வியாழன், 30 ஏப்ரல், 2015

On predicting quakes: "வெள்ளம் எதிர்வர"

வெள்ளம் எதிர்வர  வெல்லும் எறும்புகள்
வள்ளம் நிகர்த்த மிதவைகள் வேய்ந்திடும்,
மாய்ந்திடா வாழ்வு  மகிழ்வுற மேற்கொள்ளும்.
சாய்ந்திடும் தூணெனச் சற்றுமுன்  காண்குரங்கு
கூட்டமாய் ஓடிநிலத் தாட்டம் பிழைத்திடும்.
மாந்தனோ ஈடில்  பகுத்தறி  வுள்ளவனே!
ஏன் தம்  இடர்வர  வின்னவன்  முன்கண்டு
வாழ்ந்தான் மடிவின்றி வையகத் தென்றில்லை?
கோளும் குலுங்கிடக்   காலமாகி  னானென்று
மேலும் இதுவே நிகழுமோ  வரு நாள்?.

தொகுத்தறிந்  துய்வனோ தோமற்  றுலகில்
பகுத்தறி வாளன்மாந் தன்.




வெல்லும் எறும்புகள் :  வெள்ளம் வந்தாலும் எறும்புகள் தம் அணிய  (readiness, preparedness ) ஆற்றலால்  தப்பிப் பிழைக்கும் ஆற்றலுடையவை.
வள்ளம் :  படகு.
வேய்ந்திடும்:  புனைந்திடும், அமைத்திடும்.
 தம் இடர்:  தமக்கு இடர்.
நிலத்து ஆட்டம் :  நில  நடுக்கம்.
ஈடில்  :  இணையற்ற.
இன்னவன் :  இப்படிப்பட்டவன்
காண் :  அறிந்துகொண்ட.
மடிவின்றி :  மடிவு இன்றி:  மரணம் அடையாமல்
என்றில்லை :  என்ற வெற்றித்தன்மை இல்லை.
வையகத்தென்றில்லை::  வையத்தில் என்று இல்லை .  இல் உருபு  தொக்கது.
கோளும் :  பூமியும் .
வரு நாள்:  எதிர்காலத்தில்.
உய்வனோ:  முன்னேறுவானோ .
தோம் அற்று:   குற்றம் அற்று.

புதுக்கவிதை போல் எழுதி பின் மரபுக் கவிதையாய் மாறிவிட்டதே.

edited.




கருத்துகள் இல்லை: