திங்கள், 29 ஆகஸ்ட், 2022

நீரைச் சேமிக்கும் வழிகள்

 சொட்டுச்சொட்  டென்றுகுழாய் வடிக்கும் நீரை

பட்டுப்போல்  பாத்திரத்தில் சேர்த்து வைப்பாய்!

கொட்டுமழை நீரெனினும்  அதிலே கொஞ்சம்

குடிதழைக்கக் குடிநீரை ஆக்கிக் கொள்வாய்

மட்டகலத்  துயர்செறியும் உலகின் மக்கள்

மறைவாக வடிக்கின்ற கண்ணீர் ஏனோ/

குட்டைகுளம் வயமுள்ள துளிகள் வற்றிக்

குடிநீரோ இல்லாமற்  போயிற்  றென்றே.


முட்டையென விழிபிதுங்கி மக்கள் நின்றார்

மூலைமுடுக் கெங்கிலுமே  ஓலம் ஓலம்.

கட்டையாகி விடுமோஇவ்  வழகு மேனி,

கத்தும்குரல்  இவ்வாறே காதில் கேட்கும்,

வட்டவட்ட மாய்ச்சுழலும் வாட்டம் வேண்டாம்,

வந்திடுவீர் நீர்ச்சேமிப் பறிந்து வாழ்வோம்,

சொட்டனைத்தும் சேமிப்பீர் சோரும் சோகம்

சூழலிலாச் சொகுசியன்ற உலகைக் காண்போம்.


நீர் தேக்கும் வழிகாண்பீர்

மெய்ப்பு பின்னர்.

  

கருத்துகள் இல்லை: