வெள்ளி, 27 ஜனவரி, 2017

சீனப் புத்தாண்டு; greetings


(இணைக குறள்  ஆசிரியப்பா )

சீனப் புத்தாண்டு;
ஞானப் பேரொளி புத்தரோ அரசனோ
எலியும் எருதும்
புலியும் முயலும்
கடல்நா கத்தொடு கட்செவி தானும்
குதிரையும் கோதில் ஆடும்
குரங்கொடு சேவலும்
நாயும் பன்றியும் எனப்
பன்னிரு உயிரிகள் பக்கலில் விளித்து
முன்னுறு பந்தயம் நிகழ்த்தி,
ஒன்றும் நான்கும் ஐந்தும் இன்மையும்
கால்விரல் தொகையே மேல்கொள,
தெரிந்துடன் எடுத்து வரிசையின் வைத்து,
யிங்கும் யாங்கும் என்பன கணித்து,
மக்கள் விழவே தக்க வாறுற‌
அமைத்தனர் என்றே அறிந்தோர் உரைப்ப;
அத்தகு சிறப்பின் அரும்பெரும் நாளை
இத்தரை வியக்க இனிதுகொண் டாடுவர்.
இந்த ஆண்டினில் இதுகொண் டாடும்
உந்து சிறப்பின் உயர்நண் பர்கள்
தந்தம் அகத்தினில் தணியாத்  தகையுடன்
பெருமகிழ் வனைவரும் எய்தி
நறுமண மலர்போல் பெறுகநல் வாழ்வே.

கருத்துகள் இல்லை: