சனி, 6 டிசம்பர், 2025

பதாகை என்பது.

 பதாகை என்னும் சொல்லை அறிவோம்.

பதாகை என்னும் சொல்லின் அடிப்படை வினைச்சொல்  பதிதல் என்பது. பதி + ஆகு+ ஐ > பதாகை.  

விருதுக்கொடி,  பெருங்கொடி, தேர்க்கொடி முதலியனவையும் இப்பெயர் பெறும். எழுத்துகள் எழுதப்பெற்றுக் கொடியாய் வைக்கப்படுவதும் இவ்வாறு சுட்டப்பெறுகிறது. 

நாட்டியத்தில் கையினால் காட்டபெறும் ஒருவகை அபிநயமும் பதாகை என்பர், எனவே இதைப் பல்பொருள் ஒருசொல் என்னலாம்.

பதி + ஆகு + ஐ >  பதாகை.   பதி என்பதன் இகரம் விடுபாடு கண்டது, ( கெட்டது). பின், பத் + ஆகு + ஐ > பதாகை ஆயிற்று.  த்+ஆ> தா ஆகிவிடும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

பகிர்வுரிமை



கருத்துகள் இல்லை: