >  நிகண்டு என்றாகும். இங்கு  ஒரு வினைச்சொல்லும் அதனோடு ஒரு வினைஎச்சமும் கூட்டி இச்சொல் புனையப்பட்டுள்ளது.  இப்படிச் சொல்வது எளிய முறையாகும்.  சமஸ்கிருதத்தில் மற்றும் பாலி மொழியில் வினை, இன்னும் எச்சங்களிலிருந்தும் சொற்கள் புனைவுறும்.

இன்னொரு முறையில்:

நில் என்ற சொல்லில்  இரண்டு எழுத்துக்கள். இதில் கடைசி எழுத்துக் குறைந்தால் அதற்கு கடைக்குறை என்று பெயர்.  அடுத்த சொல் கண் என்னும் சொல். கண் என்ற சொன் முதலெழுத்து நீண்டுதான்  காண் என்றாகி வினையானது. சொற்களை நின்று காணுதல் அதாவது ஆராயாமல் செல்லாது  சற்று நின்று மொழிபொருள் காரணம் காணுதல். இதன் பொருள் விரித்தால், சென்றுவிடாமல் நின்று கண்கொள்ளப்படுவது என்றாகிறது.  கண்ணிற் கொள்ளுதலாது கண்டுகொள்ளுதல்.   முடிவில்:  நி + கண்  + து >  நிகண்டு ஆகும்.

வியாழன், 13 பிப்ரவரி, 2025

BAJARE MANASA

 The cats make a lot of noise. In the end they do end up with

 a lot of kittens. Then why make a lot of  noise. 

 A beautiful Sanskrit song begins like this: " Hei heart! 

You sing that song! "  BAJARE MANASE  ...........direct your 

energies to internal peace.  

ஆபத்து - முன்சொலா முடிபுகள்.

 முன் சொல்லப்படா முடிவுகள் இங்கு கவியில் வருவதுபோல் முன்சொலா என்று திரிபுசெய்து இட்டிருக்கிறோம். மகிழ்வு நமதே.

ஆக்களைப் பற்றிக்கொண்டு செல்வது ஒரு பண்டைப் போர்த்தொடக்கத் தந்திரமாகும்.  முதலில் பயிற்சிபெற்ற கள்ளர்களை அனுப்பி  மாடுகளைக் கவர்ந்து வரச்செய்வர்.  எதிரி நாட்டவன் வெகுண்டெழுவான். போர் தொடங்கிவிடும்.   ஆ பற்று என்பது ஆ பத்து ஆகி ஒரு சொல்லாய்  ஆபத்து என்றாகிவிட்டது. இதுவும் பொருத்தமே.

இந்தச் சொல் இவ்வாறு அமைவதாகச் சொல்வது,  முதன்மையான கண்டறிவு ஆன காரணத்தினால், இது முன்னர்க்  கூறினோம். இது மக்களிடை வழங்கி மொழியிற் புகுந்த ஒரு சொல். 

ஓரு புதுமையான நடப்பு நிகழ்வு மிக்க வலிமையுடன் வந்து தாக்கினால் அதைக் குறிப்பதற்கு ஒரு சொல் வேண்டுமே.

ஆ+ வல் + து >  ஆவற்று >    ஆவத்து > ஆபத்து ( வகரப் பகரத் திரிபு)

இவ்வாறும் இச்சொல் அமையும்.  ஆகையினால் இது ஒரு இருபிறப்பி அல்லது பல்பிறப்பிச் சொல்.

ஆவது ( ஆகக் கூடியது)   அற்றுப் போனாலும்  ஆபத்துத்தான். இது:

ஆ + அற்று > ஆ+ அத்து >  ஆவத்து >   ஆபத்து என்று ஆகும்.

அற்று என்ற எச்சம் அத்து என்று திரியும்.  இன்னோர் அத்து இருக்கிறது. அது வேறு.

இங்கு ஆ என்பது ஆதல் வினை.  இன்னொரு வடிவம்:  ஆகுதல்.  இதில் கு என்ற வினையாக்க விகுதி சேர்ந்துள்ளது.

பிற பின் காண்போம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.

செவ்வாய், 11 பிப்ரவரி, 2025

உளுந்து - தானியப் பெயர்.

 தானியங்கள் என்பவை ஒரு குடியானவன் தனக்கென்று ஒதுக்கிவைத்துக்கொண்ட கூலங்கள். விளைத்த எல்லாவற்றையும் அவன் எடுத்துக்கொள்ள முடிவதில்லை. வேலை செய்தோருக்கு அளக்க வேண்டும். அப்புறம் ஊர்ப்பெரியவர்களுக்கும் கொடுக்கவேண்டும்.   பிற குடியாவர்களிட மிருந்து முன் பெற்றவற்றைத் திருப்பிக் கொடுக்கவேண்டும்.  அப்புறம் அரசனுக்கு உரியவற்றைத் தனியாக ஒதுக்கி வைத்து அவனுடைய அதிகாரிகள் வரும்போது முறைப்படி அளிக்கவேண்டும். வீட்டுக்கு வேண்டியவற்றை ஒதுக்கி வைத்துக்கொள்ளவேண்டும். பிச்சைக்காரனுக்கும் ஏதாவது வைத்திருக்கவேண்டும்.  நிலக்கிழாருக்கு ( ஜமீந்தாருக்கு) வேண்டும்.  நாமே இவ்வளவும் அவன் கணக்கு என்று ஒரு பத்தி எழுதமுடிகிறது.  அவனே வந்து எழுதினால் ஒரு பக்கத்துக்கு மேலாகவே இருக்கும்.  நீங்கள் சம்பளம் எடுத்தவுடன் செலவுத்திட்டம் எழுதிப்பார்த்தால் கடனாக வந்து முன் நிற்கும்.  துன்பமாதமே என்று பாடவேண்டி இருந்தாலும் இருக்கும்.  மாநில வாழ்வு பெரும் ஆனந்தம் என்று பாகவதர்போல் பாடமுடியாது.  இவ்வாறு இன்னலுற்றுத் தான், தனக்கு என்று ஒதுக்கவேண்டி யுள்ளது.   இப்படி ஒதுக்கியதற்கு ஒரு தனிப்பெயர் வேண்டுமே!  தான் இயம் -  தன்னால் இயன்றது என்று ஒதுக்கியதுதான் பின் தானியம் என்று உருவெடுத்தது.

இயன்றது என்பதும் இயம் என்பதும் எப்படி ஒன்றாகும் என்று கேட்கவேண்டும். இயம் > இயன் என்றாகும்.  அறம் >  அறன் என்றாகவில்லை?  திறம் - திறன் என்றாகவில்லை?  உரம் - உரன் என்றாகவில்லை?  பதம் > பதன் என்றாகவில்லை?  பதனழிவு என்ற பதத்தைப் பாருங்கள். இயம்> இயன் என்பதும் அத்தகையதே.  தமிழின் மொழி இயல்பு அது.  மகர ஈற்றுச் சொற்கள் னகர ஈறாம்.  இயன்> இயன்+து > இயன்று என்று எச்சமாகிவிடுகிறது. இயன்> இயன்று > இயன்ற என்று மாறிமாறி அமையும்.  தனக்கு இயன்றதை வைத்துகொள்வது தானியம் என்று அறிக.

ஆங்கில நிலச் சட்டத்தில் personalty என்று ஒரு சொல் உள்ளது.  A person's personal property என்று இதற்குப் பொருள்.  இதுபோலுமே, தானியம் என்றால் தனக்கு என்று வைத்துக்கொள்ள இயன்ற கூலங்கள் ஆகும்.

இவற்றுள் உளுந்து என்பது உண்டால் உடலில் ஓர் உந்துதலைத் தரும் தானியம் என்று பொருள். உள்ளில் சென்று உந்துதல் ஆற்றல் தரும் தானியம் என்ற பொருள் உள்+ உந்து > உளுந்து என்று பெயர் அமைந்தது.   அதன் ஆற்றலைத் தெரிவிக்குமாறு அமைந்த சொல்.

கூலம் என்பது தானியப் பொருளதுதான்.  விளைந்த பின் அறுவடை செய்து ஒன்றாகச் சேர்க்கப்படுவது என்று பொருள்.  குல் என்பது அடிச்சொல். குல்> குலை. குல் > கூல்> கூல்_+ அம் >  கூலம்,    இதன் சொல்லமைப்புப் பொருள் ஒன்றாகக் கொணர்ந்து குதிருக்குள் வைக்கப்படுவது என்பதுதான். வேறு சம்பளத்துடன் சேர்த்துத் தரப்படுவது என்று சொல்லலாம்.  சம்பளம் என்பதே சம்பு - நெல்,  அளம் = உப்பு என்று  இரண்டும் முன்னாளில் ஒன்றாகக் கொடுக்கப்பட்டதனால் வந்த பெயர்தான். குல் > குலம் என்றால் சேர்ந்துவாழும் கூட்டம் அவ்வளவுதான்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.

 

சனி, 8 பிப்ரவரி, 2025

சாரம் அபச்சாரம்

 இன்று சாரம், அபச்சாரம்  என்பவற்றைத் தெரிந்துகொள்வோம்.  அவற்றுடன் சொல்லாக்கத்தையும் அறிவோம்.

அபச்சாரம் என்ற சொல்லில்  அப என்பதையும் அறிக.   இவ் அப என்பது  அவ என்று அறிக.   அவ> அப என்பது வகர பகரப் போலி. இது எவ்வாறு என்பது பழைய இடுகைகளில் சொல்லப்பட்டுள்ளது,  ஒருமுறை விளக்கியதை இன்னொரு முறை சொல்லலாம்.  நீங்கள் அப்போது இவ்விடுகையைப் படிக்கவில்லை என்பதற்காக அதையே திரும்பவும் சொன்னால் அதை ஒன்றுடன் இரண்டான முறை வாசித்தவர்களுக்கு எரிச்சல் ஏற்படுமாகையால் இம்முறையில் கூறியது கூறுவதைத் தவிர்த்துவிடுகிறோம். நேரம் இருக்கும்போது பழைய இடுகைகளையும் படித்துக்கொள்ளுங்கள்.

அவ என்பதன் முழுச்சொல் அவம் என்பதுதான்.   அவ் என்பது  மூலம்.  இது கிழித்து வேறாக்கி விடுதல், பிரித்துவிடுதல் என்று பொருள்தரும் மூலம். ஒன்றைப் பலவாறு விளக்கலாம் ஆதலின், நீங்கள் சற்று வேறுபட்டும் விளக்கிக் கொள்ளலாம்.  இறுதியில் பொருளை விளக்கம் செய்து இதே நிலைக்கு வருவீரானால் அதுவும் ஏற்றுக்கொள்ளற்குரியதே ஆகும்.  அவ்+ இழ் என்ற சொல்லும் அவிழ் என்றாகும் பின் அவிழ்தல் வினை.  ஒன்றை அவிழ்க்குப்போது கட்டுகளை வேறாக்கிவிடுகிறோம்.  அதனால் இந்த அவிழ்தல் என்ற சொல்லையும் நாம் அறிந்துகொள்கிறோம்.

இதற்குமேல் பல சொல்லாமல் அபச்சாரம் என்ற சொல்லைப் பார்த்தால்,  சாரத்தைப் பிரித்துவிடுதல். சாரத்தை இல்லாமல் ஆக்குதல் என்ற பொருளைத் பெறுகிறோம். இப்போது அறிதலுக்கு நெருங்கிவிட்டோம். ஆனால் அவ் > அவி என்பதில் நீரில் போட்டு ஒன்றை அடுப்பில் வைத்து வேவிப்பதை அல்லவா உணர்கிறோம்.   ஆம், அதிலும் ஒன்றைப் பிரிப்பது, வேறாக்குவது, வேறு உருவிற் படுத்துவது என்று சொல்லி முன் கூறியவற்றுடன் பொருத்த முடிகிறது. அரிசியை வேவித்துச் சோறாக்கினால் அரிசியை வேறுபடுத்திவிட்டோம் என்பதற்குப் பொருந்துகிறது.  குளிர்நீரைச் சூடாக்கினால் சுடுநீர் வேறுபொருள்தான்.  ஆனால் சுடுநீர் குளிர்ந்து மீண்டும் தண்ணீர் ஆனால் அப்படி ஆவது நீரின் தன்மை. அவி என்ற சொல்லின் பொருளை அது பாதிக்கவில்லை 

அவ். அவ. அவி, அவிழ். அவிர்.  அவ> அப என்பன கண்டோம்.

திரைத்தவிர்தல் என்று ஒரு கூட்டுவினைச் சொல் இருக்கின்றது. ஒரு பொருள் விட்டுவிட்டு ஒளிசெய்தால் அது திரைத்து அவிர்தல் ஆகும்.  ஆகவே திரைத்தவிர் பன்மணி என்று குறித்தது ஒரு ஒளிசெய் மணியைச் சொன்னதுமுண்டு. திரைத்துணி சுருங்குவதும் பின் விரிவதும் உடையது.  அதனால் அதைத் திரை என்றனர். 

திரைந்த தோலுடைய தவளை  போன்ற உயிரி, தேரை எனப்பட்டது, திரை> தெரை என்று திரிந்து பின் முதல் நீண்டு தேரை என்று மாறிவிட்டது. முதலெழுத்து இவ்வாறு நீள்தல் தமிழில் பலகாலும் நிகழ்வதுதான்.

சாரம் என்ற சொல் ஒன்றைச் சார்ந்து இருத்தலையும் இருக்கும் தன்மையையும் குறிக்கும். சார்தல் என்பது சேர்தல் என்பதன் திரிபுதான்.  சார் என்ற வினைசொல் உகரம் பெற்று சாரு என்று வராமல் சாறு என்றே வரும். சொல்லிறுதிக்குச் ரு பொருந்தாது. சார்ந்து எழும் விளக்கங்கள், நெறிகள், உள்ளீடுகள் என எவையும் சாரம் ஆகும். இந்தச் சொல்லும் அதன் திரிபுகளும் மற்ற மொழிகளிலும் வருவதில் வியப்பு ஒன்றுமில்லை. அந்த மொழிகளை இங்கு விரித்தல் வேண்டியதில்லை.

சார்ந்து உள்ளவற்றை நிலைகுலையச் செய்யும் ஒரு செயலைத்தான் அபச்சாரம் என்கிறோம்.  ஒழுக்கமுறை அறநெறிகள் என எதையும் சார்ந்து எழுவன சாரம் ஆகும்.  சாறு என்பது சார்ந்து உள்ளிருக்கும் நீர்ப்பொருளைக் குறிப்பது காணலாம்.

சாறு என்ற சொல்லைச் சோறு என்ற  சொல்லுடன் ஒப்பிடுக.  அரிசி அவிக்கப்பட்டுத் தன் திடநிலையிலிருந்து சோர்ந்து விடுகிற காரணத்தால் - அதாவது மெதுவாகிவிட்ட காரணதால் - சோர் > சோறு என்றானது.  இவை அமைப்பில் ஒன்றான சொற்கள்.  பொருள் வேறு.

ஆகவே சாரம் அபச்சாரம் பொருளும் அமைப்பும் அறிந்தோம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.  







புதன், 5 பிப்ரவரி, 2025

அரட்டுதல் மிரட்டுதல் அடிச்சொற்கள்: அரசன் முதலியவை.

 அரசன் என்ற சொல்லுக்கு  அரட்டு என்ற சொல்லே அமைதற்கு உதவியுள்ளது என்பதைக் கூறுகிறோம். கீழ்க்கண்ட இடுகையையும் படித்து ஆராயவும்.

https://sivamaalaa.blogspot.com/2020/09/blog-post_10.html 

அரட்டு என்பது மிகுந்த ஒலிசெய்தலுடன் அதிகாரம் செலுத்துதலையும் குறிக்கும். இதிலிருந்து அரட்டன் என்ற சொல் பிறந்தது.  அரட்டன்  என்ற சொல் முன்னாளில் அரசனையும் குறித்தது.  தொடக்கத்தில் அதிகாரம் செலுத்தினவன் அரட்டன் என்ற குறிப்பிடப் பட்டாலும்  அரட்டி உருட்டுவதையே ஒரு செயல்முறையாகக் கொள்ளாமல் ஒவ்வொன்றையும் முறைப்படி ஆய்ந்து உதவிக் குழுவினருடன் கலந்தாய்ந்து அரசு நடத்தியவனுக்கு  நாளடைவில் வேறு சொல் தேவைப்பட்டது. அதுவும் அர என்ற அடிச்சொல்லையே பயன்படுத்திப் புனையப்பட்டது. அரசு என்ற சொல் நடப்புக்கு வந்தது. இதிலிருந்து அரசன், அரசி என்ற சொற்களும் தோன்றின. இளவரசன் இளவரசி முதலியவையும் உண்டாயின.

அர என்ற அடி  : அரவம் என்பதும் ஒலியே யாகும். வேறு பொருட்களும் உள. அர என்பதன் முன் உரு "அர்".  அங் எனபதும் ஒலி   எழுவதே. அர்ச்சித்தல்  ஒலி யால் நடை பெறுவது ஆகும். அர லி என்பதே அரஹர என்று மாறுகிறது. ஒ லியால் உணரப் படு வோன்  இறைவன். மந்திரங்கள் ஒலியால் அமைந்தவை.

சனி, 1 பிப்ரவரி, 2025

தேசத்துரோகம் சொல்

 தேசத்துரோகம் என்னும் சொல் எவ்வாறு அமைந்தது என்று பார்ப்போம்.

இஃது இணைப்புற்ற சொல் என்பது யாவரும் எளிதில் அறிவதே ஆகும்.

தேசம் என்ற சொல் இப்போது இந்தியாவிலும் பிற இடங்களிலும் அறியப்பட்ட சொல்லாயினும் இது முன்னர் தேயம் என்று இருந்தது.  அதற்கும் முன்பு அது தேம், தேஎம் என்று அளபெழுந்தும் அளபெழாமலும் வழங்கியது.இதன் அடிச்சொல் தேய் அல்லது சிற்றூர் வழக்கில் தே என்பதே ஆகும். இதற்குரிய வினைச்சொல் தேய்தல் என்பதுதான்.  ஏன் இந்த அடியிலிருந்து இது வழங்கவேண்டு  மெனில்,  எந்த நாடும் நாளடைவில் தேய்ந்துவிடக் கூடியது என்பதனால்தான். அரச னொருவனுக்கு பிள்ளைகள் இருந்தால் அந்தப் பிள்ளைகள் அரசன் இறந்தபின் நாட்டைப் பங்குவைத்துக் கொள்ளுதல் உள்ளது. ஐந்து பிள்ளைகள் ஐந்து பங்காகக் கொண்டனர் எனின் நாடு உடைந்து சிறு துண்டுகளாகிவிடும். இவ்வாறு நடவாவிட்டால் எதிரி நாட்டினர் வந்து தாக்கி நாட்டின் பகுதிகளைத்  தங்கள் நாட்டுடன் இணைத்துக்கொள்வர். அப்போதும் நாடு துண்டுகளாகித் தேய்வுறும். இயற்கைப் பேரிடர்களாலும் நாட்டின் பகுதி அழிவுறுவதுண்டு. உள்நாட்டுக் கலகங்களையும் தேய்வுக்குக் காரணமாகக் கொள்ளலாம்.  கலகத்தால் ஒரு பகுதி விடுபட்டு தனியாட்சி அமைதல்.

தே அல்லது தேய் என்ற இரண்டையும் தொடர்புடைய வினைகளாகக் கொள்க.

துரோகம் என்ற சொல்லின் துருவுதல், ஓங்குதல் என்ற இரண்டு வினைகள் தொடர்புபட்டுள்ளன. துரோகம் செய்பவன் எப்படி ஒரு தீவினை செய்வது என்று துருவி ஆராய்ந்து செய்வான்.  இதை துரு என்ற சொல் தருகிறது.  அடுத்து ஓங்குதல் என்ற சொல் ஓங்கு> ஓகு> ஓகு அம் > ஓகம் என்று பெயரைப் பிறப்பிக்கிறது.

இரு முழுச்சொற்களையும் இணைத்து,  தேசத்துரோகம் என்றாகிறது. துரோகம் என்ற சொல் சிற்றூரில் வழக்குடையதுதான்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்


வியாழன், 30 ஜனவரி, 2025

வரி என்னும் சொல்.

  •  வரி என்னும் சொல் தொன்றுதொட்டுத் தமிழில் வழக்குச் சொல்லாக உள்ளது.  வழக்குச்சொல் என்பது புழக்கத்தில் உள்ள சொல்.
  • வரவு, வருமானம் என்ற சொற்களும் உள்ளன. இவை பொதுப்பொருளில் வழங்குவன. வரி என்பது வரு+ இ > வரி என்றாகும்.  வரு என்பதில் இறுதியில் உள்ள உ கெட்டு ( கெட்டு என்றால் நீங்கி)  வர் என்றாகும், பின் இகர விகுதி பெற்று வரியாகும்,  இவ்வாறு உகரம் கெட்ட சொல் இன்னொன்று அறம் என்பது. அறு + அம் > அறம்.  அறு என்பதிலுள்ள உகரமும் கெட்டு.  அற் என்று நிற்க உகரம் சென்று ற் உடன் இணைந்து ற்+ அம் > றம் என்று வந்து அறம் என்ற சொல் ஏற்பட்டது.  இவை இவை செய்யவேண்டியவை, இவை இவை விலக்க வேண்டியவை என்று அறுத்துச் சொன்னதால் அறம் ஆயிற்று என்று உணரவேண்டும். வரவு என்ற சொல்லில் வரு என்பதில் உள்ள உகரம் இவ்வாறே கெட்டது. வர் என்ற மிச்சத்தோடு  அகரம் இடைநிலையாகி நின்று இறுதியில் வு விகுதி பெற்று  வரு+ அ + வு >   வரவு ஆயிற்று
  • யானைக்கு வாரணம் என்ற பெயருண்டு.  இது வரு + அணம் > வாரணம். இது முதனிலை நீண்டு அண் அம் என்று இடைநிலை கலந்த விகுதி பெற்று இச்சொல் அமைந்தது.  இதன் அணம் விகுதி என்று சொல்வதுண்டு.  கட்டவேண்டிய காசு கட்டணம் எனப்பட்டது போல.  ஊர்வலத்தில் வரும் யானையை வாரணம் என்று குறித்தனர். பின்னர் இது விரிந்தது. அவ்வாறு வராமல் நிலையாக ஓரிடத்தில் கட்டிக்கிடக்கும் யானையும் குறிக்கப் பொருள் விரிவதில் வெற்றுவிரிவுதான் காணப்படும். வாரணம் பிற பன்றி முதலியனவும் குறிக்க விரிந்தது.  இது பயன்பாட்டு விரிவு என்க.
  • இதன்மூலம் வரி என்பதில் இகரம் கெட்டு விகுதி பெறுதல் பிறசொற்கள் ஒப்பீட்டுடன் விளக்கப்பெற்றது.
  • அறிக மகிழ்க
  • மெய்ப்பு பின்


தோத்திரம் என்னும் வணக்கச்சொல்.

 தோத்திரம் என்னும் சொல்லை ஆய்வு செய்வோம்,

பத்தியில் தோய்ந்தபடி சொல்லும் வணக்கமே தோத்திரம் ஆகும்

தோய்> தோய்த்திரம் > (  ய் மெய்யெழுத்துக் குன்றி )  > தோத்திரம். 

இதுபோல் யகர ஒற்றுக் குறைந்த இன்னொரு சொல் வாய்த்தியார் > வாத்தியார் என்பது,

இன்னொரு சொல்.  உய் > உய்த்தல் > உய்த்தி > உத்தி என்ற சொல்லையும் எடுத்துக்க்காட்டலாம்.

இன்னும் பல உதாகரணங்கள் பழைய இடுகைகளில் காணலாம்.

தொழுதல் வினையில்,  தொழுத்திறம் என்பது தோய்த்திரம் > தோத்திரம் ஆனதாகவும் கூறலாம்.

இச்சொல் பல்பிறப்பி ஆகும். இதுவும் தமிழ்ச்சொல்லே.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

செவ்வாய், 28 ஜனவரி, 2025

தாராளம் சொற்பொருளோடு பிறப்பு

 தாராளம் என்னும் சொல்லின் பிறப்பும் பொருளும்  காண்போம் ,

இந்தச் சொல்லின் மூன்று பகவுகள் உள்ளன. தார், அடுத்து ஆள் அம் என்ற விகுதி,   ஆள் என்பதை இடைநிலையாகக் கொள்ளினும்   இழுக்காது,

.ஆளம் என்ற புணர்ப்பினை ஒரு விகுதியாகவும் கொள்ளலாம், ஏராளம், மலையாளம், கொலையாளி எனப் பல சொற்கள் உளவால், இதையும் சரி என்றே கொள்ளலாம்.   பொருளறிவதற்கு எது மிக்க வசதிதருவதாய் உள்ளது எனற்பாலதைப் பொறுத்தே இதை அமைவு செய்யவேண்டும்.  ஆளம்> ஆளி ( மனிதரைக் குறிப்பது)

மணவாளம் என்ற சொல் அமையவில்லை.  தன்மை குறிக்கும் இதற்குத் தேவை ஏற்படாமையினால் இல்லை என்று அறிகிறோம்,  மணவாட்டி என்ற சொல்வடிவம் உள்ளது,

ஆளம் என்ற சொல்லில் ஒரு குழப்பமும் இல்லை.  ஆனால் தார் என்ற சொல்லுக்கும் தாறு என்ற சொல்லுக்கும் தொடர்பு உண்டு என்று அறிஞர்கள் எண்ணினர். இதைப்போல மாறும் அல்லது திரிபுறும் இன்னொரு சொல் மார் என்பதே. . மாறு என்னும் பதத்திற்கும் மார் - மர்( அடி ) - மரு - மருவு என்னும் சொல்வடிவங்களுக்கும் பிறப்பியல் தொடர்பு உள்ளது. இத்தன்மையை முன்னிருந்த ஆய்வாளர்கள் அறிந்திருந்தனர்.

மேற்கூறிய கருத்து யாதெனில் யாம் இங்கு புதியது ஒன்றும் கூறவில்லை என்பதுதான். படிகொள்வோர் செயல் மறுத்தற்கு இங்கு நூல்கள் எவற்றையும் குறிக்கவில்லை.

தார் என்பது ஓர் ஆயுதம்.  மாட்டுக்குத் தார்போடுதல், தாறுப் போடுதல் என்று இருவழியிலும் இது வரும். முடிவில் இரும்பு முள் உள்ள ஆயுதம் போர்க்கருவி யாகவும் பயன்பட்டது,  ஆதலின் தார் ஆள் என்பது இத்தகைய கருவி உடையோனைக் குறித்தது என்பது ஒருபொருள்.  படைமறவர்கள் எங்கும் அதிகமாகவே கொடுப்பதும் எடுப்பதும் உடையவர்கள். ஆதலில் எல்லை வைத்துக்கொள்ளாத தன்மையைத் தாராளம் என்பது குறித்தது.

இச்சொல்லை ( தாராளம்)  தரும்தன்மை உடைய ஆள் என்றும் கொள்ளுதல் இன்னொன்று ஆகும். தருதல் குறிக்கும் தரு என்ற அடியும் தார் என்று திரியும். தருவான் என்பது தாருமே என்று முன்னிலை வடிவம் கொள்ளும்.   ஆதலால்,  தார்+ ஆளம் என்பது கொடைசெய்வோனைப் போல என்றும் பொருள்தருதல் காண்க.

தார் > தா என்பது இலத்தீனில் do  என்று திரியும். donation என்ற ஆங்கிலச்சொல்லில் இந்த டோ இருக்கிறது.

தா என்பது தமிழ்ச்சொல்.  தமிழ் முச்சங்க மரபு உடைய மொழி.

இதன்மூலம் தாராளம் என்ற சொல்லின் பொருளை உணர்ந்தீர்.

தொல்காப்பியம் இரண்டாம் தமிழ்ச்சங்கத்து நூல்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்..








.  



சனி, 25 ஜனவரி, 2025

மிராசுதார் என்பது

ராசன் என்ற சொல் ராசு என்றும் உகர இறுதியாகத் திரியும். ராஜன் இராஜன் என்பவெலாம் நீங்கள் அறிந்தனவே.  அரசன் என்ற சொல் முன்னர் எம்மால் இங்கு விளக்கம் பெற்றுள்ளது.  அல்லாமலும் ஏனைத் தமிழாசிரியர்களும் அரசன் என்ற சொல்லே முன்னரே ஆய்ந்தறிந்துள்ளனர். ரெக்ஸ் என்ற சொல்லும் பெண்பாலாகிய ரெஜீனா என்பதும் தமிழ்ச்சொல்லினின்று திரிந்தனவே.  தமிழர்கள் கடல்வணிகம் செய்தவர்கள் ஆதலினால் இச்சொல் உலக முழுவதும் பரவியுள்ளது,

ராசு என்பது மிராசு என்பதில் பின் ஒட்டியுள்ளபடியால் இச்சொல் லே  மிராசு என்பதில் ஒட்டியுள்ளது என்பதை எளிதில் கண்டுபிடித்துவிடலாம்..  மீ என்பது மீது, மேல் என்பவற்றோடு தொடர்பு உடையதாகும்.

 மிராசு என்றால் அவனுக்கு மேல் ஓர் காவலன் இருந்தான் என்றுதான் பொருள் கொள்ளவேண்டும்,   இதுவே உண்மையும் ஆகும்,   இவனே அரசன் என்று கூறலாம் என்றாலும் அதற்கு விளக்கம் தேவைப்படும், மிராசு என்பதற்கு அரசன் என்ற பொருள் இல்லை.  இது ஒரு பிற்காலத்துச் சொல்.

அரசர் முதலியோருடன் அதிகாரத்தால் மிடைந்தவர்களே மிராசு என்போர்.  மிடைதல் என்ற சொல்லின் மி என்ற எழுத்தும்  அரசு என்பதும் சேர்ந்து இச்சொல்லைப் பிறப்பித்தது என்றும் கூறுதற்குரியது இச்சொல்.

மிராசு என்பது தமிழ் மூலங்கள் உடைய சொல்.

அறிக மகிழ்க.





வெள்ளி, 24 ஜனவரி, 2025

ரோகிணி என்ற சொல்லமைப்பு

 ஓங்கு என்ற தமிழ்ச்சொல்  ஒரு மெய்யெழுத்துக் குன்றி,  ஓகு என்று வரும். ஓங்கு என்பதன் பொருள்  "கூடுதல்" ஆவதுதான்.  நடப்பவன் ஓடும்போது அவன் இடத்தை அடையும் நேரம் குறைகிறது.  குறைந்த நேரத்தில் கூடுதலான இடப்பெயர்ச்சியை அடைகிறான். ஆகவேதான்  டு என்னும் வினையாக்க விகுதி பெற்று  ஓ+டு என்பது ஒரு சொல்லாகிறது. இடம் அடைதல் குறிக்கும் கு விகுதி பெற்று ஓ+கு >  ஓங்கு ஙகர மெய்பெற்று மென்மை அடைந்த சொல்லாகும். வேண்டியாங்கு இந்த இடைத்தோன்றிய ஒற்று நீங்கு  இடைக்குறையாவதும் ஒலிநூல் பொருத்தமுடைய  அமைப்பே ஆகும்,

ரோகிணி நட்சத்திரத்தின் பெயரில்  இடையிலிருக்கும் சொல்தான் ஓங்கு> ஓகு என்பது.

தன்வினை பிறவினை என்று வினைகளைப் பாகுபடுத்துவர். வீழ்தல் என்பது தன்வினை. வீழ்த்தல் என்பது பிறவினை.  புதிய வீரனை பழைய படைவீரன் வீழ்த்தினான் என்பது, தானே வீழாமல் இன்னொருவனை விழச்செய்தல் என்பது தெளிவாகக் காட்டப்பெறுகிறது.  ஓங்கு என்ற சொல் இவ்வாறே ஓக்கு என்று பிறவினைப்படுத்தப்படும். ஓக்கு என்ற வினைச்சொல் தொல்காப்பியத்திலும் இலக்கியங்களிலும் கிடைக்கிறது.  இன்றைக் கவிதைகளில் இச்சொல் வருவதில்லை.

ஆகவே இடைக்குறையானால் ஓங்கு ஓக்கு என்ற இரண்டுமே  ஓகு என்று வருவதால்  தன்வினை பிறவினைப் பேதத்தை இவற்றுள் பொருளை ஆராய்ந்துதான் கண்டுபிடிக்கவேண்டும்.

ஓகு என்பது அம் விகுதியை மேற்கொண்டு ஓகம் என்றாகி  நீர் ஓங்குதலைக் குறிக்கும்:  அதாவது வெள்ளப்பெருக்கு.  நீர்கூடுதலாவது என்று முன்சொன்னசொல்லைப் பயன்படுத்தி  விளக்கலாம், கம்பநாடன் இதைப் படைப்பெருக்குக்குப் பயன்படுத்தியுள்ளான்.

உருவில் அழகாக இருக்கும் நட்சத்திரம் அல்லது விண்மீன்  தான்  இது.  உரு+ ஓகு+ இணி > உரோகிணி  ஆகிறது.  இன் என்ற சொல்லும் இண் என்ற சொல்லும் எதுவந்தாலும் இப்பெயர் அமைந்துவிடும்.  இண் என்பது இணைப்புக் குறிக்கும் அடிச்சொல்.  இன் என்பதும் இணைப்பையே குறிக்கவல்லது,   கண்ணின் கருமணி என்னும்போது இன் என்ற உருபு வந்து இணைப்பைக் காட்டுவதை அறிந்துகொள்ளுங்கள்.

இலக்கிய மேற்கொள்களை விலக்கி எழுதியுள்ளோம்.  இவை வேண்டுமானால் எழுதுங்கள்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்


செவ்வாய், 21 ஜனவரி, 2025

நமஸ்காரம் என்பதன் பொருள். தமிழா?

 நலமோங்குக >  இதைச் சுருக்கினால்  நலமோ >   இதிலி ல என்ற எழுத்தை விடுத்தால்  நமோ.

நலமது கருத்து > 

இதில்  அது> அஸ்.

கருத்து>  கரு ( கரு+ அம் ) > கார் >  கார் அம் > காரம்.

நலமஸ்காரம்> நமஸ்காரம்.

பாணமக்கள் பாடல்களுக்குச் சமஸ்கிருதத்தைப் பயன்படுத்தினர்.  பலவிடங்களிலும் வழங்கி  ஆங்காங்கிருந்த பாகதங்கள் என்னும் வட்டார மொழிகளிலிருந்தும் சமஸ்கிருதத்தில் பல சொற்கள் உள்ளன.  சீனமொழிச் சொற்களும் உள்ளன. 

ஆரியன் மேரியன் யாரும் இல்லை.


ஞாயிறு, 19 ஜனவரி, 2025

ஒன்றிலிருந்து வயிறு விட்டு இறங்கிக் கால்வழி வெளிப்படுவது காப்பி.

 இன்று நாம் காப்பி என்ற சொல்லை ஆய்வு செய்யவிருக்கிறோம்.

காப்பி என்பது copy  என்ற ஆங்கிலச் சொல்தான்.  ஒன்றிலிருந்து மிகுதியாகச் செய்யப்பட்டது என்ற கருத்தினால்தான் காப்பி என்ற சொல் தோன்றியது என்று ஐரோப்பிய அறிஞர்கள் கூறுகின்றனர்.   இதுவும் ஓரளவு பொருந்துவதாகவே தெரிந்தாலும் இதை இன்னொரு கோணத்தில் பார்த்துப் பொருள் அறிந்தால், தமிழிலிருந்து தோன்றியதாகவும் கூறமுடியும். இப்போது எப்படி என்று பார்ப்போம்.

மனிதன் பிறப்பது பெண்ணின் கால்களுக்கு இடையிலிருந்துதான் பிறக்கிறான். பாலூட்டு விலங்குகளும்  தம் பின்னங்கால்களின் இடைவழியாகவே தங்கள் குட்டிகளை ஈனுகின்றன.  வயிற்றிற் பிறந்த மகன் மகள் என்று சொல்வது வழக்கமானாலும்  பிறப்பு உறுப்புகள் கால்களுக்கிடையிலேதாம் இருப்பனவாதலால்  மனிதன் ஒரு கா-பி தான். 

மனிதன் என்பவன் அதனால் ஒரு கா-பி  தான்.  வாக்கியத்தின் முதலெழுத்துக்களை மட்டும் வைத்துப் பேசி உணர்த்துவது தமிழகச் சிற்றூராருக்கு வழக்கமாகவே இருந்திருக்கிறது.  சில இடக்கர்ச் சொற்களை எழுத்தெழுத்தாகப் பிய்த்துக் ககர முதலாகவோ பகர முதலாகவோ சொல்வது பழக்கம்.

தலையெழுத்துக்களை மட்டும் இணைத்துச் சொல் போல அமைப்பதும் உண்டு.

பிள்ளை குட்டிகள் என்போர் "கான்முளை" என்பது தமிழ் நெறியாகும். கால்வழி வெளிப்பட்டு வந்தவர்கள் தாம் குழந்தைகள்.

கால்வழி இறங்குவதுதான்  கா-பி ஆகும்.  மனிதன் தன் முன்னோரின் காபி என்பதை அறிவியலும் ஒப்புக்கொள்கிறது.  பிறக்கும் வழியால் மட்டுமன்று இன்னும் பல காரணங்களாலும் மனிதன் தன் முன்னோரைப் படிபலிப்பவன்தான்.

 படிபலித்தல் என்றால் படியமைந்து பலவாதல். படி என்றால் ஒன்றன் படி அமைதல்.

பலித்தல் என்றால் பல் (பல)  இறங்குதல்.  பல் இ > பலி> பலித்தல்.

உணர்ந்துகொள்ள இவை எளிய கருத்துக்களே.

சொற்களை அறிய நன்கு சிந்திக்க வேண்டும்.

ஒன்றன் அடித்தோன்றுவது அதன் போன்மையில் அமைவதுதான்.

 ஓர்  எழுத்தின்படி இன்னொன்று அமைவதும் "கால் பிறப்பு" ஆகிய கா-பி தான்.

காலுதல் என்ற வினைச்சொல்லும் பொருள்சிறந்ததே ஆகும்.  ஒன்றிலிருந்து இன்னொன்று  ( வாயிலிருந்து எச்சில்போல)  வெளிப்படுதல் என்பதையும் குறிக்கும், கையில் வெட்டுக்காயத்திலிருந்து  "கான்ற"  அரத்தம் அல்லது குருதி என்று வாக்கியத்தில் வரும்,  கால்> கான்றது,  கால்கிறது, காலும் என்பவை செய்தது, செய்கின்றது, செய்யும் என்றபடி முக்காலத்துக்கும் வினைமுற்றுக்களாக அமைவனவாகும்.  ஆகவே கால் பி என்பது காப்பி என்றாவது உண்மையே என்றறிக.  பு விகுதி பெற்று காற்பு > காற்பு இ > காற்பி> காப்பி என்று இலக்கியமுறையிலும் சரிவருகிறது.

வெள்ளைக்காரன் இந்தியாவிற்கு வந்து கற்றுக்கொண்டவை பல.   முன்னர் இருந்த பிரித்தானிய மொழி  அழிந்துவிட்டது.  அதிலிருந்து சொற்களை எடுத்து ஏன் புதியன படைத்துக்கொள்ளவில்லை,  ஏன் புதிய ஆங்கிலோ செக்சன் மொழி வந்தது என்பவெல்லாம் வரலாற்று ஆய்வுக்குரிய கேள்விகள்.

கட்டையராய்ச் சுருளை முடியும் உள்ளவர்களான வெள்ளை இனத்தவர் அழிக்கப்பட்டுவிட்டாலும் அவர்களுடைய பழஞ்சொற்களை ஆய்வின்மூலம் அறிந்துள்ளனர்.  என்ன செய்வது.  அவர்கள் பாவம்.  உரோமப் பேரரசு இவர்களை அடக்கியதும் சரிதான்.  இவர்களுக்கும் வேண்டும்.  ஆனால் பின் இவர்கள் ஆசியாவிற்கு வந்து நம்மை ஆண்டனர்.  இது சோகமே.

காபி என்ற ஆங்கிலச் சொல் 1530க்குப் பின் வழக்குக்கு வந்ததென்று அறிகிறோம்.  அப்போது அவர்கள் இங்கிருந்து பலவற்றை அறிந்துகொண்டு விட்டனர் என்று தெரிகிறது.

நன்னூலைச் செர்மனிக்குக் கொண்டுபோய் மொழிபெயர்த்துக் கொண்ட னர்.

தமிழ் உலகச்செம்மொழி என்பது இவர்கள் சொல்வதனால் அன்றி, நமக்கும் இவர்கள் சொல்லாவிட்டாலும் அறிந்துகொள்வது என்று அறிக.

அவன் சொன்னான் இவன் சொன்னான் என்றில்லாமல் சொந்த ஆய்வினால் கண்டுபிடியுங்கள்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.

சனி, 18 ஜனவரி, 2025

வட்டநிலவுக்கு விலகாத துன்பம்

 வட்டநிலா  தினம்தினமும்  வரும்போம் இன்ப

வண்ணமுகம் தவறாமல் நகையே கண்டேன்

விட்டபின்னே நாண்முழுதும் அமைதித் தென்றல்

விழவெனினும் உறங்கிடினும் துன்பொன் றில்லை. 


நீயெற்கு வானிலொரு நிலவே  ஆனாய்

நீவாழ்க என்றொருசிற்  செய்தி  தந்தேன்!

நாயொத்துப் பலருக்கும் அமர்வின்   நன்மை

நான் தந்தேன்  எனக்கொன்றோ வாழ்க்கை இல்லை!


நான்பல்லோர்க் காறுபடும்  நறிய பேறு

நனிதந்தும்  பயன் தீர்ந்த  மரமே  என்றாள்

தேனில்லை வாழ்விதிலே தெரிந்து கொள்வாய்

தேடிவந்து சேர்ந்தநலம்  திரட்டி வெல்வாய்.


வட்டநிலா என்றது  ஓர்அழகியை.  அவள் முகத்தைக் கண்டால் அன்று நலமாக இருக்கும்.  சிரித்த முகம்.   வானின் நிலவு போல.  ஆனால் பலருக்கும் முகம் காட்டி நலம் விளைவித்தாலும்,  அவளுக்கு வாழ்வில்லாத் துன்பம். பெற்றோர் இறந்தபின் யாருமில்லை.  அண்ணன் தம்பி யாரும் இல்லை. திரட்டிய செல்வதை யாரும் எடுத்துக்கொள்ளக்கூடும்.  வாழ்க்கை இப்படித்தான்.  எந்தத் திருடன் பயனடைவானோ என்ற நிலை.

நில வும்  அப்படித்தான். அழகு.  அருகில் சென்றால் கரடு முரடான மண் உருண்டை.

நீ எற்கு -  நீ எனக்கு,

நாண்முழுதும் - நாள் முழுதும்.  ண்  புணர்ச்சித் திரிபு.

பலருக்கு உதவும் நலம் -  அமர்வின் நன்மை =  அமர்வு இன் நன்மை

வரும்போம்  -  வரும் போகும்

நறிய -  சிறந்த

பேறு -  பாக்கியம்

பல்லோர் - பலர்

நனி = நல்ல

தேன் -  இன்பம்

தேடிவந்து சேர்ந்த நலம் -  நல்ல பெயர்.

திரட்டி வெல்லுதல்  கொடை தந்து அமைதல்.

எனக்கொன்றோ  -  எனக்கு ஒன்று.  ஓ என்பது அசை.

ஆறுபடும் -  நல்வழியில் செல்லும்


மகிழ்க.

மெய்ப்பு -பின்

வெள்ளி, 17 ஜனவரி, 2025

பண்சால் கல் உண்மை இயன் திரியங்கள் ( பஞ்சகன்மேந்திரியங்கள்)

 பிறப்பு ஐந்து அல்லது பிறப்பு அஞ்சு  என்பதிலிருந்து பஞ்சு பஞ்ச என்பவை ஐந்தைக் குறித்தன என்பதை முன்னர்க் கூறியிருந்தோம்.  பெரும்பாலும் வீடுகளின் முன் நின்று பாடி ஊதியம் பெற்றோர் நான்கு  ஐந்து பாடல்கள்தாம் பாடுவர்.  அப்புறம் ஏதாவது எதிர்பார்ப்பர். காசுகள், அரிசி, நெல், மற்ற தானியங்கள் போட்டால் பெற்றுக்கொண்டு அடுத்த வீட்டுக்குப் போய்ப் பாடுவர். பண்டைக் காலத்தில் பாடகர்கள் இவ்வண்ணமே இந்தியாவில் மட்டுமன்று, எங்கும் நடந்துகொண்டனர். திரைப்படம் நாடகம் என்றாலும் சிறப்பான நாட்களில் அல்லாமல் பிறவற்றில்  ஓர் எல்லையுட் படும்,

நான்கு ஐந்து என்பவை முன்னர்  எல்லைகளாக இவை போல்வனவில் இருந்தன.

பண்கள் பாடுவதிலும் ஐந்து என்ற எல்லையே சிறப்பாக வந்தது. பண்சார் அல்லது பண்சால் என்பதும் பஞ்சு என்று குன்றற் குரியது,

இவ்வாறு இயல்பாகத் திரிவன "இயன் திரியங்கள்" ஆயின என்பதை அறிக.

கல் உண்மை இயன் திரியங்களே பின் கன்மேந்திரியங்களாய் விட்டன. கல் உண் பின் கல்மேல்> கல்மேன்  என்று வருவது இயல்பினது ஆகும்.

இவை கல் அதிகப் புழக்கம் பெற்று இரும்புவரா முன்னே அமைந்த சொற்கள். கல் இரும்பு முதலியவை நம்மிடையே பிற்காலத்தில் வந்தனவா அல்லது முன்னே வந்துவிட்டனவா என்பன ஆராய்ச்சிக்குரியவை. யாம் சொற்களை மட்டுமே தருகிறோம்.. இயலும் திரியங்கள் இயல் > இயன் என்று லகரம் னகரமாகும்.

கல் கரு என்றாகும். இதை முன் எழுதியுள்ளோம்.  கருவி என்ற சொல் கல் என்பதனடியதாம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

வியாழன், 16 ஜனவரி, 2025

பவுதிகம் என்ற சொல் அமை

 இன்று பௌதிகம் என்ற பழைய சொல்லைக் கண்டாய்வோம்.

புவியில் உள்ள பொருள்கள் உண்மையில் நிலத்திலும் நீரிலும் காற்றிலும் பரவிக் கிடக்கின்றன.  ஆகாயவெளி எனப்படும் வான்வெளியிலும் உள. இதற்கு விசும்பு என்றும் பெயர். தீயில் எரிந்து அழிந்தும் சாம்பலாகின்றன. இவ்வாறு பரவு பொருள் என்று உணரப்பட்டு,  அதற்கு  பரவுபொருள்    என்றே பெயரிடுதல் எளிதாய் இருக்கும் என்று எண்ணினாலும் எதையும் வெள்ளிடையாகச் சொன்னால் பெயர் மக்கள் மனத்தில் திறமான பெயராய் அமையாது எனக்கருதி,  பரவித் திகைவது  என்ற பொருளில் பரவு+ திகை+ அம் > பரவுதிகையம் என்ற சொல்லமைக்கு வந்து சேர்ந்தனர்.  திகைதல் என்ற இங்கு உரு, உள்ளடைவு, நிறம், மற்றும் தன்மை என்னும்  இன்ன பொருட்களால் ஒரு தோற்றம் அல்லது மேனி உடையதாதல்.  திகை அம் என்பது திகம் என்று மாற்றப்பட்டு,  பரவு என்பது இடைக்குறையாக்கப் பட்டு பவு என்று மாற்றப்பட்டது. இதுவே "பவு+ திகம்" என்று ஆயிற்று.

இப்போது ஒரு புதிய சொல் கிடைத்துவிட்டது.  ஆர்க்கிமீடிஸ் அடைந்த மகிழ்ச்சியை இவர்களும் அடையலாம்.  யூரிக்க என்று கத்தி ஆரவாரிக்கலாம்,  ஏன் மகிழக்கூடாது,  பவுதிகம் என்ற சொல் எதோ இல்லாமல் வந்த சொல் போல மருட்டும்,

இதை இன்னும் மாற்றம் இழைத்து பௌதிகம் என்று சொல்லிவிட்டால் தமிழில் இல்லாத வேறு சொல் என்று அச்சுறுத்தவும் ஆகும்,

உங்களுக்குத் தெரிந்தவை இது சமஸ்கிருதம்.  அவர்களுக்கும் அமைந்த விதம் தெரியும்.

இடைக்குறை கடைக்குறை முதற்குறை என்பவற்றால்  மருட்டற்கு உள்ளான சொற்கள் பல. கழுமலர்,  அதாவது தண்ணீரால் கழுவப்படும் மலர் என்று ஆகி அது கமல என்று ஆகி கமலம் என்று அம் விகுதி பெற்று ஆட்சியில் இல்லையா? அதுபோலத்தான் இதுவும்.

பரவு திகை அம்>  பரவுதிக அம் >     பவு திக அம் > பவுதிகம் : பௌதிகம்,

இயற்பியல் என்ற சொல்லை எப்படி அமைத்தனர்?

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்


                                                                                               

செவ்வாய், 14 ஜனவரி, 2025

எங்கே செல்லுபடி ஆகவில்லை? மூழ்குதல், அலைகுதல்.

 பண்டைத் தமிழைத் தெளிவாகக் கண்டறிந்து கூறும் ஆராய்ச்சிகள் நம்மிடையே உண்டு என்று கூற முனைவதினும் அஃது இல்லை என்று கூறுவதே உண்மையாகும். எனினும் அதன் தேடல்கள் அவ்வப்போது நம் தமிழரிடையே ஏற்பட்டு ஏற்பட்டு அடங்கிப் போயின. சில எழுதிச்சேர்ப்புகள்  அங்கொன்றும் இங்கொன்றும் கிடைக்கலாம். இதனால் நாமறிவது என்னவென்றால், எதையும் எடுத்துக்காட்ட இயல்வதில்லை என்பதுதான்.

ஓர் இரண்டெழுத்துத் தமிழ்ச்சொல்லை   எடுத்து, அதில் ஏதும் பண்டைத் தமிழ்க் கூறுகள் கிட்டுமா என்று நோக்குவோம்

இன்று  "அலை" என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். இச்சொல் இன்றுவரை வழக்கில் இருக்கும் சொல்தான். இச்சொல் பழங்காலத்திலும் இருந்த சொல் என்றே இதை நாடுவோம்.  இச்சொல் அலைதல் என்று வினைவடிவத்திலும் இன்று தமிழில் கிட்டுகிறது.  கடல் இன்று ஓயாமல் அலைகிறது என்று சொல்லும்போது  இச்சொல் இன்னும் பொருளுடன் இலங்குசொல் என்பது வேறு சான்றுகள் வேண்டாமலே தெரிகிறது. இச்சொல் மட்டுமேயன்றி,  அலைகுதல்  என்ற சொல்லும் உள்ளது.  அகரவரிசைகள் கோத்தளித்தவர்கள் இதையும் பட்டியற்படுத்தி யிருப்பதால், இச்சொல் இவ்வடிவிலும் உள்ளது என்றே முடிவுசெய்தல் வேண்டும். மூழ் என்ற சொல்  மூழ்கினான் என்றே இறந்தவினை காட்டுவதாய் இன்று இருப்பதால் மூழ்கு(தல்) என்பதே இற்றை வினைவடிவம் ஆகும். ஆனால் மூழ்தல் என்ற சொல்லும் குகரத் துணை இன்றி வருவதால்,  மூழினான் என்று பண்டைத் தமிழில் சொல்லமுடிந்துள்ளது என்பது தெரிகிறது. இன்னும் மூழ்ந்தான் என்று இறந்தகாலம் சொல்வது சரியாகவே கொள்ளப்படும்.  ஆழ்ந்தது என்பது சரி எனின் மூழ்ந்தான் என்பது சரிதான். சொற்கள் போகப்போக துணைச்சொற்கள் பெற்று நீள்வது சிறப்பு ஒன்றுமில்லை.  மொழியானது வீண் ஒலியடுக்குகளில் காலம்கடத்துகிறது என்பதே உண்மை. பேச்சுத்தமிழ் தேவையற்றுச் சொற்களை நீட்டி, மக்கள் மகிழ்வாய் இருந்துள்ளனர். பிறமொழிகளிலும் இவ்வாறு சொற்கள் நீட்சி பெற்று இருத்தல் கூடும். சமஸ்கிருதம் முதல் எல்லா இந்திய மொழிகளிலும் இவ்வாறு நீட்சிகள் ஏற்பட்டிருத்தல் இயல்பு.  ஆனால் மேற்கொண்டு ஆராய்தல் வேண்டும்.

அலைகு என்ற வினையாக்கத்தில்  இன்று   அது என்பவை சென்று இணந்தன. இது நிகழ்காலம் காட்டுதல்.  இன்று என்பது  இடைக்குறைந்து இறு என்று ஆகி, அலைகு+ இறு+ ஆன் > அலைகிறான் என்றானது. இவற்றுள் அலை என்பதை மட்டும் அறிந்துகொண்டு,  கிறான் என்பது தனியாக்கி, கிறு+ ஆன் என்று பிரிந்ததால்,  நிகழ்காலம் கண்டுகொண்டனர். சிலர் கு என்பது இல்லாமல் அலை என்பதை மட்டும் வினையாகக் கையாண்டனர்.

ஆனால் மூழ்கு என்ற சொல்லில் குகரம் எட்டிய ஒட்டு உயர்வை,  அலைகு என்பது அலை என்னும் சொல்லில் பெற்று தக்கவைத்துக்கொள்ள இயல்வில்லை.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.