செவ்வாய், 24 ஜனவரி, 2017

இரவில் துன்புறும் மைனா ........

தூவானம் பட்டாலும் தோய்ந்தபடி தேடுமிரை
துரத்திவிடும் உனது பசியை;
நீவானம் நின்றபின்னே நேராக எங்குசென்றாய்
நின்மரமோ மழைநீர் சொட்டும்;
கூவாய்நீ நின்விடுதி யானறிவேன் கூவிடிலோ
குளிருக்கென் செய்தாய் மைனா!
தீவானில் போல்பகலோன்; இருந்தாலோ திரிந்திடுவாய்;
நான்காண்பேன் என் நா மெய்நா.

இருள்கவிந்த முன்னிரவில் படுக்கையில் கிடக்கின்றேன்;
என்போர்வை இட்ட காலை
நருள்குவிந்த இடங்களிலும் மேய்ந்துவிட்டே ஓய்ந்திருக்கும்
நன்மணியே இட்டேன் நெஞ்சில்;
பொருள்வேண்டாம் புகழ்வேண்டாம் உன்போலும் சிற்றுயிர்க்கோர்
போர்வையே யான்நயந் திட்டால்
அருள் ஈண்டும்; அன்புமிகும்; ஆதலினால் யாதுகுற்றம்
அருளில்லார் மாந்தர் கூட்டில்.

(இரவில் துன்புறும் மைனா )  Subject:  Interaction with Nature.



கருத்துகள் இல்லை: