வியாழன், 12 ஜனவரி, 2017

இராமச்சந்திரக் கவிராயரும் வீரமாமுனிவர் சதுரகராதியும்

இராமச்சந்திரக் கவிராயரும் வீரமாமுனிவர் சதுரகராதியும்


சங்க காலத்துக்குப் பிற்பாடும் தமிழ் பல்வேறுவகைகளில் வளர்ச்சி யடைந்து வந்துள்ளது. இருபது, இருபத்தொன்றாவது நூற்றாண்டுகளில் எப்படி தமிழ் நம்மிடை நிலவுகிறதென்பதை நாம் ஓரளவு அறிந்திருந்தாலும்  இவற்றுக்கு முன் ஒரு நூற்றாண்டு பின் சென்றால் என்ன நடந்தது என்பதை நாம் உடனே அறியமுடியவில்லை. இதற்குக் காரணம், இணையத்தில் எல்லாமும் கனிந்துவிடவில்லை.

பத்தொன்பதாம் நூற்றாண்டை அறிந்துகொள்ள  மயிலை சீனி வேங்கடசாமியின் ஆய்வு நூல் ஓரளவுக்கு நமக்கு உதவி செய்கிறது.
இவ்வறிஞர் இந்நூலை எழுதியிராவிட்டால், இப்போது நாம் அந்நூற்றாண்டை அறிந்துகொள்ள இடர்பல உறவேண்டியிருக்கும்.

பத்தொன்பதாம் நூற்றாண்டுப் புலவர்களில் இராசநல்லூர் இராமச்சந்திரக் கவிராயரும் ஒருவர். இவர் சென்னைக் கல்விச் சங்கத்தின் உறுப்பினர்.
தமிழ் அறிஞர் எல்லிஸ் துரை என்பாரின் நண்பர். இவர் 1824‍ல் வீரமாமுனிவர் இயற்றிய சதுரகராதியை இன்னொரு புலவருடன் இணைந்து 1860ல் பதிப்பித்தார்..

இவரெழுதிய நூல்களில் சகுந்தலை விலாசம் என்பதுமொன்று. இது
பிரஞ்சு மொழியிலும் ஜி. டெவ்ரீஸ் என்பவரால் மொழிபெயர்க்கப்படும்
சிறப்புடைத்தாகியது.

கவிராயர் சதுரகராதிக்கு ஒரு முகவுரை எழுதினார், அது கவிதை
வடிவில் அமைந்தது. அது தொடங்கிய விதம் இவர் ஆழ்புலமையை
வெளிப்படுத்துவதாய் உள்ளது.

தோலா விறலுள கோலா    னரசுசெய்
மேலான் இசைதிகழ் நாலாம் ஜார்ஜ் நாளில்
நன்றா  மனுமுறை குன்றா வகை இவண்
மன்றோ வதிபதி நின்றா ளுகையில்...........
......................

இவ்வகராதிப் பதிப்பில் இக்கவிதையை முழுமையாகப் படித்து
இன்புறுங்கள்.

-------------------------------------

அரும்பொருள் :

தோலா  - தோல்வி இல்லாத
விறல் -  வீரம், வலிமை.
கோலான்   -   செங்கோலினால் 
இசை - புகழ்
நாளில் -  பிறந்த நாளில்
நன்றா -  நன்றாக
மனுமுறை  -  மன்னு முறை  (இடைக்குறை )   :  நிலை நிற்கத் தக்க அறமுறைகளுடன் .
குன்றா -  குறையாத
மன்றோ  -  அவையினர் வியக்கும் . (ஓ - வியப்புக்குறிப்பு .)
நின்று - நிலையாக.
ஆளுகை - ஆட்சி  புரிதல் .


கருத்துகள் இல்லை: