திங்கள், 1 ஆகஸ்ட், 2022

செவ்வாய் சீர்தரும்.....

 தீஞ்சுவை மேவும் திங்கட் கிழமை 

தென்றலினிமை தந்திட வந்தபின்,

சீர்பல மேவும் செவ்வாய்க் கிழமை

பார்புகழ்ந்   திடவே பக்கலில் வந்தது,

வருக வருகவே வண்புகழ்ச் செவ்வாய்!

பெருகி ஓடுக பேரியற்  றமிழே!

சொல்லா விரைவுடன் எல்லா நலமும்

உள்ளார் குடும்பத்தில் உறைந்து மகிழ்தர

யாவரும் சிறந்திடக் காவலம் மிளிர்ந்திடும்.

மேவரும் கனிச்சுவை நாவலர் இசைக்க.

வாழ்க அன்பர்கள் வாழ்க வையமே.


பக்கல் -  பக்கத்தில்

வண்புகழ் -  வளமான புகழ், பெரும் புகழ்.

பேரியற்றமிழ்  -- பெருமைக்குரிய இயற்றமிழ்

சொல்லா விரைவு  -- உணர்ந்து சொல்லுமுன் வரும் விரைவு.

மகிழ்தர -  மகிழ்ச்சி தர

கா வலம் -  காக்கும் வலிமை

மேவரும் -   வருவதற்கு அரிய.  எப்போதும் கிடைக்காத

நாவலர் இசைக்க -  பெரும்புலவர்கள் பாட.


கருத்துகள் இல்லை: