வெள்ளி, 17 ஏப்ரல், 2015

சமஸ்கிருதம் வாங்கியுள்ள கடன்களை............

கீழ் குறித்த ஆய்வாளர்  இந்தி, மற்றும் உருது மொழிகளின் செயற்கையான பிரித்துணர்வைப் பற்றி நூல் எழுதியுள்ளார். ஆஸ்திரிக்  மற்றும் முண்டா மொழிகளிலிருந்து சமஸ்கிருதம் வாங்கியுள்ள கடன்களை விவரித்துள்ளார்.

படித்துப் பயன் பெறலாம்.

நூற்பெயர்:

Urdu/Hindi: An Artificial Divide: African Heritage, Mesopotamian Roots ...

 By Abdul Jamil Khan



1928-ல்  ஒரு கூட்டத்தில் உரையாற்றுகையில்  டாக்டர்  எஸ்.கே. சாட்டர்ஜீ ( மொழி ஆய்வறிஞர்)  கூறியதையும் இவர் நினைவு கூர்ந்துள்ளார்.  ஆஸ்திரிய மொழிகளிலிருந்து பல சொற்களைச் சமஸ்கிருதம் கடன்கொண்டது.  பின்பு  இது பேசிய மக்கள் .  இந்துக்களாகவும்  முகமதியர்களாகவும் மாறி   ஆரிய மொழிகளைப் பேசும் மக்களாய்  சாதிப்  பிரிவுகளோடு அமைந்துவிட்டனர்  என்று அவர் கூறியது குறிப்பிடப்படுகிறது.



சிந்து நதியின் பெயரில் உள்ள  " ஸ்",  அப்பால் பாரசீகப் பகுதிகட்குள் நுழையுமானால்," ஹ்" என்று  மாறிவிடுமென்பதும்  இங்ஙனமே  சிந்து என்பது ஹிந்து ஆனது என்பதும்,  மேலும் க என்ற ஒலியும் ஹ என்றே மாறும் என்பதும்  சொல்லப்பட்டுள்ளது, இது நேயர்கள்  அறிந்ததே.  ( இந்த சிந்துச் சொல்,  சமஸ்கிருதமன்று, ஒரு மெல்லிய துணிவகையின் பெயர் என்பார்  பி டி சீனிவாச ஐயங்கர்.) , 

சில் என்ற அடிச்சொல் சிறுமை குறிக்கும் தமிழ்ச் சொல்.


சில் > சின் >  சிந்து.  ஒ,நோ:-    


பல் >  பன் > பந்து> பந்தம்.  ( பற்றும் உறவு என்று பொருள்.)


மற்றும்  மன் + திரம்  = மந்திரம்.        ( ன் + து  > ந்து ;   ன்  + தி  = ந்தி   )



கங்கை ஆறு குறிக்கும் கங்கா என்ற சொல்லும்ம் ஆஸ்திரிய மொழியினுடையது என்றும் அது  பலவேறு வடிவங்களில் ஏனைத்  தென் கிழக்காசிய-  கிழக்காசிய மொழிகளிலும் ஊடுருவியது என்றும் விளக்கப்படுகிறது.  இந்த ஆஸ்திரியச் சொல் "ஆறு" என்று மட்டும் பொருள் படுவது.  அதுபின் கங்கை  ஆற்றின் இடுபெயராய் ஆகிவிட்டது என்றும் விளக்கம் அளிக்கிறது   இந் நூல் . சமஸ்கிருதம் இந்த அடைவினைப் பின்பற்றியது. 


(உருசிய மொழியில் ஆற்றுப் பெயர்கள், தமிழினுடன் ஒப்பீடு செய்து நான் முன் எழுதியதை இங்கு  ஒப்பிடுக.)  பொதுப் பெயர்ச் சொல்லாய்   இருந்து பின் இடுபெயராய் வடிவு கொண்டமை அறிக.

  எழுத்து மாற்றங்கள் (பின் திருத்தப்படும்)





கருத்துகள் இல்லை: