வயிறு என்றால் இறுதியில் வைக்கப்பட்டது என்று பொருள். முன் காலத்திலே இச்சொல் அமைந்து நெடுங்காலமாக வழங்கி வருகிறது.
வை - வைக்கப்பட்டது. இந்தப் பகவு, வ்+ ஐ என்ற ஈரெழுத்துக்களால் ஆனதாம். இங்கு வை என்பது நெடில். குறுகி வ என்று நின்றது.
இறு என்பது இறுதி என்ற பொருளது. இறுதல் என்ற வினை, விகுதி பெறாமல் பகுதி மட்டுமே பகவாக நின்றது. இறு என்றபடி.
வ+ இறு > வயிறு ஆனது. யகர ஒற்று, இரு பகவுகளையும் உடம்படுத்துகிறது, அதாவது இணைக்கின்றது.
உதரம் என்பது வயிற்றுக்கு இன்னொரு பெயர். இது உது + அரு+ அம் என்ற மூன்று பகவுகளைக் கொண்டு ஆன சொல்.
உ - என்றால் முன். து என்ற விகுதி இணைந்து உது - முன்னிருப்பது என்ற பொருளில் வரும். நீ > உன் என்ற சொல்லில் உன் என்பது முன்னிருப்பவனுக்குப் பதிற்பெயர் ( pronoun).[ in the possessive case]. இது ஊன்> உன் என்று குறுகிற்று என்று இலக்கணியர் உரைப்பர். நீ என்ற சொல், நீங்கற் பொருளது ஆகும். தன்னின் நீங்கி நிற்பவன் என்று பொருள்.'' உன்னில்'' முதுகுக்கு அருகில் இருப்பதால் '' அரு'' என்ற பகவு வந்தது. ஆகவே உன்னில் முதுகுக்கு அருகில் அமைந்தது அரிய பல உள்ளுறுப்புகளைக் கொண்டிருக்கும் இடம் என்று பொருளுரைத்தல் கூடும். இவ் வுதரம் என்ற சொல் ஒரு காலத்தில் வழக்கில் இருந்து பின் வழக்குக் குன்றியிருக்கலாம்.
'' உன் உதரத்து உதித்து எழுந்தே ஒன்று பல ஆயிடினும்'' என்ற மனோன்மணீயம் வழக்கினைக் கண்டுகொள்க. உது அரு என்னாமல் உ+ தரு என்றும் விளக்கலாம். இஃது '' முன் வைக்கப்பட்டது'' என்று பொருள்படும்.
ஆகவே ஒன்றுக்கு மேற்பட்ட அமைப்புகளை உடைய சொல் என்க.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை உடையது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக