வியாழன், 14 மே, 2020

தொல்காப்பியர் இன்னொரு பெயர் திரணமாதக்நி?

தொல்காப்பியருக்கு திரணமாதுக்கினி  என்ற ஒரு பெயரும் சொல்லப்படும்.

இவர் தம் நூலை அரங்கேற்றிய போது  பேராசானாக விளங்கிய
அதங்கோடு ஆசான்  தொல்காப்பியரை அரசவையில் தமக்குச் சமமானவராகவும்  தக்கவராகவும் ஏற்றுக்கொண்டார். அப்படி இல்லாவிட்டால் இருவரும் எப்படி ஒன்றாக அவையில் அமர்ந்து  ஒருவர் இலக்கணத்தைச் சொல்ல இன்னொருவர் கேட்பது? அரசன் தந்த வேலை ஆதலால் இருவரும் ஒத்துப்போனால்தான் காரியம் நடைபெறும்.  ஒருவர் இக்காலத்தில்போல் இணையதளத்தில் சொல்லி இன்னொருவர் வீட்டிலமர்ந்து படித்துக்கொள்வதானால் இந்த ஏற்பாடு தேவையில்லை அன்றோ?  இருவருக்கும் அரசன் தரும் சம்பளமும் தேவை. அவை பெரும்பாலும் பொன்னும் மணியுமாய் இருந்திருக்கும்.

இது நடைபெற்றது இடைச்சங்கத்தின் இறுதி என்பதே சரியான கொள்கை.


ஆசான், தொல்காப்பியரை திறனில் மாதக்க நீர் என்று போற்றிக்கொண்டாடினார்  என்று அவையில் உள்ளவர்கள் நினைத்தனர். அதுவே உண்மையும் ஆகும்.

இதிலிருந்து திறனில் மா + தக்க + நீ  என்ற பெயர் அமைந்து, பின் அயல் நாவுகளும் அறிந்து போற்றியதால் திரணமாதக்கநி என்று பேதமுற்றுச் சுருக்கம்பெற்றுப் பெயராயிற்று.

திரணமாதக்கனி என்பதும் காரணப்பெயர்தான்.

சீனி என்பது சில தமிழின மொழிகளில் ஜீனி என்று வருதல் காண்க

பழம் + நீ  = பழநி என்பதும் நீ  என்பதில் முடிந்தது  காண்க, பின் குறுகிற்று.


 அந்தக் காலத்துப் பெரும்புலவர்கள் தங்கள் இயற்பெயர்களால் அறியப்படவில்லை என்பர் ஆய்வாளர் சிலர். எடுத்துக்காட்டு:


வள்ளுவர் >  வள்ளுவக்குடி
தொல்காப்பியர் >  காப்பியக்குடி
பாணினி > பாணர் குடி  (பாண்+ இன் + இ)
வால்மிகி > வால்மிகக் குடி.  வான்மிகி என்ற வடிவமும் வழங்கும்.

இப்பெயர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பொருளிலும் வழங்கியிருக்கக்கூடும்.
அதாவது : பாணினி என்பது பாண் குடியினர் என்றும் பாட்டில் வல்லவர் என்றும் இருபொருளில் அந்தக்காலத்தில் வழங்கியிருக்கலாம். இதை அறிய வழியில்லை,

பாணினி என்ற பெயரின் அமைப்பைப் போலவே பாடினி என்ற சொல்லும் அமைதல் காண்க. எடுத்துக்காட்டு:  காக்கை-பாடினியார். பாணர்கள் தமிழ் நாட்டில் இருந்தவர்கள். பாட்டு எழுதிப்  பாடிப்  பிழைப்போர்.

பாண் இன்  இ
பாடு  இன் இ


அவர்களில் ஒருவரே சங்கதத்துக்கு  Sanskrit  இலக்கணம் வரைந்தார் .Sanskrit was then known by a different name. Does not matter here.

காப்பியக் குடியினர் பலர் புலவர்களாய் இருந்தனர். எடுத்துக்காட்டு: பல்காப்பியனார் ,  இவர்களுள் தொன்மையானவர் தொல்காப்பியனார்,

பழம் பண்டிதர்களை அறிக  மகிழ்க 

தட்டச்சுப் பிறழ்வு - பார்வை பின்.

( தமிழ் எழுத்துருவாக்கி வேலை செய்யவில்லை )


மகுடமுகி  ( கொரநாவால்  ) இவை குறைவான தொகையினரால் இயக்கப் படுகின்றன  போலும் .

உங்களைப்  பாதுகாத்துக் கொள்ளுங்கள்.




கருத்துகள் இல்லை: