வெள்ளி, 4 ஆகஸ்ட், 2017

தத்து என்ற சொல் அமைந்தது எங்ஙனம்?



இப்போது தத்து என்ற சொல்லைப் பற்றிச் சிந்தித்து அறிவோம்.

 பிறர் பிள்ளை ஒன்றினைத் தன் பிள்ளையாக்கிக் கொண்டு வளர்த்தலையே தத்து என்று சொல்லுவர்.  இப்போது ஆங்கில மொழி மிகப் பரவி விட்டதால் “அடோப்ட்” என்ற சொல்லையே கேட்க முடிகிறது.  ஆங்கிலம் படித்திராவர்களும் அம்மொழிச் சொற்களை நன்கு  பயன்படுத்துகின்றனர்.
தத்து என்பது இரண்டு சிறு துண்டுகளை உடையது.   தன்,  து என்பவை அவை.

தன் என்ற சொல்லில் இரண்டே எழுத்துக்கள் உள்ளனவாகையால்,  தன் என்பது த-  என்று குறையும்போது,  அதை கடைக்குறை என்று இலக்கணத்தில் சொல்வர்.  மேல் என்ற சொல் மே என்று குறைந்து, பின் கறி என்ற சொல்லுடன் இணையும்போது, மேங்கறி என்று வழங்குவதுபோல்,  தன் என்ற சொல், " த " என்று குறைந்து, பின்  "து " என்பதனுடன் இணைகிறது.

து என்பது இப்போது ஒரு விகுதியாகவே பயன்படுகிறது.  விழுது என்ற சொல்லில் அது வருகிறது.  இப்படி இவ்விகுதி வருஞ்சொற்கள் பல.  மேலும் அஃறிணை விகுதியாகவும் வரும்.

உடையது என்பதையும் “து”  குறிக்கும். 

எனவே “த+ து”  என்ற சொல் “தன்னுடையது” என்று பொருள்படும்.
தத்து எடுப்பது எனின் தன்னுடையதாக்கி எடுத்துக்கொள்வது என்பதாகும்.   இனி “எடுப்பு”    “வளர்ப்பு” என்ற வழக்குகளும் உள்ளன என்பது நீங்கள் அறிவீர்கள்.

பிற சார்பு இல்லாமல் தன் சொந்த வலிமையால்  நிற்கும் ஒரு கருத்து “தத்துவம்” எனப்பட்டது என்பதை நீங்கள் இதிலிருந்து சிந்தித்தறியலாம். இங்கு  த+து+அம் என்பன (3 துண்டுகள்)  புனையப்பட்டுள்ளன.  து, அம் விகுதிகள்.
தத்துவம் என்பதில்  வ் வருவது சொல்லிணைப்பின் பொருட்டு. இதைத்தான்
வகர உடம்படு மெய் என்று இலக்கணம் சொல்கிறது.

தத்துவம் என்பது மேற்கண்டவாறே வரையறை செய்யப்பட்டு உணர்ந்து
கொள்ளற்குரித்தான சொல்.

இது 05072020 மெய்ப்பு செய்யப்பட்டது.




வியாழன், 3 ஆகஸ்ட், 2017

“கலா”



இன்று “கலா”  என்ற சொல்லை அணுகுவோம்.

கலா என்பது  தமிழன்று என்று கருதியவர்கள் உண்டு.  இதற்குக் காரணம் இந்தச்  சொல் “தேசிய சேவை” செய்துகொண்டிருப்பதுதான். இச்சொல் பலராலும் விரும்பப்படும் சொல்லாய் இருப்பதும் பிற மொழிகளில் காணப்படுவதும்  நமக்குப் பெருமைக்குரியதாகும்.

கலா என்பதுபோன்ற (அதாவது எதுகைச் ) சொற்கள் பல உள்ளன.  எடுத்துக்காட்டாக  -  பலா, நிலா, உலா, தலா, விலா, துலா என்பவை.  இன்னும் பெயர்ச் சொற்கள் அல்லாதவைகளும் உள:  அலா,   இலா, செலா  முதலிய காண்க.   எனவே ஒலி முறையில் அது தமிழ் ஒலியுடைய சொல்லே.
கல்+தல் =  கற்றல்.  இங்கு கல் என்பதே பகுதி. இனிக் கல்+வி = கல்வி;  கல்+ ஐ = கலை;  கல்+பு = கற்பு;   கல் +பு + அன் + ஐ =  கற்பனை;  இவை போலவே கல் + ஆ = கலா  ஆனது. பல் சுளைகள் உள்ள பழம்  பல்+ ஆ = பலா ஆனது போலவும்  வானில் நிற்பதும் ஒளிவீசுவதாகவும் கருதப்பட்டது நில்+ஆ=  நிலா என்று ஆனது போலவும் ஆகும். 1

கலாதேவி, கலா நிலையம் முதலியவும் தமிழின்று கிளம்பிப் பரவிய சொற்களே.

தேவி > தீ  (தேய் );  நிலையம் > நில்.  எம் முன் இடுகைகள் காணவும்.


_____________________________
அடிக்குறிப்பு 

1  இது தமிழ்ச் சொல் என்பது பேராசிரியர் அனவ்ரத வினாயகம் பிள்ளை 
அவர்களால் சொல்லப்பட்டது. (1935)  இவர் கழகத் தமிழ்க்  கையகராதித் தொகுப்பாளர் .




புதன், 2 ஆகஸ்ட், 2017

"இலேசு"

"இலேசு"

இன்று "இலேசு" என்ற சொல்லைச் சிந்திப்போம்.

இது பெரும்பாலும் "லேசு" என்றே வழங்கிவருகிறது. இது "லேஸ்" என்ற ஆங்கிலச் சொல்லுடன் ஒலியொருமை உடையதாயினும்  இரண்டிற்கும் பொருள் வேறுபாடு உள்ளது.

பெரும்பாலோர் இச்சொல்லின் முன்னிற்கும் இகரம், லகர வருக்கத்தில்  சொல் தொடங்கலாகாது என்ற இலக்கணவிதி காரணமாகவே  இகரம் எழுதப்படுகிறது
என்று எண்ணுவர்.

இதனை இல்+ஏ + சு என்று பிரிக்கவேண்டும்.  இல் = இல்லை என்பது.
ஏ = ஏற்றம், உயர்ச்சி என்று பொருள்படுவது.  சு என்பது ஓர் விகுதி.  மனசு, புதுசு, காசு, ஆசு  என்பனபோலும் பலசொற்களில் இது வரும்.  கா > காசு
என்பதில் காத்தலுக்குரியது என்னும் பொருளில் சொல் அமைகிறது.  ஆதல் என்பதினின்று வருவது ஆசு (பற்றுக்கோடு ). மனசு, புதுசு என்பவற்றில்
சு விகுதியாகவோ அல்லது து என்பதன் திரிபாகவோ கருதப்படலாம்.
எனவே, இலேசு என்பதில் சு என்பது விகுதியாகும்.

கனம் என்பது பளு என்ற பொருளிலும், மதிப்பு என்ற பொருளிலும் வருவதுபோலவே, ஏ = உயர்ச்சி என்பது மதிப்பு என்றும் பளு என்றும்
பொருள்தரும்.  அதிக மண் உள்ள மேடுகள்  ஏ = ஏற்றம், ஏற்றமான இடங்கள்
என்று அறியப்படும். ஏற்றம் தரும்பொருள் உள்ளீடு , பளுவுடையது என்பது
உணரப்படும். மே (மேல்) என்னும் இடப்பெயரும் மேடு என்று ஏற்றமான இடத்தைக் குறிக்கச் சொல்லாய் அமைதல் அறிக. கனப்பொருள் அடைவு
இன்றி ஏற்றம், மேடு என்பன இரா.

எனவே, இல்+ஏ+சு என்பது, கனம் இல்லாதது, ஏற்றம் இல்லாதது என்று
பொருள்படுகிறது. அவரை இலேசாக நினைக்கக்கூடாது எனும்போது, கனம் அல்லது மதிப்பு என்பது சுட்டப்பெறுகிறது.

இரவில் விழித்தெழுந்தால் கவலையே!.....

இரவில் விழித்தெழுந்தால் ‍== அந்த‌
இனிமைப் புறாக்களைக் காணாக் கவலையே!
உறவென் றிலையெனினும் ==  அவை
குமுறிப் பறப்பதும் உண்பதும் ஈர்த்தெனை
வரவழை காலையினை  == என்னும்;
வல்லமை இன்மையின் வாளா திருப்பனே!
இரவும் விலகுதற்கு === இனி
இருத்தல்  கிடத்தலே  அன்றியென் செய்வது?

இருந்திடும் போதினிலோர் == தமிழ்
இன்கவி என்பதே என் துணை ஆனது!
வருந்துதல் நீக்கியதே ==  நல்ல‌
வண்ணக் கவின் தனில் எண்ணம் பதிந்தன.
அருந்துகி றேன் தமிழ்த்தேன்  === அது
அந்தி இரவினிக் காலை பகலென‌ப்
பொருந்துமெந் நேரத்திலும் == அந்தப்
புறாக்கள் இவண்சேர் விடியலும் வந்திடும்.

ஞாயிறு, 30 ஜூலை, 2017

சங்கப் புலவர் பக்குடுக்கை நன்கணியார் ஞானி

பக்குடுக்கைக் நன்கணியார் ஒரு சங்கப் புலவர். தம் வாழ்க்கைத் தொழிலாகச் சோதிடம் கணிப்பதை மேற்கொண்டிருந்தார். பழந்தமிழில் சோதிடர்களுக்குக் "கணியர்என்பர். சோதிடத்தில் வல்லவராதலின் இவர் "நன்கணியார்" என்று போற்றப்பட்டவர்இவர்தம் இயற்பெயர் தெரிந்திலது.

புறநானூற்றில் 194‍வது பாடல் இவருடையது. இப்பாடலில் இவர் உலகில் உள்ள பல்வேறு மாறுபட்ட நிலைகளையும் நிகழ்வுகளையும்காண்கின்றார். இக்காட்சிகள் ஒருவாறு இவரை வருத்துகின்றன.யாரைக் குற்றம்சொல்வது? அந்தக் கடவுளைத்தான் நொந்துகொள்ளலாம்.அவனைப் பண்பிலாளன் என்று சுட்டுகின்றார். ஈவிரக்கம் அற்றவன் அவன்.ஒரு பக்கம் பிண வீடு! இன்னொரு பக்கம் மணப்பந்தல். ஒரு பக்கம் பிணமாலை கழுத்தை அலங்கரிக்கிறது. இன்னொரு பக்கம் பூச்சூடிய மணமகள், இவ்வுலகம்இன்பமயம் என்றெண்ணி ஒப்பனையுடன் காட்சியளிக்கிறாள்.இப்பன்மை நெறிகளை எப்படித்தான் பாராட்டிப் பாடவியலும்?உலகு ஒரு துன்ப ஊற்று என்பது தெளிவாக "இன்னாது அம்ம‌இவ்வுலகம்!" என்கிறார். இவ்வுலக இயல்பு உணர்ந்து, துன்பத்தைநோக்காது இன்பம் மட்டுமே கண்களுக்குப் புலப்படுமாறு வாழ்ந்துகடல்போலும் இதனைக் கடந்து செல்வது கடமை, அறிஞருக்கு ==என்கிறார், அவர்தம் பாடலில். இயல்பு உணர்ந்தோர் இனியவையேகாண்க என்கிறார்.

உலகம் துன்ப மயமானது என்ற எண்ணமே மேலிட்டு, எல்லாவற்றினின்றும் விலகி, பற்றற்று வாழ்ந்து, விடுதலை பெறுக என்று இவர் கூறவில்லை.துன்பம் உண்டு; ஆனால் படைத்தவன்அப்படிப் படைத்துவிட்டான். அதற்கு நாமென்ன செய்யவியலும்?என்செய்தாலும் வருந்துன்பம் வந்துதான் ஆகிறது. அந்தக் கடவுளின்மேல் பாரத்தைப் போட்டுவிட்டு, உலக இயல்பு இது என்று உணர்ந்து இன்பமே கண்டு பிற மறந்து அதனால் சிறந்து வாழ்க என்பதுஇப்புலவர் நமக்குக் காட்டும் நெறியாகும். பல நிகழ்வுகள் நமக்கும்அப்பால்பட்டவை. அவற்றுக்குரிய நெறிகளில் அவை செல்கின்றன.நம்மால் காக்க முடிந்தவற்றை நாம் காத்துக்கொள்ளலாம்; முடியாதவை உலக இயல்பின்பால் படும். அவற்றைக் கண்டுகொள்ளாதீர். கொள்ளீரெனின்இன்பமே எங்கும் புலப்படும். அதுவே வாழ்நெறியாம்.
இனிப் பாடலைப் பார்ப்போம்.

இனிப் பாடலைப் பார்ப்போம்.
ஓர் இல் நெய்தல்கறங்க , ஓர் இல்ஈர்ந்தண் முழவின் பாணி ததும்ப,புணர்ந்தோர் பூவணி அணிய, பிரிந்தோர்பைதல் உண்கண் பனிவார்பு உறைப்ப,படைத்தோன் மன்ற அப் பண்பி லாளன்;இன்னாது அம்ம இவ்வுலகம்,இனிய காண்க இதன் இயல்பு உணர்ந்தோரே!

இப்புலவர் ஓர் ஞானி. ஞானும் ( நானும் ) நீயும் ( கடவுள் ) ஆயிருப்பதே ஞானமாகும். என்னால் இயன்றவை ஞான் ( நான்)செய்கிறேன். மற்றது நீ (கடவுள் ) ஆள்கிறாய். இப்படிச் செல்பவர்இவர். இனிய செந்தமிழ்ப் புலவர். பலர் வாழ்க்கைகளைக் கணித்துக்கணித்துப் பார்த்து உண்மை கண்டவர். இவர் கூறும் நெறியை ஆய்ந்து தெளிதல் அறிவுடையோர் கடனாகும்.
நான் என்னும் தன்மை ஒருமைச் சொல் ஞான் என்றும் திரியும்,இது ஞான் என்றே மலையாளமொழியில் இன்றும் வழங்குகிறது,நயம் > ஞயம்; ( நய + அம் ) > ( நாயம் ) > ஞாயம்; (முதனிலைநீண்டு விகுதிபெற்றுப் பின்னும் திரிந்தது; ). இவைபோன்ற திரிபேஞான் என்பதும். ஞான் + நீ > ஞானி என்று மருவியது. நோ: பழம் + நீ = பழநி போல.

நெய்தல் ~ சாப்பறை; கறங்க ~ ஒலி மிக எழ;
ஈர்ந்தண் முழவு ~ திருமணப் பறை;பாணி ~ ஆட்ட பாட்டம்;ததும்ப ~ மேலோங்க;புணர்ந்தோர் ~ மணம் செய்துகொண்டோர்;பைதல் உண்கண் ~ துயருற்ற கண்கள்;பனிவார்பு ~ கண்ணீர் வார்த்தல், வடித்தல்.உறைப்ப ~ மிகுந்திட.இன்னாது ~ துன்பம் மிக்கது.
will   edit/


x


முக்தி மோட்சா!!

மோட்சம் என்பது ஒரு திராவிடச் சொல்லே ஆகும்.

இதை இப்போது ஆராயலாம்.

மேல் என்ற தமிழ்ச்சொல் சில திராவிடமொழிகளில் மோள் என்று
திரிந்து வழங்கும்.

ஒன்று இன்னொன்றன்மேல் மோதுகிறது. மேல்சென்று இடிப்பதை
மேது என்று வினையாக்காமல் மோது என்றல்லவா வினைச்சொல் ஆக்குகிறோம்? மே> மேல்; மே> மோ > மோது. ஏகாரச் சொற்கள் ஓகாரமாகும். ஏம் ‍= பாதுகாத்தல்; ஓம் = பாதுகாத்தல்; ஓம் > ஓம்புதல் : பாதுகாத்தல். பல சொற்களை ஆராய்ந்தால் இது தெற்றெனத் தெரியவரும்.

மோள் > மோட்சு > மோட்சம்.


மே > மோ > மோச்சம். சு, அம் விகுதிகள்.

இது பேச்சு வழக்குச் சொல். இறந்தவன் மேலே போய்விட்டான் என்பது பேச்சு வழக்கு. அதிலமைந்ததால் மோச்சம் என்ற சொல்அதுபின் மோட்சம் என்று திருத்தப்பெற்றது. ட்ச என்றால் ஒலி இனிமையாகிறது என்று கருதினர்.

முது > முதுமை.

முது > முத்து > முத்தி > முக்தி.

மோள் > மோட்சம்.


முக்தி மோட்சா!!

சனி, 29 ஜூலை, 2017

இணையம் சரிவரக் கிடைக்காமல்...........

இருதினம் இணையம் சரிவரக் கிடைக்காமல்
எழுதும் முயற்சியும் தடைப்பட்டதே!
வருகிற நண்பர்கள் நறுமணம்  தருமலர்
வரப்பெறு நிலையதும் இடைப்பட்டதே!

முயன்று முடித்திட நாளை வரும்வரை
முனைப்புடன் மீண்டும் வருவிரென்றால்
சிறந்த கருத்துப் படையல் உங்கள்பால்
சேர்ந்திடும் தமிழைப் பெறமகிழ்வீர்.

( இதை உரைநடையில் எழுதவேண்டும். அயர்ச்சியினால்
கவிதைபோலச் சுருக்கித் தந்துள்ளேன்.)

வாழ்த்துக்கள்.

வியாழன், 27 ஜூலை, 2017

நாயன்மாரும் ஆழ்வார்களும்,



பல அறிவாளிகளைப் பெற்று மகிழ்ந்தது இந்துக் குமுகாயமாகும். அறிவாளிகள், இறையுரைஞர்கள் பலரை உடையராயிருந்ததனால் யாரையும் தனிப்பட வியந்து போற்றிக்கொள்ளவில்லை. மேலும் ஒரே சிறந்த கருத்தினை அவருட் பலரும் கூறியிருப்பர். அக்கருத்தினை அவர்கள் இறைவன் தம்மிடம் வெளிப்படுத்திய தனிக்கருத்தாகக் கூறவில்லை யாதலின், அக்கருத்து நம் மதத்தினை நிறுவிய கருத்தாக நாம் கொண்டாடுவதில்லை. ஆகவே செல்வம் நிலையாமை, வாழ்க்கை நிலையாமை முதலிய கருத்துகள் நம்மிடம் மிக்கிருந்தாலும் இவற்றையே கூறிய பிற நாட்டறிஞர்களின் பின்னால்தான் நம்மறிஞர்களை நாம் இருத்தியிருக்கின்றோம்.

ஏறத்தாழ இருமாதங்களுக்கு முன்புதான் நம்பியாண்டார் நம்பி, அமர்நீதி நாயனார், கலிய நாயனார், கோட்புலி நாயனார், பட்டினத்தார் ஆகியோரை நினைவுகூரும் பூசைகள் ஆலயங்களில்
நடைபெற்றிருக்கவேண்டும்.

ஆழ்வார்களில் திருக்கோட்டூர்நம்பி, திருவாழியாழ்வார், பெரியாழ்வார், எங்களாழ்வார், நாதமுனிகள் ஆகியோரையும் அங்ஙனமே நினைவு கூர்ந்திருக்கவேண்டும்.

சித்தார்கள், ஆழ்வார்கள் எடுத்தியம்பிய முன்மைக் கருத்துகளைத்

திரட்டி ஒரு கையேடாக வெளியிட்டு, அக்கருத்துகளை ஆலயங்களிலும் சிற்றுரைகளாக பூசையின் முடிவில் வெளியிட்டாலும் அவற்றை மக்கள் அறிந்துகொள்ள வாய்ப்பு மிகும் என்னலாம்

புதன், 26 ஜூலை, 2017

எதன் தொடர்பில் வள்ளுவன் என்ற சொல் பிறந்தது?

வள் என்ற  அடிச்சொல்.

இவற்றை முதலில் பகுத்துணருங்கள்:

வள் > வளம்.
வள் > வளை (வினைச்சொல்). வளைதல். வளைவு.

வள் > வளி (காற்று).
வள் > வளவு ( வீடு).

வள் > வளா (பரப்பு, பரந்த இடம்)

வள் > வளர்  (வளர்தல்).

வள் > வளாவு > வளாவுதல்  (கலத்தல், சூழ்தல்)

வள் > வளுவல் (இளமை).

வள் > வளை > வளையல்.

வ்ள் > வளை > வளையம்.

வள் > வள்ளம் (தோணி)

வள் > வள்ளல் (கொடைஞன்)

வள் > வள்ளி (குறப்பெண்)

வ்ள் > வள்ளுரம் (இறைச்சி)

வள் > வள்ளை( ஒரு பாட்டு).

வள் > வள்பு  (தோல்).

இன்னும் பல.


வள்ளுவன் என்பதற்கு வள் என்பதே அடிச்சொல்.

இதில் எதன்    தொடர்பில் வள்ளுவன் என்ற சொல் பிறந்தது?

சொல்ல முடியுமோ?

Materials destroyed.

Two of our computers in Malaysia had suffered virus attacks and much materials awaiting
publication have become destroyed.
We will soon be back.

 

--------------




-------------------------------------------


We will try to recover data from the hard disks that have

crashed.

We are hopeful.

Pending the try, we shall proceed as per normal.

Sorry for any inconvenience.

திங்கள், 24 ஜூலை, 2017

அஞ்சலி - ஒரு விளக்கம்

அஞ்சலி

இந்தச் சொல்லுக்கு 2010 வாக்கில் ஒரு விளக்கம் தந்து இது ஒரு தமிழ்/திராவிடச் சொல் என்று அதை அணிசெய்திருந்தோம். அந்த இடுகை
கள்ள ஒட்டுமெல்லியால் ( .an unauthorised browser add-on ) இல்லாததாயிற்று.  அதைப் படித்த‌ சிலருக்கு இன்னும் நினைவிலிருக்கலாம். தமிழறிந்தோர் நிரம்ப உளராதலின் அது தொலைந்துவிட்டாலும் அவ்விளக்கத்தினை மறந்திருக்கமாட்டார்கள்.

இவைபோன்ற சொற்களுக்கு நாமளிக்கும் விளக்கங்களை எங்காவது உங்கள்
கணினியின் மூலைமுடுக்கில் சேமித்து வைத்திருங்கள். சொற்பொருளை நன்குணர இவை உதவும். எல்லாமும் இல்லையாயின் எல்லையிலா இருளன்றோ நிலவும்!!

-
இச்சொல்லின் முன் நிற்கும் சொல் அகமென்பது.  இது அம் என்று குறுகுதலை
உடையது. தமிழைத் தேர்வுக்காகப் படிக்காமல் ஆர்வுக்காக அலசியவர்கள்
இதை எளிதில் மறத்தலிலர்.  அகம்+கை என்பது அகங்கை > அங்கை என்று
மாறும்.  அகத்துக்காரி ஆத்துக்காரி என்று மாறுதலுணர்ந்தோர் இதை அதிசயித்து நோக்கார். அகம் > அம்.

செல்லுதல் > செல் > செலி.  ஆக, ஒருவனது அகம் செல்லுதலே அஞ்சலி
செயதலாம்.

பாத+ அஞ்சலி = பத + அஞ்சலி >  பதஞ்சலி என்பது அறிக.









சனி, 22 ஜூலை, 2017

Avathaaram அவதாரம்

அவதாரம்

இந்தச் சொல்லை இப்பொழுது பார்ப்போம்.

அவமென்பது அவி+அம்  என்று பிரியும்அவித்தல் என்பது
அழித்தல்; அவிதல் தானே அழிதல்அவிஅழி. இது அம்  
விகுதி பெற்றால்அவம் ஆகும். அழிதல் என்பது  
கெட்டுவிடுதல். எனவே அவமானம் என்ற
சொல்லில்:

அவம் = கேடுமானம்பெருமை. பிறரால் மதிக்கப்படுவது.
ஆதலின் மானக்கேடு என்று இதனை வேறுவிதமாகச்  
சொல்லலாம். மானம் --பழந்தமிழர் இதனைப் பீடு என்றனர்.  
பீடுடைய மன்னன் என்ற சொல்,பீடுமன் > பீஷ்மன்  
என்றானது முன்னர் எழுதியுள்ளோம்.

இனித் தாரம் என்பது காண்போம். தரு+அம் = தாரம்
தாரமாவது தருதல்தாரம் என்ற பலபொருளுடையது
பிள்ளைகளைப் பெற்றுக்குடும்பத்துக்களிப்பவள் தாரம்  
எனபபட்டாள். தாரம் என்பது வருதல்    மீளவும்
வருதல்  என்றும் பொருள்தரும்

தரு> தார் > தாரம்வாழைத்தார்என்பது பழம்
மீளவும் வருதலால் அப்பெயர் பெற்றதுஅவதாரம்
என்ற கூட்டுச்சொல்லில் அழிந்தது மீளவும் வருதல்   
என்பதுபொருளாகிறது.  

வாழை மீண்டும் மீண்டும் பழங்களைத் தந்து
உண்ண வழிசெய்தல் போலவே அவதாரமும் அழிந்து 
அழிந்து தோன்றுதல்  என்று பொருளாகிறது.


எனவே இதை மீண்டும் அறிந்து மகிழுங்கள்

>

வியாழன், 20 ஜூலை, 2017

தலைலாமாவும் இந்தியாவும் சீனித்திருநாடும்.

இந்தியாவுக்கும் அதன் அண்டை நாடான சீனாவுக்கும் சிக்கிம் பூட்டான் முதலியவற்றில் உள்ள நிலப்பகுதிகளை முன்னிட்டு ஏற்பட்டுள்ள முரண்பாட்டு நிலைமையை உலக அரசியல் முன்னணியினர் எழுத்தாளர்கள் கூறியவற்றைக் கொண்டு வாசித்து அறிந்தோம். இந்த‌
நிலைக்கு யாது பரிகாரம்  என்பதையும் சிலர் எடுத்துக்கூறியுள்ளனர்.

இதில் தொடர்புடைய நாடுகள் நடந்துகொள்ளும் விதம்,  குடும்‍பங்களில்
ஏற்படும் தகராறு போலவே உள்ளது எனில் மிகையன்று.

சீனாவை விட்டு தலைலாமா இந்தியாவுக்கு ஓடிவந்து உயிர்பிழைத்தார்.
இவரைப் பிடித்துத்  திரும்பச் சீனாவிடம் ஒப்படைக்க இந்தியா மறுத்துவிட்டதனால்தான் தகராறு தொடங்கியது என்று சிலர் கூறியுள்ளது
சரியாகவே தோன்றுகிறது.  இன்று வரை இது ஒரு தொடர்கதை .

ஒருவன் மனைவி புருடன் அடிப்பான் என்று பயந்து அடுத்தவீட்டுக்கு
ஓடிவிட, அவளை அடுத்த  வீட்டுக்காரன் உணவும் உடையும் இடமும்
கொடுத்துக் காப்பாற்றினால் எப்படி இருக்கும் அவளை மீண்டும் அடிக்கும்
கணவனிடம் அனுப்ப  மறுத்தால் எப்படி? அதுபோன்றதே இது.

ஆனால் தலைலாமாவுக்கும் சீனாவுக்கும் உள்ள தொடர்பு ஒரு மனைவிக்கும்  அவளைப் புடைக்க விரட்டும் கணவனுக்கும் உள்ள‌
தொடர்பை விடக் குறைவானதே. திபேத் என்ற தலைலாமாவின் நாடு
ஒரு தனிநாடு.  சீனாவில்  மன்னர் ஆட்சி நடைபெற்ற காலத்தில்
திபேத்தைச் சீனா ஆண்டதாம். அந்தப் பழைய ஆட்சியை வைத்துச் சீனா
உரிமை கோரிற்று. இந்தியத் தலைவர்கள் அதை அப்போது ஏற்றுக்கொண்டனர். இல்லாவிட்டால் சீனா தொல்லை தரும் என்ற‌
அச்சத்தினால்.

பேச்சுகளின் மூலம் இது தீர்வுற வேண்டுமென்பதே நம் ஆசையாகும்.

சீனிதந்த  நன்னாடு சீனா அதுமீண்டும்
சீனியாம் நல்லமைதி   தந்தாலே ‍‍=== சீனியாம்
ஞாலத் தமைதியே பொன்னாகும் போயினது
கூலம் ஓழிக்கும் வழி.


திங்கள், 17 ஜூலை, 2017

மர் - அடிச்சொல்.

ஒரு சொல்லுக்கு என்னபொருள் என்பது தெரிந்தாலே
 நாம் அதைப் பயன்படுத்த முடிகிறது. பயன்படுத்துதலாவது: 
நாம் அச்சொல்லைப் பயன்படுத்துவதும் பிறர் பயன்படுத்தியதைப் புரிந்துகொள்வதும் என இருவகை ஆம். பொருள்
 தெரியாதபோது எழுப்பப்பட்ட ஒலி ஒரு வெற்று ஒலியே 
அன்றி வேறில்லை. நமக்குப் புரியாத மொழியிற் பிறன் பேசினால்
எழுந்த ஒலிகள் எந்தத் தாக்கத்தையும் நம்மில் 
ஏற்படுத்துவதில்லை. அவன் என்ன சொல்கிறான் 
என்று தெரிந்தவனிடம் கேட்டு அறிந்துகொள்ளும் 
ஒரு நடவடிக்கையை  மட்டுமே 
மேற்கொள்ள முடியும்,   ---  அதுவும்  தேவையானால்.

நம் மொழியிலே நாம் பயன்படுத்தும் சொல்லுக்கே 
என்ன அதன் உரிய பொருள் என்று நமக்கு சிலவேளைகளில் புலப்படுவதில்லை. ஒவ்வொரு சொல்லும் ஏன் 
அதன் பொருளைப் பெற்றது என்பது சில வேளைகளில் 
தெரிந்தாலும் சிலவேளைகளில் தெரிவதில்லை. 


மரம் என்ற சொல்லை  நாம் பயன்படுத்த அறிந்திருந்தாலும் 
அதற்கு ஏன் அந்தப் பெயர் என்று அறியோம். எனவேதான் 
"மொழிபொருட் காரணம் விழிப்பத் தோன்றா" என்றார் 
தொல்காப்பியனார். 

பண்டைத் தமிழர் உணர்ச்சி அற்றனவாகக் கருதியவற்றை
 மரம் என்றனர். குறிப்பறிய மாட்டாதவன் நன்மரம்
என்ற ஒளவையார் கூறுவதால் இதுவே சரியான
காரணமாம்.கால் மரத்துப்போய்விட்டது என்ற
 வழக்கை நோக்குக.மரத்தல் என்பது வினைச்சொல்.
 ஆனால் இன்றைய அறிவியல் மரங்களுக்கும்
உணர்ச்சி உண்டென்று கூறுகிறது.
இருந்தாலும் பெயர்க்காரணங்களில் நாம் மாற்றமுரைத்தல்
இயலவில்லை.

காரணம் அறிந்த பெயர் காரணப்பெயர் என்றனர். 
 காரணம் அறியாப் பெயர் இடுகுறிப்பெயர். நாற்காலி 
என்பது காரணப்பெயர் என்றாலும் நாலு கால் உடைய
எல்லாம் நாற்காலி அல்ல‌. நாய்க்கும் நாலு கால் இருந்தாலும்
அது நாற்காலி ஆகாது. இத்தகைய சொற்களை
காரண இடுகுறி என்றனர்.



மர் என்பது அடிச்சொல்.
மர் + அம் = மரம். 2
மர > மரத்தல்.
மர் + அணை = மரணை > ஸ்மரணை.
உணர்ச்சியற்ற நிலையால் அணைத்துக்கொள்ளப்படுதல். 1
அணைத்தலாவது அண்மிச்செல்லுதல்.
மர் > மரித்தல்.
மர் + அணம் =மரணம்.
மர் _> மரி + அணம் = மரணம் எனினுமாம்.
மரி + அகம் = மாரகம் (மரணம்).  முதனிலை திரிந்த (நீண்ட) தொ.பெயர்


1.   ஒ.நோ:  தீண்டு > தீட்டு   :.தீண்டின் ஏற்படும் நிலை.
          தீண்டு > தீட்டம் ( மலையாளம்)  தீண்டவொண்ணாதது.  
உணர்ச்சியுண்மையும் அஃது இன்மையும் ஒரே அளத்தலின்  இருகோடிகள்>
ஆகையால் மரி என்ற சொல்லினின்று  ( ஸ்மரணை.)  புனைந்துள்ளனர்.

2 உடல் கட்டை என்று சொல்லப்படும்.

If this post does not appear good on your screen, we are sorry. Edit features are not available now. Will make good later.
















சனி, 15 ஜூலை, 2017

அடு > சடு.

அடு (சடு ‍ சுடு) என்பதன் அடியாகச் சொற்கள்


அடு சடு.
அடு > சட்டு > சட்டி.
அடு > அட்டு > சட்டு > சட்டுவம்.

அடு > சுடு. (அகரம் உகரமாகியும் சகர ஒற்று முன் ஏறியும் நின்றது).

அடு ( அடுத்திருத்தல், இடையீடின்றி நெருக்கமாதல் முதலிய)

அடு > அடுத்தல்.
அடு > அடர். ( அர் வினையாக்க விகுதி).
அடு > அடை.
அடு > அடைதல்,அடைத்தல்.
அடு > சடு > சடம். <,,,,,,,>(ஜடம்)
அடு > சடு > சடலம்.
அடு > (அட்டு ) > அட்டை

அடு (சடு ‍ சுடு) என்பதன் அடியாகச் சொற்கள்


அடு > சடு.
அடு > சட்டு > சட்டி.
அடு > அட்டு > சட்டு > சட்டுவம்.

அடு > சுடு. (அகரம் உகரமாகியும் சகர ஒற்று முன் ஏறியும் நின்றது).

அடு ( அடுத்திருத்தல், இடையீடின்றி நெருக்கமாதல் முதலிய)

அடு > அடுத்தல்.
அடு > அடர். ( அர் வினையாக்க விகுதி).
அடு > அடை.
அடு > அடைதல்,அடைத்தல்.
அடு > சடு > சடம். <,,,,,,,>(ஜடம்)
அடு > சடு > சடலம்.
அடு > (அட்டு ) > அட்டை
அடு  >  ச டு  >  சட் டை 

இன்னும்பல 











நெய், நெயவு, நேயம், ஸ்நேகம்.

நெய், நெயவு, நேயம், ஸ்நேகம்.

நெய் என்பது ஒன்றாக உருகி ஒட்டி நிற்கும் பொருள். நெயவில் அல்லது நெசவில் நூல்கள் பின்னிப்பின்னி இழை அணுக்கமாகத்
தொடுக்கப்பட்டு, துணி ஏற்படுகிறது. நூல்கள் பின்னிப் பிணைகின்றன.
நேயத்தில் இருவர் அன்பினால் உருகி உள்ளங்கள் ஒன்றுபட்டுத் திகழ்கின்றனர். இச்சொற்களில் ஓடும் பரக்கக் காணப்படும் பொருளாவது, அணுக்கமாகச் சேர்ந்திருத்தல் என்ற ஒரு கருத்தே ஆகும் என்பதை அறிந்துகொள்ள இயல்பான அறிவே போதுமானது ஆகும். ஆனால் ஆய்வுத்திறனில்லார் இதை அறிந்துகொள்ளாதது
வருந்தத்தக்கதே.

நெய்.
நெய்தல்.
நெய் > நெயவு > நெசவு.
நெய் > நெய்+ அம் = நேயம். > நேசம்.
நேயம் > நேசம் > நேசன். யகரம் சகரமாதல். வாயில் > வாசல்.
இங்கு யகரம் சகரமாதலோடு, இடையில் இகர உயிரும் அகரமாயிற்று.

யகரம் ககரமாதல் சில சொற்களில் உளது.

நேயம் > நேகம் > ஸ்நேகம்.


நாகம் > நாக் > நேக் > ஸ்னேக்  (ஆங்கிலம்) என்பதும்
ஒப்பு நோக்குக. இடைநின்ற ஐரோப்பியத் திரிபுகள் விடப்பட்டன.



வெள்ளி, 14 ஜூலை, 2017

அதிபர் திரம்பின் ஆதரவை அடைந்த இந்திய........

அதிபர் திரம்பின் ஆதரவை
அடைந்த இந்தியப் பெருநாடு
புதிய திறத்தில் பொலிவோடு
புயத்தை உயர்த்தி நிற்கிறதே!
நிதியில் குறைவே போர்முறைக்கு
நேமித் திருந்த போதினிலும்
பதிய வைத்தது தன்கருத்தை,
பாரோர்  அறிந்து வியந்திடவே!.

அஞ்சிப் பதுங்கி இருப்பதுவோ
அயர்ந்த  தளர்ச்சி அமிழ்த்திவிடும்.
கெஞ்சிக் கிடந்து சுருங்குவதோ
கேட்டை விளைக்கும் இறுதியிலே!
நெஞ்சில் உரமாய் நின்றுவிடில்
நிழலுக் கஞ்சா தவரெனவே
மிஞ்சும் எவரும் உணர்ந்திடவோர்
மேன்மைத் தருணம் உறுத்துவதாம்.

உணர்ந்த பகைமை நாட்டினரும்
ஒன்றித் திருந்தால் உயர்வெனவே
உணர்ந்தும்  அமைதி வேண்டுவராய்
உலகில் உரையாட் டணைந்திடுவார்;
அணைந்த படகின் பயணிகளும்
அச்சம் தவிர்ந்தே இறங்குதல்போல்
இணைந்தே  ஒருமைத்  தரைதனிலே
இனிதே பயணம் பெறமகிழ்வார்.