ஞாயிறு, 3 மே, 2020

மகுடமுகி என்ற சொல்லைப் பயன்படுத்தி....

சென்ற இடுகையில்


கொரொனா துயரில் தீவிரவாதிகள் தாக்குதல் பற்றி (சொடுக்குக)
https://sivamaalaa.blogspot.com/2020/05/blog-post_6.html

 கொரனா என்ற அயற்சொல்லைப் பயன்படுத்தி வெண்பா புனைந்திருந்தோம். கொரனா என்பதற்குப் பதிலாக " மகுடமுகி" என்னும் மொழிபெயர்ப்புச் சொல்லை உள்ளுய்த்து அதே வெண்பாவைப் புனைந்து பார்க்கிறோம்.

மகுடமுகித் தொற்று மடைதிறந்த தெங்கும்
பகலிர வென்று பகவில் -----  தகவிலரால்
இத்தகு சண்டைகள் ஏற்படல் வெட்கமே
எத்துணைக் காலமிது போம்?

 பகலிர வென்று பகவில் என்று வரும் வரியில் பகவில் என்பது
கடின நடையாகத் தோன்றலாம். அது கடினமென்பதற்காக நீக்குதல்
உடன்பாடில்லாதது ஆகும்.  எனினும் இவ்வாறு எளிதாக்கலாம்:

"பகலிர வென்றுபா  ராத ----- தகவிலரால்"

இவ்வாறும் வெண்பா சிதைவுறாது வரும். 

அரும்பொருள்:

மகுடமுகி -  கொரனா தொற்றுநுண்மி  (வைரஸ்)
பகவில் ( பகவு இல் ) - பகுத்து உணராத.
தகவிலரால் -  (முன்னையப் பாடலில் நரகரால் என்ற
சொல் பயன்பாடு கண்டது.  தகவிலர் - நற்குணமில்லாரால்).

 

கருத்துகள் இல்லை: