ஞாயிறு, 21 மார்ச், 2021

தென்னாடு என்றாலே சண்டைக்களம்.

 தென்னாட்டுப் போர்க்களங்கள் என்றொரு நூலை, பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார் எழுதினார். தனித்தனிச் செய்யுள்களை வாசிக்குங்கால் தென்னாட்டில் பலப்பல போர்கள் நடைபெற்றுள்ளன என்பதை அறிந்துகொள்ள முடிந்தாலும், இந்த நூலை வாசிக்கும்போதுதான் போரே ஓர் இணையற்ற ஈடுபாடாகத் தமிழ் மன்னர்கள் இருந்திருக்கிறார்கள் என்பது நம்முன் ஒரு திரைப்படம்போல் கொண்டுநிறுத்தப்படுகிறது என்னலாம். போரைத் தொழிலென்றே கூறுவதுமுண்டு.

வாழ்க்கை இவ்வாறு ஓடியதால்,  தமிழர்களிடை மிகப்பெரிய ஒற்றுமைக்கேடு மலைபோல் வளர்ந்திருந்தது என்பது தெளிவாகின்றது.

போர்மறவரிடைப் பல தரநிலைகளும் படிநிலைகளும் நிலவியபடியால் மொத்தமாகத் தமிழரிடைப் பெரியவர்,  அதற்குக் கீழுள்ளவர்,  அதற்கும் கீழுள்ளவர் என்று ஏற்றத் தாழ்வுகள் தோன்றி  அவை போர் முடிந்துபோனபின் முடிந்துவிடாமல் இன்றளவும் தொடர்ந்தன. இவற்றுள் பல சாதிகளாக மாறிவிட்டன.

தென்னிலம் என்ற சொல்லே தமிழில் "போர்க்களம்" என்ற பொருளைத் தருகிறது.   பல ஊர்கள் "கோட்டைகள்" என்ற அடைமொழி பெற்றுள்ளன. எடுத்துக்காட்டு:  புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை,  கள்ளிக்கோட்டை,  கந்தருவகோட்டை, பாளையங்கோட்டை  என்பன காண்க.  இவையெல்லாம் வீரத்தை ஒருபுறம் முன்வைத்தபோதும்  விரிசல்களையும் விரித்துவைத்தன.

தென்னிலம் போர்க்களம் ஆதலால் போர்கள் பெருந்தொழில்கள் ஆயின.

அறிக மகிழ்க.



கருத்துகள் இல்லை: