புதன், 8 ஏப்ரல், 2015

Ways of referring to poverty

எழுத்துமொழியில் வறுமைக்கு மற்றொரு சொல் தரித்திரம் என்பது

நல்குரவு என்பதும் அது.

வறுமையை நல்குரவு என்பது   ஓர்  இடக்கர் அடக்கல் ஆகும்.

வறியோன் ஒருவனைப் பார்த்து  அவன்றன் வறுமையைக் குத்திக்காட்டுதலைப் பண்டைத் தமிழர் வெறுத்தனர்/ அதனால் அதனை அடக்கிச் சொன்னார்கள்  நல்குரவு என்று.

வறியோன் நன்றாகவும் உடுத்திருக்கமாட்டான். அவன் உடுத்திருக்கிறான் என்று தான் சொல்ல வேண்டும்.

தரித்தல் என்றால் உடுத்தல்.  தரி+ திரம் :  தரித்திரம் ஆகும்.

வறுமையில் செம்மை கடைப்பிடிக்க வேண்டும்.  வறுமையும் ஒரு நோய் என்று கருதினர். உற்ற நோய் நோன்றல் என்றார் வள்ளுவனார்;  ஆதலின் அது பொறுத்தல் கடன். தரித்தல் என்பது பொறுத்தல் என்றும் பொருள்தரும் ஆதலினாலும்  தரித்திரம்  என்றது இரட்டைப் பொருத்தமானது. பொறுத்தற்குரிய துன்பம் என்ற பொருளிலும் இச்சொல் அமைந்துள்ளது.

மக்கள் வழக்கில் இது தரித்திரியம் என்றும் வழங்கும். இது ஏடுகளில் காணப்படவில்லை/
தரி :உடுத்தல்.
திரி:  மாற்றம்/
அம்:  அழகு மற்றும் விகுதியும் ஆகும்.
தரித்திரியமாவது:  உடுத்தலில் மாற்றம் என்றபடி.
இங்ஙனம் மக்கள் வேறுவகையில் வறுமையைக் குறித்தனர்.

கருத்துகள் இல்லை: