வியாழன், 20 ஜூலை, 2017

தலைலாமாவும் இந்தியாவும் சீனித்திருநாடும்.

இந்தியாவுக்கும் அதன் அண்டை நாடான சீனாவுக்கும் சிக்கிம் பூட்டான் முதலியவற்றில் உள்ள நிலப்பகுதிகளை முன்னிட்டு ஏற்பட்டுள்ள முரண்பாட்டு நிலைமையை உலக அரசியல் முன்னணியினர் எழுத்தாளர்கள் கூறியவற்றைக் கொண்டு வாசித்து அறிந்தோம். இந்த‌
நிலைக்கு யாது பரிகாரம்  என்பதையும் சிலர் எடுத்துக்கூறியுள்ளனர்.

இதில் தொடர்புடைய நாடுகள் நடந்துகொள்ளும் விதம்,  குடும்‍பங்களில்
ஏற்படும் தகராறு போலவே உள்ளது எனில் மிகையன்று.

சீனாவை விட்டு தலைலாமா இந்தியாவுக்கு ஓடிவந்து உயிர்பிழைத்தார்.
இவரைப் பிடித்துத்  திரும்பச் சீனாவிடம் ஒப்படைக்க இந்தியா மறுத்துவிட்டதனால்தான் தகராறு தொடங்கியது என்று சிலர் கூறியுள்ளது
சரியாகவே தோன்றுகிறது.  இன்று வரை இது ஒரு தொடர்கதை .

ஒருவன் மனைவி புருடன் அடிப்பான் என்று பயந்து அடுத்தவீட்டுக்கு
ஓடிவிட, அவளை அடுத்த  வீட்டுக்காரன் உணவும் உடையும் இடமும்
கொடுத்துக் காப்பாற்றினால் எப்படி இருக்கும் அவளை மீண்டும் அடிக்கும்
கணவனிடம் அனுப்ப  மறுத்தால் எப்படி? அதுபோன்றதே இது.

ஆனால் தலைலாமாவுக்கும் சீனாவுக்கும் உள்ள தொடர்பு ஒரு மனைவிக்கும்  அவளைப் புடைக்க விரட்டும் கணவனுக்கும் உள்ள‌
தொடர்பை விடக் குறைவானதே. திபேத் என்ற தலைலாமாவின் நாடு
ஒரு தனிநாடு.  சீனாவில்  மன்னர் ஆட்சி நடைபெற்ற காலத்தில்
திபேத்தைச் சீனா ஆண்டதாம். அந்தப் பழைய ஆட்சியை வைத்துச் சீனா
உரிமை கோரிற்று. இந்தியத் தலைவர்கள் அதை அப்போது ஏற்றுக்கொண்டனர். இல்லாவிட்டால் சீனா தொல்லை தரும் என்ற‌
அச்சத்தினால்.

பேச்சுகளின் மூலம் இது தீர்வுற வேண்டுமென்பதே நம் ஆசையாகும்.

சீனிதந்த  நன்னாடு சீனா அதுமீண்டும்
சீனியாம் நல்லமைதி   தந்தாலே ‍‍=== சீனியாம்
ஞாலத் தமைதியே பொன்னாகும் போயினது
கூலம் ஓழிக்கும் வழி.


கருத்துகள் இல்லை: