திங்கள், 11 ஆகஸ்ட், 2025

பராக்கிரமம் என்றது

 இந்தச் சொல்லை இன்று அறிந்துகொள்வோம். 

இது வீரத்தையும் வலிமையையும் குறிக்கும் சொல். வேறு எந்தச் சொற்களால் இதனை விளக்கினாலும் இதன் இறுதியில் நாம்  இந்தப் பொருமையைத்தான்  அடைகிறோம். 

மக்கள் பராக்கிரமம் என்பதை மிகப் பெரியது அல்லது பரியது என்று நினைத்தனர்.  பருமைக்கும் பெருமைக்கும் இடையிலுள்ள நுண்பொருளை அவர்கள் கருத்தில் கொண்டனர் என்று சொல்வதற்கில்லை. நடைமுறையில் பெருத்தலும் பருத்தலும் ஒன்றாகவே பலரால் எண்ணப்பட்டது. 

இந்தச் சொல் பரு அல்லது பருத்தல் என்ற சொல்லின் அடிப்படையில் எழுந்தது. உருவில் பரியது இறுதியில் மதிப்பீட்டிலும் தன்மையும் பெரியதாய் எண்ணப்படுவது உலக மக்களிடையே காணப்படும் இயல்பாகும். இந்தச் சொல்லமைப்பில் நாம் இதை முன்மை வாய்ந்த கருத்தாக எடுத்துக்கொள்ளலாகாது.  பருமையானது பெருமைக்கு ஓர் உவமையாகக் கருதப்படுதலிலும் பெரிய தவறு ஒன்றுமில்லை..

இச்சொல்லுக்குரிய வினை பருத்தல் என்பதே.  

பரு+ ஆக்கு + இரு + அம்+ அம் என்ற சொற்கள் உள் நின்று பாராக்கிரமம் என்ற சொல் விளைந்தது.

பரியதாய் ஆக்கப்பட்டு இருந்து அல்லது நிலைபெற்று  அமைவதான தன்மை உடையது என்பது சொல்லமைப்புப் பொருளாகிறது.  அது யாது என்ற கேள்விக்கு வீரமென்ற தன்மை அல்லது வலிமை என்பது பதிலாகிறது.  இவ்வாறு அமைந்ததே இச்சொல்.

வீரமானது பரவலாகப் போற்றப்படுவது என்று பொருள் கொண்டு  பர என்ற வினையிலிருந்து வந்ததாகக் கொண்டாலும் அதனால் பொருளுக்கு அது எதிராக அமைந்துவிடாது. படைவீரரிடம் பரவலாகக் காணப்படும் தன்மை என்றிதற்குப் பொருள் கூறலாமென்றும் உணர்க.

வீரவுணர்ச்சி வீரனிடம் எழுந்து  அல்லது ஆக்கப்பட்டு,  நிலைத்துத் தங்கி ( இரு என்ற சொல்)  அம் என்பதால் நன் கு அமைந்து  ஆவது என்று வரையறவு செய்யலும் ஆகும்.

எளிய சொற்களைக் கொண்டு தமிழில் உண்டான சொல் இது.  உடன் எழுந்த தொழுகை மொழிக்கும் உரியதாகிறது.. எல்லாம் இந்திய மொழிகளே  ஆகும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உடையது.

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2025

சீடன் என்ற சொல் எங்கிருந்து வந்தது.

 சீடன் என்ற சொல்லைப் பற்றி இன்று சிந்திப்போம்.

சிந்தித்தல் என்றாலே ஒரு குடத்திலுள்ள நீரை சிறிது சிறிதாகச் சிந்துவது போல மூளையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளிக்கொணருதல் ஆகும். ஆகவே எல்லாவற்றையும் வெளிக்கொணரக் கொஞ்சம் நேரமும் ஆகலாம். ஆர அமர எண்ணிப்பார்த்தல்  என்றும் இதனைக் குறிக்கலாம்.  இப்படிச் செய்வது சீடனுக்கு நல்லது.   அவன் கற்றுக்கொள்ளவும் உணர்ந்து போற்றவும் வாய்ப்புகள் அதிகம் கிட்டும்.

சீடன் சிறிது சிறிதாகக் குருகுல வாசம் செய்யவைத்து ஆசானால் வளர்க்கப் பட்டு முழுமைப் படுத்தப்படுகிறவன்.  ஆனால்  சீடன் குரு சென்றுவிட்ட பிற்காலத்தில் சீடனும் ஒரு குருவாகித் தனக்குச் சீடர்களை வைத்துக்கொண்டு புகழும் பெறக்கூடும். அவன் இன்னாருடைய சீடன் என்று சொல்லப்பட்டாலும், குருவின் மறைவுக்குப் பின் அவருக்கு இணையாகக் கூட எண்ணப்படுபவன். குரு இருந்த இடத்தில் அமர்வதால் அவருக்கு இணையாகிவிடுகிறான் சீடன்.  குரு செய்தவை அனைத்தையும் சீடன் செய்வான்.

ஆகவே சீடன் என்றால் அவன் ஈடன் என்பவனே.  ஈடு> ஈடன் ( ஈடு+ அன்), >  சீடன். அமணர் என்ற சொல் சமணர் என்று வருவது போல் ஈடன் என்ற சொல் சீடன் என்று திரியும். அகர வரிசையில் உள்ள பல சொற்கள் சகர வரிசையினவாகத் திரிந்து வழங்கு இயல்பு.  ஆடி  என்பது சாடி என்று திரிந்து பின் ஜாடி என்றும் வந்தது காண்க. ஆலை> சாலை என்பதும் கருதத் தக்கது.  சோறு ஆகிவிட்டது என்று சொல்பவர்கள் இன்னும் இருக்கிறார்கள்.  அதாவது முடிந்து விட்டது என்ற பொருளில் இது வருகிறது. ஆனால் ஆகு> சாகு என்பது பின்னர் உயிர் உடலில் இல்லை என்பதைக் குறிக்க வருகிறது.   பொருள் சற்றே திரிந்துவிட்டது.  முடிதற் கருத்து இன்னும் அங்கு இருக்கின்றது. 

ஈடன் என்ற சொல்லுக்கு வலியோன், திடமானவன் என்று பொருள். இதுவே  பின் சீடன் என்ற திரிந்து குருவிற்கு ஈடனாவன் என்ற பொருளில் வழங்கி, பின்னர் சீடன் சிஷ்யன் என்று திரிந்து வழங்குகிறது.  இது சீஷன் > சிஷ்யன் என்று குறுகியிருத்தல் இயல்பே  ஆகும்.  நாளை குருவுக்கு ஈடாகுபவன் என்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உடையது.

புதன், 6 ஆகஸ்ட், 2025

ஆயிரம் நாமங்கள் எங்கிருந்து வந்தன? சகஸ்ரநாமம்

 ஸகஸ்ர என்ற வடமொழிச் சொல்லே ஆயிரம் என்ற பொருளுடைய சொல்தான்.

இறை வழிபாட்டின் போது ஆயிரத்தெட்டு நாமங்கள் சொல்லி அவரை வழிபடுதல் பண்டை நெறி.  அதனால் கணபதி சகஸ்ரநாமம்,  லலிதா சகஸ்ரநாமம் என்றப்டி ஒவ்வொரு கடவுளுக்கும்  ஆயிரத்தெட்டு கூறப்படும்.

இந்த நாமங்களெல்லாம் பற்றனின் அகத்தில் சுரந்தவை தாம்.  அகத்தில் என்றான் மனத்தில்.  மனத்துள் குடிகொள்பவனே  ஆண்டவன்.

அக சுர >  சக(ஸ்)ர   என்று மாறிற்று. இது அமணர் > சமணர் என்பதுபோலும் அகர சகரத் திரிபாகும். நாமங்களின் பிறப்பிடத்தால் ஏற்பட்ட இனிய பெயர் இது.  எண்களின் பிறப்பிடமும் மனித மனமே ஆகும்.  எண்ணப்படும் பொருள் அகத்தின் வெளியில் இருந்தாலும் எண்ண அறிந்து வெளிப்படுத்தியது மனமே ஆகும்.

சகஸ்ர என்பதற்கு வேறு பிறப்பும் கூறுவதுண்டு,  அவற்றை இங்கு ஆராயவில்லை.

நாவினால் சொல்லி அறியப்படுதலால் நாமங்களுக்கு அப்பெயர் உணடாயிற்று.

நா + அம் > நாமம்,  இந்தில் ம் என்பது இடைநிலை. பழங்காலத்தில் எல்லா நாமங்களும் நாவினால் சொல்லப்பட்டவையே. எழுத்தில் உள்ளவையும் நாவினால் சொல்லப்பட்டுப் பின் பதிவுற்றவை.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உடையது.

சனி, 2 ஆகஸ்ட், 2025

பத்து, நூறு, ஆயிரம் முதல் தசம், சதம் என்பன வரை

 தலைப்பில் கண்ட பத்து, நூறு, தசம், சதம் என்பவை பற்றி அறிந்துகொள்வோம்.

தசைத்தல் என்றால் ''பற்றிப் பிடித்தல்''  என்று சொல்லலாம்.  பிடித்தல் என்பதும் பற்றுதல் என்பதும் ஒரு பொருளன ஆயினும் விளக்கத்தின் பொருட்டு இங்கு இணைத்துக் கூறப்பட்டன.  பல்+ து > பத்து என்பதும் பற்றிக்கொள்ளுதல் என்ற  பொருளுடையதே.  ஒன்றுமுதல் எண்கள் ஒன்றை ஒன்று பற்றிப்  பெரிதாகி,  ( ஒன்றாகி என்பதால் பெரியனவாகி என்று கூறவில்லை.  )  உண்டான எண்ணேதான் தசம் என்பது. பத்து என்பதும் அதுவே.  இவை ஒரே கருத்துடையனவாக உள்ளபடியால்  கருத்தியல் ஒற்றுமை இவ்விரண்டு எண்களுள்ளும் காணப்படுகிறது.  இதுபோலப் பல சொற்களில் கருத்துகள் ஒன்றாய் உள்ளமை எம் இடுகைகளில் சொல்லப்பட்டுள்ளது கண்டுகொள்க.

தசம் என்ற சொல்லை அமைத்தபின், சதம் என்ற சொல்லை அமைப்பதில் அவர்கள் அதிக முயற்சி மேற்கொள்வதைத் தவிர்த்தனர்.  எழுத்துக்களை மாற்றிப்போட்டு,  சதம் என்ற நூறு குறிக்கும் சொல் மேற்கொள்ளப்பட்டது.

தசம் >  சதம் :  இது எழுத்து முறைமாற்றுப் புனைவு என்று பெயர்பெறும்.

சிறிதானது பெரியதாவதுதான்  தசைத்தல் அல்லது கொழுத்தல்.  இவை ஒருவகைப் பெரிதாதல் என்றாலும்  சிலவிடங்களிலே பயன்பாடு உடையது.  கழுதை கொழுத்தது எனலாம்;  ஆனால் மரம் கொழுத்தது என்று பேசுவதைக் கேட்டதில்லை. எங்காவது யாராவது பேசியிருக்கலாம். தசைத்தல் என்பதும் அத்தகையதே  ஆம்.  ஆனால் கொழு என்ற சொல் கொள் என்பதிலிருந்து திரிந்ததுதான்.  முன் இல்லாத சதைப்பிடிப்பு இப்போது ஏற்படுவதை இது குறிக்கும்.  முன் இல்லாத ஒன்றினை இப்போது ''கொள்வதால்''  அல்லது உள்ளடக்குவதால்  கொள் > கொழு என்பது பொருத்தமான சொல்லமைப்பே ஆகும், இதன்மூலம்  சதம்  தசம் என்பன தெளிவாகின்றன.

ஆயிரம் அமைத்த காலத்தில் அதுவே பெரிய எண்ணாய் இருந்தது.  ஆகப் பெரியது என்ற பொருளில்,  ஆய் + இரு   =  ஆகப் பெரியது என்ற பொருளில் அதை அமைத்தனர். இரு என்றால் பெரிது என்றும் பொருள்.

இதையும் வாசித்தறியுங்கள்:

https://sivamaalaa.blogspot.com/2023/01/blog-post_4.html  இங்கு ஏகாதசி என்னும் சொல்லை விளக்குமுகத்தான் யாம் சொல்லமைப்புகள் சிலவற்றை விளக்கியுள்ளோம்.  தொடர்புடைய கருத்துகள் இவை.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உடையது.



வியாழன், 31 ஜூலை, 2025

அமானுடம் சொல்

 மனிதன் என்பவன் தன்னையே சீரிய, மிக உயர்ந்த  பிறவியாக எண்ணிக் கொண்டவன். என்றாலும் இயல்பு நிலை கடந்த நிகழ்வுகளைக் காணும்போதும் கேள்விப் படும் போதும்  அவற்றை "அமானுட மானவை  " என்று சொல்வதுண்டு. இச் சொல் ஒரு  பிற்காலப் புனைவு தான்.  சங்க இலக்கியத்தில் இல்லை. ஆனால் தமிழர்கள் உண்டாக்கிய சொல்தான்.

இது எப்படி அமைந்தது என்பது காண்போம்.

மனிதன் என்ற சொல் மன்  என்ற  அடியில் தோன்றுவது. மன் என்ற  அடிச்சொல்லுக்குரிய பொருள்களில் நிலைபெறுதல் என்பது சிறப்பானது. எல்லா உயிரினங்களிலும் சிறப்புடையவன் ஏன் எனில் கலை பல அறிந்தவன். அறிவியல் கண்டவன் . மன் + இ+ து +அன் என்றபடி அவனுக்குச் சொல் அமைந்தது. மற்ற உயிரினங்களைவிடத் தன்னைப் புவியி லெங்கும் நிலைபேறு உடையோனாய்க் கருதிக் கொள்பவன்.

முன் எப்போதினும் நிலைபேறு என்பதற் குரிய பொருள் இப்போதுதான் மனிதனுக்கு  மிகுதியும பொருந்தினதாகத் தெரிகிறது. படைப்புத் திறன் மிக்குவந்து சி றந்தவனாகிவிட்டான்.

நாளேற நாளேறச் சிறப்படைந்துவிட்டான்

இப்போது "அமானுடம்" என்ற சொல். அ என்பது  மறுதலை , ( "மாற்று இடம்").  அல்லாதது என்பது பொருள்.  மனிதனுக்குரிய இயல்புகளுக்கு மாற்றம் உடையதாய் இருத்தல் என்று பொருள்.

அகரம் இங்கு முன்னொட்டாக வருகிறது.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை தரப்பட்டுள்ளது




ஆபயன் என்னும் சொல்

 இன்று ஆபயன்  என்னும் சொல்லைத் தெரிந்து இன்புறுவோம்.

இது  இலக்கண முறையில் எத்தகையை சொல்? ,வினைத்தொகை என்னும் வகையுட்  பட்டால்  ஆகும் பயன் என்னும் பொருளில் வந்து, வலித்தல் விகாரம் தோன்றாமல் போதரும்.  அப்போது ஆ என்பது பசுவைக் குறிக்காது. ஆப்பயன் என பகர மெய் தோன்றினால் பசு தந்தது என்று பொருள் பட்டுப் பால் ( தயிர், மோர், வெண்ணெய். நெய் முதலானவற்றைக் குறிக்கும்.

பாட்டில் ( செய்யுளில்) எதுகை நோக்கிக் குன்றி  மீண்டும் "ஆபயன்" என்று வருதலும் கொள்க. அப்போது அஃது ஆவின் பயனே ஆகும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்

பகிர்ந்து கொள்க.









திங்கள், 28 ஜூலை, 2025

வெடி, வேட்டு என்னும் சொற்கள்.

 இன்று வெடி வேட்டு என்னும் சொற்களைக் கருதுவோம்.

வெடி வேட்டு என்பன இடையின வகரத்தில் தொடங்கிய சொற்களாயினும் வல்லின டகரம் வருதலால், வெடிப்பு நிகழ்வுக்குப் பொருத்தமான சொற்களாய்விடுகின்றன. இடிபோலும் இயற்கை நிகழ்வுகளி லிருந்து மனிதன் வெடியொலியையும் அதன் தாக்ககத்தினையும் நன்கு அறிந்துகொள்வா னாயினன்.  வெடுக்கெனல் என்பது வேகத்தையும் ''டுக்''கென்ற ஒலியையும் ஒருங்கே குறிக்கவல்லதாய்  இருக்கிறது.

வெடி என்பதில் ஒலிமுறையில் நாம் காதில் அதிர்வையும் காட்சிக்கு விரைவையும் கண்டுபிடித்தாலும் சேர்த்துவைத்த வெடிபொருள் ஓரிடத்திலிருந்து சட்டென்று பிளந்துகொண்டு வெளிப்படுவதையே முதன்மையாக அறிகிறோம்.  இவ்வாறு விடுதலுக்கு விள்> விடு>வெடு> வெடிப்பு; விள்> வெள்> வெடி> வெடிப்பு;  விள்> வெள்> வெடு> வேடு> வேட்டு என்றபடி சொற்கள் திரிவன வென்பதை அறியலாம்.

வெடிக்குமிடத்தில் உள்ள நிலம் அல்லது பிற இடம் சேர்ந்து இருத்தலை விட்டு, அங்கு விடுபாடு அல்லது பிளவு ஏற்படுவதையும் அறியலாம்.

வெடிக்கும் இடத்தில் ஒரு வெட்டு விழுந்திருந்தால்,  வெட்டு> வேட்டு என்று முதனிலைத்  திரிபு இருப்பதை உணரலாம்.

இவற்றை உணர்ந்து தமிழ்ச் சொல்லமைப்பை உணர்ந்து மகிழ்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை வழங்கப்படுகிறது.


ஞாயிறு, 20 ஜூலை, 2025

சியாமளா என்ற பெயர்.

 மால்  என்பது மாலுதல் என்று வினைச்சொல்லாய்  மயங்குதலைக் குறிக்கும். மயங்குதலாவது கலத்தல்.  எடுத்துக்காட்டு:  இருளும் ஒளியும் கலந்து மயங்கிய நேரம் மால் - மாலை எனப்படுதல் காண்க.  பல பூக்கள் கலந்த தொடுப்பு மாலை என்பதும் அறிக.  மனிதன் மயங்குதல் தெளிவும் தெளிவின்மையும் கலந்திருத்தல். இதிற் தெளிவின்மை கூடுதலாக இருக்கும்.

கருமையும் வெண்மையும் கலந்த நிலை மால்> மா என்று வரும். லகர ஒற்று மறைந்த சொல். 

சியாமளா என்ற சொல்லில் மால் என்ற சொல் மாலா> மலா என்று குன்றி நீண்டது அறிக.

சீரிய மால் >  சீரிய மாலா >  சீயமாலா >  சியாமளா என்று திரிந்த சொல்லே இது.இதில் மாலா என்ற சொல்லே நிறம்  காட்டிற்று. சீரிய என்ப ரி இடைக்குறை. தமிழல்லாத மொழியில் சீரிய > சீய > சியா என்று பிறழ்வு மேற்கொண்டது.

மாலுதல் என்ற வினைச்சொல் தமிழ். மாலினேன், மால்கிறேன், மாலுவேன் என்பன வினைமுற்றுக்கள்.

சீரியமாலை > சீயமாலை > சீயமாலா > சியாமலா>சியாமளா.

லகரத்துக்கு ளகரம் மாற்றீடு ஆனது.  மங்கலம் > மங்களம் ஆனது போலும் திரிபு . மங்கல் என்பதில் அல் என்பதே விகுதி.  மங்குதல் வினை: >மங்கு, அல் அதனுடன்  அம் விகுதி இணைந்தது.  வெண்மை குன்றி மஞ்சள் நிறம் ஏற்படும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை தரப்பட்டுள்ளது.

வியாழன், 17 ஜூலை, 2025

மூலிகை என்ற சொல் தமிழ்

 இப்போது மூலிகை என்ற சொல் காண்போம்.

மூலச் சொல் முல் என்பது. இதிலிருந்து அமைந்த பண்டைச் சொற்களில் இன்னும் வழங்கிக்கொண்டிருக்கும் சொல் முலை என்பது.  முல் என்ற அடிக்கு அர்த்தம் என்ன என்றால் ''முன்னிருப்பது''  என்பதுதான். முல்லை என்ற பூவின் பெயர் இன்னொன்று. ஐந்து நிலங்களில் முல்லை நிலம் என்பதும் ஒன்றாக இருப்பதால் முல்லை என்பது ஒரு மிக்கப் பழமையான ஒரு சொல்லாகும். நிலங்கள் நான் காகவோ ஐந்தாகவோ பிரிக்கப்படு முன்பே இச்சொல் இருந்த காரணத்தால்தான், முல்லைப்பண் முதலிய சொல்லமைப்புகள் ஏற்பட்டன. காந்தன், காயாகுருந்து, கொன்றை, துளசி முதலிய மண்ணில் முளைப்பன முல்லை நில மரங்கள் எனப்பட்டன என்பதும் காண்க.  வேறெங்கும் எவையும் முளைப்பதில்லை என்று கூறலாகாது.  வெள்ளி முளைக்கிறது என்ற  சொல்வழக்கு இருக்கிறதே. அது வேறுவகையான முளைப்பு ஆகும்.

இவை கூறியது முல்லை, முலை எனப்படுவன பழஞ்சொற்கள்   என நிறுவுதற் பொருட்டு.

முல் > மூல்.  குறிலும் நெடிலும் சொற்களுக்கு முதலாய் வரும். வருக, வாருங்கள் ( வாங்க)  என்று வா என்ற சொல்லே நெடிலிலும் குறிலும் பகுதிகள் மாறுகின்றனவே,  இவை அறிந்து தெளிக.

இ -  என்பது ஓர் இடைநிலை.  அன்றி ''அருகில்'' என்ற பொருளை எடுத்துக்காட்டினும் இழுக்காது என்று உணர்க.

கை என்பது பக்கத்திலிருப்பவை என்று உணர்த்தும் ஒரு விகுதி.  தமிழன் வாழ்ந்த நிலத்தில் இந்த மூலிகைகள் வளர்ந்து கிடந்தன.  அவற்றை அவன் பயன் கொண்டான் என்பதுதான் சரித்திர உண்மை.  கட்டுக்கதைகள் ஏதுமின்றி சரியாகவும் திறமாகவும் சொல்லப்படுபவை சரித்திரம் அல்லது வரலாறு எனப்படும்.  திறம் என்பது விகுதியாக வருகையில் திரம் என்று மாறிவிடும். ஒரு கூட்டுச்சொல்லின் அல்லது சொல்லமைப்பின் பகவாக வரும்போது திறம் என்ற சொல் திரம் என்றாகும்.

மூலிகை என்ற சொல் இவ்வாறு அமைந்த எளிமையான சொல்.  இது சமஸ்கிருதம் என்று சிலர் கூறுவதுண்டு.  மூலிகை என்பது சிற்றூர்ச்சொல். இது பூசைமொழியிலும் சென்று வழங்கியது.  இப்போது பூசைமொழியும் இந்திய மொழியே ஆதலால், அதுவுல் தமிழினுள் அமைந்ததே ஆகும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு  பின்.

இப்பதிவு பகிர்வுரிமை உடையது,. 

செவ்வாய், 15 ஜூலை, 2025

புன்மை ஒழிந்து இனிமை உண்டானால் அது புனிதம்.

 புனிதம் என்பது தீமை அற்ற நிலை. விலக்கத்தக்க எதுவும் இல்லாமலாவது. இதற்கான சொல் எப்படி உண்டாயிற்று?

ஓரிடத்தில் சேறும் சகதியுமாய் இருக்கிறது.  புவியில் எந்த இடத்தை நோக்கினாலும் கல்லும் மண்ணுமாகத்தாம் இருக்கிறது.  இந்த இடங்களைத் தூய்மைப் படுத்தி கடவுளைத் தொழத் தொடங்குகிறோம். தூய்மைப் படுத்தும்போது அது புனிதமான இடமாக மாறிவிடுகிறது.

புன்மை என்பதன் அடிச்சொல் புல் என்பதுதான். புல்+ மை > புன்மை. தூய்மை செய்யப்பட்டு இனிதானால்:

புல் + இனிது + அம் >  புல்லினிதம் > புனிதம்  ஆகிவிடும்.

அழுக்கு நீங்கும் வண்ணம் தூய்மை செய்து முடிக்கவேண்டும்.

மறைமலையடிகள் அதைப் புனல் என்ற சொல்லினின்று விளக்கினார். புனல் இனிதாக்குகிறது என்றார்.

இதன்படி புனல்+ இனிது + அம் > புனலினிதம் >  புனிதம்.  கழுவுதலால் புனிதம் உண்டாகிறது.

சமஸ்கிருதம் என்பது இந்திய மொழிதான்.  ,மேலைநாட்டு மொழியன்று.  அதிலிருந்து பல சொற்களை மேலை நாட்டினர் கடன்பெற்றனர். மொழிவளத்தை உண்டாக்கிக் கொண்டனர்.  

உரோமப் பேரரசுக்கு ஓர் ஆட்சிமொழி தேவைப்பட்ட போது அவர்களும் சமஸ்கிருதத்திலிருந்தும் தமிழிலிருந்தும் பல சொற்களைக் கடன்பெற்றனர்.  தமிழ் நாட்டிலிருந்து  ஒரு புலவர் குழுவே சென்று உதவிற்று என்று சென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஒருவர் ஆய்ந்து கூறியிருக்கிறார்.  இந்த விவரங்களை மயிலை சீனி வேங்கடசாமி விளக்கமாகச் சொல்லியுள்ளார்.

புன்மை ஒழிந்து இனிமை ஆவதே புனிதம் ஆகும்.  இச்சொல் ஓர் இருபிறப்பி  ஆகும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

பகிர்வுரிமை வழங்கப்படுகிறது.

திங்கள், 14 ஜூலை, 2025

ஐப்பசி மாதம், அப்பியை மாதம் என்னும் மாதப்பெயர் திரிபுகள்.

 இப்போது ஐப்பசி என்ற மாதப்பெயரையும்  அதன் மாற்று வடிவங்களையும் ஆய்ந்து காண்போம்.

ஐப்பசி என்ற சொல்லை  ஐ+ பசி என்று பிரித்து  அதற்குப் பொருள் சொன்னால் ஒருவேளை பொருளும் ஆய்வும் தவறாக முடியலாம்,  ஏனெனில் ஐ என்பது சொல்லாக்கத்தில் ஒரு பகவு ஆயினும் பசி என்பது  சரியான பொருளைத் தரவியலாத திரிபு   ஆகும்..

பசி என்பதற்கு இங்கு உடலுக்கு உணவு தேவைப்படுதல் என்ற பொருளுடைய சொல்லன்று.

ஐ என்ற முன்வரும் பகவு முன்  ஆசு என்பதன் திரிபு.   ஆசு என்பது  ஆதல் என்ற சொல்லின் முதலெழுத்து.  சு என்பது ஒரு விகுதி.   ஆசிடையிட்ட எதுகை என்ற தொடரில்  ஆதலென்ற வினையின் முதலெழுத்து வருகிறது.  ஆசு என்றால் பற்றுக்கோடு என்ற பொருளும்  உள்ளது. பற்றுக்கோடு என்பது பேச்சுவழக்கில் ஆதரவு என்ற சொல்லால்  குறிக்கப்படும்.  ஆ என்பது பசு என்ற பொருளில் வருவதுடன்  ஆ(தல்) என்றும் வினையாகவும் உள்ளது.   ஆ என்பது  மாடு என்று பொருள்படுகையில்  ஆக்கம் தரும் விலங்கு என்று உணர வேண்டும்.  அதனால்தான் அதற்கு ஆ என்று பெயர்.  மாடு என்பதும் செல்வம் என்று பொருள்தரும்.  

இகம் என்பது  இ+ கு+ அம் என்பன இணைந்த சொல்லாதலாதலின் இவண் சேர்ந்து இணைந்திருப்பது என்று பொருள் காணவே,  இவ்வுலகம் என்றும் இங்கிருப்பது என்றும் பொருள்படும்.

ஐப்பசி   என்பது முன்னர் ஐப்பிகை என்று கல்வெட்டில் வந்துள்ளது. இது ஐ+ பு + இகை என்ற பகவுகளின் இணைப்பு.  பு என்பது இடைநிலை.  இகை என்பது இகம் என்பதன் திரிபுதான்.  இறுதி ஐ  விகுதி  பெற்றது.

இகு என்பது அம் விகுதிபெறாமல்  இகரவிகுதி பெற்று  இகி என்றாகிப் பின் இசி என்றாயிற்று. இது ககர சகரப் போலி.    சேரலம் >கேரளம் என்பது போல.  இது பிற மொழிகளில் வரும்.  ஆங்கிலத்திலிலும் ஐரோப்பிய மொழிகளிலும் காணலாம்.  அக்டோபர் மாதத்தில் தொடரும் பருவ காலமாகையினால் ஐப்பசி என்பதற்குத் தொடரும்  மாதம் அல்லது காலம் என்று பொருள் உரைத்தல் வேண்டும். 

ஆய்ப் பயில்வது என்ற தொடரை எடுத்துக்கொண்டால்  :  ஆய் > ஆயி>  ஆசி> இது குறுகி: அசி  >  பசி  ( ஐப்பசி)  என்று  ஐப்பசி என்பதுடன் தொடர்பு படுவதை உணரலாம். ஐப்பசி என்பது  பு+ அசி தான். பயி என்ற இரண்டெழுத்துகளும்  பயி > பசி என்றாதலைக் காணலாம்.  ஆகவே ஆய் என்பதை அய்> அயி> ஐ  என்று நிறுத்திவிட்டு,  பயி > பசி என்று காணின்,  ஐ-- பசி  என்று எளிதாக வந்திருக்கின்றது. ஐப்பசி என்பதற்குப்  பலவாறு விளையாடிக்கொண்டிருந்தாலும்  அன்பருக்கு ஆய்ப் பயில்வது என்று மட்டும் சொல்லி மற்றவற்றைத் தராவிட்டாலும் ஐப்பசி என்பதை விளக்குதல் எளிதுதான்.

தொடர்பு குறிக்கும் மாதம் ஆதலால்  அப்பி இயைப்பதான மாதம் என்றும் சொல்லிவிடலாம். எல்லாம் இதன் பால் உள என்று சொல்லுமளவுக்குப் பொருத்தமுடைய மொழி தமிழ். ஒன்றுக்கு மேற்பட்ட முடிவுகளைத் தமிழில் காட்டுவது  இந்த வசதியினால்தான்.

உலகத் தொடக்கமாய் இருந்ததனால் பலவும் ஒன்றாய்க் காணக்கிடைக்கின்றது.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.

பகிர்வுரிமை தரப்படுகின்றது.

ஞாயிறு, 13 ஜூலை, 2025

வில்லாளன், விக்கிரமி சொற்களில் மறைந்திருக்கும் உண்மை..

 விக்கிரமி என்ற சொல்லுக்குச் சிங்கம் என்ற பொருளுடன் வீரம் என்ற பொருளும் கிடைக்கிறது.  என்ற போதிலும் ஒப்பீட்டுச் சொல்லியல் என்று வருகையில், அதனை வில் என்ற பழைய போர்க்கருவியின் அடிப்படையில் அமைந்த சொற்களுடனும் பொருண்மையுடனும்தான் நிறுத்திப் பார்க்கவேண்டும்.  விக்கிரமி என்ற சொல் ஒரு கருவிப்பெயரின் அமைப்பிலிருந்து எழுந்த சொல்லாகும் என்று உணர்க. இது எவ்வாறு என்று பார்ப்போம்.

வில் + கு+ இரு + அம் + இ  என்று இதைப் பிரிக்கவேண்டும்.  இவ்வாறு செய்கையில் வில்லுக்கு இருக்கின்ற அமைப்பில் இணைந்திருப்பது என்ற பொருள் கிடைக்கிறது. இந்த வில்லின் அமைப்பில் இணைந்திருப்பது எது என்று ஆராய்ந்தால் அதுதான் வீரம் என்று பொருண்மை கிட்டுகின்றது.  ஆகவே விக்கிரமி என்பதற்கு வீரம் என்ற அகரவரிசைப் பொருள் கிட்டிவிடுகின்றது.

பண்டைக் காலத்தில் வில்லும் ஒரு சிறந்த போர்க்கருவியாய் இருந்தது. வில்லாளன் என்ற சொல்லும் இக்கருவிகளைப் பயன்படுத்திய வீரர்களின் மறப்பண்பினைப் போற்றி எழுந்த சொல்தான். இதையே விக்கிரமி என்ற சொல்லும் எடுத்தியம்புகின்றது.

சொற்புணர்ச்சித் திரிபின் காரணமாக விக்கிரமி என்ற சொல் அவ்வளவு தெளிவாகத் தன்னை அடையாளம் காட்டிக்கொள்வதில்லை.

வில்லுக்கும் விக்கிரமிக்கும் உள்ள தொடர்பினைக் கண்டீர்கள்.

இதில் விற்கு என்பது விக்கு(இரு) என்று வந்தது முறையாக வந்த திரிபுதான். விற்கு என்பது விக்கு என்று வருவது பேச்சுவழக்குத் திரிபுபோல் தோன்றலாம். நல்+கீரன் என்பது நக்கீரன் என்று வர, இந்தவகைத் திரிபுகள் இல்லை என்று கூறிவிட முடியாது. நல் என்பது ந என்று கடைக்குறையானது என்றால் அதுவேபோல் வில் என்பது வி என்று கடைக்குறையாகலாம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை வழங்கப்படுகிறது.



சனி, 12 ஜூலை, 2025

நாள் தினம்

  இன்று நாள் தினம் என்ற சொற்களை ஆய்வு செய்வோம்.

நாள் என்ற  சொல் நள் என்ற அடி யிலிருந்து வருகிறது. முத னிலை நீண்டு திரிவதன் மூலம் இச் சொல் அமைகிற து.

அதாவது   நள் > நாள் .   நள் என்பதன்  பொருள் "நடு"  என்பதும் "நாள்" என்பதும் ஆகும்.  ஒரு விடியலுக்கும் இன்னொரு விடியலுக்கும் நடுவிலிருப்பதால்  இது பொருத்தம் ஆகிறது  

நள் > நடு :  இதற்கு "இடைப்பட்டது"  என்ற பொருள் உள்ளதனை "நள்ளிரவு" என்பதில் நள் என்பதற்கு உள்ள பொருளைக் கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

 தினம் எனபது தமிழன்று என்பர் எனினும் இதுவும் தமிழச் சொல்லே என்று ஆசிரியர் பிறர் கூறுவர்.  தினம் என்பது தீ என்பதிலிருந்து  திரிந்தமை  இதற்குக் காரணம்.  தீ + இன் + அம் > தி + ன் + அம்> தினம் என்று முதனிலை குறுகுதல் வா> வந்தான் என்று பகுதி குறுகுதல் கொண்டு  அறிக.  இனி, சா + அம் > சவம் என்பதனாலும் தெளியலாம்.  இவை [ தினம் ] ஆசிரியர் பிறர் அறிந்து கூறியவை.   

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

இதை நீங்கள் பிறருடன் பகிர்ந்து கொள்ளலாம்.

 





FOR YOUR KIND ATTENTION PLEASE


If you enter compose mode please do not make changes.


You may share this post with others through any social media. 


நீங்கள் எழுதும் பயன்முறையில் நுழைந்தால், தயவுசெய்து மாற்றங்களைச் செய்ய வேண்டாம். 


இந்த இடுகையை எந்தச் சமூக ஊடகங்கள் மூலமாகவும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். 





அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

உங்கள் அன்பான கவனத்திற்கு



FOR YOUR KIND ATTENTION PLEASE

If you enter compose mode please do not make changes.

You may share this post with others through any social media.

நீங்கள் எழுதும் பயன்முறையில் நுழைந்தால், தயவுசெய்து மாற்றங்களைச் செய்ய வேண்டாம். 

இந்த இடுகையை எந்தச் சமூக ஊடகங்கள் மூலமாகவும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். 


செட்டியார் சிறஷ்டார்

 இந்தச் சொல்லை இன்று பார்ப்போம்.

செட்டியார்கள் என்போர், வணிகத்தின் மூலம் அரசனிடம் மிக்க மதிப்பு பெற்றவர்கள் ஆயினர்.  குடிமக்களில் மிக்கச் சிறப்புடையோர் செட்டியார்கள்.

சிறப்பு என்ற சொல்லில் உள்ள சிற என்ற சொல்லிலிருந்தே அவர்களுக்குப் பெயர் அமைந்திருக்கலாம். சிறப்புற்றார் >சிறற்றார்>  சிறஷ்டார் என்று வடமாநிலங்களில் பெயர் உண்டாகிற்று/

ஆனால்  எட்டிப்பூ அணிவித்து உயர்த்தப்பெற்றதால்,  எட்டி> செட்டி என்று உண்டானது என்பது தேவநேயப்பாவாணர்  ஆய்வு 

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

பகிவுரிமை  உடையது.


செவ்வாய், 8 ஜூலை, 2025

மகிமை இன்னொரு முடிபு

 மகிமை என்ற சொல்லுக்கு ஆக்கம் கூறிய புலவர் பலர். யாமும் முன் கூறினோம். இப்போது இன்னொன்று  கூ  றுவோம்.    

இச்சொல்லை மக + இம்மை என்று பிரித்துப் பின் இம்மை என்பதை இமை என்று இடைக்குறை  ஆக்குக. பின் "மக இமை" என்ப து புணர்க்க, மகிமை ஆகும். .மக என்பதன் ஈ ற்று  அகரம் கெடும். கெடவே "மக் + இமை" என்பது மகிமை யாம்.

பொருள்: இம்மையில் மக்களுடையர் ஆதல் மகிமை. 

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.

பிறருடன் பகிர்ந்து கொள்க.



வியாழன், 3 ஜூலை, 2025

மாலுதல் மாலை

 மாலுதல் என்னும்  வினைச் சொல்: மயங்குதல் -  கலத்தல் என்பன பொருள்


சொல்லின் அடி மால் என்பதுதான். இதனுடன் ஐ விகுதி இணைந்து வர, மாலை என்ற சொல்  உண்டாகும். பூக்கள் பலவும் கலந்து தொடுப்பதால் கலத்தல் பொருளதாயிற்று. பூக்கள் ஒன்றுடன் ஒன்று மயங்குவன என்பதும் அறிக. 

இனி அடிச்சொல் ஆ விகுதி பெற்றும் சொல் ஆகும். அப்போது மாலா என்றும்  சொல்லாம். இச்சொல் பிறமொழிகள் பலவினும் சென்று கலக்கும். இது தமிழுக்கும் பெருமையே. பலா நிலா என்பனவும் ஆ விகுதி உடையனவே . நீலா என்ற பெயரில் ஆ விகுதி கண்டு கொள்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.

பிறருடன் பகிர்ந்து கொள்க.







செவ்வாய், 1 ஜூலை, 2025

வருத்தகம் அல்லது வர்த்தகம்,

 ஒரு நாட்டுக்கு வேண்டிய பொருள்களை வருவித்துக் கொள்ளுதல் அதாவது அப்பொருள்களை விளைவிக்கும் நாடுகளிலிருந்து வரவழைத்துப் பெற்றுக்கொள்ளுதல்  என்பது  வருத்தகம் எனப்பட்டு, நாளடைவில் இச்சொல் வர்த்தகம் என்று சற்றுச் சுருங்கிற்று.  இது அமைப்புப் பொருளில் இறக்குமதிப் பொருள்களையே  குறித்தது.

காலக்கடப்பில் இது ஏற்றுமதியையும் குறித்து விற்றல் வாங்குதல் ஆகிய  பொது வணிகத்தையும் குறித்தது.

மொழியில் சொல் உண்டாகும்போது இருக்கும் பொருளே தொடர்ந்து இருப்பதில்லை.  இச்சொல்லில் ஏற்பட்டதுபோல் பொருள்  மாறுபாடுகள் விளைந்து வேறு பொருண்மை பெறுவதும் உண்டு.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

பகிர்வுரிமை வழங்கப்படுகிறது

சனி, 28 ஜூன், 2025

சியாமளா என்ற பெயரமைப்பு

 இதனை இப்போது அறிவோம். ப

ஒரு சொல்லுக்கு ஒரு பொருள்தான் என்பதில்லை.  சொற்களுக்குப் பலவாறு பகுத்துப் பொருள்கூறவும் தமிழில் வசதி உள்ளது.

சீரிய மாலை என்ற தமிழ்த் தொடர் எவ்வாறு மாறி அமைகிறது என்று காண்போம்.

சீரிய மாலை >  சீய மாலா >  சியாமலா >  சியாமளா என்று ஆகிவிடும்.

சீரிய என்ற சொல் தன் ரிகரத்தை இழந்து சீய என்று இடைக்குறையாகும்.

இது பின் சியா என்றாவது அயல்மொழியில் ஏற்படும் மாற்றம்.  நெடில் குறில் என்று வராமல் குறில் நெடிலாக மாறியமையும்.  இது அயல்மொழித் திரிபு.

மாலை என்பதும் மாலா என்றாகும்.  ஆகரத்தில் முடிதல் தமிழிலும் உண்டு.  இது பெரும்பாலும் நெடில் குறிலாக இல்லாமல் குறில் நெடிலாக மாறுதல் அடையும்.

மலா>  மளா என்று மாறும்.

சீரிய மாலை என்பது முற்றும் இருளான மாலை நேரத்தைக் குறிக்கும். இது மாலை என்னும் பூத்தொடுப்பைக் குறிப்பதாகத் தெரியவில்லை.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உடைய இடுகை.




சமஸ்கிருதம் சென்ற தமிழ்த்தொடர்.

'' நமைக்காக்க!'' என்பது பலர் இணைந்து வேண்டும் ஒரு குழுவினரின் குரலாக ஒலிக்கின்ற வரை  அது ''நமைக்காக்க வேண்டும் இறைவனே'' என்ற வேண்டுதலை முன்வைக்கும் ஒரு சொல்லாக இருந்தது. அது மந்திர மொழியாகி அதே வேண்டுதலையே முன்வைத்தால், அது மாற்றமின்றித் தொடர்ந்திருக்கலாம்.  அல்லது காலப்போக்கில் திரிபு அடைந்திருக்கவும் கூடும்.  இவ்விரண்டனுள் எது நடந்திருக்கும் என்பதை  நமஹா என்ற சமஸ்கிருதச் சொல்லே காட்டுகின்றது..  நமைக்காக்க என்ற தமிழ்த் தொடர்,  நமஹா என்ற ஒரு சொல்லாக மாறியமைந்துவிட்டது.

இப்படி மாற்றம் அடைந்ததனால் மொழிக்கு ஒரு சொல்லால் ஒரு சிறு வளர்ச்சி ஏற்பட்டது.  நமஹா என்ற புதிய சொல் சமஸ்கிருத மொழிக்குக் கிட்டியது என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். 

மொழிகளில் ஒன்றன் அணைப்பினால் இன்னொன்று வளர்தல் என்பது எல்லா மொழிகளிலும் காணப்ப்படுகின்ற ஒரு தன்மையே ஆகும்.  இப்படித் தமிழின் ஒரு தொடர் சற்று மாற்றமடைந்து சமஸ்கிருதத்தைச் சற்று வளப்படுத்தியது வரவேற்கத் தக்கதொன்றே  ஆகுமென்று உணர்க. இரண்டும் இந்திய மொழிகளே  ஆகும் என்பதும்  அறியற்பாலது ஆகும்.

ஏறத் தாழ  எழுநூறு  எண்ணூறு தமிழ்ச் சொற்கள் சமஸ்கிருதத்தில் இருக்கின்றன என்று கமில் சுவலபெல் சொன்னார்.  இன்னும் அதிகம் கண்டுபிடித்தனர் வேறு ஆய்வறிஞர்கள். நாமும் சிலவற்றைக் கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறோம். இதனால் மொழிபற்றிய அறிவு முன்னேறுகிறது என்பதை அறிந்துகொள்ளலாம்.  தமிழ் இந்திய மொழிகளில் ஒன்று என்றும்  சமஸ்கிருதம் வெளிநாட்டு மொழி என்றும் முன்னர் செய்த வெள்ளையரின் ஆய்வு சொன்னதனால்  மேலும் பல தமிழ்ச்சொற்களைச் சமஸ்கிருத்த்தில் கண்டுபிடிப்பதற்கு ஒரு மனத்தடை இருந்துவந்தது.  இதற்குச் சரியான காரணிகள் இல்லை. வெள்ளையர்தம் கற்பனை ஆய்வினால் ஏற்பட்ட  நிலையே இதுவாகும்.

இந்திய மொழிகள் இவை என்பது இப்போது புலப்படுதலால் ஒப்பீடு செய்வதற்கான தடை இப்போது இல்லை என்பது உணர்க.

நம- ஹா  என்பது நமைக்  கா என்பதன் திரிபே என்பதை  அறிய, பொய்மை தானே விலகிவிடும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

பகிர்வுரிமை உடைய இடுகை


ஞாயிறு, 22 ஜூன், 2025

வாயு அல்லது வாய்வு

 வாயு என்ற சொல்லைக் கவனிப்போம்.

வாய்த்தல் என்பது  வினைச்சொல். இது கிடைத்தல், கிட்டுதல் என்றிதற்குப் பொருள் கூறலாம். பெறுதல் என்று கூறவும் இடமுண்டு.  வாய் என்ற சொல்லுக்கு இடமென்ற பொருளும் இருக்கிறது.

வாய்வு என்பது உடலின் ஓரிடத்தில் அல்லது அதற்கு மேற்பட்ட இடத்தில் உண்டாகி ஒருவித வலியையும் உண்டாக்கும் ''காற்றுத் தொல்லை என்று சொல்வார்கள். ஆங்கில வைத்தியத்தில் இதற்கு வேறு விளக்கங்கள் தரப்படும்.

இந்த ''வாய்வு'' உடலிலே உள்ளதன்று,  அது சில உணவுப் பழக்கங்களினால் வாய்க்கப்பெறுவது என்று சிலர் எண்ணினர். எடுத்துக்காட்டாக,  கடலைப் பருப்பு அதிகம் எடுத்துக்கொள்வதால் இது ஏற்படும் என்ற ஐயப்பாடும் உள்ளது.  ஆகவே வாய்க்கப்பெறுவது என்ற பொருளில் 'வாய்வு'' என்றனர்.  சமஸ்கிருதமும் இதற்கு இதே அடிச்சொல்லைக் கொண்டு  ''வாயு''  என்ற சொல்லை உருவாக்கியது.  வகர மெய் விடப்பட்டது.  வாய்வு என்னாமல் வாயு என்றனர்.

இந்த வாய்வுத் தொல்லை என்றால் அது வாய்க்கப்பட்டது என்பதுதான் பொருள்.

பாவாணர் இதை வாயினின்று வெளிப்படுவது என்று கருதினார்.

வாய்வு என்ற சொல்லே சரியானது.  ஆனால் தமிழர்களும் வாயு என்பதையே பின்பற்றினர். இதை நோயாகவே பார்க்கலாம்.

சமஸ்கிருதத்தில் இது பொதுப்பொருளில் வழங்குகிறது

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை வழங்கப்படுகிறது.


 

வெள்ளி, 20 ஜூன், 2025

தட்சிணாமூர்த்தி

தட்சிணாமூர்த்தி என்ற பெயரை இன்று ஆய்வு செய்கையில் இரு நன்மைகள் காண்கிறோம். ஒன்று, தட்சிணம் என்பதை உணர்வதுடன்  ; இரண்டு, மூர்த்தி என்னும் அழகான பெயரையும் தெரிந்து மகிழ்கிறோம்.

மூர்த்தி என்ற சொல் பலருக்கும் பெயராகவும் இலங்கும்  பெருமை கொண்டது.  தெய்வப் பெயர்களிலும் இணைந்து வருவது. கிருஷ்ண மூர்த்தி  இராமமூர்த்தி கணேச மூர்த்தி எனவெல்லாம்  காண்க.

வினைச்சொல்: முகிழ்த்தல்.  முகு: பொருள்: முன் சேர்தல். முன் வந்து தெரிவது. மு= முன்; கு = சேர்வுக் குறிப்பு. மு+கு > முக்கு,  பொருள் முன் அல்லது வெளிக்கொணர்தல்.  இழ் என்பது ஒரு விகுதி. பெயரிலும் வினையிலும் இழ் விகுதியாகும்.   இழ் என்பது ஓர் அடிச் சொல்லுமாகும்.  இழ் > இழு, இழை, இழி என்பவற்றில் வெவ்வேறு ஆனால் தொடர்புறு இயக்கங்களைக் குறிக்க வரும். ஆகவே தமிழ் என்றால் தனிமைப் பண்புடன் , சுவையுடன் பொருளுடன்  இயங்கும் மொழி என்று கொள்க.  ஆக, முகிழ் > முகிர் > மூர். + தி (விகுதி ) > மூர்த் தி :  முன்தோன்றும் தெய்வஉரு

தென்கணம் > தெற்கணம் > தெக்கணம் > தக்கணம் >  தட்சிணம். ( எ> அ). எ -  அ: தெரிசனம் - தரிசனம். சொன்முதல் திரிதல்.

தெற்கணம் பார்க்கும் தெய்வம் என்றாயிற்று. தெற்கணம் - தென்திசை.

கண் = இடம்   கணம் இங்கு நிலப் பகுதி.

 அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

பகிர்ந்துகொள்க 








எது சரி? நெசமா நிஜமா

 இதனை இப்போது ஆய்வு செய்வோம்.

நடைமுறை  வாழக்கையில் நம் மக்கள் பேசும்போது நெசம் என்றுதான் பேசுகிறார்கள். இதை ஆயந்த சிலர் நில் என்ற சொல் கடைகுறைந்து சு அம் என்ற விகுதிகள் ஏற்று நிசம் என்றாகி  நெசம் என்று மாறி வழங்கும் என்றனர்.  இந்தக் கருத்தில் உண்மை இருக்கி றது என்று நினைக்கலாம்..

எழுத்துத் திரிபுகள் என்ற அளவில் இந்த  விளக்கதில் வழு ஒன்றுமில்லை. ஆனால்  இதனினும் சிறந்த கருத்தில் நெசம் என்பதே முதலாகச் சொல் தோன்றியது என்பதே உண்மையாகும்.

ஓர் உண்மையைக் கூறுகையில் கருத்துகள் தம்முள் இணக்கம் பெற்று சொல்வது ஏற்புடைமை அடையும். பொய் எனின் ஒன்றுக் கொன்று பொருந்தாமை வெளிப்படும். Contradictions, inconsistencies என்றிவற்றைக் கூறுவர்

ஆகவே உண்மை  நெசவு போன்ற இழைப் பொருத்தம் உள்ளது. இதனாலே நெசவு என்ற சொல்லினடியாக நெசம் என்பது  தோன்றிற்று. இதுவே சரியானது மேலானது ஆகும்  இருவழிகளில் உரைபெறு சொல் இதுவாம்.   நெசவு என்பதில் நெச என்பது அடிச்சொல் அன்று (அல்ல) எனினும் அடிபோல் பாணினிபோல் பாவித்துக் கொண்டால்,  அதனோடு அம் விகுதி இணைப்பின் அது நெசம்  ஆகிவிடும். இழைப்பொருத்தம் ஆதலின் உண்மைத்தன்மை உடையது என்பதாம். எளிதாகப் புரிந்துகொள்ளும் நோக்கில் சுருக்கினோம்  விரித்துரை வேண்டின் எமக்கு எழுதுங்கள்.  புரிதலுக்காக இஃது அடி என்று உரைக்க.

இணக்கம் கருதி இது இருபிறப்பி அல்லது பல்பிறப்பிச் சொல் என் க .

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்ந்து பரப்புக.


 கூறுவர் 





உலகுக்கு உதவும் பிரதமர் மோடி

 பிறருக்கும் தமரான பிரதமர் மோடி

பிரியாமல் உலகருடன் உறைந்து வாழ்வார் 

அறவர்க்கும் அன்பருக்கும் அருமைச் செம்மல்

ஆலயத்தில் இறைவர்காண்  அகத்து மாண்பர்

அரியதீவு சைப்பிரசில்  அடியை வைத்தார்

ஆனமக்கள் அனைவர்க்கும் உறவர் ஆனார்

பெரிதுசொன்னார் இதுவன்று போர்செய் காலம்

பிழைக்காதீர் என்றபடி  பெருமை கண்டீர்.


பொருள்

பிறருக்கும்  -  தாம் அல்லாத பிறருக்கு(ம்)

உலகர் -  உலகத்து மக்கள்

உறைந்து - ஒன்றிணைந்து

அறவர் -  அறம் செய்வோர்

ஆலயத்தில் இறைவர்காண்  அகத்து மாண்பர்

ஆலயங்களின்  இறைவனைக் காண்பவர்

அகத்து மாண்பர் -  மனத்தில் மாண்புடையார்

உறவர் - சொந்தக்காரர்

பிழைக்காதீர் - இதற்குச் தவறு செய்யாதீர் என்று பொருள்.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உடையது.


வியாழன், 19 ஜூன், 2025

மனனம் - சொல், மற்றும் ''மாதிரி''

 இன்று மனனம் என்ற சொல்லைக் காண்போம்

இது மனப்பாடம் செய்தலைக் குறித்தலுடன்,  சிந்தித்தலையும் குறிக்கும்.  

மனம் என்பது மனன் என்று தமிழில் வரும்.  அறம் என்பது அறன் என்று வருதல் காண்க.  திறம் என்பது திறன் என்றும் வருதல் அறிக. போல இருப்பவை போலி எனப்படும்.  அதாவது ஒரே மாதிரியானவை. மாதிரி என்றால்  அதே அளவில் திரிக்கப்பட்டவை,  அல்லது அதே அளவில் செய்யப்பட்டவை. திரித்தல் என்றால் உருவாக்குதல் என்றும் பொருள் உண்டு.  

மா -  அளவு. ( அளவில்)   திரி =  திரிக்கப்பட்டவை.  திரி என்பது முதனிலைத் தொழிற்பெயர்.  தேவநேயப் பாவாணர்  ''மாடல்'' என்ற ஆங்கிலச் சொல்தான் மாதிரி என்ற திரிந்துள்ளது என்றார் எனினும்  இதை வலைப்பதிவுகளில் உலவிய தமிழன்பர்களும் அறிஞர்களும் ஒப்பவில்லை. ( பதினைந்து ஆண்டுகட்கு முன்). இவர்களின் கருத்தே இங்கு மேற்கொள்ளப்படுகிறது.  பாவாணர் கூற்றுக்குக் காரணம்  '' ஹாஸ்பிட்டல்'' என்ற ஆங்கிலம்  ''ஆஸ்பத்திரி'' என்றானதுதான். ஆனால் ஹாஸ்பிட்டல்  என்பதில் வரும் ''டல்''  -tal என்று முடிவது.   மாடல் என்பதில்  வரும் ....del என்பது சற்று வேறுவிதமான -டல்.  Dull என்பதில் டல்,   டல்லென்றே மாற்றமின்றித் தமிழில் ஒலிக்கிறது. பெடல் என்பதில் வரும் டல் மாறுவதில்லை. மெடல் என்பதும் மாறுவதில்லை. இவற்றையும் இங்குத் தெரிந்துகொள்ளுங்கள்.

இனி மனனுக்குத் திரும்புவோம். மனனில் அல்லது மனத்துள் படித்ததை அமைத்துக்கொள்வது மனனம்  எனப்படும். அம் என்பது அமைத்துக்கொள்ளுதல் என்பதற்கு ஏற்புடைய விகுதி. ஆகவே மனனம் என்பது நல்ல தமிழ்ச்சொல் ஆகும்.

இங்கு இரு சொற்களைக் கவனித்தோம். மனன் >  மனனம்,  மாதிரி என்பவை இவை.  இவை இரண்டும் தமிழல்ல என்று முடிவு செய்வதற்குக் காரணம் எதுவும் இல்லை.  ஒரு சொல் எந்த மொழிக்குரியது என்று முடிவு செய்வதில்,  முதலாவது  வழக்கு அல்லது பயன்பாடு என்னும் செயலும் இரண்டாவதாக எத்தகு மூலச்சொற்களால் இவை ஆக்கப்பட்டுள்ளன என்னும் நிலையும் முக்கியமானவை. ஒருசொல் ஒரு மொழியில் வழங்குவதால் மட்டுமே அச்சொல் அம்மொழிக்குரியது என்று முடிவு செய்வது பேதைமை. மனனம் என்பது தமிழிலும் உள்ளது; சமஸ்கிருதத்திலும் உள்ளது.  இவ்வாறு மட்டும் காண்கையில் இது எம்மொழிச் சொல்லாகவும் இருத்தல் கூடும்;  ஆயின் மூலங்கள் தமிழிலிருத்தலால், இவை தமிழ்ச் சொற்களே என்று முடிவுசெய்வதுதான் சரியானதும் காரணத்துடன் கூடியதும் ஆகுமென்க .  சமஸ்கிருதம் என்பது இந்திய மொழியே என்பது இங்கு வேறு இடுகைகளால் நிறுவப்பட்டுள்ளது. அது வெளிநாட்டு மொழி என்பது வெள்ளைக்காரன் புனைவு ஆகும்.  இது களையப்பட வேண்டிய மடமை என்பது முடிவு.

மாதிரி என்பது  மா-  அளவு;  (பொதுப்பொருள் ).  இச்சொல் நில அளப்பிலும் வருகிறது. பெரிது என்ற பொருளிலும் வருகிறது.  இவை எல்லாம் அளவு பற்றிய பொருண்மைகள். சொல் வரலாற்றில் ஒரு சொல் பலவேறு பொருள்கள் கொண்டு வழங்கி இன்று இறுதியில் ஒரு பொருளில் வழங்குவது என்பது பல சொற்களில் நாம் அறிந்துகொள்ளும் செய்தியாகும். தேவரடியாள் அல்லது தேவடியாள் என்பது இவ்வாறு காண்புறும் சொல்லுக்கு ஓர் எடுத்துக்காட்டு. இவ்வாறு நிறைய உள்ளன.  ஆகையால் மாதிரி என்பது தமிழ்ச்சொல். நல்ல ஆதாரங்கள் கிடைக்கும்போது தவறான முடிவைப் பற்றிக்கொண்டு அதில் தொங்கிக்கொண்டிருபது அறியாமையின் அறிகுறி. சான்றின்படி செல்லாதவன் ஒரு தீர்ப்பு எழுதும் தகுதியை இழந்துவிடுகிறான். சொற்கள் என்பவை ஒலிகளால் ஆனவை.  அவற்றின்பால்  வெற்று வெறுப்புக் கொள்வோனும் ஆய்வாளனாகும் தகுதியை இழப்பவனே. ஒருக்கால் ஒருவன் செய்த தவறான முடிவை பிற்பாடு மாற்றி அமைத்துக்கொள்கிறபோது  அவன் உண்மையில் அறிவாளி ஆகிவிடுகிறான்.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை தரப்படுகிறது.


சனி, 14 ஜூன், 2025

கோரோசனை - புதுச்சிந்தனை.

 கோரோசனை என்ற சொல்லை ஆய்வு செய்வோம்.

இந்தச் சொல்லில் கோ என்பது மாடு என்றோ பசு என்றோ பொருள்படும். பசு என்பது தமிழன்று எனப்படினும், இச்சொல்லில் பசு என்பது பசுமை என்னும் சொல்லுடன் எண்ணத்தக்கதாய் இருப்பதால்,  மாந்தர்தம் வாழ்வைப் பசுமையாக்கும் ( வளமாக்கும்)  விலங்கு என்ற பொருளில் பசு என்பது தமிழ்ச்சொல்தான்.  இச்சொல் சிற்றூர்களில் மிக்க வழக்கு அல்லது பயன்பாடு பெற்ற சொல்லாகும். ஆ என்னும் சொல்லும் அறியப்பட்ட சொல்தான் என்றாலும் இலக்கியப் பயன்பாடு உடைய சொல்.

பசுமை எய்தச் செய்யும் விலங்கு  - பசு.

ஆக்கம் உருப்பெறச் செய்யும் விலங்கு  - ஆ.  ஆன் என்றுமாகும்.

இவ்வாறு காணின், இரண்டு சொற்களும்  ஒரே மூலக்கருத்தை அடிப்படையாகக் கொண்டு எழுந்தவை.  ஆகு என்ற வினைச்சொல்லில் கு என்பது ஒரு வினையாக்க விகுதி.  ஆதல் ஆகுதல் என்ற இருவிதமாகவும் வந்து, ஆ என்பதே மூல வினைச்சொல் என்பதை இது மெய்ப்பிக்கின்றது.  இது ஆன் என்றும் வரும்.ஆன என்ற எச்சவினையில் னகரம் வருவதுபோல்  இங்கும் சொல் அமைந்துள்ளமை  பொருத்தமே.

ஆனால் கோ என்ற சொல் வேறு காரணங்கள் கொண்டு ஆக்கப்பட்ட அல்லது அமைந்த சொல்.  மாடுகள் மேயும்போது கோலி நின்று மேய்பவை.  கோலுதலாவது  ஒரு வட்டத்தில் சுற்றி நிற்றல். இன்னும் மனிதனைச் சூழ நின்று வாழ்ந்து அவனுக்குப்  பசுமையையும் ஆக்கத்தையும் உண்டாக்குபவை. மந்தையாகக் கூடி நிற்பவை ஆதலால்  கூ> கோ என்ற திரிபு இயல்பானதாகிறது.

கூடு>  கோடு> கோலு.  கோடுதல் வளைதலாகும்.

மடி > மறி > மரு(வு)>மரி>.மாள்>

மாள்கிறான்  மரிக்கிறான்  இதில் மாண்டான் என்று இறந்தாலத்தில் வருவதையும் கவனிக்கவேண்டும். 

ஈரலைச் சுற்றி வளரும் ஒரு கல் வகை.

ஒசிதல் > வளைதல்,  ஒடிதல்.

கோலு > கோரு> கோரு+ ஒசி+ அன் + ஐ >  கோரோசனை.

இது கோசனை என்றும் வரும்.

கூடி நின்று மேயும் வழக்கத்தினால்,  கோ என்ற சொல் ஏற்பட்டுள்ளது.

கோ என்பது பசு.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை வழங்கப்பட்டுள்ளது



புதன், 11 ஜூன், 2025

பரவுதல் -- தொழுதல் கருத்தியல்

 பரவுதல் என்பது பல்பொருளொரு சொல் என்பர். ஒரு திசையிலும் பல்திசைகளிலும் சென்றேறும் ஒன்றைப் பரவுகிறது என்போம்.  இதற்கு இன்னொரு பொருள்: தொழுதல் என்பதுமாகும்.  கடவுட் கொள்கையும்  அதைப் பின்பற்றிய மனிதச் செயல்களும் தொழுகைக் கருத்தியல்களும்  ஒருவனிடமிருந்து இன்னொருவனுக்குப் பரவக் கூடியவை,  பரவிய மாத்திரத்தில் அந்த இன்னொருவன் கடைப்பிடிப்புடன்  அதன் பல்வேறு அமைப்புச்செயல்களையும் தன் நடவடிக்கைகளில் கொணர்ந்துவிடுவான்.  ஆகவே காற்று எங்கும் ஊர்ந்து செல்லுதல்போல இது பரவத் தொடங்கிவிடுகிறது.   என்வே தொழுதலுக்குப் பரவுதல் என்பது இன்னொரு சொல்லாகிவிட்டது. 

'' தொண்டர் பரவும் மிடற்றாய் போற்றி,

தொழினோக்கி ஆளும் சுடரே போற்றி''

பின்பற்றும் போது கும்பிடும் முறைகளை நன் கு அறிந்து கடைப்பிடிப்பது  பற்றர்களுக்கு வழக்கம்.  ஆனால் சிலர் தவறாகக் கடைப்பிடிப்பதும் உண்டு.  அப்போது இறைப்பணி பிழைப்பதை ( தவறு படுவதை ) ப்  பிறர் திருத்தினர்.  திருத்துங்கால் சரிவராவிட்டால் சிலர் அடியும் கொடுத்துத் திருத்துவதுண்டு.

''போதுவித்தாய்  நின் பணி  பிழைக்கிற புளியம் வளாரால்

மோதுவிப்பாய் உகப்பாய்  முனிவாய்  கச்சி ஏகம்பனே''

என்று பாடல் வருவதால்,  புளியம்  வளார் கொண்டு அடிக்கப்பட்டும் ஆத்திரத்துடன் அதட்டபட்டும் இறைப்பற்றினை அறிந்துகொண்டவர்களும் உண்டு என்று அறிந்துகொள்க.

வளார் -  மரக்கிளை அல்லது தடி.

எழுத்துக் கற்ற மாணவன் முதல் இறைப்பற்று  அறிவிக்கப்பட்ட மாணவன் வரை உதைவாங்கிப் பாடம் புகட்டப்பட்டோர் இருந்தனர் என்று அறிந்துகொள்கிறோம்.

கற்பிக்கப்படுவது எல்லோருக்கும் சரிவரப் பதிந்துவிடுவதில்லை.

'' கண்ணினும் செவியினும் திண்ணிதின் உணரும்

உணர்வுடை மாந்தர்க் கல்லது  தெரியின்

நன்னயப் பொருள்கோள் எண்ணருங்குரைத்தே''

என்று தொல்காப்பியனார் கூறுவதால்   (தொல். மெய்ப்பாட்டியல். உஎ)  

சொல்ல்லிக்கொடுப்பதை உடன் உணர்ந்துகொள்வோர் சிலரே ஆவர்.

இவ்வாறு பரவியது பலவகையாகும்.  அதனால் ''பரவுதல்'' என்பதன் பொருளை அறிந்துகொள்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை வழங்கப்பட்டுள்ளது.

திங்கள், 9 ஜூன், 2025

வினோதம் என்ற சொல்.

 வினோதம் என்ற சொல்லின் அமைப்பைக் கண்டு அதன் வினோதம் உணர்வோம்.


வியன் என்ற சொல் நீங்கள் அறிந்ததொன்றாகவே இருக்கும், குறளில் விரி நீர் வியன் உலகத்து உள் நின்று உடற்றும் பசி  என்ற வள்ளுவனின் தொடர் சிறந்த நயம்பொருந்தியது.

வியன் எனின் பெரிது.விரிவானது

முன் பூனையையே கண்டு வளர்ந்தவனுக்கு யானை வினோதமானது. தினமும் காண்பவனுக்கு அது வினோதமாகாது.  வினோதமெனும் மனவுணர்ச்சி மறைந்துவிடும்.

ஆதலால் வியன் என்னும் சொல்லினின்று வினோதம் என்பது அமைந்துள்ளது.  எப்படி எனின் கூறுதும்.

வியன் + ஓது +  அம் = வியனோதம்.

இப்போது யகரத்தை விட்டிடுவோம்.

வினோதம் ஆகிவிட்டது.  ஒரே எழுத்தின் விடுபாட்டில் ஒரு புதிய‌
சொல் கிடைத்துவிட்டது.

வினோதமெனின் பெரிதாக மக்களால் பேசப்படுவது.  அவ்வளவுதான் .  ஓது என்பது  பேச்சைக் குறிக்கிறது.  மந்திரம் ஓதுவதைப் பிற்காலத்தில் குறித்தது.  தொடக்கத்தில்  ஓஓஓஓஓ என்று ஒலி  எழுப்புதலையே குறித்தது.  ஓலமிடுதல் என்ற சொல்லும்  அதே.  ஓஓஓஓ  என்பதுதான். ஒப்புதல் என்ற சொல்லும்  ஓ ஓ என்று சரி கொள்வதையே குறிக்கிறது.   இப்படி ஒலிக்குறிப்புகளைக் கொண்டு அமைந்த சொற்கள் பல்வேறு மொழிகளிலும்  ஏராளம்.  ஈண்டு விரித்தலாகது.  அம்  விகுதி/

புதிதாக உள்ளதைத்தான் பேசுவார்கள் . பழங்  குப்பைகள் பேச்கிக்குரியனவல்ல .

மகிழ்ந்து கொண்டாடலாம்.

ஆதி மனிதன் குகைகளில் வாழ்ந்து கரடி புலிகளுடன் போராடி உணவு தேடித் துன்புற்றான்.  அவனிடம் அகராதியுமில்லை  முகராதியுமில்லை. நாலைந்து சொற்களுக்கே அவன் சொந்தக்காரனாயிருந்தான். பல சொற்களைப் படைத்து மொழியை உருவாக்க வேண்டின், இதுபோன்ற தந்திரங்களைக் கையாள வேண்டுமல்லவா. இந்தப் பதங்களெல்லாம் ஒன்று தங்கத்தட்டில் வைத்து கடவுள் நீட்டினார் என்று எண்ணுகிறவன், மொழிவரலாறும் மனித வரலாறும் அறியாதவன். மனிதனின் கள்ளம் அவன் மொழியிலும் பளிச்சிடவேண்டுமே.

வி + நோ தம்  என்று பிரித்து  அதிலிருந்து  நூதனம் என்பதைப் பிறப்பித்தால் இன்னும் புலமை. பண்டையரைப் பாராட்டுவோம் .

வினோதம் என்ற சொல் பிறவழிகளிலும் விளக்கத்தக்கது ஆகும்.  இது ஒரு பல்பிறப்பி  ஆகும்.

சிவமாலா   23.2.2016

சனி, 7 ஜூன், 2025

இந்து நாடு - எழும் பொருள்

 இந்து என்பதைப் பற்றி பலதரப்பட்ட பொருண்மைகள்  வலம் வந்துகொண்டுள்ளன. அவற்றுட் பல வியப்பை விளைவிப்பன; சில கேட்பார் உள்ளத்தில் இசைவையும் இணைப்பையும் உறுத்துவன.

இந்து  என்றால் நிலா என்ற பொருளும் உள்ளது. " இந்தின் இளம்பிறை போலும் ஏய்ிற்றனை" என்று பாடல் வருகிறதே.

இந்து வாழ்வியல் முறை இலங்கும் நாடு இந்து நாடு எனப்படுதல்

ஓர் இயல்பும் ஆகும்.

https://youtube.com/shorts/4mQw8LR9uuk?si=f5DhPhXypb7dGOj

மேற்கண்ட இணைப்பைச் சொடுக்கி அதனிற் பொதிந்துள்ள கருத்தினையும் அறிக.

வியாழன், 5 ஜூன், 2025

அணிந்தனம் என்பதன் திரிபு அஞ்சனம் என்றானது

 அணிந்தனம் என்ற நல்ல தமிழ்ச்சொல். பேச்சுவழக்கில், அணிஞ்சனம் என்று வரும். அதாவது  அணிந்துகொண்டேன் என்பது தமிழ்ச்சொல்லின் பொருள். என்ன அணிந்துகொண்டீர் என்றால்  மிக்க முதன்மை வாய்ந்த மையை என்று சொல்லவேண்டியது தெளிவாகும்.

இனி, அணிஞ்சனம் என்பது  ஓரெழுத்துக் குறைத்தால்,  அஞ்சனம்  ஆகிறது.  இது மையழகு ஒப்பனை என்று சொல்லவேண்டாத நிலையில்  மையழகுக்குப் பெயராய் வந்துவிட்டது.

இப்படிச் சொல்லமைப்பதும் ஒரு தந்திரம்தான் என்பதில் ஐயமில்லை.

அறிக் மகிழ்க

மெய்ப்பு பின்.

பகிர்வுரிமை வழங்கப்படுகிறது/

செவ்வாய், 3 ஜூன், 2025

காலும் காலமும்

 கால் என்பது ”நீண்டு செல்லுவது," என்று பொருள் படும் சொல்.  பந்தல் கால் என்ற வழக்கை நோக்குக. இனிக் கால் என்ற சொல்லும் பொழுது அல்லது போது என்பவற்றுக்கு ஈடாகவும் வழங்கும். " இல்லாக்கால்" என்பது இல்லாதபோது என்று பொருள் தருதல் காண்க.

கால் என்பது நேரம் என ற சொல் குறிப்பதை விடக் குறுகிய பொழுது ஆகும்.

கால் என்பது அம் விகுதி பெற்றுக் காலம் என்ற சொல் அமையும். இதன் அடிச்சொல் கால் தமிழ்ச் சொல் ஆதலால் காலம் என்பதும் தமிழ்ச்சொல்லே  ஆகும். சங்கதம் என்னும் சமஸ்கிருதத்திலும் இ ச் சொல் வழங்கும்.  ஆதலால்  இதைப் பொதுச் சொல் என்றும் சொல்வர்.  சங்கத மொழியும்  உள்நாட்டு மொழியே.  காலம் என்பது நீண்ட கால அளவைக் குறிக்கும்.  எ-டு::இளவேனிற் காலம் ,  (வசந்த காலம் ).  

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

இதை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்க.




ஞாயிறு, 1 ஜூன், 2025

பாராயணம் அல்லது பாராமல் அணுகுதல் (படித்தல்)

பாராமல் என்ற தமிழ்ச்சொல்,  பாரா என்று சொற்புனைவுக்காகக் குறுக்குண்டது. 'ஆ-மல்' என்பதில்  மல் தேவைப்படவில்லை. அது இல்லாமலே எதிர்மறை உணர்த்துவிக்குக் வலிமை பாரா என்பதற்குண்டு/

இனி அணம் என்ற விகுதியை நோக்குவோம். இது அணுகுதல் குறிக்கும் அண் என்பதும் அமைப்புக் குறிக்கும் அம் என்ற இறுதிநிலையும் இணைந்துள்ள நிலையில், இவற்றுக்கும் பொருள் கூறுதல் எளிதாகவே தெரிகின்றது. பாராமல் எழுதியுள்ளதை அணுகி ( மனத்துள்) அமைத்தல் என்றே பொருள் கூறவேண்டும். பொருளும் சிறப்பாக அமைகின்றது.  பாராமல் என்னும்போது மனத்துள் என்பது பெறப்படுதல் காண்க.

அணுகுதல் -  மனத்தால் எழுத்துரையின் அருகிற்  சென்று, மனத்தினில் பதியவைத்தல்  என்றிதற்குப் பொருள் விரிக்கவும்.

பாராயணம் என்பது தமிழ்ச்சொல் என்பதில் ஐயமில்லை.

சொல்லாக்கத்தில்  பகுதிகள் அல்லது முதனிலைகள் எதிர்மறைகளாக இருத்தல் குறைவே.

பாராய்!  அணம் --  என்பது,  கவனிப்பீராக,  நான் அணுகிச்செல்கிறேன்.  பார்க்கமல் ஒப்பிக்கிறேன் என்று துணிச்சல் மொழியாகவும் சிலரால் கூறப்படலாம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை தரப்படுகிறது.

சனி, 31 மே, 2025

இலாடம் என்ற சொல்லுக்கு என்ன பொருள்

 சிற்றூர்களுக்கு  ஆட்டக்காரர்கள் ஆடவருவார்கள். அப்போது அவர்கள் நின்ற இடத்திலே ஆடிக்கொண்டிருப்பார்கள்.  மரத்தாலான கோல்களில் தரைப்பகுதியில்  இருப்புக்காப்பு  அடிக்கப்பட்டிருக்கும்.  அதன்மேல் நின்றுகொண்டு ஆட்டமும் பாட்டும் நடைபெறும்.  சீனர்களிடமும் இத்தகைய ஆட்டபாட்டங்கள் உண்டு.  அந்த அடிக்கப்பட்ட இரும்புக் காப்புக்கு  இலாடம் என்று பெயர்.

இலாடம் என்பது பின்னர் லாடம் என்று தலையிழந்த சொல்லாகிவிட்டது. இந்தச் சொல்லில் இல்+ ஆடு+ அம் என்று மூன்று பகவுகள் உள்ளன.

இல் என்றால் இடம்.  நாட்டில் என்பதில்  இல்  இடத்தைக் காட்டும் உருபாக வருகிறது. இல் என்ற தனிச்சொல் வீடு என்பதையும் குறிக்கும். இடம் என்ற பொருள் தெளிவானதாகும்.

இருக்குமிடத்தில் ஆடிக்கொண்டு ஒரு கலையையோ நிலையையோ காட்டுவது இல் என்ற சொல்லின் தன்மையும் ஆகும். 

அடுத்த சொற்பகவு ஆடு என்பதுதான்.  இது ஆடுதலாகிய செயலைக் குறிக்கிறது.

இந்த ஆடுதலுக்கு அமைக்கப்பட்டதுதான் பொருத்தப்பட்ட இரும்புக்காப்பு.  மரக்கோல் ஆடும்போது பிளந்துவிடாமல் அந்தக் காப்பிரும்பு பார்த்துக்கொள்கிறது.

நாளடைவில் இது செருப்புகளிலும் பொருத்தப்பட்டுப் பலனளித்தது என்று அறிக.  நடக்கும்போதும்  கால்  ஆடத்தான்  செய்கிறது.. ஓர் இயக்க்நிலையையும் இது குறிக்கும்.  உரையாடல் சொல்லாடல் என்ற பதங்களிலெல்லாம்  ஆடல் என்பது துணைவினையாக வருகின்றது. ஆகவே எந்தச் செயலாற்றலிலும் இச்சொல் பயன்பாடு காணத் தக்கது ஆகும்.

ஆகவே இச்சொல்லில் ஆடுகின்ற தமிழை நீங்கள் அறிந்து இன்புறலாம்.

இல் ஆடு அம் என்பது இல்லாடம் என்று வந்தாலும் தமிழில் சுருக்க முறைகள் இருப்பதால் இல்லாடம் இலாடம் என்ற குறுகுதல் இயல்பே ஆகும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்ந்து பரவிட உதவுக.


வெள்ளி, 30 மே, 2025

அந்தியம் என்ற சொல்

 அந்தியம் என்ற சொல்லைக் கவனிப்போம்.

மனிதன் தன் அந்திய காலத்தில் துறவு பூண்டு வாழ்தல் மிகவும் நன்று என்ற வாக்கியத்தில் அந்தியம் என்ற சொல் காணலாம்.   தன் கடைசிக் காலத்தில் என்று இதற்குப் பொருள்..

இந்தச் சொல்லில் அண் என்ற தொடக்கப் பகவு உள்ளது.  அண் என்றால் நெருங்கிய(து என்று பொருள்.. எதற்கு நெருங்கியது என்னில்,  முடிவை நெருங்கிய காலத்தை என்று கூறலாம்.  அந்தம் என்ற சொல்லும் இதனுடன் உறவுள்ள் சொல்தான்,

அண், அண்மை, அணித்தான, அண்டுதல், அண்முதல் என்ற பல சொற்கள் உள்ளன.  அண்+ து+ இ + அம் > அண்தியம் என்றாகும்.  து  இ என்பன இடைநிலைகள். அம் என்பது இறுதி அல்லது விகுதி.

சொல்லாக்கப் புணர்ச்சியில் அண்தியம் என்பது அந்தியம் என்றே அமைவுறும்.

அண்தியம் என்பது அண்டியம் என்று உரைநடையில் நிலைமொழி வருமொழிகள் போல புணர்க்கப்படா.

அறிக மகிழ

மெய்ப்பு பின்னர்

பகிர்வு 

சனி, 24 மே, 2025

பஞ்சமி பாணர்கள்

 பஞ்சமி என்ற சொல்லைப் பார்க்கலாம்.

அம்மன் பற்றிய வரலாறு அறிய எழுங்காலை அவள் ஐந்தாம் வகுப்பினள் என்பது சாதிகள் பற்றிய கருத்து  வேரூன்றி விட்டபின் வெளிப்பட்ட விளக்கமாகும்.சாதிக் கருத்துக்கு இது ஒளி தருவதுபோல் தோன்றினாலும் இது  வரலாற்றுக்கு  இயைந்தது   அன்று. இதற்குக் காரணி யாதெனின் பஞ்சமி என்னும் சொல் சாதிகள் ஆளுமை பெறுமுன் அமைந்த தாகத் தெரிகிறது.

பண்கள் அமைததுப் பாடுகிறவர்கள் "பண் சமைப்பவர்கள். " சம்> சமை என்பதே சொல்லமைப்பு ஆதலின்  சம் > சமி என்னும் வடிவம் உணரற் பாலதாகிறது. இதற்கு " அமைப்பவள் " என்று பொருளுரை பகர்தல் ஆய்வறிவு ஆகும்.

பண் சமி என்பதே பஞ்சமி ஆயிற்று. பிற்காலத்தோர் இதை ஐந்தாம் வகுப்பினள் என்றது அவர்கள் கொண்ட கருத்து  ஆகும் . கருத்துக்கள் காலத்திற்கு ஏற்ப மாறுபவை.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்ந்து படிக்க.


ப்



வெள்ளி, 23 மே, 2025

சந்தை சொல்லாக்கம்

 இன்று சந்தை என்ற சொல் அமைந்தவாறு காண்போம்.

இதன் அடிச்சொல் சண் என்பது.  சண் என்பது பலரும் தேடிச்செல்லும் செயலைக் குறிக்கும்.

சண் + தை >  சண்தை >  சந்தை.

சொல்லாக்கப் புணர்வு வேறுவகையானது.  சொல்லாக்கத்தில் நிலைமொழி வருமொழி என்பவை இல்லை.  நிலையடியும் விகுதியுமே உள்ளன. இவை மொழிகளாக மாட்டா.  இங்கு மொழி எனில் சொல். மேலும் சொற்கள் பொருத்தமாகவும் இனிமையாகவும் அமையவேண்டும்.  

மந்து என்ற மன்னன் குறிக்கும்  சொல்லில்  மன் + து என்பது மன்று என்று வாரா நிலையில் மன் து > மந்து என்றே வந்தவாறு கண்டுகொள்க.

மன் +  து >  மந்து  ( மன்னன் என்ப்து பொருள்).

பாண் + சாலி >  பாஞ்சாலி  என்று வந்தவாறு காண்க. பாண் என்பது பாணர் பரம்பரையில் வந்த அரசி என்றவாறு உணர்க. இது வடநாட்டில் பாண்சு > பாஞ்சு  என்றாகும்.  ஐந்து என்னும் பொருளிய சொல்லென்று வடநாட்டினர் கொண்டனர்.

பஞ்சு  ஐந்து என்று கொண்டனர்.  

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்.

உங்கள் அன்பான கவனத்திற்கு


FOR YOUR KIND ATTENTION PLEASE

If you enter compose mode please do not make changes.

You may share this post with others through any social media. Copyright is waived for this post.. 

நீங்கள் எழுதும் பயன்முறையில் நுழைந்தால், தயவுசெய்து மாற்றங்களைச் செய்ய வேண்டாம். 

இந்த இடுகையை எந்தச் சமூக ஊடகங்கள் மூலமாகவும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்த இடுகைக்கான பதிப்புரிமை விலக்கு அளிக்கப்படுகிறது.


ஞாயிறு, 18 மே, 2025

குரோதம் சொல்

 குறுகிய மனமப்பான்மையினால் மக்களிடையே ஏற்படும் மாறுபாடான நடப்புகளைக் காட்டுவதற்கு ஒரு சொல் தேவைப்பட்டது.  இந்தத் தேவை  சமஸ்கிருதம் தமிழ் ஆகிய இரு மொழிகளுக்கும் தேவை என்று உணரப்பட்டிருக்கலாம்.  இதை அறுதியிட்டுச் சொல்வதற்கு அந்த வேளையில் நாம் அங்கு இல்லை.

குறு + ஓது + அம்  >  குரோதம் என்று சொல் அமைந்தது.

வல்லின றுகரம் புணர்க்கப்பட்டு ரோ ஆயிற்று.

இது சாறு > சாராயம் என்ற சொல்லின் மற்றம் போலுமே ஆகும்..  சாறாயம் என்னாமல் சாராயம் என்றே வந்தது அறிக.

விரோதம் என்ற சொல்லுக்குக் கூறியவை ஈண்டும் பொருந்தும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

உங்கள் அன்பான கவனத்திற்கு


FOR YOUR KIND ATTENTION PLEASE

If you enter compose mode please do not make changes.

You may share this post with others through any social media. Copyright is waived for this post.. 

நீங்கள் எழுதும் பயன்முறையில் நுழைந்தால், தயவுசெய்து மாற்றங்களைச் செய்ய வேண்டாம். 

இந்த இடுகையை எந்தச் சமூக ஊடகங்கள் மூலமாகவும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்த இடுகைக்கான பதிப்புரிமை விலக்கு அளிக்கப்படுகிறது.



சனி, 17 மே, 2025

விரோதி என்ற சொல்.

 இந்தச் சொல் தமிழில் வழக்குடைய  ( என்றால் பயன்பாடு உடைய)  சொல்லாகும்.  எல்லாத் தமிழறிந்த மனிதரும் அறிந்த சொல்.  இது ஒரு பொதுச்சொல் தான்.  தமிழுக்கும் சமஸ்கிருதம் என்று சொல்லப்படும் சந்த மொழிக்கும் பொதுவான சொல்.

சமஸ்கிருதம் என்பது சந்த அசைகளால் ஆன மொழி என்று அறிந்து அதற்குச் சந்தாசா என்றொரு பெயரும் இருந்தது. இந்த மொழிக்குப் பல பெயர்கள் வழங்கியுள்ளன. அவற்றைக் கூறும் நூலகளின் மூலம் அறிந்துகொள்க.

விரோதி என்பவன் ஓர் எதிரி என்று சொல்லலாம்.

வெறு, ஓது என்ற இரண்டு சொற்களால் அமைந்த சொல் இதுவாகும்.

வெறு ஓது இ >  வெறோதி > விரோதி என்று தமிழ் மூலம் உடைய சொல்.

சொல் அமைந்தவுடன் றகரம் ரகரம் ஆகிவிடும். 

எடுத்துக்காட்டு:

சாறு >  சாறு ஆய அம் >  சாராயம் என்றாகும்.  

வல்லெழுத்து று என்பது இடையின எழுத்தாகியது அறிக.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்,

FOR YOUR KIND ATTENTION PLEASE

If you enter compose mode please do not make changes.

You may share this post with others through any social media. Copyright is waived for this post.. 

நீங்கள் எழுதும் பயன்முறையில் நுழைந்தால், தயவுசெய்து மாற்றங்களைச் செய்ய வேண்டாம். 

இந்த இடுகையை எந்தச் சமூக ஊடகங்கள் மூலமாகவும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்த இடுகைக்கான பதிப்புரிமை விலக்கு அளிக்கப்படுகிறது.





வெள்ளி, 16 மே, 2025

அப்பாவி சொல்

அப்பாவி என்றால் ஒரு பாவமும் அறியாத ஆள் என்பது பொருளாகும். இஃது எவ்வாறு அமைந்தது என்று காண்போம்.

அப்பாவி என்பதில் உள்ள அகரம் ஓர் கடைக்றை  ஆகும். இதன் முழுச்சொல்  "அல் " என்பதே.  அல் பாவி என்றால் பாவி அல்லாதவன்  அல்லது ~வள் என்பதாம்.  பாவி என்பது நீங்கள் அறிந்த சொல்.  பாவம் >பாவி. இ - செய்வோன்..  செய்வோள் இரண்டிற்கும் பொது.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

படிப்பீர் பகிர்வீர்


ப்


ப்




வியாழன், 15 மே, 2025

ஆகம என்பது இடைக்குறைந்து ஆம எனவாவது: ஆமநாயம்.

ஞாயம்  என்ற சொல்,  நியாயம் என்பதன் திரிபாக எண்ணப்படுகிறது.  ஆனால் ஞாயம் மேலும் திரிந்து நாயம் என்று எழுதப்பட்டால்,  அவை மரபுகளுக்கு இணங்காத பட்டி வழக்கு என்று எண்ணத் தோன்றும்.  ஆனால் இதைப் பாருங்கள்:

வினைச்சொல்:  நயத்தல்.  தொடர்புள்ள பெயர்ச்சொல்:  நயம்.

நய + அம் >  நாயம். இங்கு  முதனிலை நீண்டு திரிந்து  அம் விகுதி பெற்றது. அம் என்பது அமைப்புக் குறிக்கும் விகுதி. விகுதிகட்குப் பொருள் இல்லாமலும் சொல்லை மட்டும் அமைக்க வருவதுமுண்டு.  ஆனால் இங்குப் பொருள் காண முடிகின்றது.

இதுபோல் அமைந்த இன்னொரு சொல்:

வினைச்சொல்:  மயங்கு-(தல்.)

அடிச்சொல்:  மய.   கு என்பது வினையாக்க விகுதி.

மய + அம் > மாயம்.   

கண்டோரை மயங்கச் செய்வது.  ( இதுவோ?  அதுவோ? என்று.

மாய்தல் ( அறிவை மாய்த்தல் ) என்பதாலும்  மாய்+ அம் > மாயம் என்று வரும் என்பதால்,  இஃது இருபிறப்பி அல்லது பல்பிறப்பி  ஆகும்.

மய என்பது மாயம் என்று வரலாகும் என்பதை இது காட்டுவதால்,  நயம் என்றபாலதும் நாயம்  என்று திரிதலுமாகும் என்று உணர்க.

இனி,  ஆகம என்ற சொல்லும்  ஆம என்ற திரிந்தது.  ஆனால் இது தனியே வராமல் நாயம் என்பதனோடுதான் வரும்.  அப்போது ஆகம நாயம் அல்லது ஆகம ஞாயம் என்று கொள்ளவேண்டும்.

இவற்றை நன் கு கற்றுக்கொண்டு வேண்டியவர்களுக்கும் தெரிவியுங்கள்.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.

உங்கள் அன்பான கவனத்திற்கு


FOR YOUR KIND ATTENTION PLEASE


If you enter compose mode please do not make changes.


You may share this post with others through any social media. Copyright is waived for this post.. 


நீங்கள் எழுதும் பயன்முறையில் நுழைந்தால், தயவுசெய்து மாற்றங்களைச் செய்ய வேண்டாம். 


இந்த இடுகையை எந்தச் சமூக ஊடகங்கள் மூலமாகவும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்த இடுகைக்கான பதிப்புரிமை விலக்கு அளிக்கப்படுகிறது.




நம்புதல் -- என்ன?

 பிறர் கொண்டுள்ள ஒரு கருத்தை ஒருவனோ ஒரு கூட்டமோ தனக்குள் அல்லது தமக்குள் மேற்கொள்ளுவது தான் "நம்புதல்" எனப்படுகிறது.

 இச் சொல் நாம்> நம் என்ற சொல்லினின்று அமைகிறது. மிக்க எளிதாக ஒரு "பு" விகுதிகொண்டு இது அமைக்கப் படுகிறது.

முற்காலத்தில் நான் > நன் என்றும் நாம்>நம் என்றும் சொற்கள் குறுகி வழங்கின.  நெடில் வடிவங்களைவிட குறில் தொடக்கத்தவையே இச் சொல்லாக்கத்தில் பொருந்தி வருபவை . பொருட் பொருத்தமும் உடையாவை.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

பகிர்ந்து கொள்ளுங்கள்.




ம்


ன்


ம்ர்

ம்



செவ்வாய், 13 மே, 2025

சாசுவதம் அல்லது சாஸ்வதம் என்ற சொல். தொடர்வரு கடைப்பிடிகள்

 ஒன்று எதுவாயினும் என்றுமுள்ள தென்று சொல்ல இயல்வதானால் அது மனிதன் இறந்த பின்னும் இருக்கும் மனிதர்களால் பின்பற்றி வரத் தக்கதாகவும்  உண்மையில் பின்பற்றப்படுவதாகவும் இருக்கவேண்டும்.  என்றும் பற்றப் படுவது என்பதற்குச்  சமஸ்கிருதம்  அல்லது சங்கத மொழியில்  "சாசுவதம்" என்று சொல்வர். இதைத் தொடர்வரு கடைப்பிடிகள் என்று இங்கு சொல்கிறோம்.

சா -  இறந்த பின்னும்;

சுவ --  சுயமாக அல்லது தானே தொடர்வருகையாய்

து -  மாற்றமின்றித் தொடர்வது  ஆகிய;

அம்  -  அமைப்பு 

இவ்வாறு விளக்க,  சாசுவதம் என்பது நன்கு புரிந்துணர்வைத் தரும் கடைப்பிடிப்பு என்பதைச் சரியாக விளக்கமுடிகிறது.

சொ >  சு >  சுய  அல்லது சுவ.  இந்தச்சொல் வரும் சொல்லுக்கு ஏற்ப,  சுய என்றோ சுவ என்றோ வரும்.  சுவாதீனம் என்ற சொல்லில் சுவ என்பதே வந்தது.  ஏற்ற வடிவம் தேர்ந்துகொண்டு சொல்லை அமைக்கவேண்டும்.

சொ - சொந்தமாகவே, வ - வந்து கொண்டிருப்பது. இது "சொவ" > சுவ> சுய. சொவ என்பது சொய என்றுமாகும். இது உடம்படுமெய் மாற்றம். இதில் தமிழ் - சம்ஸ்கிருதம் ஒன்றுபாட்டை  உணர்க.

இதையும் படித்தறிந்து ஒப்பீடு செய்துகொள்ளுங்கள்:

சம்பிரதாயம்  https://sivamaalaa.blogspot.com/2023/07/blog-post_75.html

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

உங்கள் அன்பான கவனத்திற்கு


FOR YOUR KIND  ATTENTION


If you enter compose mode please do not make changes.

You may share this post with others through any social media. Copyright is waived for this post for sharing among friends and students.

நீங்கள் எழுதும் பயன்முறையில் நுழைந்தால், தயவுசெய்து மாற்றங்களைச் செய்ய வேண்டாம். 

இந்த இடுகைக்குப் பகிர்வுரிமை வழங்கப்படுகிறது.


ஞாயிறு, 11 மே, 2025

துரு குறு அடிச்சொற்கள்ள்ரு

 துருவுதல் என்ற வி னையின் அடி ச் சொல் துரு என்பதாகும். இந்த வினையில் வு என்ற வினையாக்க விகுதி வோலைக்கப்பட, மீதம் இருப்பது துரு என்பதே. இது துளைத்து வெளிவருதலைக் கு ரிக்கும் . 

மலாய் மொழியில் ஏ றத் தாழ இதுவே பொருள். ஆன அம்மொழியில்  ஸ் என்ற இறுதி சேர்ந்து கொள்கிறது.   துரு ஸ் என்ற தொடர்ந்து முன் செல்லுதலைக் குறி க்கிறத

இதுவே போல் அமைந்ததுதான்  குறு  >குறுஸ் >கு ரு ஸ் என்பதும். உடல் கு றுகுவ தைக் காட்டும் . ஸ் என்ப தை விகு தி யாய்க்  கொள்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின் 

பகிர்வுரிமை வழங்கப்படுகிறது.




சனி, 10 மே, 2025

தொந்தரவு முடிந்து நிம்மதி - சொல்லமைப்பு

 தொந்தரவு என்பது ஒரு திரிபுச் சொல். சிலவேளைகளில் எது உங்களைத் தொந்தரவு செய்கிறது என்று வெளிப்படையாகத் தெரிவதில்லை. முன் சென்மத்தில் அல்லது பிறவியில் நடைபெற்று முடிந்த தீவினைப் பயன்கள் மீண்டு வந்து தொந்தரவு செய்வதாக இருக்கலாம். எதனால் தொந்தரவு என்று கடுமையாகச் சிந்திப்பதானால் ஏதும் பயன் விளைந்துவிடாது.  காரணம் கருத்தில் கோளாறு என்பதன்று, எதனாலென்றாலும் வருவது வந்துகொண்டுதான் இருக்கும். இனி அடுத்த சென்மத்தில் இவ்வாறு நிகழாமல் பார்த்துக்கொள்ள முனையலாமே தவிர பண்டைப் பயன்களை மாற்றி அமைக்கும் திறன் குறைவுதான். காலத்தைப் பின்னோக்கித் தள்ள இயல்வதில்லை. நீங்கள் எதை நம்புகிறீர்கள் என்பதைப் பொறுத்து எதுவும் விளைவதில்லை. நீங்கள் எதை நம்பினாலும் நம்பாவிட்டாலும்  நடப்பவை நடக்கும்.


தொல் என்றால் பழையவை. தரவு என்றால் தருதல், அதனால் மீண்டும் வருதல், அல்லது அலையடித்தல்.  தொ+ தரவு >  தொந்தரவு.

நிம்மதி என்பது,  நில் > நி,  நின்று போவது. மன்னுதல் என்பது நிலைகொள்ளுதல்.  மன்னுவதால் நின்று போனவை மீண்டும் தொடங்காமல் இருத்தல்.  திரும்பாமை என்பதற்கு தி என்று போட்டால்  நிம்மதி என்ற சொல் வந்துவிடும். இந்தச் சொல்லும் வாக்கியங்களி லிருந்து குறுகி அமைந்த சொல். நின்று போனவை மன்னுதலும் மறுபடி திரும்பாமையுமும் ஆகும்.

வாக்கியங்களிலிருந்து குறுக்கி அமைக்கப்பட்ட சொல் நிம்மதி,  நில் என்பதில் லகர ஒற்று மறைந்து நி என்று நின்றால் அது கடைக்குறை என்று இலக்கணம் சொல்லும். இதனுடன் மன்னுதல், திரும்பாமை முதலியன வந்து  நிம்மதி என்ற சொல் ஆகிறது.

சொற்கள் பல மனிதன் உருவாக்கியவை. அந்த அறிவினை மனிதனுக்குக் கடவுள் கொடுத்துவிட்ட காரணத்தால் கடவுள் பின்னணியில் இருந்துள்ளார்.  அவனன்றி அணுவும் அசையாது என்பதால் அவ்வாறு எடுத்துக்கொள்வதற்குக் காரணம் உள்ளது. நீர் எதை நம்புவதாலும் நம்பாமையினாலும் எதுவும் உலகில் மாறிவிடாது. 

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

உங்கள் அன்பான கவனத்திற்கு


YOUR ATTENTION PLEASE


If you enter compose mode please do not make changes.


You may share this post with others through any social media. Copyright is waived for this post.. 


நீங்கள் எழுதும் பயன்முறையில் நுழைந்தால், தயவுசெய்து மாற்றங்களைச் செய்ய வேண்டாம். 


இந்த இடுகையை எந்தச் சமூக ஊடகங்கள் மூலமாகவும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்த இடுகைக்குப் பகிர்வுரிமை  அளிக்கப்படுகிறது.



வியாழன், 8 மே, 2025

அனுக்கிரகம் என்பதென்ன? தமிழா? தெரிந்துகொள்ளுங்கள்.

 பற்றனின் அல்லது பக்தனின் ( பத்தனின்)  அன்புக்காக அணுகிவந்து அகத்தில் இருப்பவன் தான்  இறைவன்.  அவன் இவ்வாறு அன்பு காட்டி அருள் கூட்டிய கதைகள் நாட்டில் பல வுண்டு என்பது நீங்கள் அறிந்தது.\

இதிலுள்ள தமிழ்ச் சொற்களின் ஓட்டத்திலே நாம் சென்று ஒட்டி உணர்ந்துகொள்ளுவோம்.

அன்புக்கு:

இந்தச் சொல்லில் ( அன்பு)   பு என்பது விகுதி.  விகுதி வேண்டாம் என்று விட்டுவிட்டால்,  அன்+( ப்) உ+ க்கு,  இவை சேர்க்க:  அனுக்கு என்றாகும்.

இரு என்பதை இணைக்க:

அனுக்கிரு  என்று வந்துவிடும்.

எங்கே கடவுள் வந்து இருப்பான் என்றால் அகத்தில் இருப்பான்.  ஆகவே

அனுக்கு + இரு+ அகம் >  அனுக்கிரகம் என்று வந்துவிடும்.  இரு என்பதன் இறுதி உகரம் நீங்கிற்று.

அனுக்கிரகம் என்பது சமஸ்கிருதம் என்னலாம்.  அதுவும் இந்திய மொழிதான்,  தமிழர்களாலும் வளர்க்கப்பட்ட மொழிதான்.  இராச இராசன் முதலிய பேரரசர்கள் தென் கிழக்காசியா முழுவதும் அதைப் பரப்பினார்கள். தமிழர்கள் அதில் ஒட்டும் உறவும் இல்லை என்றால் ஏன அவ்வளவு சிரமம் மேற்கொள்ளவேண்டும்? வேறு வேலை இல்லாமலா?

சமஸ்கிருதம் என்பது சம கதம் அல்லது சங்கதம் என்றும் பெயர் பெறுவதுண்டு.  கதம் என்றால் ஒலி :  கத்து> கது > கதம்/  ஒலி.  தமிழுக்குச் சமமான ஒலியமைப்பை உடைய  மொழி சமஸ்கிருதம் ஆகும்.  இதை வெள்ளைக்காரன் வேறு பொருள் சொல்லி மடக்கினான். வங்காள அறிஞர் எஸ் கே சட்டர்ஜீ யின் மொழி ஆய்வினையும் படித்து அறிந்துகொள்ளுங்கள். தென்மொழிகளின் ஒலியமைப்பை உடையது சமஸ்கிருதம்.

அன்புக்காக அகத்தில் வந்து இருப்பவன் தான் இறைவன் என்பதை இந்தச் சொல்  ( அனுக்கிரகம்) என்பது  தெளிவாகக் காட்டுகிறது.

சமஸ்கிருதம் இந்தோ ஐரோப்பியம் என்றால் சொல் ஏன் இப்ப்டி அமைகிறது?

அன்பு  என்ற இனிமையான சொல்,   அண், அன் என இருமடியாகத் திரியும்.  அணுக்கம்,  அணு முதலிய சொற்கள் அண் என்னும் அடியில் தோன்றின.  அன்பு, அனுக்கிரகம் முதலியவை அன் என்னும் அடியில் வருவன ஆகும்.  இன்னும் பல உள்ளன. நான் இரண்டு எடுத்துக்காட்டுவதான் இரண்டுதாம் உள் என்று எண்ணிவிடலாகாது.. அனுசரணை என்பது அன் அடியில் தோன்றிற்று என் அறிக.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.

YOUR ATTENTION PLEASE

If you enter compose mode please do not make changes.

You may  share this post with others through any social media. Copyright is waived for this post.. 

நீங்கள் எழுதும் பயன்முறையில் நுழைந்தால், தயவுசெய்து மாற்றங்களைச் செய்ய வேண்டாம். 

இந்த இடுகையை எந்தச் சமூக ஊடகங்கள் மூலமாகவும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்த இடுகைக்கான பதிப்புரிமை விலக்கு அளிக்கப்படுகிறது.




புதன், 7 மே, 2025

விக்கிரமா

 இன்று விக்கிரம என்ற சங்கதச் சொல்லை அறிந்துகொள்வோம். 

சங்கதம் என்பது  சமஸ்கிருதம் என்பதற்கு மற்றொரு பெயர். இம்மொழிக்குப்   பல பெயர்கள் உள்ளன. சந்தாசா என்றோர்  "அழைப்பும்" உண்டு. இது சந்த அசைவு என்ற தொடரின் மருவுதலே.

இனி  விக்கிரம என்ற என்பதைக் கவனிப்போம்.

இது வில் + கு+ இரு +அ+அமை +அ என்பவற்றின்  சேர்க்கையும் திரிபும்தாம். வில்லுக்குப் பெரியோனாய் அமை ந்தவன்  என்பது பொருளாம். வில் கு > விற்கு என்று தமிழிலும் விக்கு என்று அயலிலும் வரும். இரு என்றால் பெரிய என்பது. இரு என்பது எண்ணிக்கை என்றும் கொள்ளல் தகும். இருமடங்கு என்னில் அதுவும் பெருமைக்  குறிப்பே.

வில்லிற் பெரியோன் எனில் வீரன் என்பதன் பொருட்டு.  பெண்ணுக்கும் அமையும்.

விக்கிரம என்ற சொல் தமிழ் மூலத்தது. இது மனிதப் பெயர்களிலும் பயின்று வழங்கும் .

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பிறருடன் பகிர்க.



செவ்வாய், 6 மே, 2025

உத்வேகம் என்ற சமஸ்கிருதமும் அதற்குரிய மூலச்சொல்லும்.

 இன்று உத்வேகம் என்ற சமஸ்கிருதச் சொல்லையும் அதன் தமிழ் மூலத்தையும் காண்போம்.

சுட்டடிச் சொல்வளர்ச்சியில்  அ , இ , உ  என்ற மூன்று சுட்டுகள் இடம்பெறுகின்றன.  இவற்றுள் அ ( அகரம் )  மற்றும் இ  (இகரம் )  இரண்டும் இந்நாள் வரையில் தொடர்ந்து வாழ்ந்துள்ளன.  ஆனால் உகரம் என்பது பல்லாயிரம் சொற்களைப் படைத்துவிட்ட பின் வழக்கொழிந்து அல்லது குன்றிவிட்டது  உத்வேகம் என்ற சொல் இந்த உகரத்தைச் சார்ந்து எழுந்தது ஆகும். இதன் முழுமை யாதெனின் உது வேகம்  என்பதுதான்.   இது அது வேகம் என்றும் இது வேகம் என்றும் வருமாறு போல உண்டான பயன்பாடுதான்.  உது வேகம் என்றால் முன்னுள்ள வேகம் என்பதுதான்.  மனிதனின்  எண்ணத்தில் செயலில் முன்னே எழுநிலையாக நின்று அவனை வழிப்படுத்துவது என்று பொருள் பெறுகிறது/  இந்தப் பொருள் சுட்டடிக் கருத்து அடிப்படையில் எழுந்து வேறு பயன்பாடுகளால் மங்கி விடாமல் உத்வேகம் என்ற சொல்லிலும் இன்றும் காணப்படுவதும் பயன் கொள்வதும் ஆகும்.

உதுவேகம் என்பது சமஸ்கிருதத்தில் உத் வேகம் ஆகிறது.  இதில் து என்பதில் உள்ள உகரம் கெட்டது அல்லது விலக்குண்டது என்பதுதவிர  வேறு மயக்கம் யாதும் இலது கண்டுகொள்க.

தமிழ் முறைப்படி காணப்படும் சொற்கள் சமஸ்கிருதத்தில் இவ்வாறு குறுக்கமுற்று வழங்குவது அம்மொழிக்குரிய இயல்பு  ஆகும்.  

இன்று இதைப் ப்யன்படுத்த வேண்டின் உத்துவேகம் என்று விரித்துப் பயன்படுத்தலாம்.  ஆனால் அதற்கீடான தென்மொழிச் சொற்கள்  தடையின்ரிக் கிடைப்பதால் இவ்வாறு விரித்துப் பயன்படுத்துதன் தேவையானல் செய்துகொள்ளலாம்.  இல்லை என்றால் வேறு தனித்தமிழ்ச் சொற்களைப்  பயன்படுத்திக் கொள்க.

வேகம் என்பது வேகுதல் என்பதன் தொடர்பில் எழுந்ததே.  வேகுதலால் அல்லது வேக்காளத்தால்  பொருள்கள் விரைவில் அழிந்து அல்லது மாறிவிடுகின்றன.  இவ்வேக்காளம் வெப்ப மிகுதியால் ஏற்படும் அழிவு. விரைந்து அழிதற்குக் காரணமாவதால் வேகு+ அம் > வேகம் என்ற சொல்லுக்கு விரைவுப் பொருள் வழக்கில் உண்டானதே ஆகும். 

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்


YOUR ATTENTION PLEASE

If you enter compose mode please do not make changes.

You may  share this post with others through any social media. Copyright is waived for this post.. 

நீங்கள் எழுதும் பயன்முறையில் நுழைந்தால், தயவுசெய்து மாற்றங்களைச் செய்ய வேண்டாம். 

இந்த இடுகையை எந்தச் சமூக ஊடகங்கள் மூலமாகவும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்த இடுகைக்கான பதிப்புரிமை விலக்கு அளிக்கப்படுகிறது.




திங்கள், 5 மே, 2025

பள்ளத்தாக்கு

 இன்று பள்ளத்தாக்கு என்ற சொல்லைப் பார்ப்போம்.

பள்ளம் என்பதில் எந்தக் கவனத்திற்குரிய திரிபும்  இல்லை. இதன் பொருள் நிலத்தின் உள்ளிறங்கிய பகுதி என்பதே. இது இயல்பான பொருள்.

தாக்கு என்பதில் கருதற்குரிய திரிபு உள்ளது. தாக்கு என்பது தாழ் > தாழ்க்கு > தாக்கு என்று அமைகிறது.

 இதில் வரும் தாக்கு,  வலி வருமாறு மோதுதல் என்று பொருள் படும் சொல் அன்று. மேற்காட்டியவாறு திரிந்த இன்னொரு சொல் ஆகும். இதில் வரும் திரிபும் தனிததன்மை உடை யது என்று கருதலாம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்ந்து  பயில்க.



வெள்ளி, 2 மே, 2025

விருத்தி, விருத்தியுரை

விருத்தி என்னும் சொல்லின் பொருளும் தோற்றமும் காண்போம்.

இதன் அடிச்சொல் விர் என்பது. விரிதல் , விரித்தல், விறைத்தல், விருத்தம் என்ற பல பத ங்கட்கு  விர் என்பது அடிச்சொல் ஆகும். வேகம், விரிவு, க ட்டியாகி நீட்சியும் பெறு தல்  எனப் பல நுட்ப வேறுபாடுகளைக் காட்டவல்லது இவ்வடியாகும்.இசையுடன் பாடுகையில் சற்று நீட்டிப் பாடும் வகையினது எனக் குறிக்க இப்பெயர் எழுந்தது என்க. விறைத்தலில் இடவிரிவும் கொள்வதும் கூடும் ஆதலின் விரி என்பதனுடன் இஃது ஒற்றுமைகொள்ளுதலும் உளதாகும்.

விருத்தப் பாக்கள் தமிழிற் பல வுள கோ . ஆதலின் இச்சொல் தமிழா சமஸ்கிருதமா வெனில் thamizhenREe தமிழே  என்று கோடலும் சரியாகும்.

விருத்தி என்பது விரித்தி என்பதன் திரிபு எனலும் ஒக்கும் 

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்க தமிழ் பரப்புக.


ப்





வியாழன், 1 மே, 2025

வருஷம் வருடம் என்பதற்கு இன்னொரு முடிவு

 வருடம் என்ற சொல்லுக்கு பல்வேறு சொல்லமைப்புக்களைக் கூறலாம், வருஷ என்பதை மழைவருங்காலத்தை முன்னிட்டு எழுந்த சொல் என்றும் கூறுவதுண்டு.

இந்தச் சொல் தமிழிலும் வழங்குவதால் தமிழ் மூலங்களைக் கொண்டு இதற்குச் சொல்லமைப்பைக் கூறுதலும் பொருத்தமே.

தமிழ் எண்ணிக்கையின் படி 12  மாதங்கள் கொண்டது ஒரு வருடம் ஆகும். ஒரு வருடத்தில் வரும் மாதங்களை அவை வரவர அவற்றைச்  மேல்சட்டை போடுவதுபோல் உடுத்துக்கொண்டு மாதம் முடிந்தது கழட்டி விடும் மாதமுறை உள்ளது.

வரு + உடு + அம் >  வருடம் ஆகிறது,   உடுப்பதைக் கழட்டி விடுவதும் இயல்பானதே. மாதங்கள் அப்படியே நகர்ந்து மறைந்து இன்னொரு வருடத்தில் மீண்டும் வரும்..  ஆகவே உடு ( உடுத்தல்) இங்கு நன்கு பயன்பெற்றது என்று கூறலாம்,

அறிக மகிழ்க.

மெய்ப்பு  பின்னர்.

உங்கள் அன்பான கவனத்திற்கு


YOUR ATTENTION PLEASE


If you enter compose mode please do not make changes.


You may share this post with others through any social media. Copyright is waived for this post.. 


நீங்கள் எழுதும் பயன்முறையில் நுழைந்தால், தயவுசெய்து மாற்றங்களைச் செய்ய வேண்டாம். 


இந்த இடுகையை எந்தச் சமூக ஊடகங்கள் மூலமாகவும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்த இடுகைக்கான பதிப்புரிமை விலக்கு அளிக்கப்படுகிறது.



புதன், 30 ஏப்ரல், 2025

யாசித்தல் என்னும் சொல்.

 யாசித்தல் என்னும் வினைச்சொல் தமிழில் வழங்கியுள்ளது. யாசித்தல் என்றால் பிச்சையாகப் பெறுதல்.

மிக்கப் பழங்காலத்தில் கடைகள் பல இருக்கவில்லை.  பிச்சையாகப் பணத்தைப் பெற்றுக் கடையில் ஏதும் சாப்பிட வழியில்லை என்று தெரிகிறது. யார் வீட்டிலாவது பிச்சைப் பாத்திரத்துடன் நின்று இரந்து உண்பதுதான் இல்லார்க்கு வழியாக இருந்தது. நாம் அப்போது இல்லாவிட்டாலும்,  நுழைபுலத்தின் மூலம் அறிந்துகொள்கிறோம்.

ஆசு என்ற சொல் தமிழில் உள்ளது.  இதற்குப் பற்றுக்கோடு என்று தமிழில் சொல்வர்.  ஒன்றுமில்லாதவர் யாரையாவது பின் தொடர்ந்து "பற்றிக்கொள்ளவேப்ட்ய்ம்".  அதுதான் பற்றுக்கோடு.  ஒருவனைச் பற்றிச்சென்று எதையாவது இரந்து பெறவ்ண்டும்.

ஆசு என்பது யாசு > யாசி என்று வினைச்சொல்லாகும்.  ஆனை என்பது யானை என்று வந்தது போலுமே இது. இன்னும் இதுபோல் திரிந்த சொற்களை எம் பழைய இடுகைகளைப் படித்துப் பட்டியலிட்டுக் கொள்ளவும்..\

இகரம் வந்து  முடிந்த சொல்லான யாசி என்பதில்  இவ் இகரம் வினையாக்க விகுதியாகும்.  ஆசு > யாசு>  யாசு+ இ > யாசி > யாசித்தல்.

ஒருவனைப் பற்றிச் சென்று அவனிடமிருந்து வேண்டிய ஒன்றைப் பெறுதல் என்பது பொருள். இது தமிழ்ச்சொல்லிலிருந்து திரிபு.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

உங்கள் அன்பான கவனத்திற்கு

YOUR ATTENTION PLEASE

If you enter compose mode please do not make changes.

You may share this post with others through any social media. Copyright is waived for this post.. 

நீங்கள் எழுதும் பயன்முறையில் நுழைந்தால், தயவுசெய்து மாற்றங்களைச் செய்ய வேண்டாம். 

இந்த இடுகையை எந்தச் சமூக ஊடகங்கள் மூலமாகவும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்த இடுகைக்கான பதிப்புரிமை விலக்கு அளிக்கப்படுகிறது.


ஞாயிறு, 27 ஏப்ரல், 2025

அயோக்கியன் சொல்

 இன்று அயோக்கியன் என்னும் சொல்லைக் காண்போம்.

அயோக்கியன் என்ற சொன் மக்களிடை  அதிகமாக வழங்கும் சொல்  என்னலாம். ஒருவனைத் திட்டும்போது  அவனை  அயோக்கியன் என்று சொல்வதுண்டு.  இதன் பொருள் நேர்மை அற்றவன் என்பது தான், அயோக்கியத் தனம் என்பதும்  பலவகை நேர்மையற்ற செயல்களையும் குறிக்கும் பொதுப்பொருண்மை வாய்ந்த சொல்லாகும்.  தனம் என்பது இங்கு தன்மை என்ற பொருளைத் தருவது.  தன்மை என்ற சொல் தன் என்ற அடியில் தோன்றியது போலவே தனம் என்ற சொல்லும் இங்கு தன்மை என்ர பொருளில்தான் வழங்குகின்றது. ஒரு மனிதன் தனக்கென்று  சேர்த்துவைத்துள்ள பொருட்களுக்கும்  "தனம்"  என்ற சொல் வருகிறது. அயோக்கியத் தனம் என்ற வழக்கில் வரும் தன்ம் என்பது சேர்த்துவைத்த பொருளினைக் குறிக்கவில்லை.  

இதன் பொருளை அறிய யோக்கியம் என்ற சொல்லினின்று தொடங்கவேண்டும்.  இது நீங்கள் அறிந்ததுதான்.  யோக்கியம் என்ற சொல்  ஓ என்று தொடங்கும் ஓங்கு என்பதிலிருந்து  வருகிறது.  ஓங்கு> ஓக்கு> ஓக்கிய,  என்ற சொல்லில் வரும்  மக்களிடைப் பாராட்டினைப் பெறத் தக்க செயல்தன்மையைக் குறிக்கிறது. ஓங்குதலாவது  உயர்வாகுவது. மேனிலையை அடைவது.

ஓங்கு என்பது இயம்  என்ற பின்னொட்டுச் சேர்ந்த பிறகு  ஓக்கிய என்று வருவது வலித்தல் ஆகும்.   அதாவது வல்லெழுத்துப் பெற்று அமைவது. இந்தச் சொல் பழைய தமிழ் அகரவரிசைகளில் ஓக்கியம் என்றெ இடம்பெற்றிருந்தது.  இவ்வடிவ்மே மூலம்  ஆகும்.

இந்தச் சொல் எதிர்மறையாக உள்ளபடியால்,  சமஸ்கிருதம் என்பீரோ.  அல் என்ற அல்லாமை  குறிக்கும் சொல்தான்,  தன் இறுதி எழுத்தை இழந்து  அ என்று வந்தது.  ஆகவே தமிழிலக்கணப் படி இது  கடைக்குறைதான்.  யோக்கியன் அல்லாதவன் என்பதையே முன்னொட்டு மூலம் அயோக்கியன் என்றாக்கினர்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

If u enter compose mode please do not make changes

You may share this post with others through any social media. Copyright is waived for this post.. 

நீங்கள் எழுதும் பயன்முறையில் நுழைந்தால், தயவுசெய்து மாற்றங்களைச் செய்ய வேண்டாம். 

இந்த இடுகையை எந்தச் சமூக ஊடகங்கள் மூலமாகவும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்த இடுகைக்கான பதிப்புரிமை விலக்கு அளிக்கப்படுகிறது.



வியாழன், 24 ஏப்ரல், 2025

அயலாருடன் ஒத்துப் போதல்

 அயலாருடன் ஒக்க இருப்பவன் அயிர்ப்புக்கு ( சந்தேகத்துக்கு) உரியவனாய்  அறியப் படுதலும் உண்டு.  அதிலும் அயலார் எதிரியாயும் இருந்துவிட்டால் இது உண்மையாகவே ஆகிவிடும் எனலாம்.

அயல் + ஓக்கு+    இ+அன்

(இங்கு அயல் என்பதில் உள்ள லகர ஒ ற்று  வீழ்கிறது.   அய என்றாகி வரு பகவுடன்  இணையும். ஒ க் கு ( த ல் )   என்ற  வினையில் முதனிலை நீ.ண்டு  ஓ க் கு  என்றாகும்.  இயன் - இங்கு உள்ளவன்.

அயலாருடன் ஒத்தவனாய் இங்கு நடப்பவன் என்று இதற்குப் பொருள் உரைக்க. உள்  ஊருக்கு  ஒத்துப் போகாது செல்பவன்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்க.




 

ஞாயிறு, 20 ஏப்ரல், 2025

சரண்யா - யா இறுதி

 பெண் மக்கள் பெயர்களில் யா என்னும் இறுதி எவ்வாறு  ஏற்படுகிறது என்று அறிந்து கொள்வோம்.

சரண் என்ற ஆண்மகனின் தாய் அல்லது  "ஆயா" வை சரண் ஆயா என்று அழைப்பீர்கள். இப்படிச் செய்ய மனிதற்கு முயற்சி தேவைப் படுகிறது. இத்தகு கூடுதல் முயற்சிகளைக் குறைத்துக் கொண்டு சொல்ல வருவதை விரைவில் முடிக்க வேண்டியது அன்றாட வாழ்க்கையில்  முதன்மை யாம். செய்யத் தகுந்தவற்றைச் செய்யக் காலம் தாழ்த்தல் கூடாது. அத னால் சொற் சுருக்கம் தேவை யானதே. சொற்கள் சில சுருக்கத்தில் அழகுறுகின்றன.

சரண் ஆயா என்பது சரண்யா என்று சுருங்குகின்றது.

இதுவேபோல் சுகன்யா என்பதும் சுருக்கமே.

நீட்டங்கள் இல்லாமல் சுருக்கங்களே மிக்கு நின்ற மொழிகளும் உலகில் உண்டென்று கொள்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

பகிர்ந்துகொள்க.





 செய்ய




 அழைக்கும் அழைக்க  முயற்சி தேவைப் படும். இதைத் தெளிவுய்யன்ப

வெள்ளி, 18 ஏப்ரல், 2025

திராவிடம்

 இந்துச் சொல்லைப் பற்றிச் சிந்தித்த காலை முன்னே நாம் சில கூறி இருக்கிறோம். பஞ்ச திராவிடம் பற்றியும் சில சொன்னோம்.

இவை இருக்கட்டும்.

ப ஞ் ச. திராவிடமும் பற்றி யாரும் அக்கறைப் பட வில்லை.

Conic projection. என்று சொல்லப்பட்ட தென்னாட்டு  நிலப்பரப்பு  உண்மையாகவே ஒரு தி ற ப்பான  முக்கடலையும் அப்பால் ஒரு மா கடலையும் கொண்ட  புவிப் பகுதியே. திற ந்த இந்த இடம்    "தி  ற இடம"ல்லாது வேறு  என்ன ?  இடப்பெயர் இனப்பெயர் அல்ல. (அன்று)

தமிழன் வைத்த  வாய் மொழிப் பெயர் தான்.  ஒப்புக் கொள்ள  முடியவில்லை.  இதை மறைக்க முன்னரே முயற்சிகள் மேற்கொண்டிருப்பர்.  அது பலித்ததோ இல்லையோ,  அது  பிராமணர்களுக்குரிய பெயரும்  ஆனது   இப்போது அந்தச் சொல்லுக்குப்  பல சொந்தங்கள்.

திறந்த கடல் முப்புறமும் கொண்ட திறவிடம்.  திரவிடம் திராவிடம் என்று எப்படியானாலும் உண்மையை மட்டும் மறைக்கமுடியவில்லை.

இடம் என்ற இறுதிச் சொல் இன்னும் உயிரோட்டத்துடன் மிளிர்கிறது.

 அது இடப்பெயர்தான்.   சம்ஸ்கிருதம்  தமிழெல்லாம்  இந்தியத் தாயின் மொழிகள்தாம்,  

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்



If you enter compose mode please do not make changes.

You may share this post with others through any social media. Copyright is waived for this post.. 

நீங்கள் எழுதும் பயன்முறையில் நுழைந்தால், தயவுசெய்து மாற்றங்களைச் செய்ய வேண்டாம். 

இந்த இடுகையை எந்த சமூக ஊடகங்கள் மூலமாகவும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்த இடுகைக்கான பதிப்புரிமை விலக்கு அளிக்கப்படுகிறது.












புதன், 16 ஏப்ரல், 2025

புதல்வன்

 மகன், மகள், மக்கள் என்று ஒருமை (ஆண்)- ஒருமை (பெண்) -  பன்மை ( இரு பாலாரும்) என இருந்தாலும் புதல்வன்,  புதல்வி ,புதல்வர் என ஆண்பால் பெண் பால் பலர்பாலாகவே இந்த அமைவுகள் வருகின்ற -ன.  குழந்தை, பிள்ளை மதலை, மழலை முதலிய சொற்கள் ஐ விகுதி பெற்று  முடிகின்றன. பொதுப்பால் என்ற பகுப்பினை நூல்களில் காணா விட்டாலும் இவை வெவ்வேறு கூ றுபாடுகள் உடைய பொதுச்சொற்கள் தாம். இவற்றிடையே பகவொற்றுமை  ( uniformity) காணலாம். 

புதிய வரவாக வந்த குழந்தைதான் புதல் வன் அல்லது புதல்வி எனப்பட்டது. புதுமை குறிக்க புது என்ற சொல் இருப்பதைக் கண்டுகொள்க.  

அல் எனல் அது  இடம் எனலே.

இன்னொரு முறையில் கூறுவதானால் இல் எ ன்பது இந்த இடம்,  அல் என்பது அந்த இடம். இடம் இது என்பது இல். இடம் அது என்பது  அல். இடம் முன் என்பது உல்.

ஆகவே இல் என்பது இது என்று சுருக்கிக் கூ  றலாம். இல் - வீடு மற்  றொரு  பொருள் 

புதல்வன் என்ற சொல்லை புது + அல் +வு + அன் என்று பிரிக்க வேண்டும். புது அல் வு இ என்பதும் இதனாலே பெறப்படும். புதல்வர் - அர் விகுதி. இதன்  அடி "புது" என்பதறிந்தீர்.

புகு என்னும் சொல்லும் புது என்பதுடன் தொடர்புடையதே என்க. புதியன புகுதல் என்னும் வழக்கினையும் காண்க

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

பகிர்ந்துகொள்க. வணக்கம்.


வெள்ளி, 11 ஏப்ரல், 2025

சொல்லாக்கத்தில் கருத்தொற்றுமை - வயது, அகவை - Tamil, Sanskrit

தமிழிலும் சமஸ்கிருதத்திலும் உள்ள ஆக்கப்பட்ட சொற்களில் உருவாக்கல் நிலையில் காணப்படும் கருத்தொற்றுமைகளை ஆங்காங்கு சுட்டிக்காட்டியுள்ளோம்.  சிலவேளைகளில்  வெளிப்படையாகக் காரணம் கூறவில்லை. வேறுசில இடங்களில் கூறியுள்ளோம்.  இப்போது இன்னொரு முறை இங்குக் கூறுகிறோம்.  சொல்லாக்கத்தில் கருத்தொற்றுமை என்று ஒரு நூலே எழுதலாம்.  எழுதிவைத்ததைப் படித்து அறிவு பெறுதலோ அல்லது எதிர்த்து நிற்றலோ  பலரும் ஈடுபடாத ஒரு துறையாகும். சில கட்டங்களிலும் பொருட்களிலும் எதிர்த்து நிற்றல் முதலியவை,  தாமே உருவாகி வந்தவை அல்ல. 

பரப்புடரைகளினால்  கவரப்பட்டவர்கள்  உள்ளுந்துலால  மேற்கொண்ட நடவடிக்கைகளே  ஆகும்.

அகப்பட்டுக்கொள்வது  அகவை.  வயப்பட்டு மூப்பதும் மாய்வதும் வயது.   அகவை என்பதில் வை என்பதும் விகுதி.  அகம் என்பது  உள்ளமைவு குறிக்கும் பகுதி  அல்லது பகவு ஆகும். இந்த இரு கருத்துக்களிலும் ஒற்றுமை காணப்படுகிறேதே! இவ்வாறு ஒன்றிரண்டு ஒன்ற்றுமைகள் மட்டும் இருந்திருந்தால் இரண்டு மொழிகளும் ஒரு களத்தில் தோன்றியவை என்று கூறமுடியாது.  ஆனால் பலகாலும் இவ்வொறறுமை மேலெழுந்து வருகிறது என்றால் இரண்டு மொழிகளும் ஒரு களத்தினரால் உருவாக்கப்பட்டவை என்று முடிபு கொள்ளுதல் எளிதானதே.

நீங்கள் இங்குக் கூறப்பட்ட கருத்துக்களைத் தொகுத்தாக்கி, இதை ( ஒற்றுமைக் காட்சியை )  வெளிக்கொண்டு வந்து மக்கள் பயனுறச் செய்யலாம்.

வயப்பட்டவன் அவன் வயப்பட்ட இடத்தில் அகப்பட்டுக் கொள்கிறான்.  வயது அப்படிப்பட்டதுதான்.  காலக் கடப்பில் நாம் மாட்டிக்கொள்கிறோம்.  வயதை வென்றவனும்  அகவையை வென்றவனும் எவனும் உலகில் இல்லை. எல்லோரும் நேரம் வரும்போது காலமாகி மறைந்துவிடுகிறார்கள்.

அகவையும் வயதும் எல்லா உயிரற்றவைக்கும் உயிருள்ளவைக்கும் பொதுவான கருத்துக்களன் ஆகும்

நம் முடிபு  தமிழும் சமஸ்கிருதமும் ஒரு களத்தில் தோன்றியவை ஆகும்.

இதனை ஒரு மொழிநூற் கருத்தாகவும் சொன்னூல் ஆய்வாகவும் முன் வைக்கிறோம்.

அறிக மகி

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.

If you enter compose mode please do not make changes.

You may share this post with others through any social media. Copyright is waived for this post.. 

நீங்கள் எழுதும் பயன்முறையில் நுழைந்தால், தயவுசெய்து மாற்றங்களைச் செய்ய வேண்டாம். 

இந்த இடுகையை எந்தச் சமூக ஊடகங்கள் மூலமாகவும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்த இடுகைக்கான பதிப்புரிமை விலக்கு அளிக்கப்படுகிறது.