புதன், 31 டிசம்பர், 2025

புத்தாண்டே வருக வருக.

புரண்டுவரும் செல்வங்கள் பொன்னும் மணியும்

இரண்டா  யிரத்திருபத் தாறில் ----- திரண்டுவரும்

இம்மா நிலம்படைத்த    இன்தெய்வம் ஆசிதர

நன்மா நிலம்செழிக்கும்  நாள்.


இது புத்தாண்டை வரவேற்கும்  நேரிசை வெண்பா .

பொன்னும் மணியும் புரண்டுவரும் செல்வங்களும்  இந்த 26-ம்  ஆண்டில்

செறிந்து வரும் என்று இப்பாடல் வாழ்த்துகிறது.  இதற்கான  ஆசிகளை  

கடவுள் கொடுப்பார். குற்றம் முதலிய மிக்கில்லாத நாடுகள் தமக்கு இந்த 

புத்தாண்டு நாள் வளம் தருவதாகும். புத்தாண்டு நாளையும் சிறப்பித்தவாறு. 


சிவமாலா.

கருத்துகள் இல்லை: