வியாழன், 27 ஜூலை, 2017

நாயன்மாரும் ஆழ்வார்களும்,



பல அறிவாளிகளைப் பெற்று மகிழ்ந்தது இந்துக் குமுகாயமாகும். அறிவாளிகள், இறையுரைஞர்கள் பலரை உடையராயிருந்ததனால் யாரையும் தனிப்பட வியந்து போற்றிக்கொள்ளவில்லை. மேலும் ஒரே சிறந்த கருத்தினை அவருட் பலரும் கூறியிருப்பர். அக்கருத்தினை அவர்கள் இறைவன் தம்மிடம் வெளிப்படுத்திய தனிக்கருத்தாகக் கூறவில்லை யாதலின், அக்கருத்து நம் மதத்தினை நிறுவிய கருத்தாக நாம் கொண்டாடுவதில்லை. ஆகவே செல்வம் நிலையாமை, வாழ்க்கை நிலையாமை முதலிய கருத்துகள் நம்மிடம் மிக்கிருந்தாலும் இவற்றையே கூறிய பிற நாட்டறிஞர்களின் பின்னால்தான் நம்மறிஞர்களை நாம் இருத்தியிருக்கின்றோம்.

ஏறத்தாழ இருமாதங்களுக்கு முன்புதான் நம்பியாண்டார் நம்பி, அமர்நீதி நாயனார், கலிய நாயனார், கோட்புலி நாயனார், பட்டினத்தார் ஆகியோரை நினைவுகூரும் பூசைகள் ஆலயங்களில்
நடைபெற்றிருக்கவேண்டும்.

ஆழ்வார்களில் திருக்கோட்டூர்நம்பி, திருவாழியாழ்வார், பெரியாழ்வார், எங்களாழ்வார், நாதமுனிகள் ஆகியோரையும் அங்ஙனமே நினைவு கூர்ந்திருக்கவேண்டும்.

சித்தார்கள், ஆழ்வார்கள் எடுத்தியம்பிய முன்மைக் கருத்துகளைத்

திரட்டி ஒரு கையேடாக வெளியிட்டு, அக்கருத்துகளை ஆலயங்களிலும் சிற்றுரைகளாக பூசையின் முடிவில் வெளியிட்டாலும் அவற்றை மக்கள் அறிந்துகொள்ள வாய்ப்பு மிகும் என்னலாம்

கருத்துகள் இல்லை: