செவ்வாய், 7 ஏப்ரல், 2015

தமிழ்த் தென்றலில் கலந்தவை

தமிழென்ப  தே ஒரு  தென்றல்---- அது
தரணியெல் லாமுலவும்  தடைதானும்  உண்டோ?
அமைந்துள்ள அரண்களுள் போகும்  --- பின்போ
அவைநீங்கிக்  கானகம் வெளிகளில்  ஏகும்.

உலவுதல் புரிகின்ற பொழுதில் --அதன்
உராய்வினில்  அயல் நின்ற பொருள்கூடி வீசும்
சிலவந்து கலந்திட்ட போதும் ---- அண்ணே
தென்றல் வேறாம்சேர்ந்த பிறவேறு கண்டீர்

தென்றலில் வருகின்ற இன்பம் --- அண்ணே
சேர்ந்துவீ     சும்மவற்  றிடைகண்ட   துண்டோ
மன்றிடும் மகரந்த  மணமோ---- அதன்
மாண்புவே   றாம்பிற   மாசுவே   றாகும்.

edited.

இத்தகைய கவிதைகளைப் பெரும்பாலும் வெண்டளையில் எழுதுவர். இதை யான்  கருதாமல் கைக்கு வந்தவாறு எழுதியுள்ளேன் .  செதுக்கி  வெண்டளை என்னும் உறைக்குள் இடலாம் என்ற எண்ணம் வந்தது. ஆனால் செயல் படுத்தவில்லை. எப்படி வந்ததோ  அப்படியே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன்  இதன் விளைவு சிலவிடங்களில் சந்த முறிவு. முறிவு விலக்குவதாயின் :

(எ-டு )

"தரணி உலாவத் தடைதானும் உண்டோ ? " என்று இரண்டாம் அடியில் வரவேண்டும். பிறவும் அன்ன

தரணி உ /   லாவத் த /  டை  தானும் /  உண்டோ

என்று வகையுளிப் படுத்தி  அறிக.

Well if you are a grammar enthusiast, then I have left it in its crudest form. Just read, understand and discard.



கருத்துகள் இல்லை: