சனி, 25 ஏப்ரல், 2015

புத்தர் பூமியில்..............



நிலைமை யாதென்ற போதிலும்  புவிக்குத்
தலைமை தாங்குவள் இயற்கைத்  தேவி!
மலைகளைப் பிளப்பாள் கடலில் அளப்பற
அலைகளை  விளைப்பாள்  மனிதரைத் தொலைப்பாள்.
கேட்பதற் காருளர்  வாட்பெரு வீரியை?

கல்லும் மண்ணும் காற்றும் விண்ணும்
நெல்லும் புல்லும் அவட்கா  யுதமே.

புத்தர் பூமியில் வித்தையைக் காட்டினள்

*   *   *    *

நீயிரங் காயோ தேவி நின்னைத்
தாயெனப் பணிந்தனர் நீயணைக் கலையோ?

நின்கடை விழிக்கென ஏங்கியோர்
தம்முடல் உயிர்பொருள் இழந்தனர் காணே.

கருத்துகள் இல்லை: