புதன், 26 ஜூலை, 2017

எதன் தொடர்பில் வள்ளுவன் என்ற சொல் பிறந்தது?

வள் என்ற  அடிச்சொல்.

இவற்றை முதலில் பகுத்துணருங்கள்:

வள் > வளம்.
வள் > வளை (வினைச்சொல்). வளைதல். வளைவு.

வள் > வளி (காற்று).
வள் > வளவு ( வீடு).

வள் > வளா (பரப்பு, பரந்த இடம்)

வள் > வளர்  (வளர்தல்).

வள் > வளாவு > வளாவுதல்  (கலத்தல், சூழ்தல்)

வள் > வளுவல் (இளமை).

வள் > வளை > வளையல்.

வ்ள் > வளை > வளையம்.

வள் > வள்ளம் (தோணி)

வள் > வள்ளல் (கொடைஞன்)

வள் > வள்ளி (குறப்பெண்)

வ்ள் > வள்ளுரம் (இறைச்சி)

வள் > வள்ளை( ஒரு பாட்டு).

வள் > வள்பு  (தோல்).

இன்னும் பல.


வள்ளுவன் என்பதற்கு வள் என்பதே அடிச்சொல்.

இதில் எதன்    தொடர்பில் வள்ளுவன் என்ற சொல் பிறந்தது?

சொல்ல முடியுமோ?

கருத்துகள் இல்லை: