ஞாயிறு, 22 ஜனவரி, 2017

ஆசலம் என்பது...............vengadasalam etc

ஆசலம் என்பது பல சொற்களில் இறுதிநிலையாக வுள்ளது. அருணாசலம், தணிகாசலம், வேதாசலம் இன்னும் பல, ஆசலம் என்றால் மலை,

ஆசலம் என்பதைக் காது கொடுத்துக் கேளுங்கள். ( வேறு எப்படிக்
கேட்பது என்று கடாவுதல் வேண்டாம்),   வேற்று மொழிச்சொல் போல் ஒலிக்கிறதா?  அதற்கு மலைப் பொருள். எப்படி வந்ததென்பது காண்போம்.

ஆசு   -   (பற்றுக்கோடு,  அதாவது 'பிடிமானம்' )
அல் ‍=  அல்லாத,
அம் =  விகுதி.

இது மலையில் ஏறுகையில் பிடித்துக்கொள்வதற்கோ அல்லது உதவிக்கோ யாரும் எதுவும் இல்லாமல் இடருற்றவன் புனைந்த‌ சொல்.  அடிக்கடி மழை;  குளிர் என்பன போன்ற இயற்கை மிகுதிகளும் உண்டு.  அவன் அடைந்த இன்னல் அவனுக்குத்தான் தெரியும், அதனால் இந்தச் சொல்லைப் படைத்தான், சிலருக்கு மலை வாழ்வு இனிக்கும்; சிலருக்கு அது பிடிப்பதில்லை.

இச்சொல்  இப்போது அழகுள்ளதாக மிளிர்கின்றது,

ஏறவும் இருக்கவும் உதவாத கடினமான இடம் மலை,  மலை என்றாலே மலைப்புத் தருவது. மல்  வலிமையும் ஆகும், ஆசலம் மலை என்பதற்குப் பொருட் பொருத்தம் உள்ளது .

தெரியாமலா வேங்கடம் என்று பெயர் வைத்தார்கள். கடம் என்றாலே
கடப்பதற்கும் அரியது மலை.

அமைப்புப்  பொருள் இவ்வாறு  இருப்பினும்  ஆசலம்  என்பதன் வழக்குப்
பொருளில்  இந்த மலை இடர்கள்   தெரிய மாட்டா ,,     மலை என்ற சொல்லிலிலும் அவ்வாறு தெரிவதில்லையே .

அறிக மகிழ்க.
மெய்ப்பு:  பின்னர்.

Edited on 22.07.2022


கருத்துகள் இல்லை: