சனி, 27 மார்ச், 2021

பங்குனி உத்திரத்தில் வேலன் வருவான்

 

பங்குனி உத்திர    மென்றால் --- நம்

பாரெங்கும்  வந்திடும்  வேல்முரு கன் தனை,

தங்கிடு வீட்டிலென் போமே ---  ஒளித்

தங்க நிறத்தட்டில் உண்டிடச் சொல்வோம்.


உறவினர்  நட்பினர் வந்து  ---- உடன்

உட்கார்ந்தும் நின்றுமே சாமிகும் பிட்டுத்

திறமுடன் செய்யலங் காரம் --- கண்டு

தீராத பற்றொடும் சேர்ந்தாடி உய்வார்!  


வள்ளி   யுடன்வடி  வேலன் ---  வர

வாசலி லும்வரை ஓவியக் கோலம்

சொல்லவும் கூடுமோ சூழல் --- எல்லாம்

சுந்தர மாக்கிடும் உந்தும் மனத்தில்.


பங்குனிப் பங்கினைச் செய்வோம் ---  பால்

பொங்கிடும் மாலைகள் எங்கணும் பூக்கள்

தங்கி மணந்தரும் வாழ்வும் ----  அணி

மங்கலம் மாட்சி மனைமுழு தோங்கும்.


படம் : உதவியவர்  திரு கருணாநிதி ஜீ.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்








கருத்துகள் இல்லை: