சனி, 22 ஜூலை, 2017

Avathaaram அவதாரம்

அவதாரம்

இந்தச் சொல்லை இப்பொழுது பார்ப்போம்.

அவமென்பது அவி+அம்  என்று பிரியும்அவித்தல் என்பது
அழித்தல்; அவிதல் தானே அழிதல்அவிஅழி. இது அம்  
விகுதி பெற்றால்அவம் ஆகும். அழிதல் என்பது  
கெட்டுவிடுதல். எனவே அவமானம் என்ற
சொல்லில்:

அவம் = கேடுமானம்பெருமை. பிறரால் மதிக்கப்படுவது.
ஆதலின் மானக்கேடு என்று இதனை வேறுவிதமாகச்  
சொல்லலாம். மானம் --பழந்தமிழர் இதனைப் பீடு என்றனர்.  
பீடுடைய மன்னன் என்ற சொல்,பீடுமன் > பீஷ்மன்  
என்றானது முன்னர் எழுதியுள்ளோம்.

இனித் தாரம் என்பது காண்போம். தரு+அம் = தாரம்
தாரமாவது தருதல்தாரம் என்ற பலபொருளுடையது
பிள்ளைகளைப் பெற்றுக்குடும்பத்துக்களிப்பவள் தாரம்  
எனபபட்டாள். தாரம் என்பது வருதல்    மீளவும்
வருதல்  என்றும் பொருள்தரும்

தரு> தார் > தாரம்வாழைத்தார்என்பது பழம்
மீளவும் வருதலால் அப்பெயர் பெற்றதுஅவதாரம்
என்ற கூட்டுச்சொல்லில் அழிந்தது மீளவும் வருதல்   
என்பதுபொருளாகிறது.  

வாழை மீண்டும் மீண்டும் பழங்களைத் தந்து
உண்ண வழிசெய்தல் போலவே அவதாரமும் அழிந்து 
அழிந்து தோன்றுதல்  என்று பொருளாகிறது.


எனவே இதை மீண்டும் அறிந்து மகிழுங்கள்

>

கருத்துகள் இல்லை: