ஞாயிறு, 10 மே, 2020

ஆந்திரா ஆலை ஆவிக்கசிவு


இன்னிசை வெண்பா:

ஆலைக்குள் நின்றகன்ற ஆவிநஞ்- சைப்பரப்பி
ஓலைக் குடிலுக்குள் உள்ளாரைக் கொன்றவர்தாம்
தீவிர வாதியரோ ஏவும் எதிர்தரப்போ
யாவர்? அறிந்தார் இலர்.

இன்னிசை வெண்பா

இருந்தார் நடந்தார் இடங்களில் நின்றார்
சரிந்தார்கள் ஆங்காங்கு சாவொத்த தன்மை
பெருந்துயரே இன்னோர் இழந்தார்  உயிரைப்
பரந்துகொல் துன்பத் தொடர்.

நேரிசை வெண்பா:

அண்டைநாட்  டாரும்  அடைவிப்பார் இத்துன்பம்
உண்டநன்றி இல்லாரும் உள்ளாரே ---- மண்டையிடி
காவல் துறையோர்க்கே காத்திருப்போம் செய்திக்கு
சேவல் பலகூம் வரை.


அரும்பதவுரை:

ஆவிநஞ்சு  -  நச்சு ஆவி. ( கியாஸ்)
அடைவிப்பார் - உண்டாக்குவார்
மண்டையிடி -  சான்றுகளுடன் வழக்கை மெய்ப்பிக்கும் தலைப்பாரம் அல்லது பொறுப்பு.  ( ஐகாரக் குறுக்கம்)
கூம் - கூவும். ( தொகுத்தல் விகாரம்.)

இது ஆந்திராவில் நடந்த ஆலை ஆவிக்கசிவு பற்றிப்
பாடியது.

இவற்றை அலகிட்டுத் தளைதட்டியிருந்தால்
பின்னூட்டம் இடவும். நன்றி.  தளைதட்டின்
வெண்பாவின் இனப்பாடலாகிவிடும். துறை, விருத்தம் இன்னும்.

துன்பத்திலும் பங்குகொள்வோம்.

மறுபார்வை பின்.


There was server error at the time of writing. Post options were
not generated in direct handling. Not the usual method was used
to obtain this post. Typos will be looked into later.

கருத்துகள் இல்லை: