ஞாயிறு, 10 மே, 2020

எறும்பை விலக்கிவைத்த மனிதன்

இடியுடன் கூடிய அடியல் மழையே
விடியலை அடுத்து விழைவுறு வண்ணம்

நல்ல துளிகளாய்ப் பெய்வதிம் மழையே
வானி   லிருந்து வழிதல் நோக்கினென்

மேனி குளிர்ந்திட அழகு காட்டிடும்
நல்லது நமக்கெனில் எறும்புக் கெப்படி?

அவற்றின் வீடுகள் அனைத்திலும் வெள்ளம்
வைத்திருந்   திட்ட வத்துகள் எல்லாம்

வெற்று முயற்சியாய் வீணா கிற்றே!
எறும்புகட் கென்றே இரங்குவர் யாரோ?

சுவர்சூழ் கூரையுள்   இவர்வாழ் மனிதன்
நவைதீர் இரங்குதல் நாட்டினில் இல்லை.

எரிமலை வெடித்து நரன்தலை வீழ்ந்தால்
ஒருகுலை நடுக்கில் உழல்வர் மாந்தர்.

மனிதரை மனிதரே உகப்பர்,
தனித்துயர் எறும்பினைத் தாங்குவர் யாரே?


சுவர்சூழ் கூரை - வீடு.
இவர்வாழ் - இவர்வுஆழ் - ஏறுதல் அல்லது
ஆசையில் மிகுந்த.
அடியல் -  சொரிதல்.
நரன் - மனிதன்
நவை - கெடுதல். தீர் - இல்லாத

மறுபார்வை பின்.

கருத்துகள் இல்லை: