புரண்டுவரும் செல்வங்கள் பொன்னும் மணியும்
இரண்டா யிரத்திருபத் தாறில் ----- திரண்டுவரும்
இம்மா நிலம்படைத்த இன்தெய்வம் ஆசிதர
நன்மா நிலம்செழிக்கும் நாள்.
இது புத்தாண்டை வரவேற்கும் நேரிசை வெண்பா .
பொன்னும் மணியும் புரண்டுவரும் செல்வங்களும் இந்த 26-ம் ஆண்டில்
செறிந்து வரும் என்று இப்பாடல் வாழ்த்துகிறது. இதற்கான ஆசிகளை
கடவுள் கொடுப்பார். குற்றம் முதலிய மிக்கில்லாத நாடுகள் தமக்கு இந்த
புத்தாண்டு நாள் வளம் தருவதாகும். புத்தாண்டு நாளையும் சிறப்பித்தவாறு.
சிவமாலா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக